திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -29-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

இதில் அசேவ்ய சேவை அநர்த்தம் என்றும்-பகவத் சேவை பிராப்தம் என்றும் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல்
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு
ஹிதம் அருளிச் செய்ய
மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற
சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து
சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

மாறும் சன்மம் கிட்டும் -குருகூர் மன்னன் அருளால் –

——————————————-

வியாக்யானம்–

சொன்னாவில் வாழ் புலவீர் –
ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு பரிகரமான நாக்கைக் கொண்டு அவனை ஸ்துதித்து
ஜீவிக்கிற புலவீர்காள் நீங்கள் விசேஷஞ்ஞர் அல்லீர்கோளோ-

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்-
அசன அச்சாதநாதிகளாய் யுள்ள சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள் -என்று
அருளிச் செய்ததை நினைக்கிறது
கோ சஹச்ர பிரதாதாரம் -ச சர்வானர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்யச -என்னும் விஷயம் அன்றே

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் –
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே-என்றும் –
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும் –
ஓராயிரம் பேருமுடைய பிரானை யல்லால் மற்றி யான் கிலேன் -என்றும்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலன்-என்றும்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே -என்றும்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும்
உலகம் படைத்தான் கவி -என்றும்
தம்முடைய அந்ய விஷய வ்ருத்தி நிவ்ருத்தியையும் ஸ்வ வ்ருத்தியான பகவத் ஸ்தோத்ர பிரவ்ருத்தியையும்
முன்னிட்டு ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணி
பரோபதேச நிரபேஷமாக திருந்தின தம் படியையும் பேசினவராய் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம் –
ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஸ்ரீ ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading