ஞான சாரம்-12/13/14/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

மாறாய்  இணைந்த மருதம் இறத் தவழ்ந்த

சேரார் அரவிந்த சேவடியை –வேறாக
வுள்ளாதார் ஒண் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன் –12

இதில் பிரயோ ஜனாந்த பரர -அதிகம் கொடுத்தாலும் பிரிதி இல்லை-அன்புடன் அநந்ய பிரயோஜனர் அணு கொடுப்பதையே மகா சம்பத் ஆக கொள்கிறான் -பத்மினி பத்ம பிரியா மலர் மடந்தை கோன்–திரு வுக்கும் திரு ஆகிய செல்வன்-யார் கொடுத்தான் நிறைய வேண்டியது இல்லை-கொடுத்தால் கொள்கிறான்-திருப்தி உடன் இல்லை–தன பக்கல் சேர்ந்து இருந்த மருத மரம்-விரோதியாக இணைந்த —சேரார் அரவிந்தம்-சேறு நிரம்பிய நிலத்தில் தாமரை பூ போல் சிவந்துதிரு அடி-தவழ்ந்த –திரு அடி வேறு -பிராப்தம் என்றும் உலக இன்பம் அப்ராப்தம் என்று அனுசந்திக்காதாவர்கள் -சீரிய செல்வம் உகந்து கொடுத்தாலும் -உகந்து கொள்ளான் –குபேரன் புத்ரர்கள் மருத மரம் சாபத்தால்-சொத்தை கொண்டு வசி கரிக்க முடியாது ..–கண்ணன் பக்கம் பகை பாராட்டி -மிர் விவரமாய் இணைந்து நிற்க –சகடாசுரனை-ஊர்ந்த சகடம்  உதைத்த பாதத்தான்–கள்ள  சகடம் கலகழிய கால் ஓச்சி–விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுமா போல்– கழுத்தில் கல்லை கட்டி கொண்டு குளத்தில் விழும் —வல் அரக்கர் புக்கு அழுந்த தசரதன் பெற்ற மரகத மணி தடம் —நமக்கு ரஷகம் அவன் திரு அடி-அவனுக்கும் அது தான் ரஷித்தது திரு கால் ஆண்ட பெருமாள்—பூதனை முடித்து காப்புக்கு ஆக வைத்த சகடம் பகைவன் –ஒவ் ஒன்றாய் அழித்து -பொன்ற சகடம் உதைத்தாய் –நின்ற இடம் ஓங்கிஉலகு அளந்தான்அடி போற்றி –அடுத்து ராமன்  -நடந்த இடம் போற்றி–கண்ணன் குழந்தை நடந்தது ஏழு திங்களில்-புகழ் போற்றி- கன்று குணிலா எறிந்த இரு அசுரர் சேர்ந்து -போற்றி-குன்று குடையாய் வேண்டிய இந்த்ரன்-அடுத்து அடுத்து பயம் கூட்டி போகிறாள் –உரவிடை ஆப்பு உண்டு-உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவு—சிக்கன ஆர்த்து அடுப்ப—நடுவே தவழ்ந்து போக–யசோதை பிடித்து கொண்டாளோ என்று பயந்து திரும்பி பார்த்தானாம்–மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள -முன் உள்ள குஞ்சி தெரியலாம்-அலன்கிரதனாய் வந்து இருக்கிறான்–யார் பின் வருகிறாரோ என்று திரும்பிய கண்ணனை பார்த்தாள்/-பின்னை கொல் நிலா மா கள் கொல் திரு மா மகள் கொல்–குவளையம் கன்னி ஒரு அவயவயம் போதும் அவள் –இவளை சொல்லு நின் தாள் நயந்து அவள் திரு மார்பு ஏற்றம் பரகால நாயகி-ஒளி மிகுந்து இருக்க  பார்க்க முடியாமல் திரும்பினாராம் —அது போல் பயந்து திரும்பி பார்த்தானாம்-கூம்பி இருந்த முகம்  மலர ஸ்மித-கோபால விம்சதி-போனாய் மா மருதின் நடுவே -யசோதை போல் ஆழ்வார் பேச-ஒ போனாயே -பரிதவித்து -என் பொல்லா மணியே -தொளை இல்லா மணியே -தேனே இன் அமுதே என்று என்றே கூத்துகள் சொல்ல –மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார் -பொய்யே-ஊரார் இடம் போய்- கைமை-அவன் இடம் போய்–புணாரேய்  மரம் இரண்டின் நடுவே போன முதல்வா –ஒ -இவன் அன்யார்தமாக சென்றாலும் –வேறு பயனுக்கு-யசோதை இடம் தப்பிக்க –பிரதி கூலித்து கிட்டினால்–முடியும் படி இருக்கும் வஸ்து சுபாவம்-திரு அடி கொண்டு தவழ்ந்தான்- சிவந்து இருக்க -செவ்வி தாமரை போல்–செவ்வி சொன்னது விகாசம் /குளிர்ச்சி/பரிமளம்/அனைத்துக்கும் -அடியாரை கண்டு விகாசிக்கும் –முறிந்து விழும் ஓசை கேட்டு திரும்பி பார்க்க -மருத மரம் விழுந்த சிரிப்பு -யசோதை இல்லை என்கிற ஆனந்தம் வேற எதற்கு சிரிக்க யாகத்தால சிரிப்பு -கண்ணால் மலர்ந்து சிரிக்க -திரு அடி சிவந்ததே ஆழ்வார்களுக்கு உத்தேசம் -அபூர்வ தர்சனத்தால் சிவந்த திரு கண்கள் –ரிஷி வர்ணிக்க கார்யம் கொண்ட திரு அடியை- இவர் பார்கிறார் –வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை கடைந்த அமுதை கண்டு ஆண்டாள் பாட -கை சிவந்தது குதிரை கடிவாளம் –கை வைத்து தவழும் பொழு– ராச கிரீடை போது கோபிகள் மேல் வைத்த கை சிவந்ததா —பொருந்திய மா மருதின் இடை-போய என் பெரும் தகாய் உன் கழல் காண ஆழ்வார்– பேறாக உள்ளாதார் வேறாக உள்ளாதார் –திரு அடி அனுபவம் பரம பிராப்தம் என்று அனுசந்தி காதவர்கள்—பூ தரு புணர்ச்சி /புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி–ஆழ்வார்கள்-சக டாசுரன் இடம் தன்னை ரஷித்து கொண்டதற்கு ஆழ்வார்கள் தங்களை கொடுப்பார்கள்–திரு அடியே அவனை காத்ததால் இதை எடுத்து காட்டுகிறார்தன்னை ரஷித்து கொண்டதற்கு கைங்கர்யம்-அவன் இன்றி யாரும் இல்லையே அனைத்தும் அவன் இட்ட வழக்கு தானே தன்னை ரஷித்தது நம் பேரு தானே –ஒண்மை அழகு சீரிய நிதியை சமர்ப்பித்தாலும்-திண் என்று கிளர்ந்து எழுந்த –கொல் என்று எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகா கொள் –உலகு இயற்க்கை–இந்த பாசுரம் அவன் நினைத்து கொள்வான்-நொந்து கொண்டே கொள்வான்–அபூர்ணன் ஆக இருந்தால் த்ரவ்யம் கெளரவம் தோன்றும் -அதிகாரி பாவ சுத்தி ஒன்றையே பார்த்து-அங்கீ கரிகிறான் -சர்வ சமாச்ரநீயம் என்பதால் கடைமையே என்று கொள்கிறான் பிரயோ ஜனாந்த பரர கொடுப்பதை –பிர்திவிம் ரத்ன கம்பளம் நிரப்பி கொடுத்தாலும் எண்ணம் அவன் இடம் இல்லை என்றால் உகக்க மாட்டான்–அந்தகன் சிறுவன்-கண்ணனை தம் கோஷ்டியில் சேர்க்க-அந்ய பூர்ண -விதுரன்–விரோதிப்பவனும் பிரயோஜ நான்த பரரும்-ஓன்று தான்-உள்ள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே -புரிவதும் புகை போவவே–எது வே  எதுவே என்று கேட்டு பொழுது போக்காமல்–எதுவே என் பணி என்னாது -அதுவே ஆள்செய்யும் வீடே

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்க்கே
தொண்டாம் என தெளிந்த தூ மனத்தர்க்கு –உண்டோ
பல கற்றும் தம் உடம்பை பார்த்து அபிமானிக்கும்
உலகத்தொரோடு உறவு –13

திரு வகீந்த புரம் வில்லி புத்தூர் பகவர் வார்த்தை–

சேஷத்வம் அநாதி என்று சொல்ல வந்த பாசுரம் -எற்றைக்கும் எழ எழ  பிறவிக்கும் -திரு மாலே நான் உனக்கு பழ அடியேன் -உற்றோமேஆவோம் உனக்கே ஆள் செய்வோம்–தெளிவு வருவது கஷ்டம்–பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டும்–ஸ்ரிய பதிக்கே சேஷ பூதர் –தூய மனத்தார்க்கு–கற்றதால் ஆய பய என் கொல்–சேஷத்வம் அறிந்து கைங்கர்யம் பண்ண தானே- தேகமே கண்டு- தேகம் பேணி –ஜாதி வர்ணம் வாசி பார்த்து -ஆத்மா பார்க்க ஒற்றுமை தெரியும்-சம தர்சனம் -சரீரம் பார்த்து அபிமானித்து இருக்கும் உலகரோடு சம்பந்தமில்லை–
ஆதி அந்தம் இல்லை சேஷத்வம்-கர்மங்களுக்கு அந்தம் உண்டு வாசனை மலரும் பொழுதே புஷ்பத்துக்கு வருவது போல் வஸ்து சொரூப நிரூபக தர்மம்–பொருளை விட்டு லஷணம் பிரிந்தால் பொருள் மாறும்—ஜீவாத்மா அநாதி-நிரூபக தர்மம் சேஷத்வம் அநாதி–அசித் சொல்ல முடியாது ஞானம் இருப்பதால்-எப் பொழுதும் உண்டு-பிரிக்க முடியாது–இருக்கு தெரிந்து கொள்ள வில்லை-சேஷத்வ ஞானம் இன்றி திரி கிறோம் —

கைங்கர்யம் கிஞ்சித் கரித்து – இருந்து –உலகரோடு கூடினால்—அதிகாரத்துக்கு அவத்யம் –உறவு இல்லை–சேர்ந்தால் கஷ்டமா இல்லை சொல்ல வில்லை சேர மாட்டார்  என்கிறார் இதில் சேர்ந்தால் இவரும் அவர்கள் கோஷ்டி தான்-இது தான் திரு வகிந்த புரம் பகவர் வார்த்தை என்று சொல்ல படும்-துறை வேறு படும்-வித்வான் ஒரு இடத்தில் இவர் எதிர் துறை போக-

சரீரம் பார்த்து இருக்கும் துறை உங்களது நான் ஆத்மா பார்த்து இருக்கும் துறை என்றார்.
சித்தும் அசித்தும் சேஷம் அதற்க்கு இல்லை ஸ்ரீ பாஷ்யம்-நன்றாக கேட்டாயே தரைதட்டி காண்பித்தான்-அசித் போல் சமம் ஆகிறோம் பல தடவை–சகலருக்கும் பொதுவான பண்பு சேஷத்வம்-யாருக்கு அடிமை-பணம் தேவதாந்தரம்-இல்லை ஸ்ரிய பதிக்கே மிதுனம்–ஏவ காரம் அவதாரணம் சொல்கிறது–ஆய -லுப்த சதுர்த்தி-சேஷத்வம் வெளி இடுகிறார்-அனந்யார்ஹா சேஷ பூதன்–வேறு ஒருவருக்கு அறுக படாதா ஆள் படாத சேஷ பூதன்–அப்ஜா-சகாயன் அ கார வாச்யன்–தண்ணீரில் பிறந்தவள் தாமரை போல்–வியக்தம் ஆக இல்லை -அதனால் அப்ஜா சகாயன்-அழகாகா மா முனிகள் அருளுகிறார் அவள் புருஷ கார்யம் அல்லால் ஈஸ்வரன் கார்யம் செய்யான்–உண்டோ இதுக்கு மேலே அன்வயம்–சம்பந்தம் இல்லை–யார் உடன் தொடர்பு இல்லை சுருதி ஸ்மிர்த்தி அனைத்தும் கற்று ஜாதி வர்ணம் தேகம் இட்டு போற அபிமானித்து இருப்பவர்— ஆச்சர்ய சிஷ்ய லஷண பூர்ணர் கூரத் ஆழ்வான் முக் குறும்பு அறுத்தவர்——மொழியை கடக்கும் நம்–உண்டியே  உடையே உகந்து ஓடும் —இம் மண்டலத்தோடு கூடுவது இல்லை—–சேஷத்வ ஞானம் பிறந்து –பிரகிருதி விட உயர்ந்த ஞான ஆனந்த லஷணன் ஞான ஆனந்த குணம் நித்தியமாய் இருக்கும் ஜீவாத்மா -பேயரே எனக்கு யாவரும் –நானும் பேயனே– தோல் புரையே போம் -பழுதிலா ஒழுகல் ஆறு வேணும் –மர்ம ஸ்பர்சீ மனம் உடையீர் திண்ணம் நாரணமே ஒன்றுமே போதும்–ஸ்ரத்தை முக்கியம் -உறவு அற வார்த்தை –முழுகும் படகில் ஓட்டை விழுந்தால் தப்பி போகணும்—திரு வகிந்த புரம் பகவர்-ஆஸ்ரமம் உத்தமர் பிராமணர் அனுஷ்டானம் பண்ணும் துறை விட்டு-நாஸ்தி சங்கதி-விஷ்ணு தாசா வயம் நீங்கள் வர்ணம் பார்ப்பவர்கள் தாஸ்ய விருத்தி பண்ணுகிறவர் பிரித்து -வேற துறை -தொடர்பு இல்லை–கொள்வான் அன்று –எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -இந்திரிய கிங்கரர் நீர் என்று உறவு அற வார்த்தை சொல்லி போனார்-அவித்யை-ஞானம் அற்ற தன்மை-ஜட தன்மை—அவைஷ்ணவர் சொல்ல விலை ஜடம் தானே -ஞானம் இல்லாத வைஷ்ணவன் சொல்ல முடியாது-ஞானம் இருந்தால் வைஷ்ணவர்–மற்ற சமயம் தொடர்பு கூடாது தேக ஆத்மா சம்பந்த ஞானம் இல்லாதவன் இடம் சேஷத்வ ஞானம் இல்லாதவனுடன் சம்பந்தம் கூடாது தொத்து வியாதி போல் —

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த

சாதங்கள் நான்கிநோடும் சங்கதமாம் –பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ் உயிர் க்கும் இந்திரை கோன்
தன அடியே காணும் சரண் –14
இந்திரா=மகா லஷ்மி..சரீரம் இருக்கும் வரை சாஸ்திரம் கொடுத்த வர்ண தர்மம் அனுஷ்டிக்க வேண்டுமே ..சாதங்கள்-சாதிகள்—வர்ணங்கள்-உடலினால் பிறந்த -ஐந்தினால் -பாஞ்ச பூத சமுதாய ரூபம் -பிறந்த நான்கு வர்ணங்கள்–பிறப்பின் படி-அனுஷ்டானம்-செயல் பாடு–பிராமணன் வேதம் ஓதுதல் வேதம் ஒது வித்தல் தானம் கொடுத்தல் வாங்குதல் யாகம் யக்ஜம் செய்தல் செய்வித்தல் போல்வன ..ஷத்ரியன் போர் புரிதல் வைஸ்யன் வியாபாரம் -மாடுகள் ரஷித்தல்–சூத்திரன்-வருத்தம் போக்குபவன்–மற்ற மூவர் செயல் கஷ்டம் தீர தீர்த்து உழைத்து வருத்தம் கொண்டு -பெயர் காரணம்- வாய் -பிராமணன் பிறக்க -தோள்-ஷத்ரியன்- தொடை-வைஸ்யன்- திரு அடி-சூத்திரன் –மிக ஏற்றம்-குறைவு தோற்று நடத்த கூடாது -பத்து கொத்து பரிவாரம் ஸ்ரீ ரெங்கம்-ஸ்வாமி பிரித்து வைத்தார்..-சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டா -குணம் அடி படையில்-பிரித்தேன் –அகர்தாம் அவயவம்-நான் செயததவன் இல்லை உயர்வு தாழ்வை/உள் பிரிவுகளை – என்கிறான் கீதையில்..பேதம் உயர்வு தாழ்வு என்கிற –உறுதி ஏற்பட்டது -ஜாதி-பஞ்ச பூதம்-இதினால் என்ன பயன்–பெறுவீர்–அடக்கி ஆளுவதில்-சம்சரிக்க-மீண்டும் மீண்டும் பிறக்க தான் வைத்தது –அனைவரும் அடைவது அவன் திரு அடி தானே ஒரே சாஸ்திரம்-பேதம் இருப்பதை தெரிந்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் உயர்வி தாழ்வு தான் பார்க்க கூடாது என்கிறார்.லோக மாதா கோன் அடைவதே நோக்கம் –புகல் அவன் ஒருவனே -சர்மா-பிராமணன் வர்மா-ஷத்ரியன்  குப்தா-வைஸ்யன்  தாசன்–சூத்திரன் –வர்ணம் அடியில்- உயர்வு தாழ்வு இல்லை என்பதால் பிரதி பத்தியில் அனைவரும் தாசன்-ஏற்படுத்து வைத்தார் ஸ்வாமி-பஞ்ச சம்க்ராம் உடலுக்கா ஆத்மா வுக்கா– என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு-என்னையும் =ஜீவாத்மா -ராமானுஜ  சம்பந்தம் -சேஷத்வ ஞானம் -அறிய தானே சக்கர பொறி –வரணம் அறிந்து வர்மா குப்தா சர்மா தாசன்–சேஷத்வ ஞானம் அறிந்து ராமானுஜ தாசன்-நம் பெருமாள் இட்ட வழக்கு தான் முக்தி உபய விபூதியும் இவர் கையில் கொடுத்து உடையவர்-தாஸ்ய ரசம் அறிந்து.–ஆத்ம சம்பந்தம் -ஒரே திரு அடி தானே புகல்–மஞ்சு சேர் வான் எரி –கால் -ஐந்தும் மயங்கி-பஞ்சீகரணம்–ஐந்து சேர் ஆக்கை–பூநிலாய ஐந்துமாய்- பிர்த்வி –கந்தம் வாயு-ஸ்பர்சம் அக்னி -ரூபம் -ச்வாபம் கலக்கும் -ஒவ் ஒன்றிலும்.-சமுதாய அடியாக தேகம்-அநித்யம்–சேர்ந்தால் கேட்டு போகும்–உப்புமா மக்கள் கூட்டம்–வர்ண பிறிவு வந்தேறி–முடிவோடு கூடியவை -அந்த வந்த இமே தேயாகா -பல தேகம் உண்டு–செயற்கை–பல ஹேதுவால் ஆத்ம நித்யம் கீதை 2 அத்யாயம் -நித்யர் முக்தர்-உபசக ஆத்மாவாய்–அப்ராக்ருத திரு மேனி இளைத்து பெருக்காத திரு மேனி-பிரக்ருத காரணம் இன்றி-அங்கும் அசித் ஆனது தான் மிஸ்ர சத்வம் இன்றி சுத்த சத்வம் ஆக இருக்கும்–காரணம் காரியம் சம்பந்தம் தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை=-தேகம் வளர்ந்து சரீரம் இளைத்து –செயற்கை அவனை அடைய முடியாமல் தடுக்கும் ஹேயங்கள் உள்ள தேகம்-வர்ண தர்மம் கிடையாது -அனைவரும் சமம் எனபது இல்லை -கர்மா தீனம் கொண்ட சரீரம் சாஸ்திர படி நடக்க வேண்டும் தொலைத்த பின் மோஷம் அடைந்து சாம்யம் அடைகிறோம்–என்று புரிந்து கொள்ள வேண்டும்..முடிவு மட்டும்முக்கியமில்லை வழியும் முக்கியம் –ஜாதி குணம் வரணம் வேறு பாடு காட்டும் பிறப்பின் அடியாக -சேஷத்வம் ஒரே ஜாதி ஆண் பெண் இல்லை-அனைவரும் ஸ்திரீ அவன் ஒருவனே  புருஷோத்தமன்–பேதத்தினால் பயன் இல்லை என்று சொல்ல வில்லை இதை கொண்டு உயர்வு தாழ்வு பார்ப்பது கூடாது என்பதே பொருள்–வர்ணாஸ்ரம தர்மம் செய்வதே அவனுக்கு பிரீதி–வைதிகர் -பந்தம் பிடிப்பது மணி அடிக்கிறது போன்ற பலரும் இதில் அடக்கம் -வேதம் சொன்ன படி பனும் அனைவரும் வைதிகர்-அர்ச்சிராதி மார்க்கம் ஸ்ரீ வைகுண்டம் அனைவருக்கும் -கந்தல் கழிந்தால் ஆர்ப்பை தொடைத்தால் சேஷத்வம் ஒன்றே மிஞ்சும்-அகங்கரித்தாலே மீண்டும் பிறப்பு –உயர்வு தாழ்வு எண்ணம் அகங்காரம் விளைவிக்கும் —என்ன பயன் -கெடுவீர்-கேட்டே போவீர்–அனைவருக்கும் ஸ்ரிய பதி திரு அடிகளே புகல் -இதி பரம ஐஸ்வர்யா இந்திரா அனைவரும் அவள் குழந்தைகள் தான் –புருஷ கார பூதை அவள் ஆனந்தத்துக்கு கொடுக்கிறான் — இதுவே நிலை நின்றவேஷம்– ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் மணம்- புஷ்பம் ஒளி- ரத்னம் போல்–பரம ஏகாந்தி தர்மம் -பிரமாண தொகுப்பு-மா முனிகள் சேர்த்து அருளினது –அடிப்படை சாஸ்திர வாக்கியம் உள்ளது–வரண பேதனே கிம் பலம்-என்ன பலம்-சர்வ ஆத்மானா  கதிம் ஸ்ரீமன் நாராயண பத துவயம்-ஒன்றே –இரட்டை பிராப்யமும் பிராபகமும் இவை–ஜடாயு மோஷம் -பசு மனுஷ்ய பச்சி வா –அனைவரும் பெற்று போகலாம்
அருளாள பெருமாள் எம்பெருமானார்  திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading