திரு நெடும் தாண்டகம்–27-செம் கால மட நாராய்! இன்றே சென்று-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

செம் கால மட நாராய்! இன்றே சென்று
திருக் கண்ண புரம் புக்கு என் செம் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது வொப்பது  எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் மீது எல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத்  தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27

ஸூர சௌரி ஜநேச்வராக -சூரன் பிள்ளை கண்ணன் சௌரி பெருமாளையே குறிக்கும் பட்டர் —
64 சதுர யுகம் கண்ட பெருமாள் -கீழை வீடு என்பர்-
இதை  ஆண்டாள் -காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் சேர்த்து –
மன்னு குறுங்குடியாய்- வெள்ளறையாய்- சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அரசே  –
காலை மாலை கமல மலர் இட்டு ஆழ்வார் – –உடம்பின் முடிவில் -மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பெருமாள்-
சரண்ய முகுந்தத்வம் -மோஷ பூமி பிரதன் –
பித்தேறிக் கொடுக்கிறான் -அவனைத் தான் செம் கண் மால் என்கிறார் இவரும் இங்கு —

கடகர் -சேர்த்து வைப்பவர் -திருக் கண்ண புரம் நோக்கி –
அத்யாவசியம் ஆழ்வாருக்கு- கிளம்பு- வண்டுகளையும் கூட்டி வருவான் —
கடலும் கடலை சார்ந்த இடமே பிரிந்தவர் இருக்கும் இடம் –
அது எல்லாம் உனக்கு தருவேன் -இருள் தரும் ஞாலத்தில் இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் எய்தலாம் –
இன்றே புறப்பட வேண்டும் –திவ்ய தேச ஆசையால் அங்கு அங்கு இருப்பான்–
அயோதியை கிளம்பி திரு அரங்கம் தங்கினவன் –
தடி போட்டு கிளப்பணும்-
தேர் அழுந்தூரில்  நிற்பான் -கருவறை போல் நின்றான் –
பிரயோக சக்கரம் கொண்டு நிற்கிறான் –
என் துணைவருக்கு உரைத்தியாகில் –இன்பம் வேற ஒன்றும் இல்லை-அறிவிப்பே அமையும் —

வண்டுகள் சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் வரை தரிக்க சக்தி இல்லை —
சீதை ராமன் காத்து இருந்தார்கள்–இவர் அத்வீதியம் —
நாரையை -கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
பக்ஷி ஜாதி சீர்மை பெற்றது ஆழ்வார்களால் —
காம தேவனை ஆண்டாள் தொழுதாள் முதலில் —
அயோத்யா வாசிகள் அனைவர் காலிலும் விழுந்தது போல –
குயில் காலில் விழுந்தாள்–
கூடிடு கூடலே அசேதனம் கூட–
செம் கால மட நாராய்-சிவந்த காலை பார்த்ததும் —
சம்ச்லேஷ திசையில் அவன் திரு வடி பிடித்தும் -தன் காலை அவன் கொண்டாடி இருந்தானே —
ஆச்சார்யர் திருவடியே உத்தேசம்–
இது ஒரு காலும் சிகப்பும் இருந்த படி என் -சிவந்த கால் உடன் வாசனை உண்டு இவளுக்கு —
கரு முகை மாலையை சும்மாடு வைத்தது போல –
இந்த அழகிய கால் கொண்ட உம்மை தூது விடவோ–பார்த்து கொண்டே இருக்கலாம்-
அஷ்ட புய கரம் வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு-சொன்ன வாயின் அழகை பார்த்து பேச்சு கேட்க்க வில்லை —
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் —
அவன் காலோடு ஒக்கச் சொன்னதை தப்பைச் சொன்னேன்-
தன் காலை தரும் அத்தனை அவனுக்கு-
தன் காலையும் தந்து அவனையும் கொடுக்கும் ஏற்றம் –
ஆச்சார்யர் தம்மையும் தந்து அவனையும் கொடுப்பாரே –
சிந்தை யினோடு –தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்–
பாட்டு கேட்க்கும் இடமும் —எல்லாம் வகுத்த  இடமே இருக்க கடவன் –ஐந்தும் ஆச்சார்யர் தானே —
தானும் சுலபனாய் இருந்து அவனையும் சுலபனாய் ஆக்கும் பிராட்டி ஆச்சார்யர் போலே

அறிவு இழந்து முறை கெட பரி மாறும் -மட நாராய் —
ப்ரணியத்வம் தெரிந்த –
மடப்பம்-ஸ்த்ரீத்வம் பெருமை- என் இழவு போகும் பூரணத்வம் உண்டு —
நாலையும் சொல்வதற்கு உப லஷணம் அச்சம் நாணம் மடப்பம் பயிர்ப்பு —
சாஸ்திரம் கண்டு அச்சம் /பெருமாள்  மோஷ மண்டலம் கை காட்டி உடையவருக்கு கொடுக்க –
நம்மை கண்டு வெட்கி உபதேசம் —
அம்மே என்பாரை போலே நாராய் என்கிறாள் —
போக்கிடம் அற்று –வழி பறி கொடுத்து கலங்கி இருக்கும் பர கால நாயகி இதை தெப்ப கட்டை போல –
எங்கே சீதை தேடி போன பெருமாளுக்கு-கோதாவரி சொல்ல வில்லை-
சபரி கண்டதும் சுக்ரீவன் இருக்கும் இடம் சொல்ல  -திருவடி ஸந்நிஹிதன் ஆனதும் –அம்மே என்றார் போலே –
தசரதன் பிள்ளை- இந்த அலைச்சலுக்கா புத்திர காமோஷ்டி யாகம் பண்ணிப் பெற்றார் –
அவர் தோன்றிய ஆனந்தம் திருவடி கண்டதும் ஹா -வால்மீகி சில இடத்தில் ஹா சப்தம்–
நாராய் -சுரத்துடன் ஆற்றாமை எல்லாம் தோற்ற  நாராய் என்கிறாள் –
ஆடி ஆடி அகம் கரைந்து பாடி பாடி கண்ணீர் மல்கி –சிந்திக்கும் திசைக்கும் -இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் —
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்சிக்கும் –
எரிகிற விளக்கு பிரகாசமாய் போல எழுந்த உடன் பயம் -எம்பார்-
சிந்த்கிக்கும் திசைக்கும் தேறும்  -தேற்றி கொண்டு எழ -ஆடி ஆடி நினைத்து நினைத்து –
அது போல ஆற்றாமை இசையிலே தோன்ற-பட்ட மகிஷி  –கைக் கூலி செய்து தானே கார்யம் செய்வது இருக்க –
இவள் பிரார்த்திக்க வேண்டி இருகிறதே

இன்றே -முதலில் –
எங்கே சொல்வதை விட இன்றே சொல்வது இவளுக்கு முக்கியம்
ஷிப்ரம்-விபீஷணன் –
நில்லவா நில்லா நெஞ்சம் -ராமனே வந்து ரஷித்து விடுவான்
நீங்கள் பேறு இழப்பீர்கள்  –
அவன் ஸ்வரூபம் பார்த்தாலும்
இன்றே –
நானும் அநந்யார்ஹ சேஷ பூதை —
ஷண நேரம் இருக்க முடியாமல் துடித்த ராமன் படி- ந ஜீவேயம் ஷ்ணம் அபி- -ஜலாம் மத்ஸ்யம் என் படி  –
நீர் பசை அற்று மீன் உயிர் விடுவது போல —
ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் -சொல்வது போல இல்லை இவர்
திருக் கண்ண புரம்-பாவ பந்தம் -ஸ்வாபாகிகம் –
அனந்தாழ்வான் -திரு வேம்கடம் உடையான்//
பட்டர் -அழகிய மணவாளன் /
ஆழ்வார் -திரு தொலை வில்லி மங்கலம்/
சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் —
பாடு வித்த முக்கோட்டை–
புக்கு —
அங்கே விடாமல் இங்கே விடுவான் என் –
திரு அழுந்தூரில் தரிக்க மாட்டான் -23 மாரி யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்–
யோசிக்க– மகா பலி யாக சாலை நடந்தாயே –
இலங்கை நடந்தாயே- நினைக்க -வேகமாக அவன் வர வைத்து போசிக்க வேண்டிய திரு வடியை நடக்க வைத்தோமே என்று
போற்றி பாடினாள்-நினைவு ஒன்றுமே வேண்டும் –
கிளம்பி வேகமாக வந்து கொண்டு இருப்பான் –
ராஜ பாட்டை போகாமல் வயல் வழியே போ —
வண்டும் தானும் அரை குலைய தலை குலைய எதிரே வருவான்-கருடன் உடன் கஜேந்த்ரனை ரஷிக்க கூட்டி வந்தானே –

என் செம் கண் மாலுக்கு —
மால் உபய விபூதியும் தான் இட்ட வழக்காய் இருகிறவன்–
என் மால்-பவ்யன் –
என்னை எதற்கு தூது விடுகிறார் –
ஆச்சார்ய பதவி உனக்கு என்பதால்-வாய்ப்பு உண்டு –
என் அபிமானத்தில் ஒதுன்கினவன்-நினைக்க நினைக்க அதற்க்கு பதில் இஷ்வாகு குல குணம் –
யார் வந்தாலும் அங்குள் அக்ரேண–இச்சன்னு கரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவா–என்றானே பெருமாள்–
தூதன் திருவடிக்கு பெயர் கொடுக்க –கண் அழகை காட்டி ஜெயித்தவன் ஜிதந்தே புண்டரீகாஷா —
பிரிகையால் உறக்கம் இன்றி கண் குதறி சிவந்து இருக்கும் –
சாரூப்ய மோட்ஷம் -திருக் கண்ண புரம் –பெரும் பித்தர்-
தம் பித்தை காட்டி நம்மை பித்தேற்றியவன்–
மயல் மிகு-பிச்சேறி இருக்கையும்
எதிரி  தலையை பிச்சேற்றதுவதும் அவனுக்கு இரட்டை வேலை–
மாலாய் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் —
மாலும் அது -வாஞ்சை திரு வாய் மொழி நூற்று அந்தாதி மாலே மாய பெருமானே —-
தானும் பித்தன் பனி மலர் பாவைக்கு —

என் காதல் –
இது அவன் உடைய காதல் இல்லை -என்று சொல்லச் சொல்ல –
மின் இலங்கு திரு உருவம் குறி அழியாமல்–
பொன்னார்- பசலை -உடன் இருக்கும் என் காதல்-
முக்தர் காதல் போல் அன்று —
விஷயாந்திர ஆசை சம்சாரிகள் போல உன் மேல் இருக்கும் அன்பு வேண்டும் பிரகலாதன்-அது போல என் காதல்-
நாட்டார்  காதல் போல் அன்று —
ஞானம் பிறந்தவாறே காதல் விடுவார் சம்சாரிகள் — சுகம் கொடுக்க காதல்  முக்தர் உடையது –
எனக்கு துக்கம் கொடுக்கும் காதல்–
என் துணைவர்க்கு –துணைவனா -பிரிந்தவனை–பைத்தியம் தானே வார்த்தையிலே தேறியும் -துணைவன் எண்ணம் மாறாது

விட்டு பிரிய முடியாத பந்து —
எல்லா அவஸ்தையிலும் –ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை
விமுகராய் இருந்த பொழுது சத்தையை நோக்கி
ஆபி முக்கியம் திரும்பி பார்க்க பற்றுதல் அனுபவம் கொடுத்து
பிரிந்த பின்பும் சத்தை கொடுத்து
புனல் அரங்கம் என்று சொல்லி போனானே —
ஆறு படிகள் – ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -அத்வேஷம்- ஆபி முக்கியம்- சாது சமாகம்- மகா க்ரமம் படிக் கட்டுகள் வைத்து –
துணையாய் இருக்க ஆசை உண்டு–
ஆற்றாமை போக்க அவன் ஒருவனே –
உரைத்தியாகில்–சொன்னால்–
கடகரை  நியமிக்க வில்லை பிரார்த்தனை–
ஆகில்–
அவர் அழகில் கால் தாழ்ந்து–
போன கார்யம் மறந்து –
உண்ணப் புக்கு வாயை மறப்பர் – மறந்து இருப்பாய்–
ஒருவரையும் நின் ஒப்பார் இல்லை -என் தசையை அறிவிப்பாரில்-
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்  தாழ்ந்தது ஓர் துணை காணேன்  –
மா கடல் கரிய கண்ணன் —
ஸ்ரீ ரெங்கனுக்கு நீர் இருக்க -தூது சொல்லாமல் -தூது விட்ட பிழை -பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
திரும்பி வருதல் இன்றி என்னையும் மறந்து  தன்னையும் மறந்ததே —
தடை தாண்டி என் தசை அறிவிப்பீர் ஆகில்–
இது ஒப்ப எனக்கு இன்பம் இல்லை–சொல்வதே சுகம்–
அறிவிப்பே அமையும்
விளம்பம் இதுவே —
அவனால் காத்து இருக்க முடியாது அவன் மனசு இன்னு வரவில்லையா துடித்து கொண்டு இருக்கிறான்

வரவு தப்பாது –புருஷோத்தமன் –
நாளும் –உபகாரம் பண்ணி– போய் விடாமல் நான் பண்ணும் கிஞ்சித்கார ஸம்ருத்தியும் கொள்ள வேண்டும் –
காட்டிக் கொடுத்த ஆச்சர்யனுக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்–
அவனுக்கு பிரியமானதைக் கொடுக்க வேண்டும் -யாவத்தா ஆயுஷும் —
உபய விபூதியும் நான் இட்ட வழக்கு போல வைத்து இருக்கிறானே —
பரப்பை உடைத்தான கடலுள் சோலை அடைய –
பிரிந்தார் இரங்கும் இடம்  நெய்தல் -ஈது எல்லாம் கண்ணால் காணும் அளவும் —
உபய விபூதிக்கும் -பொன் உலகம் ஆளீரோ புவனம் ஆளீரோ–
நான் கிட்டிய பின் வேற இடம் அவனுக்கு வேண்டாம்-
நீ காட்டின இடத்தில் இருப்போம் —
உனதே ஆக —
எனக்கும் உனக்கும் பொதுவாக இல்லை–
பழன மீன் –
இடம் மட்டும் இல்லை –
மத்ஸங்களும் யானைக் கன்று போல இருக்கும்- கொழும் கயலாய்  –
இளந்த பழம் அடை கொடுத்தான் தசரதனுக்கு –
தனக்குப் பிடித்ததை அவனுக்கு கொடுக்கலாம் –ஆச்சர்யருக்கு பிடித்ததை கொடுக்க வேண்டும் –
அவருக்கு உகந்ததை தேடி கொடுக்க வேண்டும் –கவர்ந்து உண்ண –
கொத்தி கொண்டு மேல் விழுந்து புஜிக்க வேண்டும் படி இருக்கும் —
தருவன் –
என் கண் முன்னே இருந்து  புஜிக்க வேண்டும்-
வந்து -அவனை போலே உபகரித்து  -பின்பு வாராது ஒழியாதே —
உன் பெடையும் நீயும் –
ஏ காங்கியாய்  இல்லை –
உனக்கு அபிமத விஷயம் கூட்டி கொண்டு —
திரு வாய் மொழி துணைக் கேள்வி–
அந்தமில் பேர் இன்பம்-நலம் இங்கேயே அனுபவிக்கலாம்–
அனந்த கிலேச பாஜன சம்சாரத்தில் நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டீர் மக்கள் வாழப் பெறலாம் —
சரீர சம்பந்த திசை என்பதால் ஆச்சர்யர் பிரியமானதை கொடுத்து  வர்த்திக்கும் ஏற்றம் –
தெள்ளியீர்  அனுபவம் இங்கு தான் உண்டு -வையத்து நீடு நிற்பார்களே —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading