கும்பே புனர்வசு ஜாதம்
கேரளே சோழ பட்டனே
கௌஸ்துப அம்சம் தராதீசம் –
குலசேகரம் ஆஸ்ரையே
தரணிக்கே ராஜாவாக இருந்தவர்/ கௌஸ்துபம் அம்சம்- ஜீவாத்மா -பிரதி நிதி இது தான்/கொடுங்களூர் பக்கம் திரு வஞ்சி குளம் /
திரு வஞ்சி களம் -ஆறாவது ஆழ்வார்/திருவிடவிரதன் -திருத் தகப்பனார்
கலி பிறந்த 28 ஆம் ஆண்டு -பராபவ ஆண்டு -மாசி மாத சுக்கில பஷத்து துவாதசி -வுஆலக் கிழமை -புனர் வ ஸூ நஷத்ரம் -திரு வஞ்சிக்களம் –
தாங்களும் ஆழ்ந்து நம்மையும் ஆழ வைக்கிறவர்கள் ஆழ்வார்கள்
/முதல் ஆழ்வார்கள் -பரத்வத்தில் நோக்கு
/திரு மழிசை பிரான்-அந்தர்யாமியில் நோக்கு/ எல்லாம் கடந்தவன் உள்ளே இருக்கிறான்-கடவுள்
/நம் ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆண்டாள்-கண்ணன் இடத்திலே காதல்
/திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் வேர் பற்றான ஸ்ரீரங்கத்திலே மண்டி/
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையிலே நோக்கு /
குலேசேகரர் ராமன் அல்லால் தெய்வம் இல்லை/
பாவோ நான்யத்ர கச்சதி – திருவடி-வீரத்தில் தோற்று
-குலேசேகரர் ஷத்ரிய ராஜ-ராமனால் ஈர்க்க பட்டார்/நித்யம் ராமாயண கதை கேட்டது
-படி கொண்ட கீர்த்தி பக்தி வெள்ளம் கோவில் கொண்ட ஸ்ரீ ராமானுஜர்/
கொல்லி காவலன் குலேசேகரர் /கர தூஷணர் கதை கேட்டும் சீதை பிராட்டி சிறை வைத்ததும் கேட்டு உணர்ச்சி வசப் பட்டார்/
கலி 28 வருஷம் -அவதாரம் என்பர்/மாசி புனர்வசு /பக்தி தலை எடுத்து கரைந்து உருகுவார்/
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று /
பெருமாள்-ராமனின் சுக துக்கம் தனது என்று கொண்டவர் என்பதால்
-குலேசேகர பெருமாள் /நம் பெருமாள்-ராமன்-பெரிய பெருமாள்-கண்ணன்-/
நித்யம் ஸ்ரீ ரெங்க யாத்ரை பாரித்து -ரெங்க யாத்ரை தின தினே-ஊரும் நாடும் இதை பிதற்றும் படி ஆக்கி வைத்து இருந்தார் –
திக்கு நோக்கி நித்யம் ஸ்ரீ ரெங்கம் கால் எடுத்து நடக்க வேண்டும்/ஹரி நாம சங்கீர்த்தனம்–இந்த ஹரி /இரண்டு எழுத்துகள் தான் திரு மண தூண்கள் //
ஸ்ரீ வைஷ்ணவர்கள்கூட்டி ஸ்ரீ ரெங்க யாத்ரை நிறுத்தி -அரண்மனை முழுவதும் ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம் ஆக
– மந்த்ரிகள்-குற்றம் -ஆரம் கெட–குட பாம்பில் கை இட்டவர்/பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே -பஷ பாதி
மந்த்ரிகள் மன்னிப்பு கேட்க்க/திட விரதன் பிள்ளையை ராஜ்யத்தில் வைத்து /
சேர குல வல்லி- நீளா தேவி அம்சம்-பெண் உடன் திவ்ய தேசம் –
முகுந்த மாலை -பெரிய வாச்சான் பிள்ளை மேற் கொள் காட்ட வில்லை/மா முனிகள் காட்டி இருக்கிறார்
/ ஆழ்வார் வம்சத்தில் இருக்கலாம்/ ஆழ்வார்கள் எய்தற்கு அறிய மறைகளை தமிழில் செய்ய வந்தவர்/
ஆறு குலேசேகரர்கள் சரித்ரத்தில் உண்டு//பெருமாள் திரு மொழி-பெயர்-நாச்சியார் திரு மொழி- பெரிய ஆழ்வார் திருமொழி-போல
– பெருமாள் பற்றியது என்றால் எல்லாமே அப்படி தானே-ஆழ்வாரை தான் குறிக்கும்/பெருமாளது – திரு மொழி-ஆறாம் வேற்றுமை-
-பெருமை + ஆன் =பெருமான் ஆணுக்கு பெண் தன்மை-ஆள் விகுதியாக மாறி-பெருமாள்/திரு மொழி-பண்பு தொகை
/ முதல் மூன்று பதிகத்தால் திரு அரங்கம் -ஆறு பதிகங்களில் 11 பாசுரம்/i பதிகம் 9 பாசுரங்கள் ஆக 105 பாசுரங்கள்//
/ முதல் 5 திவ்ய தேசங்கள்-திரு வேங்கடம் 4th திரு வித்துவ கோடு // அடுத்த ஐந்தும் விபவம்/
பத்தாம் பதிகம் மட்டும் விபவம் அர்ச்சை கலந்து அவனே இவன் என்று காட்ட -ராமாயணம் திரு சித்ர கூடம்-சேர்த்து அருளினார் /
திரு கண்ண புரம் 5 நாயகி/ 5 ஆண் பாவம்/ ஆண்டாளும் வாரணம் ஆயிரம் பதிகம்-கைத்தலம் முன்பு பின்பு 5 /ஈர் ஐந்தும்- என்று பிரிப்பார்கள் / திரு கண்ண புரம் அருளிய /8th பத்தில் முதல் 5 நாயகி மேல் ஐந்தும் தான் ஆன பாவம்/
அடைவே அமைத்தார்-சரண் அடைய ஷட் விதம்-கடாஷம் முதல் தேவை -முதல் பதிகம்-இதற்க்கு/கண் இணைகள் என்று கொலோ களிக்கும்
/2 பதிகம் ஆநு கூல்ய சங்கல்பம் –மால் கொள் சிந்தையராய் அடியார்கள் உடன் சேர
/ 3 பதிகம் – வேண்டாதவர் இடம் விலகி-வையம் தன் உடன் கூடுவது இல்லை பிரதி கூல்யச்ய வர்ஜனம்/
சரண் அடைந்ததும் கைங்கர்யம் பிரார்த்திக்க திரு வேங்கடத்தான் இடம்-ஏதேனும் ஆக பாரிகிறார்/
அனுக்ரகம் கிட்ட வில்லை/உபயாந்தரம் சம்பந்தால் இல்லை என்று காட்ட -கதறுவது உபாயம் இல்லை சொரூபம் ஆக கொள்ள வேண்டும்
/5th பதிகம்- ஈன்ற தாய் அகற்றிடினும் ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் புகல் இடம் போக்கிடம் இல்லை
/கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குறை கழலேகூறுவனே- திரு வித்துவ கூடு பதிகம்-
-சேவை கிட்ட வில்லை–அடுத்து ஊடல் திறத்தில்–காதில் கடிப்பிட்டு திரு மங்கை ஆழ்வார் போல மின் இடை மடவார் ஆழ்வார் போல –
-வாசுதேவா உன் வரவு பார்த்து-ஒருத்தி தன் பால்–அவளுக்கும் மெய்யன் இல்லை-
-பரம பக்தி தோன்ற பராங்குச நாயகி ஊடல்/மிடுக்கு தோன்ற பர கால நாயகி ஊடல்//ராஜ குல மாகாத்ம்யம் தோன்ற இவர் வூடல் /
/அனுபவம் கிட்ட வில்லை- பெண் ஆன தன்மை மறக்காமல்- தெய்வ தேவகி இழந்தாள்-புலம்பி தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
/தாலேலோ பாட வில்லையே ஆசை -உடன்-கௌசலை பாவத்தில் -திரு கண்ண புரத்துக்கும்-ராமனுக்கும்-
நடை அழகை காட்ட விபீஷணன்-பெரிய பெருமாள் இடம் கிடந்த அழகை கண்டு கேட்டானாம்- கீழ வீட்டுக்கு அனுப்ப ஆசை அவனை –திரு கைதல சேவை-தனி சந்நிதி உண்டு
மேலே வீடிலும் கீழ வீடிலும் –அனுபவித்து இழந்தாள் திரும்பி வந்ததும் சேர்ந்து இருந்தாள்– தசரதன் தானே இழந்தான் அதை பாடுகிறார்/
–ராமனை நன்றாக அனுபவித்து முடிக்க— கிடந்தது சேவை –தில்லை நகர் திரு சித்ர கூடத்தில் -அனுபவித்து அருளுகிறார் -பிறந்தது முதலா தன் வுலகம் புக்கது ஈறாக பாடி அருளினார்
திரு அரங்கம் திரு வேங்கடம் திரு வித்துவ கூடு திரு சித்ர கூடம் அயோதியை போன்றவற்றை மங்களா சாசனம்
ஸ்வாமி ராமா னுசன்-நாயகி பாவத்தில்- -ராமன்-ராமாயணம் -ஸ்ரீ ரெங்கம்-மயக்கம் -மயலே பெருகும்–இருவருக்கும் ஒற்றுமை-அதனால் ஸ்வாமி தமிழ் தனியன் அருளி இருக்கிறார் –
கிளி வளர்த்தாராம்/இன் அமுதம் ஊட்டுவேன்/ எடுத்தவன் கோல கிளியை உன் உடன் தோழமை கொள்ளுவன் உலகு அளந்தான் வர கூவாய்
/ஆண்டாள் -பச்சை நிறம் -அவன் நிறம் போல-தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்-பொன்னின் பொன் அம் சிலை சேர் நுதல்
-நெற்றி- புருவம்-வேள் -விரும்பும்- தலைவன்-காமர் மானே நோக்கியர்க்கே போல -ஞானிகளை கொள்ள வேண்டும்
-மக்கள் மாதர் நோக்குவது போல -தாவி வையம் கொண்ட தடம் தாமரை தாமரை போன்ற அடிகளை சொல்ல வந்தது/
/குல சேகரர்-பிர பன்ன குலத்துக்கு சேகரர் /நமக்கு குல பதி/மணக்கால் நம்பி அருளியது- எதிர்த்து வந்தவர்களை வென்றவர்/
இன் அமுது ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமான் பொன் அம்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்
குலேசேகரன் என்றே கூறு
சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் -ஸ்ரீ ராம நவமி-மன்னார் கோவில்-பிரம தேசம்-ராஜ கோபாலனுக்கே கைங்கர்யம் பண்ணி இருந்தார் இறுதி வரை
/தவம் செய்யும் கொள்கை அற்றேன்-கொல்லி காவலர் பெருமாள் திரு மொழியே கதியாக பற்றிய –
-நாத யாமுனாதிகளை பற்றிய ராமானுஜரை பற்றி–கதிக்கு பதறி போக மாட்டோம்-
இரண்டும் தமிழ் தனியன் தான் வளர்த்த கிளியை -குலசேகரர் பெயரை கூற சொல்லுகிறார்/திவ்ய தேசம் வர்த்திக்கும் திர்யக் பெருமாள் திரு நாமம் சொல்லும்/
-ஸ்வாமி நாயகி பாவத்தில் சொல்கிறார் இதில்/ராமானுஜ நாயகி -என்று முதலில் சொல்லி அடுத்து –
/பக்தி பாரவச்யம்-பிரேமத்தில் பெண் பேச்சு இல்லை என்று கூரத் ஆழ்வானையும் சொல்கிறார்
/வேத கோஷத்தை பட்ஷி ஜாதிகளும்/
பெரிய ஆழ்வார் திரு மொழி 4-9-5-பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கம்-
பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8- -அறு கால் வரி வண்டுகள்ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே
-அழகை சொல்கிறார் -திரு நாமம் சொல்லும் திரு மேனியும் உத்தேசம்-மண்டபம் கை கூப்பி நின்று நின்று சேவித்து போவார்கள் முதலிகள்
-பட்டர் பிள்ளை திரு நறையூர் அரையர்/உணர்ந்து சிற்றம் சிறுகாலை பாடுமாம்-பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையவன்//
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு -முதலை இருக்காது- இருந்தாலும் திரு வேம்கடத்தில்- காலை பற்றி நமச்கரிக்கும்/
பெரிய ஆழ்வார்திரு மொழி -4-8-8-எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி/
கிளி-முன்னோர் சொல்வதை பேசும்-வளர்த்ததனால் பயன் பெற்றேன் மட கிளியை கை எடுத்து வணங்கினாளே/ –
-அல்லி அம் போது அரியரி என்று அவை அழைப்ப-திரு வெ ள்ளியம்குடி //
/– செவ்வாய் கிளி நான் மறை பாடும்-/பெருமானே மறை பாடினது போல வேதம் ஓதும்/ இவர் வாயில் நல் வேதம் /
ராமன் பக்தர் ராமன் திரு நாமத்தை சொல்ல சொன்னது போல/
/அன்றிக்கே- வேறு கருத்து – கூரத் ஆழ்வானை- படி கொண்ட கீர்த்தி -ராமாயணம் என்னும் /பக்தி வெள்ளம்-
குடி கொண்ட கோவில் ராமானுசன்-பெரிய திரு மலை நம்பி ஒரு ஆண்டு கீழே இறங்கி கால ஷேபம் சாதித்தார்
-ஆள வந்தார் ஆணை என்பதால்- சாலை கிணறு-தேவார் கோலத்தோடு-திரு சக்கரத்தோடும் சங்கி னோடும் வந்து காத்து -இன்றும் சேவிக்கலாம் காஞ்சி
/-மாமன் பண்ணினதை மருமகனும் /தேர் ஓட்டிகள் கண்ணனும் கம்சனும்
/-விபீஷண சரணாகதியில் ஈடுபாடு–பிள்ளை உறங்கா வல்லி தாசர்-வெறுப்புடன் எழுந்து இருந்து போக- ஸ்வாமி வார்த்தை/
-லக்ஷ்மணன் இலைகள் போட்டு ராமன் நடக்க -அன்று தாம் இல்லாமல் போனோமே-ஸ்வாமி சொல்வாராம்
/ பொன் அரங்கம் என்னில் மயலே- பெருகும் – அது போல குலசேகர பெருமாளும் இரண்டையும் -ஆதரித்து
-எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்- இன் அமுதம் மதியோம் -கண்ணுக்கு காட்டிகொடுத்தான்
/ ரெங்க யாத்ரை தினே தினே -அணி அரங்கம் திரு முற்றம் -தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாம் –
அதனால்கூரத் ஆழ்வான் போல்வாரை சொல்லி பார்க்க ஆசை/காலை -கரிய குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லும்
/ஜான சுருதி-பறவை பாஷை தெரிந்தவன்- நிழல் பட்டாலும் ஆபத்து- மற்ற பறவை இவர் என்ன ரைகுவரோ-கேட்டதும் தேடி போனான்
-மக ரிஷிகள் பறவை -பறவை சொல்லி வந்தாயா என்று கேட்டார்
/பட்ஷி நாதம் ஸ்ரீ வைஷ்ணவர் முக்கியம்-கீசு கீசு புள்ளும் சிலம்பின -பிரம ஞானத்துக்கு
– பகல் கண்டேன் நாரணனை கண்டேன்-//ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க த்திலும் இருவரும் மண்டி இருந்தார்கள்
/கொல்லி காவலர் சொல்.. -பெரியவர் பாதங்களை துதிக்கும் -பகவத பாகவத சேஷத்வம்
/ குலேசேகர ராஜா இடம் –எதிராஜர் -மண்டி இருக்கிறார்/அற்ற பற்றர்-பற்று அற்றவர்கள்-
அற்றது பற்று எனில் உற்றது வீடு- -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கமே- -கோவில் சுற்றி வாழ்ந்து இருகின்றார்கள்-
ஆழ்வான் போல்வார்–ஆச்சர்ய பூர்த்தியும் சிஷ்ய பூர்த்தியும் நிரம்பியவர் கூரத் ஆழ்வான்
/வனகிரி ஈஸ்வரனிடம்–திரு கண்ண புரம்பெருமாள் இடம்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -கேட்டது போல/
யதா புரம் ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி நிழலில் வாழ அருள வேண்டும்/அரங்கர்நகர் வாழ என்றும் கேட்கிறோம்
/அற்ற பற்றர் அபிமானத்தில் ஒதுங்கி வாழ்வார் இவர் -நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள்-
-விஷம்-தோஷம்-ஒன்றையே பால்-குணமாக கொள்பவர்-போல கூரத் ஆழ்வான் போல்வார்
/ஆண்டாள் ஆழ்வான் பிரகலாதன் போல்வார்/கைகேயி மனைவி இல்லை பரதன் பிள்ளை இல்லை என்று சொன்ன
வார்த்தை திரும்ப கொள்ள கேட்டானே ராமனும்/
கிளி மொழியாள்-முன்னோர் முறை தப்பாமல் பேச-/ச்வாபத்தில் அழுகை நைந்து ஆழ்வான் தான்ஏற்ற கலங்கள் –
-ஆற்ற படைத்தான்-பன் மடங்கு பெருக்கி சொல்லும் சிஷ்யர்கள் உள்ள உடையவர்/மகன்-செல்ல பிள்ளை
/அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தவன்-திரு வேங்கடம் உடையவன்/ பெரிய திரு மலை நம்பி-திரு வேங்கடம் உடையான்/மேல் சொல்ல மாட்டார்
/அபிப்ராயம் இல்லாத வற்றை சொல்ல மாட்டார்/ கூரத் ஆழ்வானை கொண்டு குலேசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிகிறார் /
நாச்சியார் திருமொழி 5-5-அன்னம் பறந்து விளையாடும்–இன் அடிசிலொடுபால் அமுதூட்டி எடுத்த என் கோல கிளியை -உண்டு
தோழமை கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வர கூவாய்-கிளி உடன் தோழமை
/அதனால் தான் நித்யம் புது கிளி மாலையும் மார்கழி மாசம் திரு வேம்கடம் உடையான் உண்டு
/இங்கு தேனும் பாலும் அமுதமும் திரு மால் திரு நாமம்-மாதவன் பேர் ஓதுவதே ஒத்தின் சுருக்கு
-துவயம் தான் கொடுத்து வளர்த்தார்/துவயம் கற்பூர நியகம் போல திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதும் வலது திரு காதில் மீண்டும் பிரசாத்திதாரே
/இங்கே வா-பட்டர்- நஞ்சீயர் சம்வாதம்-துவயம் ஆசையுடன் கொடுப்பார்
/கிளிக்கு மகிழ்ச்சி தெரிய வடிவில் பிறந்த ஹர்ஷம்-பசுத்து மரகதம் போல மடப்பம்-பவ்யம்-பைம்கிளி- திரு வாய் மொழி -9-5-6-
ரூப சாம்யம் -பரம சாம்யம்-சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் சாரூப்ய மோட்ஷம்/
என் ஆர் உயர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினான் நின் பசும் சாம நிறத்தான் கூட்டுண்டு நீங்கினான்-/
/தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்-
ஆச்சார்யர் எல்லாரும் அரங்கன் பஷ பாதிகள்/ ஆழ்வார்கள் எல்லோரும் திரு வேங்கடத்தான் இடம் தான் சரண்/
ஆயிரம் பாசுரங்களும் அரங்கனுக்கு -பட்டர் /மூன்று பத்தும் பாடி, முடிவிலும் யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவன்-
8th பதிகத்திலும்,,ஆராமங்களாக இருக்கும் திரு பதிகள்–திரு வேங்கடம் திரு வித்துவ கோடு /
புற சோலை போல இவை என்கிறார் ஆராமம் சூழ்ந்த அரங்கம்/ காகுத்தா கண்ணன்–கங்குலும் பகலும் பதிகத்தில்- என்று விபவமும் அரங்கனே/
105 பாசுரங்களும் அரங்கனுக்கே என்கிறார் இந்த நான்கு காரணங்களால் /
செருவிலேஅரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் என்றும் வெண்ணெய் உண்ட வாயன் –என்றும்-குணுங்கு நாற்றம் வீசும் பெரிய பெருமாள் திரு மேனியில்-
கபோலத்திலும் திரு மேனியிலும் பூசி கொள்வான்-கபோலம் அழகனுக்கு பருத்து இருந்தது யசோதை தொட்டு முத்தம் இட்டதால் கை பட்டு பருத்து இருக்கிறதாம்
-கூரத் ஆழ்வான் /நுதலியர் வேள்-காமனை போல் ஆசை தூண்டுபவர்-ஞானத்துக்கு மேலான -வேதந்திகளால் ஆதரிக்க படு பவர் என்கிறார் பொன்-ஞானம்
/காமரு மானை நோக்கியர்க்கே- பக்தர்கள் ஆசை படுவார்கள் பதிகம் கற்றவரை /
சேரலர் கோன்-சர்வ ராஜாக்களுக்கும் ராஜா போல -குடிக்கு நிர்வாககர்/எங்கள் குலசேகரர் மனசால் நம் இடம் எல்லாம் வாழ்கிறார் -பிர பன்ன குடி-தலைவர்/
ராமானுசர் என் குல கொழுந்து-சரம பர்வ நிலையில் அமுதனார்/ ராமானுஜர் ஆழ்வாரை சொல்ல /ஆழ்வார் ராமனை சொல்ல -இவர்களை அனைவரையும் தரித்து நாம் சத்தை பெறவேண்டும்
நான் வளர்த்த கிளி பைதலே/வயசு ஆகவில்லை முதிர்ச்சி கிட்ட வில்லை
வயசு வரை மேல கோட்டையில் ஸ்வாமி /இங்கே வா பைம்கிளியே-இன் குரல் நீ மிளற்றாதே -குளறாமல்/என்ன பேசினாலும் இன் குரல் தான்
பஞ்ச ஸ்தவம் பேசினீர்/அதை விட குலேசேகரர் சொல்லு<
கூறிய வாயுக்கு அமுதம் போல துவயம் கொடுக்கிறேன்/ஆச்சர்ய வைபவம் வக்தவ்யம்
-குரு பரம்பரையும் துவயம் தானே/மணக்கால் நம்பி அருளிய தனியன்..
ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன் மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலேசேகரன் முடி வேந்தர் சிகா மணியே
புனர் வசு அன்று -ஸ்ரீ வைஷ்ணவர் பக்கம் இவர் பஷ பாதமாக இருந்த நிலை
/இன்னார் தூதனாக நின்றான்-நூற்றுவர் வீழ -உதங்க பிரசன்னத்துக்கு உத்தரம் இல்லை
பரன் அன்பர் கொள்ளார் -பர வஸ்து இடம் பக்தி கொண்டவர் பரர் வஸ்து இடம் ஆசை கொள்ளார்
-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-ஆத்மா அபகாரம் -பாம்பார் வாயில்பெரிய திரு மொழி போல-
-பிரதிஜை பண்ணி ஆபரணம் படார் என்று பாம்பின் பணம் உள் கை இட்டு சொன்னார்
-வீரர் இவர்-சுடு சொல் கேட்டு பண்ணுகிறார்-ப்ரீதி உடன் திரு ஆராதனம் பண்ண வேண்டும் பீதி உடன் இல்லை
-செங்கோல்-ஆளுகை -இதுவே போதும் வீரம்கேடுக்க-இருளார் வினை கெட செங்கோல்-திரு விருத்தம்- உடைய திரு அரங்க செல்வன்
-செங்கோல் பெரிய பெருமாள் இடம் புறப்பாடு பொது நம் ஆழ்வார் இடம் ஸ்வாமி திரி தண்டமும் அப்படி
/வில்லவர்- வில் பிடித்த ராஜாக்கள் அனைவருக்கும் கோன்/சேர குலத்தவர் என்றும் வில்லவர்
கொல்லி காவலன்-சேரர் /கூடல் நாயகன்-பாண்டியர்– கோழி கோன் -உறையூருக்கும்- சோழன் -ராஜாதி ராஜர்- முடி வேந்தர் சிகா மணியே –மணி மகுடம் தாள துளங்கு நீண் முடிஅரசர் வணங்குவார்கள் /மால் அடி முடி மேல் இவருக்கு -சிகா மணி
-சேகரர்-அழகும் முதலும்-பெரி மணி வானவர் உச்சி வைப்பது போல
-சிகா மணியே- ஏகாரம்-ஆச்சர்யம் தோன்ற /இவரே குட பாம்பில் கை இட்டாரே
– – பெருமாள் திரு மொழி 2-10 அரங்கன் மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவும் மனத்தானாம்
எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –
இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள்
பொன்னஞ்சிலை சேர் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு
மணக்கால் நம்பி அருளிச் செய்த தனியன் –
ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் -மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குல சேகரன் முடி வேந்தர் சிகா மணியே
——————————————————————————————————
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
Leave a Reply