Archive for the ‘ஸ்ரீ நம் ஆழ்வார்’ Category

ஸ்ரீ குருகை நாதனும் ஸ்ரீ கூரநாதனும்-ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்-

January 29, 2026

ஆழ்வார் திறத்திலே கூரத்தாழ்வானுடைய ஈடுபாடு அபரிமிதம்.-ஆழ்வானுடைய பஞ்ச ஸ்தவம் முழுவதும் ஆழ்வாரருளிச் செயல் மயம். ஆயினும் அவருடைய இரண்டு ஸ்லோகங்கள் போதும்.

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகமிது. இதன் பொருள் வருமாறு-யாதொரு நம்மாழ்வார் திருவடி பிணையானது, பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமா யிருக்கின்றதோ, யாதொரு திருவடியிணையே ஸர்வ காலமும் ஸாத்விகர்களுக்கு ஸகலைஸ்வர்யமுமாக இருக்கின்றதோ, யாதொரு திருவடி யிணையே புகலொன்றில்லா தவர்களுக்குத் தஞ்சமா யிருக்கின்றதோ, அப்படிப்பட்ட பரம பாவநமான நம்மாழ்வாருடைய திருவடி யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்.-

தத்வகுளாபரணங்க்ரியுக்மம் ஸம்ச்ரயேம்]  மகிழ்மாலை மார்பினன் என்று தாமே பேசிக் கொள்ளலாம்படி வகுளமாலையை நிரூபகமாக வுடையரான நம்மாழ்வாருடைய அப்படிப்பட்ட திருவடித் தாமரை யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம். எப்படிப்பட்ட தென்னில், சில விசேஷணங்களை யிட்டு அத் திருவடிகளின் அதிசயத்தை விளக்குகிறார்.

[யத்த்ரைவித்ய வ்ருத்த ஐநமூர்த்த விபூஷணம்] த்ரைவித்ய வ்ருத்தர்களாகிறார் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார். அவர்களுடைய சிரஸ்ஸுக்கு பூஷணமாக இருக்குமாய்த்து ஆழ்வார் திருவடிகள்;

மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே? என்றும் குருகூர் நம்பி! முயல்கின்றேனுன்றன் மொய்கழற் கன்பையே-என்றும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அத்திருவடிகளையே யிறே தங்கள் தலைக்கு அணியாகக் கொள்வது;

கோலமா மென் சென்னிக்கு உன் கமல்மன்ன குரைகழலே என்றும் –அரசமர்ந்தானடி சூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே என்றும் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாகக் கொள்ள நினைப்பாரிற் காட்டிலும் அந்த பகவத் பாதாரவிந்த ஸ்வரூபியான ஆழ்வாருடைய திருவடிகளை சிரோ பூஷணமாகக் கொள்ளுமவர்களிறே சீரியராவர்.

த்ரை வித்ய வ்ருத்த சப்தம் முக்கியமாக நம்மிராமாநுசனையே கருத்தில் கொண்டதாகும் . ருக் யஜூஸ் ஸாமங்களாகிற வேத வித்யா த்ரயத்திலும் வல்லவ ரென்றபடி –சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வறநெறி யாவும் தெரிந்த விராமாநுசனைப் போன்ற மஹநீயர்களைக்கொள்க.

[ஸாத்விக ஐநஸ்ய நித்யம் யதேவ ஸம்பந்] தனத்தாலு மேதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று என்றிறே ஸாத்விகர்கள் அத்யவஸித்திருப்பது. லௌகிகர்கள் ஸம்பத்தாக நினைத்திருக்கும் வஸ்துவானது வஸ்து ஸ்திதியில் விபத்தாயிருக்கும்மாயிற்று. உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்ய முடையார் இட்ட வழக்காயிருக்குமென்கை.

* பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடேக இந்யாதி. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்’ என்றருளிச் செய்த ஆளவந்தார் போல்வாரை யாயிற்று இங்கு [ஸாத்விக ஐந மென்கிறது.

[நித்யம்] இந்த விபூதியில் உள்ள போதோடு அந்த விபூதியில் செல்லும் போதோடு வாகியற ஸர்வ காலத்திலு மென்றபடி.அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் என்னுமா போலே

(யத்வா சரண்யம் அசரண்ய நஸ்ய] அநாதர்களுக்குப் புகலிடமாயிருக்கும்- ஆழ்வார் திருவடிகள். எம்பெருமான் தன்னாலும் திருத்த வொண்ணா தென்று கைவிடப் பட்டவர்களாயிற்று அசரண்யர்கள்; அப்படிப்பட்டவர்களையும் வலியப் பிடித்திழுத்துத் திருத்திப் பணி கொண்டவர் ஆழ்வாரே யிறே
[புண்யம்] புநாதீதி புண்யம். பரம பாவன மென்றபடி. *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி ஸகலாத்மாக்களையும் பரிசுத்தமாக்க வல்ல தென்கை. புண்யம் ஸுந்தரமென்று பர்யாயமுமாகையாலே அழகிய திருவடிகளென்பாருமுளர். பாவநார்த்தகத்வமே பாங்கு. ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கினபடி சொல்லிற்றாயிற்று.

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–3-என்பது அந்யாத்ருசமான விந்யாஸம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் மூன்றாவது ஸ்லோகமாகும்.

இந்த ஸ்லோகத்தாலே ஆழ்வார்க்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் ஆழ்வான். ஆழ்வாரை ஒரு கடலாக ரூபணம் பண்ணிப் பேசுகிறாரிதில். பயோ நிதியாக ரூபணம் பண்ணுகைக்குப் பொருத்தமான ஒளசித்யங்களை நான்கு விசேஷணங்களினால் நிரூபிக்கிறார். பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகளெல்லாம் ஆழ்வார் பக்கலில் குறையற்றிருக்கிற படியை ஒவ்வொரு விசேஷணமும் மூதலிக்கின்றது.

(பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸார ரஸௌகபூர்ண :] கடலானது ரஸெளக சப்த வாச்யமான ஜல ப்ரவாஹத்தாலே பரிபூர்ணமாயிருக்கும்; ஆழ்வாரோ வென்னில், ஸ்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயாநக ரெளத்ர பீபத்ஸ பக்தி ரஸங்களாலே பரிபூர்ணரா யிரா நின்றார். இப்படிப்பட்ட ரஸ விசேஷங்கள் ஆழ்வார் பக்கலிலே விளைந்தமைக்கு நிதாநமே தென்னில், விலக்ஷணமான பக்தி விசேஷத்தாலே ஆச்சரியமான பாவ பந்தங்களுண்டாகி அந்த பாவ பந்தங்கள் தலை தலைத்து நாநா ரஸ பரிபாகங்களாயின வென்கிறார்.

[பக்தி ப்ரபாவ] ஆழ்வாருடைய பக்திக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை; *காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி யென்று முதலில் கடல் போலேயாய், பிறகு*கொண்ட வென் காத லுரைக்கில் தோ ! மண்டிணி ஞாலமு மேழ் கடலும் நீள் விசும்புங் கழியப் பெரிதால்‘ என்றாய், அநந்தரம் *சூழ்ந்ததனிற் பெரிய வென்னவா என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய் ஆக விப்படி மேன்மேலும் பெருகிச் செல்லு தான பக்தியின் ப்ரபாவத்தினாலே. (பவத் அத்புத பாவபந்த/ உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே. அதாவது – அந்த பக்தி தானே ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமித்து தலைமகள் பாசுரமாகவும் தாய் பாசுரமாகவும் தோழி பாசுரமாகவும் பேசும்படிக் கீடான பலவகைப்பட்ட ஆச்சர்ய பாவ பந்தங்களை யுண்டாக்கி நிற்கு மென்கை. [ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண:] அப்படிப் பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரஸத்தை வளரச் செய்யுமாயிற்று.

*உயர்வற வுயர் நலம் வீடுமின் முற்றவும் பத்துடை யடியவர்க் கெளியவன் பிறவித்துயரறம் பொருமாநீள்படை என்னுமிவைபோல்வனவான திருவாய்மொழிகளில் ஸாதாரண பக்தி ரஸம் விளங்கு மத்தனையல்லது ப்ரணய ரஸம் விளங்கமாட்டாதிறே.

*அஞ்சிறையமடநாராய் மின்னிடை மடவார்கள் * வேய்மருதோளிணை* முதலான திருவாய்மொழிகளிலே யாயிற்று அத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸாரம் விளங்குவது. அப்படிப்பட்ட ப்ரணயம் மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீஸூக்திகளில் நவ ரஸமும் பொலிய நிற்குமிறே.

நவரஸங்களுள் ஸ்ருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயானகம் சாந்தி (பக்தி) ஆகிற இந்த ரஸங்கள் ஒரோ திருவாய்மொழிகளில் பரதானமாகப் பொதிந்திருக்கும்; மற்ற ஹாஸ்ய பீபத்ஸ ரௌத்ரரஸங்கள் ஓரோவிடங்களிலே மறைய நின்று சிறிது சிறிது தலைகாட்டி நிற்கும்.

*வீடுமின்முற்றவும் சார்வேதவநெறிக்கு * கண்ணன் கழலிணை முதலான திருவாய்மொழிகளிலே பக்திரஸம் தலையெடுத்திருக்கும்.

மின்னிடை மடவார்கள் நங்கள் வரிவளை * வேய்மரு தோளிணை முதலான திருவாய்மொழிகளிலே ஸ்ருங்கார ரஸம் தலையெடுத்திருக்கும்.

மாயாவாமனனே புகழு நல்லொருவன் * நல்குரவுஞ் செல்வும் முதலான திருவாய்மொழிகளிலே அத்புதரஸம்.

உண்ணிலாவிய வைவரால் இத்யாதிகளிலே பயாநக ரஸம்.

* ஊரெல்லாந்துஞ்சி × வாயுந்திரை யுகளும் ஆடியாடி யகங்கரைந்து இத்தியாதிகளிலே கருணரஸம்.

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் வீற்றிருந்தேழுலகும் * இத்தியாதிகளிலே வீரரஸம்,

ஆக இங்ஙனே நாநா ரஸங்கள் பொதிந்த ஸ்ரீஸூக்தி ராசிகளை யருளிச் செய்யும் முகத்தாலே ரஸௌக பரிபூர்ண ராயிருப்பராய்த்து ஆழ்வார்.

வேதார்த்த ரத்ந நிதி: கடல் ரத்நாகரமாகையாலே ரத்ந நிதியாயிருக்கும்.பராங்குச பயோ நிதியும் அப்படியே யிருக்கிறபடி ஓதம் போல் கிளர் வேத மென்றும்.ஸ்ருதி ஸாகர மென்றும் சொல்லுகிறபடியே கடல் போன்றுள்ள வேத சாஸ்த்ரங்களிலே அல்ப ஸாரமாயும் ஸாரமாயும் ஸார தரமாயு மிருக்கின்ற அர்த்தங்கள் போக ஸார தமங்களாகவுள்ள அர்த்தங்களே ரத்நமாகும்.

த்ரைகுண்ய விஷயா வேதா:என்கிறபடியே எல்லாம் கலந்த கட்டியாயிருக்கும் வேதங்கள். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிற மூன்று குணங்களிலும் ஊன்றினவர்களுக்கு அபேக்ஷிதங்களான விஷயங்களை யெல்லாம் வெளியிடுமவையிறே வேதங்கள்,

மாற்றங்களாய்ந்து கொண்டு மதுசூதபிரானடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன சொற்களிலே ஸாரதமமான பொருள் தவிர வேறொன்றும் அவகாசம் பெறாமையாலே எல்லாம் ரத்னங்களாயிருக்கும். அப்படிப்பட்ட ரத்நங்களுக்கு நிதியாயிருப்பராய்த்து ஆழ்வார் *வேதத்தமிழ் செய்த மாறனிறே.

[அச்யுத திவ்யதாம மாலுங் கருங்கடலே! என்னோற்றாய்? வையக முண்டு ஆலினிலை துயின்ற வாழியான்-கோலக் கருமேனிச் செங்கண்மால் கண் படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப் பெற்றும் (முதல் திருவந்தாதி) என்கிறபடியே எம்பெருமானுக்கு திவ்யாலயமாயிருக்கும் கடல்; ஆழ்வாரும் அப்படியேயாயிருப்பர்.

கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல்-ஏபாவம்! வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்? கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்கதை வாளாழியா னொருவன் அடியேனுள்ளானே என்கிறபடியே ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாயிருப்பரிறே. இவையு மவையு முவையுமென்கிற திருவாய்மொழியிலே விசதமாகக் காணலாம்.

[அஸீம பூமா] ப்ருஹத்த்வ மென்றபடி. ஸ்ரீபாஷ்யத்தி லருளிச் செய்தபடியே ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமா யிருக்குமிறே ப்ருஹத்த்வம். பெரிய மலை. பெரிய குளம், பெரிய மாளிகை என்றால் அங்கே விவக்ஷிதமான பெருமை ஆகாரத்தி னாலாகும். பெரிய மனிசர் என்று சில மஹா புருஷர்களைச் சொல்லுவோமாகில் குணங்களினாலாகிய பெருமையே அங்கு விவக்ஷிதமாகும்.

ஆக இப்படி இருவகைப் பட்டபெருமையில் ஆகார ப்ரயுக்தமான பெருமை கடலுக்கு ஆனாப் போலே குண ப்ரயுக்கு மான பெருமை ஆழ்வார்க்காயிற்று. “அருள்கொண்டாயிர மின்தமிழ் பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே என்னும்படியாய் எல்லை காண வொண்ணாத க்ருபாகுண மொன்றின் பெருமை போதுமே.

ஆக நான்கு விசேஷணங்களினால் நம்மாழ்வார்க்கும் கடலுக்கும் ஸாதர்மியம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று. இப்படிப்பட்ட பராங்குச பயோதி: ஜீயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணு மென்றதாயிற்று.

———-

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப் பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ஸ்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநுபவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹந ந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்ம பேதந மஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பெளம ஹரிணா வர்த்தே ப்ரும் நிர்ப்பய .

இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் விஹரிக்கும்.

தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதி யிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ஸ்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத “ என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாட வல்லது ஸிம்ஹமே யாகும்.அப்படியே இந்த ராமாநுஜ ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணா வவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோணாகணையாய்‘ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க.அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங் காட்டில் சஞ்சரிக்குமே யொழியச் சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.

(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்க வல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்று வ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவ பர பேதத்தை ஸாதிக்க வல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது.

ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார்‌ கலித்துறை யந்தாதி என்று வழங்குகிற ஸ்ரீ சடகோபாரந்தாதி–

March 31, 2025

ஆழ்வார்‌ – கடவுளின்‌ நற் குணக் கடலில்‌ முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும்‌ ஒரு வகைப் பாடலினாற்‌ செய்‌யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம்‌ – சடம்‌ என்‌னும் வாயுவை,
கோபர்‌ – கோபித்த இறைவரது என்பதாம்‌.

சடகோபரந்தாதி – சடகோபரைப்‌ பற்றிய அந்தாதி யெனவும்‌ சடகோபரது ௮ந்தாதி எனவும்‌ விரிக்கலாம்‌. இவற்றுள்‌, முன்னது இரண்டாம்‌ வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும்‌ பின்னது ஆறாம் வேற்றுமைத்‌ தொகையுமாகச் கொள்ளலாம்‌.

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –

தேவில்‌ – தெய்வங்களில்‌-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்‌- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்‌,
பாவில்‌ சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை,
பகர்‌-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்‌;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்‌கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன்‌ – நல்ல கவிஞரானவர்‌, பூவில்‌ – உலகத்தில்‌, -சிறந்த-
ஆழ்‌வான்‌ – பக்தி வெள்ளத்தில்‌ மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்‌-கம்ப நாடரென்னும்‌ வித்துவானேயாம்‌;

எல்லாத் தேவரிலும்‌ சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப்‌ பாடுதலில்‌ வல்லவர்‌ நம்மாழ்வாரேயாம்‌-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப்‌ பாடுதலில் சிறந்தவர்‌ கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்‌-மற்றைத்‌ தேவர்களைப் போலாகாமல்‌ உயிர்களிடத்தில்‌ அந்தர் யாமித்‌துவமுடைமையால்‌ தேவிச் சிறந்த திருமாலென்றார்‌. சிவ பிரானிடத்தில்‌ உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப்‌ பொருந்திய பாடல்‌களைப்‌ பாடப் பெற்றதனால்‌ தெய்வக்கவி யென்றார்‌. ஏனைய நூல்கள்‌ போலாகாது இருமைப் பயனுந் தருதலால்‌ பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார்‌. பண்டிதன்‌ -ஞான பண்டிதருமாம்‌, மாறன்‌ – ஆழ்வார்‌-பிறந்த பொமுது அழுதல்‌, விம்முதல்‌, பால் குடித்தல்‌ முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல்‌ உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால்‌ மாறன்‌ என்று பெயர் பெற்றார்‌. பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும்‌ அமையும்‌. கம்பநாடு – முதலில்‌ இது வெண்ணெயூர்‌ நாடாக விருந்து பின்‌பு கம்பர் காலத்தில்‌ அவர் பெயரால்‌ மாற்றப் பட்டமையால்‌ கம்பநாடென்றார்‌. பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம்‌ ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால்‌ புலமையனென்றார்‌–கவிஞன்‌-ஞ்‌ -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல்‌ என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும்‌ தேற்றம்‌.

———

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

ஆரணத்தின்‌ – வேதத்தின்‌,
சிரம்‌ மீது – முடிவிடத்‌திலே,
உறை : பொருந்தி யிருக்கின்‌ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம்‌ – அழகிய,
தமிழால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌,
பாரணம்‌ செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல்‌ பல ௮ – பலபலவகையாக ,
நாரணன்‌ ஆம்‌ என–இவர்‌ நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்‌பனை – கம்பரென்னும்‌ புலவரை (யாம்‌,) உள்‌ – எமது மனத்தில்‌,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம்‌ – கருதுவோம்‌;

வேதாந்தத்தின்‌ மேல்‌ விளங்குஞ்‌ சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம்‌ உள்ளங் களிக்கும்படி தியானிப்‌போம் என்பதாம்‌, உபநிஷத்துக்களிலும்‌ உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்‌-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால்‌ ஆரணத்தின் சிரமீதுறை என்றார்‌. எல்லாரிலும்‌ மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால்‌ சோதி யென்றார்‌, செய்யுளிடத்தன்றி உலக நடையில்‌ மாந்தர்‌க்குப்‌ பயன்படாமலும்‌ தமக்கென்று ஓர்‌ இடமில்லாமலும்‌ இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல்‌ ௮வை யெல்லாமுடைமையால்‌ அந் தமிழ் என்றார்‌. திருமாலால்‌ அளிக்கப்படுவன யாவும்‌ தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப்‌ பல முகத்தாலும்‌ இவர்‌ நாராயணனே யாவார் என்பதைக் கம்பர்‌ குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம்‌ – வேதத்திக்குச்‌ சினை யாகுபெயர்‌.
சோதி – உவமை யாகுபெயர்‌. யாம்‌ -தோன்றா எழுவாய்‌, நினைவாம்‌-பயனிலை-

———-

நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

வேதம்‌ – வேதங்களின்‌ கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ்‌ -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம்‌ பெருமாள்‌ – எங்கட்கிறைவனாகிய மாயோன்‌,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால்‌ – அன்பினால்‌ (கம்பரை நோக்கி ),
நம்‌ சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன்‌, கம்பன்‌—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல்‌ -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும்‌ நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும்‌ – நூறு கலித் துறைப் பாடல்களும்‌,
தெரியும்‌ வண்ணம்‌ – நான்‌ அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில்‌ பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்‌-கொடுத்தருளுவீர்‌;

வேதத்தைத்‌ தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள்‌ சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும்‌ கம்பர் பாடிய அந்தாதியைத்‌ தெரிந்து கொள்ளும் வண்ணம்‌ அடியேனுக்கு மனத்தைக்‌ கொடுத்‌தருளுவீர் என்பதாம்‌. வேதம்‌ நான்கு;-இருக்கு , எஜூர்‌, சாமம்‌, அதர்வணம்‌. இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில்‌ நம்மாழ்வார்‌ செய்த
பிரபந்தங்கள்‌ முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன்‌ தான்‌ ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின்‌ மிகுதியால்‌ தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும்‌ நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும்‌ அன்பொத்திருக்கச்‌ சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும்‌ தம்மைக் கம்பர்‌ பாடி யிருக்கவும்‌ அவற்றால்‌ திருப்தி யுறாமல்‌ சடகோபனைப்‌ பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார்‌. பெருமாள்‌ – உயர்‌ திணை யிருபாற்‌ பொதுப் பெயர்‌, கம்பன்‌-சாதிப் பெயர்‌, உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்‌-வேதங்களை,
தமிழ்‌ செய்‌த-தமிழ்ப் பாடல்களாகப்‌ பாடி யருளிய,
மெய்ப்‌ பொருளே – தத்‌துவ ஞான மூர்த்தியே !
நாதன்‌ – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான்‌, (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்‌பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல்‌ கம்பன்‌.-சிறந்த கம்பரென்னும் புலவர்‌, உன்‌ தன்‌ – உம்முடைய,
பாதம்‌ – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ்‌ – பசுந்‌ தமிழ்ப் பாடல்‌கள்‌-நூறும்
பரிவுடன்‌ – (யான்‌) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும்‌ வண்ணம்‌, எனக்கு—-உள்ளம்‌ தனை – மனத்தினை,
அருள்‌ – திருத்தி யருள வேண்டும்‌,
என்‌ – எனது ,
விண்ணப்பம்‌ – வேண்‌டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்‌; –

வேதத்தினைச்‌ தமிழிற்‌ செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன்‌ கட்‌டளையால்‌ கம்பர்‌ உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப்‌ படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம்‌, அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள்‌ அளவில்லாத பகுதியன ஆதலால்‌ ஓதரிய என்றார்‌-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால்‌ பாடலென்று கூறாமல்‌
இன்பமென்ற. பொருள் படும்‌ தமிழென்றார்‌-எல்லா வூழிகளிலும்‌ அழியாதிருத்தலால்‌ நாதனென்றார்‌. அப்படி யிருப்பதை அறியா , மனிதரும்‌ ௮றிந்து தர்ஸித்து நன்‌மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ கொண்டெழுந்தருளினமையால்‌ அரங்கனென்றார்‌. எத்தனையோ புலவர்‌ தோன்றியிருந்தும்‌ இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும்‌ புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால்‌ நற்கம்பனென்‌றார்‌-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந்‌ தருதலின்‌ பைந் தமிழ் என்றார்‌.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார்‌ பிறரும்‌, கம்பன்‌ – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர்‌ – இயற் பெயர்‌ புலப்பட வில்லை ; பெரியோர்களின்‌ இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்‌ற அப் பட்டப்‌ பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்‌- ‘ஐயரவர்‌கள் பிள்ளையவர்கள்‌, செட்டியாரவர்கள்‌’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல்‌ போல அக் காலத்திலிவரைக்‌ கம்பரெனக் கூறுதலுண்டென்‌றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன்‌, தன்‌- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்‌.-ஓத அகரம் தொக்கது,

———-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
.–தற் சிறப்புப் பாசுரம்

——–

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே
.– 1-

தொல்லை – பழமையும்‌,
மூலம்‌ – எல்லாவற்றிற்கும் காரணமும்‌,
பரம்‌ – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்‌,
வேதத்தின்‌ முன்‌ செல்க – வேதங்களின்‌ ௮ளவைக் கண்டது போவனென்‌றாலும்‌ போவானாக ;
மெய்‌ உணர்ந்தோர்‌ – உண்மை நிலையை அறிந்‌தவராகிய,
விரிஞ்சன்‌ முதலோர்‌ – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்‌
அற்ற – நீங்கிய,
ஞானம்‌ – ஞானத்தின்‌,
கொழுந்தின்‌ முன்‌-முடியைக் கடந்து போவனென்றாலும்‌,
செல்க – போவானாக ;
தென்‌-அழகிய,
குருகூர்‌ – குருகூரென்னும்‌ பதியிலவதரித்த,
குணம்‌ கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம்‌ கடல்‌ – ஞான சாகரமாகிய,
எங்கள்‌ புனிதன்‌- எங்களுக்கு மேலாய்‌ விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்‌களின்‌,
ஓர்‌ பாதத்தின் முன்‌ – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்‌];

திருமால்‌, வேதத்தினெல்லையையும்‌ அறிவுடையவர்‌ ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும்‌ சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும்‌ வலியிலனென்பதாம்‌. எனவே திருமாலின்‌ செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும்‌ வேண்டுவன உணர்த்தும்‌ வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால்‌ வேதத்தின்‌ முன்‌ செல்க வென்றும்‌ குணாதிதரான நம்மாழ்வார்‌ பாடலில்‌ அங்ஙனம்‌ ஒரு பாதமுமில்லாமையால்‌ பாதத்தின்‌ முன் செல்லுமே யென்றுங்‌ கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர்‌ ஞானத்துக்கும்‌ முதலடியிலேயே மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்ற நம்மாழ்வார்‌ ஞானத்துக்கும்‌ மிகுந்த ஏற்றத் தாழ்வுண்‌டாதலால்‌ விரிஞ்சன்‌ முதலோர்‌ கோதற்ற ஞானக் கொழுந்தின்‌ முன்‌ செல்கவென்றும்‌ பாதத்தின் முன்‌ செல்லுமே யென்றுங்‌ கூறினார்‌, இது மெய் யுணர்ந்தோர்‌ என்‌றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்‌பது விளங்கும்‌, வேதம்‌ – மங்கலச்‌ சொல்லாதலின்‌ முதவிலெடுத்‌துக் கொண்டார்‌, இது விருத்தப் பொருத்தமாயினும்‌ பெரியோராட்சியிற்‌’குற்றமில்லையென்‌க -. மெய் யுணர்ந்தோர்‌– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்‌.-முதலோரென்‌றதனால்‌ இந்திராதியரையுங்‌ கொள்க – கோதற்ற ஞானம்‌ – ௮மல ஞானம்‌. குணங்கள்‌ தந்த எனப்‌ பிரித்‌துத்‌ திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத்‌ தந்தருளுகின்ற என்றலுமாம்‌.-தென் குருகூர்‌ – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும்‌, எல்லோரிலுஞ்‌ சிறந்தவராதலால்‌ புனிதனென்றார்‌. முன்‌ – இடைச் சொல்‌ ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர்‌ – பெயரெச்சமுற்று, செல்‌லுமே, ஏ-எதிர்மறை, சுடர்‌ – உவமை யாகுபெயர்‌-

————-

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.
2-

பண்டு- முற்காலத்தில்‌,
சுடர்‌ இரண்டே-சூரியனும்‌ சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்‌),
எம்‌ பிறப்பை – எமது பிறவியை,
அடர்‌ – போக்கிய,
இரண்டு ஆம்‌ – இரண்டாகிய,
மலர்‌ தாள்‌, உடையான்‌ -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும்‌, குருகைக்கு – குருகூருக்கு,
அரசன்‌ – தலைவரும்‌,
படர்‌ – பரவிய,
இரும்‌ – பெரிய,
கீர்த்தி பிரான்‌ – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார்‌ (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய்‌ மொழி யென்னும்‌ பிரபந்தத்தினது ,
பாவொடும்‌ – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்‌,
இரண்டு இடர்‌ஆய்‌ – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும்‌ – வந்து பற்றிக்‌ கொள்கின்ற,
பேர்‌ இருள்‌ – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்‌களென்று மேம் பட்டு விளங்கலாயின ;

முன்னாளில்‌ சூரியன்‌ சந்திரனென்னும்‌ இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால்‌, உயிர்களின்‌ மனத்திலுள்ள இருளைப் போக்‌க வேண்டிப்‌ பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும்‌ கெடுத்து முச் சுடராயின வென்பதாம்‌-உலகத்தின்‌
பேரிருளைக்‌ கெடுத்தற்குத்‌ திருவாய்மொழி வேண்டுமானாலும்‌ நம்மாழ்‌வார்‌ திருவடிகளில்‌ அன்பு பூண்ட தமக்கு ௮வர்‌ திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும்‌ மணம் பெறுதல் போலத்‌ திருவாய்மொழிப்‌ பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்‌-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால்‌ அவ் விராமபிரான்‌ சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும்‌ கண்ணபிரான்‌ அருச்சுனனை நோக்கிக்‌ கீதை யருளிச் செய்தமையாலும்‌ இங்கு-வீடுமின்‌ முற்றவும்‌!” என்று எல்லா வுயிர்களையும்‌ நோக்கி யருளிச் செய்‌தமையாலும்‌ இத் திருவாய்மொழியே ௮வரினும்‌ சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள்‌ நல்வினை மீண்டும்‌ பிறவியைத் தருதலால்‌ இரண்டினையும்‌
சேர்த்து இடரென்றூர்‌ ; இருள்‌ என்பதும்‌ இக் கருத்துப் பற்றியேயாம்‌ :
‘* இருள் சேரிரு வினையும்‌”’ என்றார் பிரரும்‌. ஒருவன் செய்யும்‌ நன்மையால்‌ அவனைச்‌ சார்ந்த பலரும்‌ மேம் படுவாராதலால்‌ தாம்‌ ஒருவர் துதித்‌தலினால்‌ தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும்‌ நீங்குதல் பற்றி எம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌. இரண்டே, ஏ- தேற்றம்‌, மலர்த்‌ தாள்‌ – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத்‌ தொகை,

————

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே
. 3–

குருகூர்‌. -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்‌) மலரில்‌,
ஒடுக்கும்‌ -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம்‌ – அமிர்‌தம் போன்ற,
திரு ஆயிரம்‌ – சிறந்த ஆயிரம்‌ பாடல்களும்‌, போந்தன.-வெளி வந்தவைகள்‌ தாம்‌,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்‌,
ஒடுக்கும்‌ – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்‌,
ஒடுக்கும்‌—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும்‌ – வேறாகிய பலவற்றையும்‌, பறையும்‌ – மாறுபடக் கூறுகின்‌ற,
நா – புறச் சமயிகளின்‌ நாவினை,
ஓடுக்கும்‌ – அடக்கி விடும்‌ ;
நல்‌ ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும்‌ – தன்னுள்ளடக்கி யிருக்கும்‌ ; மற்றும்‌ – அன்றியும்‌,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்‌தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்‌,
ஒடுக்கும்‌ –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம்‌ – வேறாகிய (மதங்களின்‌),
வாதம்‌ – விவகாரத்‌தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும்‌ – அடக்கி விடும்‌

பாடல்களினுறுப்பக்கள்‌ பலவற்றையும்‌ நிறையப் பெற்றிருப்பதனால்‌ பாவொடுக்கு மென்றார்‌-சிவபிரான்‌ திருக்கையிலேந்திய வெண்டலையால்‌ பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப்‌ பண்களின்‌ வழியில்‌ விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும்‌ பெற்றிருப்பதனால்‌ நுண்ணிசை யொடுக்குமென்றார்‌. நம்மாழ்வார்‌ கொண்ட கொள்கைச்கு மாறாகப்‌ பிதற்று்கின்றவர்‌ நாவினை அடங்கச் செய்தலால்‌ பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்‌; காலையில்‌ நறுமல ரொன்றக்‌ கட்டிய, மாலையினியல்‌
புரை சமய வாதியர்‌, சூலையின்‌ திருக்கலாற்‌ சொல்லுவோர்க்கெலாம்‌,
வேலையும்‌ திரையும் போல்‌ வேறு பாடிலான்‌ ” என்றபடி எல்லா மதத்தையும்‌ தன்னுளடக்கிக் கொண்டவனாதலால்‌ தேவொடுக்கும்‌ பரவாதமென்றார்‌. இறந்தாரைப் பிழைப்பிக்கும்‌ அமுதம் போலசத் தீவினையிலழிவார்‌ தாம்‌ நினைத்த மாத்திரையில்‌ அவரை அதினின்று நீக்குதலால்‌ இறந்தாரைப்‌ பிழைப்பிக்கும்‌ ௮முதத்தை அத்‌ திருவாய் மொழிக்கு உவமை கூறினார்‌.-இறைவனருளாற்‌ பாடியதன்றி ஆழ்வார்‌ தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்‌; முந்தை ஆயிரம்‌” என்‌ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும்‌ நித்தியமான வேதத்தைப்‌ பிரமதேவர்‌ வெளியிட்டது போலத்‌ திருவாய்‌ மொழியையும்‌ ஆழ்‌வார்‌ வெளியிட்டனர் என்பதும்‌ இதனால்‌ விளங்கும்‌, ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம்‌ –
இவற்றிலுள்ள நகர மகரங்கள்‌ விரித்தல்‌ விகாரம்‌, பூ – உவமை யாகு பெயர்‌-

——–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே
. 4-

தொல்லை- பழமையாகிய,
எர்‌- அழகிய,
வகுளம்‌ – மகிழம் பூக்கள்‌ தொடுத்த ,
வனம்‌ – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்‌பெருமான்‌ – எமது தலைவராக,
குருகூர்‌ மன்னன்‌ – குருகூரிலவதரித்‌த நம்மாழ்வாரது ,
வாய்‌ மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம்‌ ஆம்‌-செல்வப் பொருளாகும்‌;
சிலர்‌க்கு— தவம்‌ ஆம்‌ – தவமே யாகும்‌; சிலர்க்கு–தருமம்‌ நிறை -புண்ணியமிகுந்த, கனம்‌ ஆம்‌ – பெரும் சிறப்புமாகும்‌ ;
சிலர்க்கு- ந அதன்‌-காரணம்‌ ஆம்‌-அப் பெருஞ்‌ சிறப்புக்குக் காரணமுமாகும்‌ ;
சிலர்‌க்கு –;.,ஆரணத்தின்‌ இனமாம்‌ -வேதத்தின்‌ பகுதியாகும்‌;
அதற்கு-அந்த வேதத்தின்‌ பகுதிகள் அனைத்துக்கும்‌,
எல்லையும்‌ – முடிவாய உப நிஷத்துக்களும்‌,
ஆம்‌ – ஆகும்‌;

குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருவாய் மொழி யானது செல்வம்‌ முதலியவற்‌றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்‌.-திருவாய் மொழி தமிழ்ப்‌ பிரபந்தமாதலால்‌ அந்தத்‌ தமிழுக்குரிய தெய்‌வம்‌ தான்‌ ௮ந் நூலைப்‌ பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார்‌ -தனத்தை வேண்டு வார்க்குத்‌ தனமும்‌ தவத்‌தை விரும்பினவர்க்குத் தவமும்‌ பெருமையை விரும்பினவர்க்குப்‌ பெருமையும்‌ அதன்‌ காரண்முமாமென்றார்‌- அத் தெய்வமும்‌ வேறன்று வேதத்தினுள்‌ விளங்குவதென்பதை விளக்குவார்‌ ஆரணமாமென்றும்‌ வேதமும்‌ வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார்‌ -அதன்‌ எல்லை யென்றும்‌ ஆரணம்‌ பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும்‌ பழமையே யெனக்‌ கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்‌-அன்றியும்‌ உலகத்தில்‌ தனம்‌ இம்மையின்பத்திற்கே உரியது ; தவம்‌ -மறுமையின்‌பத்திற்க்கே யுரியது இம்மைக்குப்‌ பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால்‌ தனமென்றும்‌ தவமென்றுங்‌ கூறினார்‌ என்றலுமாம்‌-

—————-

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே
–5-

குளிர்‌ – குளிர்ந்த,
நீர்‌- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்‌- பற் பலவாசச்‌ சுழித்து, ஒழுகும்‌ – ஓடுகின்ற,
குருகூர்‌- குருகூர்‌ என்னும் பதியில்‌,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்‌,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம்‌ – ஓழுங்‌கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்‌- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்‌,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்‌,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம்‌ குழி- நரகக் குழிகள்‌,
பல ஆயின – பல வாயின வெல்லாம்‌,
பாழ்‌ பட்டது – பாழாயிற்று-

குருகூரில்‌ நம்மாழ்வார்‌ ௮வதரித்தலால்‌ பாஷைகளில்‌ ஓழுங்கென்‌பது தோன்றிற்று -முத்தி மார்க்கம்‌ ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்‌று என்பதாம்‌. செந்தமிழ் மொழியில்‌ மாறுபட்டுக் கிடந்த துறைகள்‌ பலவும்‌, சடகோபர்‌ திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப்‌ பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால்‌ செப்பம்‌ பிறந்ததென்றார்‌-வழுவா நரகம்‌.-.தீவினை செய்தாரைத் தப்பாமல்‌ விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப்‌ பாராயணஞ்செய்வோரும்‌ அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும்‌ கேட்போரும்‌ முத்தியையே – அடைதலால்‌ நரகக் குழி பாழ்பட்ட தென்றார்‌.-மொழி யென்பதற்குப்‌ பதமென்ற பொருள்‌ கொண்டு கட படாதி சப்தங்கள்‌. அவ்‌வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால்‌ மொழி பலவாயின தென்றும்‌ திருவாய் மொழியிலுள்ள எல்‌லாப்‌ பதங்களும்‌ அவ்‌வப் பொருள்களின் நினைவில்‌ நில்லாது எம்பெருமான்‌ வரையிற்‌ சென்றுணர்த்தினமையால்‌ செப்பம்‌ பிறந்தது என்றும் கூறினுமமையும்‌-இவ் வாழ்வாரவதரித்ததன்‌ பின்‌ பலலா யிருந்தன சுழிகளே யன்‌றிப்‌ பிறவில்லை யென்பார்‌ பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார்‌. செப்பம்‌-பண்புப் பெயர்‌, ஆய-வினைப் பெயர்‌-

————–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே
. 6-

பல காலும்‌ : பல தரமும்‌,
தம்மில்‌ -தமக்குள்‌,
மூன்று ஆயினவும்‌ – மூன்‌று பகுதியாகி அமைந்தவற்றையும்‌,
நினைந்த—
ஆரணத்‌தின்‌ – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான்‌ – அருளிச் செய்தவரும்‌,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான்‌ – பெரியவரும்‌,
எம்பிரான்‌ – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப்‌ பாடல்கள்‌,
தோன்றா- பலராலும்‌ ௮றியப் படாத உபநிடதம் பொருள்‌-உபநிஷதத்தின்‌ கருத்‌துக்களை,
தோன்‌றல்‌ உற்றார்‌ தமக்கும்‌ – அறியப்‌ பெற்ற பெரியோர்களுக்கும்‌,
சான்று ஆம்‌ – சாட்சியாகி விளங்கும்‌,
என்‌ற போது – என்று சொல்லிய காலத்தில்‌,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என்‌ -யாது வேண்டும்‌-

ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்‌று கூறுபடுத்‌திக் காட்டி யிருப்பதைத் தம்முள்‌ ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர்‌ நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள்‌ உப நிஷதத்தின்‌ கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில்‌ சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச்‌ சந்தேகங்களை ஒழிக்குமானால்‌ இதன்‌ சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம்‌. ௮ரிய தத்வ ஞானத்தைப்‌ பெறத் தக்க புண்‌ணிய முடையார்க்கன்‌றிப்‌ பிறர்க்கு வெளிப் படாமையால்‌ தோன்றா வுபநிடசப் பொருளென்றார்‌. தோன்‌றலுற்றார்‌-இங்கு மதுர கவியாரும்‌, நாத முனிகளுமாம்‌; எப்படி யெனில்‌? ஆழ்வாரைக்‌ கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள்‌ உண்டாகி இக் கண்ணி நுண்‌ சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்‌-12000-தடவை ஒதினமையால்‌ முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின்‌ மனத்தில்‌ தோன்‌ற- இவர்‌ தம் மனத்தில்‌. ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார்‌ பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்‌-இயற் றமிழ்‌, இசைத் தமிழ்‌, நாடகத் தமிழ்‌ ; இயற்றமிழ்‌ – இலக்கண அமைதியை
யுடைய தமிழ்‌, -இசைத் தமிழ்‌- இராக: அமைதியை யுடைய தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ வெளிப்படை, எம்பிரான்றன்‌, தன்‌-சாரியை,

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே.
7-

கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம்‌ – உணவினை,
இசையின்‌ – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன்‌ – கண்ணபிரான்‌,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்‌பான்‌ – சமைத்துச் குவிப்பவரும்‌, குருகை – குருகூரில்‌ அவதரித்த,
பிரான்‌ – பெரியோரும்‌,
சடகோபன்‌ – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்‌,
குமிகொண்கன்‌ -குமரி நாட்டுக்குத் தலைவரும்‌,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம்‌ – வித்துவான்‌களுக்கு,
பிரான்‌ – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்‌-நிலத் தேவர்களாகிய பிராமணர்‌ களுடைய,
செவிப்பால்‌ – காதுகளின்‌ வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்‌தினிடத்திலே, நின்‌று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்‌- இனிய சுவையை உண்டாக்கும்‌-

ஆழ்வார்‌, பாடலாகிய சோற்றினையும்‌ இசையாகிய கறி முதலியவற்‌றையும்‌ கண்ண பிரான்‌ உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர்‌ செவியின்‌ வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம்‌. இப் பாடல் முழுவதம்‌ உருவகப் படுத்தினமையால்‌ முற்றுருவகம்‌. சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப்‌ பரசுராமன்‌ ஸ்தாபித்‌திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும்‌ இது சூழ்ந்த நாட்டிற்குக்‌ குமரி நாடென்றும்‌ பெயராயிற்று-ஆழ்வார் பாடல்‌களையே புலவர்கள்‌ மேற் கோளாகக் கொள்கின்‌றமையால்‌ பாவலர்‌ தம்‌ பிரானென்றார்‌. புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும்‌ பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின்‌ ௮வருள்ளத்‌துள்ளே தித்திக்குமென்றார்‌. அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்‌று இடையர்கள்‌ கண்ணன் உண்ணக் குவித்தாரேனும்‌ ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப்‌ பூசுரரும்‌ சுவைத்து மகிழ்வதாயிற்று-

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

—————

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
8-

குருகை – குருகூரிலவதரித்த,
பிரான்‌ – சடகோபர்‌,
சொன்ன——, ஆயிரம்‌- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்‌,
தித்‌திக்கும்‌’- இனிமை செய்கின்‌ற
மூலம்‌ -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்‌; (அன்றியும்‌), தெய்‌வம்‌ உண்டு என்பார்‌ – தெய்வங்கள் இருக்கின்‌றன என்று சொல்லுவர்‌களுடைய,
பத்‌திக்கு மூலம்‌ – பக்திக்கும்‌ இதுவே காரணமாகும்‌
பனுவற்க்கும் – வரவாற்‌று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும்‌, மூலம்‌—-;
பவம்‌-பிறவியை,
அறுப்பார்‌ – போக்கத் துணிந்தவர்கள்‌, முத்திக்கும்‌ – முக்தி யடைவதற்கும்‌–மூலம்‌ முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள்‌ நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார்‌ -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்‌-போக்‌குகைக்கும்‌, மூலம்‌ —;

அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின்‌ அமுதத்தை உவமித்தார்‌. அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம்‌. ௮ங்ஙனம்‌ ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும்‌ பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்‌து நிற்றலால்‌ முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால்‌ மொய்‌
குழலார்‌ அத்திக்கு மூலமாகாது – அன்றியும்‌ பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம்‌ அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும்‌ சிற் சில நாளில்‌ இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின்‌ மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்‌டாரில்‌, பல் பகற்‌
றுய்த்த வின்பம்‌ பழுதெனக்‌ கவல்ப கண்டாய்‌ ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம்‌, அன்றியும்‌ நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.

————

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.
9-

தண்‌ – குளிர்ச்சியான,
அம்‌ – நீர் வளமுடைய,
குருகூர்‌ சேய்‌ – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்‌,
மா -சிறந்த,
இரு மரபும்‌ – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்‌,
செவ்‌வியான்‌ – சிறந்‌த மரபினருமாகிய சடகோபர்‌, செய்த—,
செய்யுட்கள்‌-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும்‌ – சிறந்த ஆயிரமென்‌ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்‌,
அலங்காரம்‌ – அழகு செய்வனவாகும்‌ ;
௮ரும்‌ தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம்‌ – வரலாற்று முறையாகும்‌ ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம்‌ – ஒப்புக் காண்‌பதற்குரியனவாம்‌
பனுவற்கு எல்லாம்‌-எல்லா வகைப்பட்ட நூல்களுக்‌கும்‌ –
தாய்‌ -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்‌;
இரு நால்‌ திசைக்கும்‌ – எட்டுத் திக்குக்கும்‌,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம்‌ – விளக்குமாகும்‌;

குருகூராழ்வாரருளிய பாடல்கள்‌ சாம வேதத்துக்கு அழகு செய்‌வனவாம்‌.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும்‌ ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்‌; பனுவலுக்குத் தாயாகும்‌ ;எட்டுத் திக்குக்குக்‌ தீபமாகுமென்பதாம்‌. ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர்‌ விரும்புமாறு அணிகளால்‌ ௮ணியப் படுவன போல பொருள்‌ மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார்‌. சிவ பெருமான்‌ முருகக் கடவுள்‌ நிதியின்‌ கிழவன்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களும்‌, வான்மீகியார்‌ கெளதமர்‌ மார்க்கண்டேயனார்‌ ௮கத்தியனார்‌ முதலாகிய முனிவர்களும்‌ ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன-ஒருவன்‌ பாடுக வென்றவுடன்‌ பாடுதல்‌ ஆசு கவியாகும்‌; இனிய சுவைகள்‌ ஒன்பதும் தோன்‌றப் பாடுதல்‌ மதுர கவியாகும்‌.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம்‌, ஏக பாத மெழுகூற்‌று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங்‌ கொளவே வாவன்‌ ஞாற்று நாக பந்தம்‌’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல்‌ சித்திர கவியாகும்‌.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும்‌ அமைத்து விரிவாகப் பாடுதல்‌ விஸ்த்தார கவியாகும்‌. பாயிரம்‌ — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம்‌, தமிழில்‌ இவ் வண்ணம்‌ பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால்‌ படிச் சந்தமென்றார்‌. பனுவல்‌, பலவகைய ; ௮வை ;–அறநூல்‌, பொருள் நூல்‌, காமநூல்‌, வீட்டுநூல்‌ என்பன. இந் நான்கும்‌ திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால்‌ தாயென்றார்‌, உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்‌

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து
–ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து
–இடைக்காதர்

————–

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே
. 10-

அருவி – அருவி நீர்கள்‌,
செய்‌ – வயல்களில்‌,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான்‌ – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள்‌ – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர்‌ கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார்‌ (அதனை அறிந்தும்‌), அவன் -௮ந்‌தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம்‌ – தாமரை மலர்களை,
பெய்யோம்‌ – பூஜித்து அறியோம்‌
அவன்‌ புகழ்‌ – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய்‌ – பிறர்‌ நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்‌-திரிந்து அலைந்திலோம்‌; (அவன்‌) உபகாரத்தின்‌ – அவர்‌ நமக்குச் செய்‌த நன்றியின்‌,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும்‌ – எப்போது அறியப் போகிறோம்‌?
ஐயோ -ஐய ஓ ! என்னே!

திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்‌; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத்‌ தொண்டும் செய்தறியோம்‌; அவருபகாரத்தின்‌ பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம்‌ “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்‌’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும்‌ ‘“வாணார்‌ நுதலார்‌ வலைப்பட்‌ டடியேன்‌ பலவின்‌ கனி யீந்‌தது போல வதன் முன்‌ -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்‌’ எம்பெருமான்‌. நமக்குச் செய்யும்‌ பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப்‌ பார்த்துக்‌ ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்‌.
அருவி நீர்‌ வயலில்‌ சென்று பாய்தல் போல்‌’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின்‌ கருத்து –
மற்றும்‌ அருவி நீர்‌ வயல்களை விளையச் செய்வது போல்‌ ஆழ்வார்‌ மாயோனைக் காட்டிப்‌ பக்தியை விளையச் செய்தாரெனினும்‌ பொருந்தும்‌-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்‌.-பெய்யோம்‌, திரியோம்‌-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும்‌ – தன்மைப்‌ பன்மை எதிர்கால வினை முற்று,

———

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே
. 11-

ஆற்றில்‌ – பொருநை யாற்றில்‌,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின்‌ தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும்‌ மறைகள்‌ வேற்றில்‌ – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்‌,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள்‌ எல்லாம்‌ -எல்லாப் பொருள்களும்‌,
விழும்‌ – (யாவரும்‌) விரும்பத் தக்க ,
மா கமலம்‌ – சிறந்த தாமரைகள்‌,
சேற்றில்‌… பொதி அவிழ்க்கும்‌ – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்‌-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர்‌ செய்தருளிய,
செம்‌ சொல்‌ பதிகம்‌ நூற்றில்‌ – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும்‌, பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்‌-பொருள்களில்‌,
ஒரு கூறும்‌-(நூற்றில்‌) ஒரு பகுதி யளவும்‌, நுலல்கில – சொல்லினவில்லை;

பலவாகிய வேதங்களெல்லாம்‌ ஆழ்வார்‌ திருவாய்‌ மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்‌களவும் கூடக்‌ கூறின வில்லை யென்பதாம்‌-அனந்தாவை வேதா: என்றதனால்‌ ஆற்றின்‌ மணலின்‌ தொகை மறைகளென்றார்‌-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப்‌ பக்றுளி மணலினும்‌ மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும்‌ பலவே’” என்பன முதலாகப்‌ பிற சான்றோர்களும் கூறுதல்‌ காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம்‌, பெளடிகம்‌, தலவகாரம்‌, ௭சு , சாமம்‌, அதர்வணம்‌ என்பன,-திருமாலும் யீசனும்‌ பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால்‌ செஞ்சொலென்றார்‌. பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால்‌ பதிகம் என்றார் -நூற்றில்‌ என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்‌டிப்‌ பொருள் கொள்ளுதல்‌ சிறப்பு- மாக் கமலம்‌ சேற்றில் பொதியவிழ்க்‌குமெனவே சேற்றில்‌ தாமரை மலர்‌தல் போல தகுதியில்லாத உயிர்‌கள்‌ உலக மயக்கத்‌தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார்‌ மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்‌

——–

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே.
12-

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்‌,
துறை–அஃது, இவ்விடத்‌து இவ்வியல் தென்றல்

பல – பற்பலவாகிய,
வேதமும்‌ – வேதத்தின்‌ ௧ருத்தை யெல்‌லாம்‌,
செம்‌ தமிழ்‌ சொற்களால்‌ – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான்‌ – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்‌-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்‌-சில இதழ்கள்‌,
இலவே – நிறத்தில்‌ முள்ளிலவ மலரேயாம்‌; உள்‌ – அவ்விதழ்‌களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்‌,
உளவே- சில உள்ளனவாம்‌;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும்‌ – சொல்லப்படுகின்‌ற,
மொழியும்‌ – வார்த்தைகளும்‌,
சிலவே – சிலவுண்டாம்‌;
அவை – அவ் வார்த்தைகள் தாம்‌,
செழும் தேன்‌ – செழுமையான தேனை, ஓக்கும்‌ – நிகர்க்கும்‌;
(இன்னும்‌ அத் தாமரை மலரிலே), இரண்டு சலம்‌ வேல்களும்‌ – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்‌,
உளவே-உள்ளனவேயாம்‌;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான்‌, என்‌ – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்‌;
காண்‌ – நீ சென்று அதனைப் பார்‌;

நண்பனே! யான்‌ கருதிய தலைவியினிடம்‌ ஆழ்வார்‌ குருகூர்‌; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும்‌ முல்லை யரும்பொத்த பற்களும்‌ தேனொத்த சொற்களும்‌ தாமரை மலர்போன்ற முகமும்‌ வேல் போன்ற கண்களுமாம்‌; ௮ந்தப் பெண்‌ என்னுயிரே யாவளென்பதாம்‌. அவள்‌ எவ்‌விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம்‌ குருகூரென்றான்‌–இயல் எவ்‌வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான்‌. மொழி பெறாது வருந்‌திய தலைவன்‌ அவள்‌ வறிது நகைத்தலை இயற்கைப்‌ புணர்ச்சியிற்‌ கண்‌டனனாதலின்‌ இதழுள்‌ முல்லை யுளவென்றான்‌. அவள்‌ வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின்‌ சிலவே சொல் என்றான்‌. பிற்பாடு அச் சொல்லைப்‌ பெறாமையால்‌ சில வென்றான் எனினுமாம்‌. அருமையைச்‌ செய்தலால்‌ தேனொக்குமென்றான்‌. தன்‌
மனத்தை ௮வள்‌ வசப்படுத்தலால்‌ முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள்‌ விழிகள்‌ தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால்‌ சல வேல்களென்‌றான்‌. ௮வள்‌ இன்றியமையாமையின்‌ என்‌ உயிரென்றான்‌. கைகோள்‌-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர்‌ – பாங்கன்‌-இடம்‌-முன்னிலை–காலம்‌ – இறந்த காலம்‌, மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல்‌. இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்‌கள்‌, இயம்பும்‌ மொழியும்‌ – விரித்தல் விகாரம்‌, உள-முதல்‌ விளக்காக இரண்டிடத்தும்‌ கூட்டப்பட்டது.

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

———-

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே
. 13

உருக்கும்‌ நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்‌- தயிரையும்‌,
திருடி திருடி-ஆயர்பாடியில்‌ எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான்‌ – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன்‌ – சடகோபனென்னும்‌ பெயருடையவரும்‌,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர்‌ – நுண் மணலையும்‌ கொணர்ந்து, உருக்கும்‌ – கரை யோரங்களில்‌ ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல்‌ – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர்‌ – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்‌வராகிய பராங்குசரது ,
அம் தமிழ்‌ – அழகிய தமிழ்ப் பாடல்கள்‌,. (படிக்‌கும் பொழுது ), உயிர்‌ உருக்கும்‌ – நம்‌ உயிரை உருகச் செய்யும்‌ ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்‌:
உடலத்தில்‌ உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர்‌ – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக்‌ கொண்டிருக்கிற,
நம்‌ தீங்கு உருக்கும்‌ – நம்முடைய தீ வினைகளெல்லாம்‌ போக்கும்‌;

குருகூர்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும்‌ செயிரைக் கொண்ட தீங்கையும்‌ போக்குமென்பதாம்‌.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்‌ உயிரையும்‌ உணர்வையும் தன்‌ வசப் படுத்திக் கொள்ளுதலால்‌ உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்‌-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்‌; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும்‌ மறுமைக்கு நரகும் தருதலால்‌ செயிருருக்‌ கொண்ட தீங்கு என்றார்‌. கண்ண பிரான்‌ ஆயர் பாடியில்‌ வீதிகள் தோறும் புகுந்து தயிரையும்‌ வெண்ணெயையும்‌ திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள்‌ போலாகாமல்‌ தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும்‌ இலக்கண வரம்புடைமையும்‌ நோக்கி ௮ந்தமிழ் என்றார்‌. பொருநை யெனினும்‌ பொருநலெனினும்‌ பொருந்தும்‌, உடலத்து, ௮த்து – சாரியை-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே
. 14

ஆர்‌ – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின்‌ – தமிழ்ப் பாடல்கள்‌போல,
பந்தம்‌- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்‌,
ஒழுகும்‌ – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்‌,
வந்த – அவதரித்த,
பண்ணவன்‌ – சிறந்தவரான சடகோபர்‌,
௮ந்தம்‌ இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்‌,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்‌-திருத்தமமையப் பாடி யருளா விட்‌டால்‌,
நிலம்தேவர்களும்‌ – பூசுரராகிய பிராமணர்களும்‌,
தம் தம்‌ – அவரவர்கள்‌ கொண்டாடப் படுகிற,
விழாவும்‌ – உற்சவங்கழும்‌,
அழகும்‌ -அவர்களுள்‌ அமைதியும்‌,
என்னாம்‌ – எத் தன்மையவாய்‌ முடியும்‌?

குருகூராழ்வார்‌ வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால்‌ பிராமணர்களும்‌, அவர்கள்‌ வேள்வி முதலிய விழாக்களும்‌ ௮ழகும்‌ என்ன பயன்படுமென்பதாம்‌. ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன்‌ வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில்‌ ஒவ்வொரு பிடி யெடுத்துக்‌ கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால்‌ ௮ந்தமிலா மறை என்றார்‌.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்‌.இம் மொழியின்‌ சுவை யேற்றம்‌ நோக்கிச்‌ செந் தமிழ் என்றார்‌. ஆகாயத்தில்‌ தேவர்களைப் போலப்‌ பூமியில்‌ பெரும் சிறப்புஉடைமையால்‌ அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார்‌ ; பூசுரர் என்பதன்‌ பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள்‌ படிக்கப் படிக்க இன்பம் தருதலால்‌ பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார்‌. (இதனால்‌ ஆசிரியர்க்‌குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார்‌ – பண்ணவன்‌ – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர்‌ திணையோடு விழாவும்‌ அழகுமென்னும்‌ அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்‌- ,

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———–

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே
. 15-

இயலோடு – இயல் தமிழோடு,
இசையின்‌ – இசைத் தமிழுமாகிய,
வண்ணம்‌ – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்‌,
மலர்‌ உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம்‌ – மகரந்தங்கள்‌,
படர்‌ – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர்‌ வந்த – குருகூரில் அவதரித்த, சொல்‌ கடல்‌ : தமிழ் சொற் கடல்‌ போல்பவருமாகிய பராங்குசர்‌,
மறை-வேதங்கள்‌,
பண்ணப் படுவனவும்‌ – இனிப் புதியனவாகச்‌ செய்யப் படுபவைகளும்‌,
உளவோ என்று -இருக்கின்‌றனவோ வென்று,
பல்லோர்‌ – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம்‌ பட – தங்கள்‌ மனத்தில்‌ நினைக்கும்படியாக,
சொல்‌ – சொற்கள்‌,
திகழ – விளங்குமாறு,
செய்தான்‌ – பாடி யருளினார் –

குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார்‌ வேதங்களில் இனிச்‌
செய்யப் படுவனவும்‌ முளவோ வென்று கூறும்படி திருவாய்‌ மொழியைப்‌ பாடி யருளினாரென்பதாம்‌. வேதத்திற்‌ கூறப் படும்‌ பொருள்‌ நிலைமையினும்‌ மேலான பொருளை வெளிப் படுத்தலால்‌ பண்ணப்படுவனவும்‌ உளவோ மறை யென்றார்‌ -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர்‌ நிலையும் , தக்க நெறியு்‌ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும்‌ வாழ் வினையுமோதுங்‌ குருகையர் கோன்‌, யாழினிசை வேதத்‌தியல்‌’” என்பதானாலும் அறிக- கடல்‌ – உவமை யாகு பெயர்‌,

எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-

—————-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே.
16-

களித்தார்‌ – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும்‌ – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான்‌ -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன்‌, கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான்‌ – கொடுத்தருளினான்‌ ; (அப்படிப்‌ போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்‌—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன்‌ – நம்மாழ்வாரானவர்‌,
குறையா – குறைவில்லாத,
மறையின்‌ – வேதங்களின்‌,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும்‌ – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்‌-தந்தருளினார்‌ –

மாயோன்‌ சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ வேதங்களின்‌ முட்டுப்‌பாடுகளைப்‌ பெயர்த்தெடுத்துத்‌ திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம்‌. தவத்தால்‌ நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால்‌ நடலைப் பிறப்பென்றார்‌- தமிழில்‌ ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால்‌ நாயகனென்றார்‌… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால்‌ குளிர் சங்கு என்றார்‌. பரத்துவாசனுக்கு இந்திரன்‌ நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில்‌ “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால்‌ குறையா மறை என்றார்‌- கடலை வேதமாகவும்‌ அமுதத்தைத் தேனாகவும்‌ அமரர்‌ அடியராகவும்‌-சங்கினான்‌ நாயகனாகவும்‌ உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும்‌, உம்‌- இழிவு சிறப்பு.

———

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே
. 17–

பிறர்‌ கடை தோறும்‌ – அயலார்‌ வாயில்கள்‌ தோறும்‌,
நாய் போல்‌ நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர்‌ எச்சில்‌ -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல்‌ – பிசாசைப்‌ போல,
திரியும்‌ – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும்‌ – பிறப்பென்கிற,
நோய்‌ – பிணிகள்‌,
போம்‌ மருந்து என்னும்‌ – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய்‌ மொழிப்‌ பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல்‌ – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன்‌ – தொண்டனாகிய நான்‌,
பண்டு – முன்னாளில்‌,
என் சாதித்தது -என்ன உபகாரம்‌ செய்ததுண்டு?

நாய் போல நுழைந்து பேய் போலத்‌ திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப்‌ பார்த்‌துப்‌ பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான்‌ முன் செய்த நன்றி தான்‌ யாதோ ?என்றதாம்‌, தம்‌ தாழ்ச்சியைக் குறித்துக்‌ கடைப்பட்ட நாயை உவமித்தார்‌.-ஒயாமல்‌ பிரந்து உழலுதலால்‌ மாறாமல்‌ அலைகின்ற பேயை உவமிழத்தார்‌, எச்சில்‌ – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம்‌ -எஞ்சு பகுதி இல்‌ – பெயர் விகுதி, நோய் போம்‌ மருந்து என்பதில்‌ போம்‌ என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம்‌ மருந்து என்னும்‌ காரணப் பெயரைக் கொண்டது. நுன்‌ – பெயர்த் திரி சொல்‌,

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.
18–

எம்‌ கோன்‌ – எங்கள்‌ தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ்‌ சொல்‌ என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம்‌ – உங்களுடைய வேதங்களெல்லாம்‌,
பர தத்துவத்தை – மேலான கடவுளின்‌ நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம்‌ திருக்‌கை – அன்‌னிய மதங்களின்‌ மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்‌படி அறிந்தாலும்‌),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும்‌ ஓங்கி – எவ்‌விடத்‌திலும்‌ சிறப்படைந்து
பொது நிற்கும்‌ – பொதுவாய்‌ நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்‌,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்‌தையும்‌,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?

நம்மாழ்வார்‌ பிரபந்தம் போல உங்கள்‌ வேதம்‌ பரம் பொருள்‌ நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின்‌ மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும்‌ பிறர்க்குச்‌ சொல்ல முடியுமோ ? மெய்யையும்‌ பொய்யையும்‌ பகுத்தறியுமோ ? இவை யொன்‌றும்‌ செய்ய இயலாது என்பதாம்‌. எல்லார்க்கும்‌ மேலானாரென்பது பற்றிக் கோன்‌ என்றார்‌, உங்கள்‌ என்றது புற மதத்தவரை என்க -,-வேதம்‌ ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும்‌ படிப் படியாகப்‌ பரத்‌துவஞ்‌ சொல்லுதலால்‌ திருவாய்‌ மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்‌.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம்‌ வினாவாகச்‌ கூறி யிருப்பினும்‌ எதிர் மறைப் பொருள்‌ படுதல்‌ காண்க-

————–

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே.
19-

குருகூர்‌ – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான்‌ – நம்மாழ்‌வார்‌,
சொன்ன – ௮ருளிச் செய்‌த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல்‌ என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம்‌ – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும்‌ – யாவருக்கும்‌,
நெல்‌ என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும்‌ – பருகுகின்ற,
நீர்‌ என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர்‌ நிறுக்கும் -நேரே தராசில்‌ நிறுத்‌தப் பார்ப்பதற்குரிய
கல்‌ என்கெனோ- படிக்‌கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம்‌ முதிர்‌ – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல்‌ என்கெனோ -பல விதமாகச்‌ சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்‌பேனோ,

குருகூர்‌ நம்மாழ்வார்‌ பாடல்களைக்‌ தமிழ்ச் சொல்லென்‌பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்‌பேனோ ? பழமென்‌பேனோ? பலவிதமாகச்‌ சொல்‌ல வல்லமை யுண்டென்‌பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம்‌. ஒன்‌றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால்‌ மாலை யென்றார்‌-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச்‌ சுருக்க வைத்திருத்தலால்‌ சொல்லென்‌பெனோ சுருக்கென்‌பெனோ என்‌று ஐயத்தாற்‌ கூறினார்‌. திருவாய்‌ மொழியின்‌ பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்‌தார்‌ -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———-

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே
. 20-

பொருள்‌-அகப் பொருள்‌.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன்‌ வருவோர்‌ புலம்பல்‌ தேற்றல்

மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும்‌ – கூந்தலை யுடைய உன்‌ மகளும்‌,
வில்லியும்‌ – கையில்‌ வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர்‌ – துதியாதவர்கள்‌,
போம்‌ – செல்‌லத் தகுந்த,
பாலை கடம்‌ – பாலை நிலத்‌து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப்‌ பகலிலேயே தாண்டிச்‌ சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்‌,
கரும்பின்‌ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்‌,
நரேல்‌ என்னும்‌ ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில்‌ வளர்க்கிற,
கிளி – கிளிகள்‌,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம்‌ – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள்‌ – அடைவார்கள்‌;

உன்‌ புதல்வியும்‌ ௮வள்‌ கணவனும்‌ நம்மாழ்வாரைத்‌ துதியாதவர்‌ போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித்‌ தமது நாட்டை யடைவார் களென்பதாம்‌-செவிலியைத்‌ தேற்றுபவராதலின்‌ அவள்‌ வருத்த மின்றிச்‌ சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்‌; எனவே இடை வெயிலில்‌ தலைவியும்‌ தலைவனும்‌ உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள்‌ கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்‌டாகாதபடி வில்லின்‌ நாணேற்றிக் கையிலேந்திச்‌ செல்கின்‌றமையால் வில்லி யென்றார்‌,கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறாமையால்‌ அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம்‌ பாலை” ஆதலால்‌ திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல்‌ ஒருவனைக்‌ கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச்‌ சொல்லாதலால்‌ கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச்‌ சென்ற செவிலியை எதிர்‌ வந்தோர்‌ கூறித் தேற்றுதல்‌ துறைக் கருத்து,-கைகோள்‌ – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர்‌ – செவிலி, இடம்‌ – முன்னிலை, காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – பெருமிதம்‌, பயன்‌ – செவிலியை மீள வுரைத்தல்‌, ஆதலால்‌ நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

———-

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே.
21–

பொருள்‌–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்‌.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்‌,

குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில்‌ மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்‌-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம்‌ -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில்‌ – சோலையிலே,
தளிர் மெல்‌ அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்‌,
தண்‌ – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல்‌ நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம்‌ நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்‌-விரைசந்து வருகிற,
சூரல்‌ – பிரப்பங்காடுகள்‌ நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும்‌ – நினைக்கும் பொழுதெல்லாம்‌,
துணுக்கெனும்‌ ஆல்‌ – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்‌,
வாரல்‌ – நீ வாராது நீங்குவாய்‌.

நம்மாழ்வார்‌ ஆஜ்ஜையைச்‌ சிரத்தால்‌ வகிக்கும்‌ பொதியிவின்‌ தலைவனே ! சோலையில்‌ தலைவியானவள்‌ அவள்‌ முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும்‌ துணுக்கென்று நடுங்குவளாதலால்‌ நீ வாராதொழிவாய்‌ -என்பதாம்‌. எனவே தலைவன்‌ ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம்‌ எப்படியோ வெனில்‌, ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால்‌ அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள்‌ வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும்‌ நான்‌ அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள்‌ மணஞ்‌ செய்யப்‌ புகுவானாம்‌, இங்கனம்‌ கூறுதல்‌ தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும்‌ இருவரும்‌ மணஞ்செய்து கொள்ள வேண்டிச்‌ கூறும்‌ அன்பின்‌ மிகுதியால்‌ வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித்‌ தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல்‌ ஆணை யிட்டு மறித்தாளென்‌று உரைப்‌பின்‌ ஆணை யிட்டு மறித்ததனால்‌ தலைவன்‌ வாராதே யொழியவும்‌ அதனால்‌ தலைவி யிறந்து படவுஞ்‌ செய்தவளாம்‌. அங்ஙனஞ்‌ செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள்‌ தோழி ” என்னுஞ்‌ சூத்திரத்துக்கு விரோதமாம்‌ ; ஆதலால்‌ இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர்‌ ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித்‌ தொகை பன் மொழித் தொடர்‌, குறிஞ்சி மூரல்‌-மூரல்‌-அரும்புக்கு உமையாகு பெயர்‌, ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்‌ற தன்றே’-என்ற சிந்தாமாணிச்‌ செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல்‌ – ௮ச்‌சக் குறிப்பு, கைகோள்‌-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன்‌ -தலைவன்‌, இடம்‌ – முன்னிலை, காலம்‌- எதிர்காலம்‌,-மெய்ப்பாடு- அச்சத்தைச்‌ சார்ந்த பெருமிதம்‌, பயன்‌- வரைவு கடாதல்‌,

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.
22-

மலை- பொதியில்‌ மலையிலுள்ள,
ஆரமும்‌ – சந்தன மரமும்‌,
கடல்‌ ஆரமும்‌ – கடலிலுள்ள முத்துக்களும்‌, பல்‌ மா மணி குயின்‌ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும்‌ – விலை பெற்ற மாலைகளும்‌,
விரவும்‌ – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்‌டெரித்த கோதண்டமென்னும்‌ வில்லை யுடைய,
ஆர்‌ – அரிய,
௮முதின்‌-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில்‌ பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும்‌ – போய்‌ வணக்குகின்ற,
தலையார்‌ – தலையை யுடையவர்‌,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும்‌ – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்‌-தவமாகிய செல்வத்தை யுடையவராவர்‌ ;

மூவகை ஆரங்களும்‌ பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும்‌ இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத்‌ தலைவராவாரென்பதாம்‌, விலை யாரம்‌ இந்திரன்‌ கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங்‌ கோத்த சடலாரம்‌. தேவர் கோன்‌ பொன்னாரம்‌ தென்னர் கோன்‌ மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும்‌ நோக்குக” இராமாமிருதமென்னும்‌ பெயருடைமையால்‌ அமுதென்றார்‌; அன்றி மனத்திற்‌ கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற்‌ கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில்‌ இராம பிரான்‌ . தென்‌ கடலருகு வந்து இலங்கைக்குச்‌ செல்ல வழி வேண்டி வருணனை அழைத்‌தலும்‌ ௮வன்‌ வாராமையால்‌ சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப்‌ பிரயோகித்துக்‌ கடலை வற்றச் சுட்டு வருணன்‌ வந்து அடைக்கலம்‌ புகக்‌ காத்தருளினார் என்பதாம்‌. அமுது -உவமை யாகு பெயர்‌. குயின்ற-குயில்‌ – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,

தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –

———–

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே.
23-

போந்து – எங்கள்‌ விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர்‌ – தேவர்கள்‌,
புகலினும்‌ -சொன்‌னாலும்‌,
பூ – அழகிய,
தொழுவின்‌ – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன்‌ – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும்‌ – பரம பதத்தை யடையப்‌ பெற்றாலும்
எழில்‌ குருகூர்‌ – அழகிய குருகூர்ப் பதியில்‌,
நாம் தேறிய – நாங்கள்‌ தெளிவடையச் செய்த,
அறிவன்‌ – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச்‌ செய்த, திருவாய்மொழி —,
நாளும்‌ – தினமும்‌,
நல்கும்‌- கொடுக்கின்ற,
தீம்‌ தேறல்‌ – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும்‌ – பருகி உலாவுகின்‌ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்‌-நான்‌ பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்‌;

என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர்‌ நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின்‌ இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக்‌ கை கூடி யிருக்கும்‌ என்பதாம்‌-இது ௮ப்பிரபந்தத்தின்‌ சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்‌திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால்‌ நாம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌…படிக்கும் தோறுஞ்‌ சுவை தருதலால்‌ நாளும்‌ நல்குமென்றார்‌-ஏனைய பயன் போலாகாமல்‌ மேம் பட்டமையால்‌ சித்தி யென்றார்‌, ஏறு -விலங்கின் ஆண் பாற்‌ பெயர்‌ ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்‌றம்‌, தேறல்‌ – கள்ளின்‌ தெளிவுமாம்‌ ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால்‌ இத ஏக தேச வுருவக வணி. கண்ணன்‌ ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள்‌ தந்தை யானவன்‌ அசுர விவாகமாக நியமித்துத்‌ தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப்‌ பிடித்‌துக் கட்டுபவனுச்கு என்‌ மகளைக்‌ கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான்‌ அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்‌.

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே.
24-

சடகோபன் – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின்‌ தொகுதியானது ,
சித்தர்க்கும்‌- எண் வகைச்‌ சித்தி யுடையவர்க்கும்‌,
வேதச் சிரம்‌ – வேதத்தின்‌ தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும்‌ – அறிர்தவர்களுக்கும்‌, செய்‌ தவர்க்கும்‌ – தவத்தைச் செய்பவர்க்கும்‌,
சுத்தர்க்கும்‌-பரி சுத்தமுடையவர்க்கும்‌, மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும்‌ – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்‌,
தொண்டு செய்யும்‌ – கடவளுக்கு அடிமை செய்கின்‌ற,
பத்தர்க்கும்‌ – அடியார்களுக்கும்‌,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்‌,
பண்டு – முன்னாளில்‌ சென்‌ற,
முத்தர்க்கும்‌- முத்தி பெற்றவர்களுக்கும்‌, இன்‌ ௮முதம்‌- இனிய ௮மிருதமேயாம்‌;

நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ சித்தர்‌ முதலாகிய எல்லார்க்கும்‌ இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம்‌, சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம் -என்பன. சுத்தர்‌- மனத்திற்‌ பரி சுத்தமுடையவர்‌. பகவர்‌ – வீரம்‌ கீர்த்தி வைராக்கியம்‌ இவற்றில்‌ மிக்கவர்‌, முத்தி யடைந்தவர்‌-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில்‌ அவர்க்கும்‌ இன்‌னமுதமென்றார்‌.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர்‌ அதனிலும்‌ இதன்‌ கருத்துத்‌ தெளிவாய்‌ விளங்குதலால்‌ அவர்க்கும்‌ அமுதென்றார்‌. இதிலுள்ள உம்மைகள்‌ எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,

———-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே
. 25-

தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம்‌ -சாஸ்‌திரங்களிலெல்லாம்‌,
துறை தோறும்‌ – ஒவ்வொரு பகுதிகள் தோறும்‌,
தொட்டால்‌ – உற்று நோக்கினால்‌,
பகை உளவாம்‌ -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம்‌ ;
மற்றும்‌ – மீட்டும்‌,
பற்றுளவாம்‌-தொடர்சி யுள்ளனவாகும்‌ :
பழ நால் மறையின்‌ – பழமையகிய நான்கு
வேதங்களின்‌,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம்‌ -விரோதங்களுமுள்ளனவாகும்‌; (அப்படியன்றி,) குருகூர்‌ -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான்‌ தன்‌ – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்‌,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்‌,
ஏ- சிறந்த,
மிகை உளவாம்‌ -மேம் பாடுகள்‌ உள்ளனவாகின்றன ;

எல்லாச் சமய நூல்களிலும்‌ உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும்‌ முன்னுக்குப் பின்‌ விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வார் பாடல்களில்‌ பார்க்குமிடம் தோறும்‌ சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்‌பதாம்‌-நான்மறையின் வாது – வேதவிரோதம்‌; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம்‌ -வந்திடம்‌ ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும்‌ ‘? என்றதனால்‌ ஏ என்னும்‌ ஓரெழுத்தொரு மொழி உரிச்‌ சொல்லாயமைந்த விடத்துப்‌ பெருமையை யுணர்த்தும்‌,

———

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே
26-

௮ரு வினைகாள்‌ -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்‌- மிக்க இளைய சங்கங்களில்‌,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய்‌ -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்‌- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம்‌ குலம்‌ – எம் போல்வாராகிய தொண்டர்‌ கூட்டங்களுக்‌கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன்‌ – ஒப்பற்ற நம்மாழ்‌வார்‌,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில்‌ நெருங்க ஓட்‌டாமல்‌ அப்பால்‌,
இழுப்பான்‌ -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான்‌ – எம்‌ உள்ளத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌; (ஆதலால்‌,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்‌,
ஓழிமின்‌ – நீங்கி விடுங்கள்‌ ;
இனி – இனி மேல்‌,
எம்மை-எங்களை,
பிறவித் துயர்‌ – பிறவியாகிய துன்பத்தில்‌, விழுப்பார்‌ யார்‌ – தள்ளுபவர் யாவர்‌ இருக்கிறார்கள்‌ –

வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார்‌ உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்‌-ஆதலால்‌ கிட்ட நெருங்காதீர்‌ ; ; இனி எம்மைப்‌ பிறவிபில்‌ தள்ளுபவர்‌ யாவர்‌ இருக்கிறார்கள்‌? என்பதாம்‌-ஆழ்வார்‌ மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால்‌ இனிப்‌ பிறவியில்‌ புகாதிருத்தல்‌ நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார்‌. ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல்‌. கொழுந்து உவமை யாகு பெயர்‌ -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும்‌. கொழு- கலப்‌பைப் படை வாள்‌ நுணியில் தைக்கும் இரும்பு.

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே.
27-

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல்‌ வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –

கொழுந்தோடு – கொழுந்துகளும்‌, இலையும்‌, முகையும்‌- அரும்புகளும்‌, எல்லாம்‌ – மற்றுள்ள மலர் காய்களும்‌, கொய்யும்‌ கொய்‌ மகிழ்‌ கீழ்‌ – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின்‌ கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர்‌ சருகும்‌ பெறாள்‌ -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்‌- வலிமை யுடைய,
மாறன்‌ என்றால்‌ – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்‌,
அழும்‌ – அழுகின்றனள்‌;
தோள் தளரும்‌- சோள் தளர்ச்சி யடைவாள்‌;
மனம்‌ உருகும்‌-மனம் கரைவாள்‌ ;
குருகூர்‌ அறையில்‌ -குருகூரென்று சொன்னால்‌,
எழுந்து ஆடவும்‌- தான்‌ எழுந்‌து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்‌,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன்‌ – நான் யாது செய்கேன்‌-கெட்டேன்‌ !

நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண்‌ ௮வர்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால்‌ ௮ம்‌ மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம்‌ மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும்‌ பெற்‌றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால்‌ அழுகின்றாள்‌ ;தளர்கின்றாள்‌ ;உருகுகின்றாள்‌ ; குருகூரென்றால்‌ அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன்‌ ! என்றாள்‌ என்பதாம்‌. காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார்‌. இவள்‌ இன்னும் காமத்தால்‌ மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார்‌ எல்லாம் கொய்யக் கூடிய மகிழின்‌ சருகும்‌ பெற்றாளில்லை யென்றார்‌. ஆற்றாமை மிகுதியினால்‌ ௮ழுமென்றார்‌, அணைத்து மகிழ்வது தோளாதலால்‌ ௮து பெறாமை ஹேதுவாகத் தோள்‌ தளருமென்றார்‌, மனத்தை அவர் பால்‌ விடுத்தமையால்‌ உருகுமென்றார்‌. யாமிங்‌கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்‌றார்‌. தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ்‌ செய்தும்‌ பயன் படாமையால்‌ கெட்டேனென்றாள்‌. தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும்‌ சந்திரகாந்தச்‌ சிலையிலும்‌ படுச்கச் செய்தல்‌ -கொங்கைகளில்‌ தளிர்களையும்‌ சந்தனத்தையும்‌ பிறவற்றையும்‌ அப்புதல்‌; பன்னீர் தூவுதல்‌ முதலியவாம்‌, இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால்‌ ௮கப் பொருளாகாமல்‌ அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால்‌ கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்‌று. தலைவன்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின்‌ வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –

———-

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே
. 28-

ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்‌கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில்‌ எடுத்‌துக் கொண்டு கூறிய,
மாறன்‌ என்‌றால்‌ – நம்மாழ்வார்‌ என்று யார் சொன்னாலும்‌,
பதுமக் கரங்கள்‌ – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில்‌ அஞ்‌சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும்‌ ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள்‌ – பாதங்கள்‌,
என் முடி என – எனது தலையிற்‌ சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன்‌ -விருதுக் கொடி பிடித்‌துக் கொண்டு நிற்கின்றேன்‌ ; (அதலால்‌),
இனி -இனி மேல்‌,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர்‌ அடி எடுத்‌துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால்‌ வரலாகும் கொல்‌-என்னிடத்தில்‌ வருதல்‌ கூடுமோ? |கூடாதென்பதாம்‌]

நம்மாழ்வாரென்று யார்‌ கூறினும்‌ ௮ன்பினால்‌ அஞ்சலி செய்கின்‌ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற்‌ சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்‌றமையால்‌ கூற்றுவன்‌ அஞ்சாமல்‌ என்னிடத்து அடி யெடுத்‌து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்‌-நான்கு பிரபந்தங்களைச்‌ செய்தமையின்‌ ஆரணத்தின் படி யென்‌றார்‌. கரங்கள்‌ முடி யெடுத்‌துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால்‌ என்க, ௮ந்தணர்‌ -௮ழகிய தண்மை யுடையார்‌ என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர்‌. வைஷ்ணவப் பிராமணரென்றால்‌ குறைபாடு என்‌னை யெனின்‌ அதில்‌ தோன்றிய சிலர்‌ பொருளாசை மேலீட்டினால்‌ பிறர்‌ நூல்‌ உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால்‌ முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,

———-

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.
29–

இராவணன்‌ தன்‌ – இராவணனுடைய,
பொன் முடியால்‌ -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்‌திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான்‌ – கோதண்டமென்னும்‌ வில்லை
யுடையவனுடைய,
அவன்‌ – அந்த இராம பிரானுடைய,
இணை தாள்‌ கீழ்‌ -இரண்டு திழுவடிகளிலும்‌,
பொருநை துறைவன்‌ – தாமிரபருணை யாற்‌றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்‌,
தன்‌ முடியால்‌ – தம் தலையால்‌ வணங்கி ,
எ பொருளும்‌ – எல்லாப் பொருள்களையும்‌,
தழீஇ – ஒரு சேரச்‌ கொண்டு,
சொல்‌ முடியால்‌ – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம்‌ -அமிர்தம் போன்ற,
ஆயிரம்‌ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
சூட்டினன்‌ -பாடிச் சேர்ப்பித்தனர்‌; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என்‌ முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான்‌ அரியதாகும்‌? [எல்லாம்‌ முடியும்‌-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்‌]

இராவணனைக் கொன்ற இராம பிரான்‌ திருவடிகளில்‌ நம்மாழ்வார்‌ ஆயிரம் பாடல்‌ பாடிச் சூட்டினார்‌;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான்‌ யாது? ௮ரியது தான்‌ யாது? [ஒன்று மில்லை] என்பதாம்‌, இராவணன்‌ -இலங்கைக் கிறையவன்‌ ; ஸ்ரீ கைலாஸ மலையைப்‌ பெயர்த்து அதன் கீழ்‌ ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற்‌ கதறினமையால்‌ இப் பெயர் பெற்றனன்‌ ; இராவணம்‌ -அழுகை, ௮வன்‌ தன்‌ தலைகள்‌ வெட்டுண்டால்‌ மீள முளைக்கும் படி பிரமனிடத்தில்‌ வரம் பெற்றான்‌-பின்பு இராம பிரான்‌ போரில்‌ ௮வன் தலைகளை வெட்டிக்‌ கடலிற்‌ குவித்தனன்‌ ; வெட்ட வெட்ட முளைத்தமையால்‌ மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன்‌. எப் பொருளும்‌ – முதல் கடவுளாகிய மாயோன்‌ நிலையும்‌, அக் கடவுளை யடையும்‌ நெறியும்‌, அடைதற்குரிய உயிர்களினிலையும்‌, அடைதலாற் பெறும்‌ பேறும்‌ பிறவுமாம்‌, எனக்கு – இடை நிலைத்‌ தீவகம்‌. தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-

——–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே
. 30–

சூட்டில்‌ – செற் போரில்‌,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும்‌ – தூங்குகின்ற,
குருகூர்‌ – திருக் குருகூரையும்‌, தொழுதேன்‌-வணங்கினேன்‌ ;
வழுதி நாட்டில்‌ – பாண்டி நாட்டில்‌,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில்‌ ௮ன்புடையவருக்கு,
ஆளும்‌ செய்தேன்‌ – அடிமையுமாயினேன்‌ ;
(ஆதலால்‌), மறை – வேதமான,
மெய்‌ எனில்‌, உண்மையா யிருக்குமானால்‌, என்னை- -,
நல்வினை ஆம்‌ நாட்டில்‌ -நல்ல தவஞ் செய்தலால்‌ மேன்மை யுற்ற நாட்டில்‌, புகுதவிட்டு – ,
உய்யக் கொள்‌ – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்‌ற ,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கழல்‌ – பாதங்களை,
பற்றி போய்‌ – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில்‌ புகுதற்கும்‌- மோட்சத்தை அடைதற்கும்‌,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்‌;)

யான்‌ அழ்வார்‌ அவதரித்த குருகூரை வணங்கினேன்‌ ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும்‌ அடிமையாயினேன்‌ ; வேதம்‌ உண்மையா யிருக்குமானால்‌ நல் தவத்தில்‌ என்னை விட்டு ஆழ்வார்‌ பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச்‌ செல்லத் தடை யுண்‌டோ? என்பதாம்‌. தாம்‌ கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப்‌ போரில்‌ நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால்‌ விளக்கினார்‌, இங்கனமே நாடுகளைச்‌ சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற்‌ சேக்கும்‌ ” என்றார்‌ ஐங்குறு நூற்றிலும்‌. குருகு உறங்கும் குருகூர்‌ எனச் சொல்‌ நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும்‌ பெயராதலால்‌ வீடு வேண்டின்‌ மறாமல்‌ கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற்‌ கூ.றினார்‌. ஆளும்‌, புகுதற்கும்‌ – உம்மைகள்‌ இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,

—————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே
. 31-

உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும்‌ – வெட்டி யழிக்கின்‌ற,
மெய்‌ – சத்தியமாகிய,
வாள் வலவன்‌ – வாள் யுத்தத்தில்‌ வல்‌லவரும்‌,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன்‌ – இறைவரும்‌,
புலமை செய்யும்‌ – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்‌ற,
ஐயன்‌ தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்‌-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின்‌ – தான்‌ பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும்‌ – சத்துவப் பொருளெல்லாம்‌,
மெய்‌ ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும்‌ – பொய்ப் பொருளும்‌,
பொய்‌ ஆயது – பொய்ப்‌ பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம்‌ வேறாகப்‌ பகுத்‌துக் காட்டி,
உய்யும்‌ – பிழைப்பதற்குரிய,
மெய்‌ ஆய – உண்மையாகிய,
உபாயம்‌ -தந்திரமும்‌,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,

நான்‌ நம்மாழ்வாருக்குத்‌ தொண்டு செய்யத்‌ தொடங்கிய பின்‌பு தான்‌ தத்‌துவ ஞானம்‌ உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும்‌ நீங்கிற்று ; இங்கனம்‌ பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும்‌ வந்து பொருந்தித்றென்பதாம்‌-உண்மை நிலை தெரியாமல்‌ அஞ்ஞானம்‌ மூடப்‌ பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால்‌ மெய்யும்‌ மெய்யாயது என்‌றார்‌. ௮து மெய்யாதலும்‌ ௮தற்கு மறுதலையாகிய பொய்யும்‌ பொய்யாகிய தென்பது தானே இயையினும்‌ மகிழ்ச்சி மிகுதியால்‌ அதனையும்‌ உடன்‌ கூறினர்‌, பொய்ப் பொருள்‌ – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்‌-பிழைத்தல்‌ -பரம பதத்தை நாடும்‌ வழி
கொய்தற்கேற்ப வினையைப்‌ பகை யென்னாமையால்‌ இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால்‌ ஐயனென்றார்‌.

———-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே.
32–

திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்‌(என) – சிவந்த நிறமுடையவனென்றும்‌,
கரியன்‌ என – கரிய நிறமுடையவனென்றும்‌,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம்‌ – உலகத்‌ துயிர்கள்‌,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்‌
டாவாம்‌;
மறை- வேதங்களும்‌,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்‌), மதுரம்‌- இனிமை யாகிய, குருகூர்‌ – திருக் குருகூரில்‌ ௮வதரித்தருளிய,
ஐயன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல்‌ – பாடல்‌கள்‌ அல்லா விட்டால்‌,
பிறவிக் கடல்‌ – பிறப்பாகிய சமுத்திரத்தில்‌,
ஆழ்‌வது அல்லால்‌ -அமுங்குவது ௮ல்லாமல்‌,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்‌களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்‌வழி,
ஒன்றும்‌ – ஒன்‌றினையும்‌,
யான்‌ -நான்‌,
கண்டிலேன்‌ -பார்த்தேனில்லை ;

மாயோன்‌ சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால்‌ உயிர்கள்‌ நம்‌மாழ்வார்‌ பாடலில்லாவிட்டால்‌ பிறவிக் கடலில்‌ அழுந்துவதே யல்‌லாமல்‌ அவ் வுயிர்கள்‌ ஈடேறும்‌ வழியை யான்‌ பார்த்தேனில்லை என்‌பதாம்‌. செய்யன்‌,கரியன்‌– சிவப்போ கறுப்போ என்னும்‌ உலக வழக்கை நோக்கிச்‌ கூறியவாம்‌. வையம்‌–இடவாகுபெயர்‌, தமிழ்க்‌ குருகூர்‌ என்பார்‌ – அதன்‌ மறு பெயராகிய மதரமென்னும்‌ மொழியாற்‌ கூறினார்‌. எல்லாருக்கும்‌ மேலாவான்‌ என்பது பற்றி ஐயன்‌ என்றார்‌. ஒரு நாளும்‌ முடிவு பெறாமையும்‌ கடத்த வருமையும்‌ நோக்கிப்‌ பிறவியைக் கடலென்றார்‌,

———–

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.
33–

உயிர்த் தாரையில்‌ – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம்‌ மூன்றனையும்‌ – காமம்‌ வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்‌,
செயிர்த்தார்‌ – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்‌-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய்‌ மொழி -திருவாய் மொழி யென்னும்‌ பிரபந்தத்தினை,
செப்பல்‌ உற்றால்‌ – சொல்லத் தொடங்கினால்‌,
எங்கள்‌ அந்தணர்க்கு-தத்துவ நூல்‌ ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த்‌ தாரைகள்‌ பொடிக்கும்‌ – சரீரத்திலுள்ள்‌ மயிரொழுங்குகளெல்‌லாம்‌ சிலிர்க்கும்‌ ;
கண்கள்‌-கண்களில்‌,
நீர்‌ மல்கும்‌ – ஆனந்தக் கண்ணீர்‌ பெருகும்‌ ;
மா மறையுள்‌-சிறந்த வேதத்தின்‌ பொருள்களுள்‌,
அயிர்த்தார்‌-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள்‌ – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்‌,
வெளியாம்‌ – நன்றாக விளங்கும்‌ ;

முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியைச்‌ சொல்லத் தொடங்கினால்‌ அதனைக்‌ கேட்கும்‌ சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம்‌ மயிர்‌ புளகிக்கும்‌ ; கண்ணீர்‌ வடி.யும்‌; ௮ன்றி வேதப் பொருளில்‌ சந்தேக முற்றவர்களுக்கு அந்தச்‌ சந்தேகமும்‌ நிவர்த்தியாகும்‌ என்பதாம்‌. என்றும்‌ நீங்கா இயல்பினவாதலால்‌ உயிர்த் தாரையிற்‌ பொருந்திய முக்குறும்பென்றார்‌. அவை தம்‌மை யடையாதபடி இருந்தமையால்‌ செயிர்த்தார்‌ என்றார்‌, மயிர்‌ புளகித்தலும்‌ கண்ணீர் விடுதலும்‌ பக்தியினால்‌ தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில்‌ பொருந்தி யிருத்தலால்‌ தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்‌,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர்‌ ௮ந்தணராதலால்‌ ௮வ்வுபநிடதங்களிலும்‌ இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்‌கும்‌, கண்ணீர் மல்கும்‌ என்றுரைப்பினும்‌ அமையும்‌,

———-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.
34–

சுடர் தோய்‌ – சூரியனும்‌ சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும்‌ தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள்‌ சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்‌,
பிரான்‌ – நம்மாழ்வார்‌,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல்‌ அரும்‌ தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்‌றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்‌,
யோகியராய்‌ வந்தவர்க்கோ – யோகம்‌
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்‌ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம்‌ குழை சேர்‌ – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்‌டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்‌);

குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-

இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே
. 35–

சந்தியும்‌ – பதப் புணர்ச்சி யிலக்கணமும்‌,
சந்தி – அப்படிப்‌ புணர்கின்ற,
பதமும்‌- சொல்லிலக்கணமும்‌,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்‌,.
தழைக்கும்‌ – அடுக்கப்பட்டுப் பெருகுகின்‌ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்‌,
பல்‌ அலங்காரம்‌ பொருளும்‌- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும்‌, பயிலுகிற்பீர்‌ – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்‌’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்‌);
தென்குருகூர்‌- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும்‌ – நினையுங்கள்‌ ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள்‌ செய்யும்‌ -அவருக்கு அடிமை செய்யுங்கள்‌
வந்தியும்‌ – நமஸ்கரியுங்கள்‌ –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்‌)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்

பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-

———-

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே
. 36–

பொருள்‌–அகப் புறப்‌ பொருள்‌.
திணை-கந்தருவத்தின்‌ வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்‌,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்

நீங்கள்‌-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப்‌ பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர்‌ அழித்தீர்‌ – நிலை குலையச்‌ செய்தீர்கள்‌
பூ வரை – மலர்கள்‌ மட்டும்‌,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம்‌ – மனத்தில்‌,
புகுந்தார்‌ – புகுந்து வருத்துகின்றவர்‌,
எவர்‌ என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம்‌ குறிச்சியில்‌ வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்‌,
இறைவர்‌ – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும்‌ – சொல்லுங்கள்‌ ;

நீங்கள்‌ கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின்‌ பெருமையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌; நம்‌ தலைவியின்‌ மனத்திற்‌ புகுந்தார்‌ யாரெண்று வினாவுகின்‌ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர்‌ ஆழ்‌வார்‌ புகுந்தா ரென்றோ ௮வள்‌ கூறியது. அதனைச்‌ சொல்லுவீ ரென்பதாமாம்‌, கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில்‌ நெல்‌ மூதலியவற்றை வைத்து
அக்‌ கடவுளைப் பரவி அந்த நெல்லில்‌ ஒரு பிடியள வெடுத்துத்‌ தனியே வைத்து இந் நெல்‌ ஒற்றைப் பட்டால்‌ தெய்வத் தானாயிற்றென்றும்‌ இரட்டைப் பட்டால்‌ பிற நோய்‌ முதலிய வென்றும்‌ கூறுவதோர்‌ குறி யென்‌று சில நூல்களால்‌ தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல்‌, கழங்கு பார்த்தல்‌, கன்னமெடுத்தல்‌ எனப்‌ பலவகைப் படும்‌. கட்டு வைத்து
உரைப்பவள்‌ கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால்‌ மூதறிவாட்டி யென்றாள்‌. இவளுக்கு நோய்‌ வந்த மூலமறிந்து கூறாமல்‌ மாறாகக் கொண்டு குறி பார்க்கத்‌ தொடங்கியதனால் அவளைச்‌ சீர் அழித்தீர் என்றாள்‌-தெய்வத்தால்‌ தீண்டப்‌ பெற்றிலளென்பது தோன்றப்‌ பூவரை யேறிய கோதை யென்றாள்‌. தெய்வம் தீண்டப்‌ பெற்றால்‌ பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம்‌. தலைவன்‌ பிரிந்ததனால்‌ வருந்திய மனத்தினளாய்‌ ௮ணி முதலிய அணிபப் பெறாமல்‌ பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம்‌. திரிமூர்த்திகளிலும்‌ மேலாக ஆழ்வாரை இவள்‌ மனங்கொண்டிருப்பதனால்‌ மூவரில்‌ யாரேனும்‌ இவள்‌ உள்ளம்‌ புகுந்தாருண்டோ என்று நகை யாடிக்‌ கூறினாள்‌. நம்மாழ்வாரையே இவள்‌ கருதி இருக்கிறாள் என்பதைக்‌ கொள்ஞங்களென்பாள்‌ அவரை ஈற்றில் கூறி முடித்தாள்‌. தலைவனது இயர்பெயர்‌ கூறுதல்‌ அகப் பொருள்‌ கந்தருவ வழக்க மில்லாமையால்‌ பின்னர்‌ நான்கும்‌ பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல்‌ – தலைவி தரும வழி தவறவில்லை யென்‌றதை நிலை நிறுத்துதல்‌, தலைவியின்‌ அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல்‌ துறையின்‌ கருத்து. முதுமை யென்னும்‌ பண்புப்‌ பெயர்‌ ஈறு போய்‌ ஆதி நீண்டது. ஆட்டி – பெண்‌ பாற் பெயர்‌, “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல்‌ -பொரு – 287) என்ற சூத்திர வுரையில்‌ கைக் கிளைக்கும்‌ பெருந்‌ திணைக்கும்‌ மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால்‌ இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

————

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.
37–

துறவாதவர்க்கும்‌ -இல்லறத்தி லிருப்பவர்க்கும்‌,
துறந்தவர்க்கும்‌ – துறவறத்தி லிருப்பவர்க்கும்‌,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும்‌ – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம்‌ – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம்‌ ஆ அவை – ஒரு ஆயிரம்‌ பசுக்கள்‌,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்‌,
அந்தோ – ஐயோ !
சிலர் போய்‌ – சிலர் சென்று,
மறம்‌ வாதியர்‌ – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்‌,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம்‌ ஆம்‌ -தன்‌னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப்‌ பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர்‌ – உழலுவார்‌ ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள்‌ கை வலிப்பே – அவர்கள்‌ கை
வருந்துவதானது ,
என்‌ பெறவோ -வேறு யாது பயனைப்‌ பெறுவதற்காகவோ?

யாவர்க்கும்‌ சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம்‌ பாடல்களுமிருக்க அவற்றை விட்‌டுப்‌ புறச் சமயிகள்‌ சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார்‌ அதனால்‌ தங்கள்‌ கை வருந்துவது வேறு யாது பயனைக்‌ கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம்‌. துறவாதவர்க்கு இருமைப் பயனையும்‌, துறந்தவர்க்கு மறுமைப் பயனையும்‌ தன்‌னை நினைத்தவுடனே கொடுத்தலாலும்‌ மற்றும்‌ வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும்‌ திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக்‌ கூறினார்‌. புறச் சமையத்தார்‌ நூல்கள்‌ மலட்டுப் பசுவைப் போலப்‌ பயன் கொடாதொழிவதன்றித்‌ தம்‌மைப்‌ படித்தவர்க்கு நரகத்கையும்‌ கொடுப்பதால்‌ குற்றம்‌ பொருந்திய மலட்டுப் பசு வென்றார்‌-மற வாதியரென்ற பன்மைப் பெயராற்‌ கூறினமையால்‌ ஆசுகளை அகத்‌திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல்‌ எல்லாச் சமயத்தாராலும் புகழும்‌
-மாணிக்க வாசகர்‌ திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக்‌ கூறி எரி வாய்‌ நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர்‌. ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள்‌ விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல்‌ ; : தனித் தமிழ்‌ மொழி- அந்தீற்றோவும்‌”என்றதனா லறிக , ஆசகம்‌- அன்மொழித் தொகை ,-இப் பாடல்‌ உருவகவணி..

குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
. 38–

பொருள் –புறப் பொருள்‌.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில்‌ பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .

குருகூர்‌ என்னும்‌ ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன்‌ தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்‌டில்‌- பனை மடலாலகிய குதிரையில்‌,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்‌து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல்‌ தூக்கி , அரும்‌ பூசல்‌ இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால்‌ – செய்யுட்களால்‌,
உலகை – உலகத்திலுள்‌ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும்‌ – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய்‌ என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர்‌ அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்‌?.]

குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார்‌ அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்‌-தலைவி பால்‌ அண்பு மிகுதியால்‌ பெண் பாலை ஆண் பாலாகப்‌ பைதல் என்றாள் – ஆண் மகனில்‌ சிறுவனுக்கும்‌ துன்பத்திற்கும்‌ பெயர்‌,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப்‌ பைதலென்‌றதும் , “பைதல வாகிப்‌ பசக்குவ மன்னோ… கண்‌! இங்குத்‌ துன்பத்துக்கும்‌ ஆயிபனமையுமறிக -ஆண்பாற்‌ குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும்‌ வழக்குப் பற்றிக்‌ கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும்‌, கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்‌; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம்‌ பிரித்தார்‌ பூர்வாச்சார்யர்- எனின்‌ அதுவும்‌ ஏட்டுப் பிரதியில்‌ தட்டென்பது கட்டென்று ப்‌றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன்‌ றி உகட்டென்‌று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம்‌ இவர்களுக்குத்‌ தோன்றிப்‌ பொருள் பட்டமை யிறும்‌பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன்‌ மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்‌ணிருக்கும் தெருவழியே மூன்று நாள்‌ வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள்‌ ௮ப் பெண்ணைக் கொடா விட்டால்‌ நாலா நாள்‌ மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால்‌ மடற் கூற்று, பெண் பால்‌ மடலேறுவதற்கு விதியில்லாமையால்‌ பொருந்தாதாயினும் பிற் காலத்தார்‌ இங்கனம் எழுதுதலால்‌ இது புறத் திணையில்‌ அடக்கலாயிற்று,

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே
. 39–

மகிழ் மாறன்‌ – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
செய்யுள்‌ – பாடல்களை,
௭ண்ணும்‌-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய்‌ – உண்மையான,
யோகியர்‌ – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம்‌ என்னும்‌ கண்ணும்‌- அறிவாகிய மனக் கண்ணும்‌,
மனமும்‌ – உள்ளமும்‌,
செவியும்‌- காதுகளும்‌,
தவஞ்செய்த-தவஞ்செய்‌தன :
காலத்திலே, பண்ணும்‌–குறிஞ்சிப் பண்‌ முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும்‌, தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும்‌ – விண்ணுலகும்‌, தவம் செய்தன-

நம்மாழ்வார்‌ பாடி யருளிய பாடல்களைத்‌ தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்‌ணும்‌ மனமும்‌ செவியும் தவஞ்செய்‌தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும்‌ மறையும்‌ மண்‌ணும்‌ விண்‌ணும்‌ தவம் செய்தன வென்‌ தாம்‌.-எனவே யோகியர்‌ இவர்‌ பாடல்களையே கருதுவார்கள் எனவும்‌ இப் பாடல்களுக்கு பண்கள்‌ இன்றியமையாதான எனவும்‌,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும்‌, நான்‌கு மறையுமென்றதனால்‌ நான்கு வேதங்களின் சாரமே யிவர்‌ நூல்கள் எனவும் , மண்ணும்‌ விசும்புமென்‌றதனால்‌ இருமைப் பயனும்‌ இந்நூல் அளிக்கும் எனவும்‌ கூறினாராயிற்று, பண்‌ – முற் கூறப் பட்டது, மண்‌, விசும்பு-இட வாகு பெயர்கள்‌,

————-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே
. 40–

கடை நாள்‌ – உலகமொடுங்கும்‌ ஊழிக் காலத்தில்‌,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர்‌ – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்‌,
கொண்ட. – தாம்‌ எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய்‌ அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம்‌ கடந்த – மிக்குணங்‌களுக்கும்‌ அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்‌லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத்‌ தந்தருளிய,
எம்‌ மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்‌- அவர்‌ அவதரித்த திருக் குருகூரில்‌,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின்‌ – தரிசித்து நற் பயனைக்‌ கைப் பற்றுங்கள்‌ ;

ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில்‌ யீடுபட்டுக்‌ காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச்‌ செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப்‌ பிழையுங்கள்‌ என்பதாம்‌, எல்லாம்‌ அழிந்து முடிவிலும்‌ நிலை பெற்று விளங்குவதால் கடை நாள்‌ ஆலத்திலே துயின்‌றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால்‌ கொண்மினோ என்றார்‌. உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில்‌ அவற்றை அழியாதபடி மாயோனானவன்‌ தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன்‌ வடிவான ஆலிலையில்‌ யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால்‌ கடைநாள்‌ ஆலத்திலே துயின்றோர் என்றார்‌. ஆலத்தில்‌, அத்து – சாரியை,

————-

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே
. 41–

முழு ஏழ்‌ உலகை – ஏழுலகம் முழுவதினையும்‌,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்‌தத்தினை – பரிசுத்தரன கடவுள்‌நிலையையும்‌,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்‌,
திருமால்‌ பெருமை – சிறந்த மாயோன்‌ பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்‌,
பணித்‌தானும்‌ – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌,
நின்‌ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய்‌ மொழியை யுடைய, குருகைப் பிரானும்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரும்‌, ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்‌-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார்‌ – அறிந்தவராவார்கள்‌,

உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும்‌ மூவகை நிலைமைகளையும்‌ நான்கு வேதங்களையும்‌ ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌ நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும்‌ ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்‌மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம்‌. மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால்‌ வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும்‌ வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும்‌ அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார்‌ மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங்‌ கொள்ளக் கிடந்தமை காண்க,

———

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே
. 42–

பொருள் –அகப் பொருள்‌.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்

(நெஞ்சமே!) குருகூர்‌ புனிதன்‌ -திருக் குருகூரிலவதரித்‌த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள்‌ -அடைந்தவளாகிய தலைவியின்‌,
கண்ணின்‌ கடை திறந்து – கடைக் கண்‌ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில்‌ விலங்கின்‌ குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும்‌ – ஓடி வருகின்‌ற,
கொள்ளை வெள்ளம்‌ – மிகுதியான கண்ணீர்‌ வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர்‌ – இரத்தினங்கள்‌ பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்‌?

நெஞ்சமே நம்மாழ்வார்‌ அருள் பெற்ற நம் தலைவியின்‌ கடைக் கண்‌ணில்‌ நின்‌று வடிகின்ற கண்ணீர்‌ வெள்ளமானது நாம் போகும்‌ வழியில்‌ குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம்‌ எப்படிப் பொருள்‌ சம்பாதிக்கப் போவது என்பதாம்‌.-குருகூர்ப் புனிதன்‌ அருளைச் சுமந்தவள்‌ கண்ணீர் வெள்ளமானதால்‌ அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச்‌ செல வழுங்கினான்‌- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும்‌ பிதிரரும் இன்புறார்‌? என்பது விதியாதலால்‌ தானே பொருள்‌ சம்பாதித்து அதனால்‌ அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப்‌ போனமையால்‌ பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம்‌, பயன்‌ நெஞ்சொடு கூறி யாற்றுதல்‌, ஓட்டரும் – ஓட்‌டம் தருமென்பதன்‌ விகாரம்‌.

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே
. 43–

பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மாறன்‌ – நம்மாழ்வார்‌ அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்‌,
வஞ்சி – இம்மாதின்‌, கொங்கைகள்‌-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில்‌ அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்‌கும்‌ – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத்‌ தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால்‌ – கொங்கைப்‌ பெருமனும்‌ இடையின்‌ துவட்சியும்‌ இப்படி யென்றால்‌,
கொந்து – பூங்கொத்‌துக்கள்‌,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும்‌ – தலை மயிரும்‌,
கலையும்‌- இடையிற் கட்டிய சேலையும்‌,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும்‌ – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்‌,
நெஞ்சம்‌ – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது

ஆழ்வார்‌. குருகூரில்‌ இம் மாதின்‌ கொங்கைகள்‌ பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத்‌ தாங்கும்‌ வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில்‌ இவள்‌ குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம்‌ என்‌மனந் துடிக்கின்‌றதே யென்பதாம்‌.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக்‌ கொங்கை’* என்றார்‌ இராமாயணத்திலும்‌. மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள்‌ மேல் வளர்தலால்‌ அடிக்‌ கொண்டன வென்றான்‌, வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால்‌ அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால்‌ வஞ்சி யென்றான்‌. பின்னும்‌ ஆடுதல் நோக்கி ஆற்றாமையால்‌ உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான்‌. பந்தாடுமிடத்திற்‌ புகுந்த தலை மகன்‌ தலைவி பந்தடிப்பதை நோக்கிக்‌ கூறினதாகத்‌ துறை கூறினமையில்‌ இது கிளவியில் அடங்க வில்லை யெனினும்‌ ஒன்றனுள்‌ அடக்க வேண்‌டி யிருத்‌தலால்‌ இருவருமுளவழி யவன் வர வுணர்‌தலின்‌ பாற் படுத்தலாம்‌, மெய்ப்‌பாடு- உவகை, பயன்‌-தலைமகளைச் சார்தல்‌.

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே.
44–

கனவு ஆயினவும்‌- சொற்பன அவஸ்த்தையின்‌ பகுதிகளையும்‌,
துரியமும்‌ ஆயயையும்‌ – துரியாவஸ்தை முதலியவைகளையும்‌,
கடந்து -தாண்டி,
மனம்‌ வாசகங்களை -மநோ வாக்குகளையும்‌,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும்‌ பெயருடையவரும்‌,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால்‌ ஒதாமல்‌ உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்‌,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்‌,
தொலைத்த – போக்கிய,
சினம்‌- கோபத்தை யுடைய,
வாரணத்‌தை -யானை போன்றவரும்‌, குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்‌
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம்‌ – யாம்‌ சரணமாக அடைந்தோம்‌;

கனவு துரியம்‌ முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும்‌ தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும்‌ ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம்‌ சரணமாக வடைந்தோம்‌ என்பதாம்‌-ஆயினவும்‌ என்பதனால்‌ கனவின்‌ முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும்‌ பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும்‌, ஆயவையும்‌ என்பதனால்‌ துரியாதீத அவஸ்‌தையும்‌ கொள்க. அதன்‌ உட்‌ பகுதி பலவாதலால்‌ ஆயவை என்று பன்‌மையாற்‌ கூறினார்‌ ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்‌! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம்‌, சுழுத்தி, துரியம்‌, துரியாதீதம்‌ என்பன-இவற்றின்‌ பொருள்‌ முறையே விழித்திருத்தல்‌, கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல்‌, என்‌பனவாம்‌. மனத்தால்‌ எண்ணுதற்கும்‌ வாயினால் சொல்லுதவற்கும்‌ எட்‌டாத நிலைமை யாராதலால்‌ மன வாசகங்களை வீசிய மாறனென்றார்‌,-“மயர்வற மதி நலம்‌’ அருளப்‌ பெற்றவராதலால்‌ வினவாது உணர்ந்த விரகனென்றார்‌. சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால்‌ வினை தொலைத்த சின வாராணமென்றார்‌. இது ஒரு பொருள் மேல்‌ பல பெயர்‌ வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்‌-தோன்‌றா எழுவாய்‌,

———-

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே
. 45–

அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்‌- வேதங்களால்‌,
செப்பும்‌- சொல்லப்படுகிற,
பேர்‌ ஆயிரம்‌ – திருப் பெயர்கள்‌ ஆயிரங்களாம்‌;
திண்‌ – வலிய,
பெரும்‌ புயம்‌ – பெரிய தோள்களும்‌, ஆயிரம்‌-ஆயிரங்களாம்‌;
துளவம்‌ பெய்‌- திருத் துழாய வைத்துத்‌ தொடுத்த,
தார்‌- மாலை,
ஆர்‌ – பொருந்திய,
முடி – திரு முடிகள்‌,
ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌; (அப்படி யெல்லாம்‌ ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன்‌ – நம்மாழ்வார்‌,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம்‌ போன்ற பாடல்‌கள்‌, ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌ : (ஆதலால்‌;) பெருஞ்‌ செல்வர்க்கு – பெரிய அனுபோகப்‌ பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப்‌ பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம்‌ அடையும்‌ -என்றவாறு –

மாயோனுக்குத் திருப் பெயர்கள்‌ ஆயிரம்‌ ; தோள்களுமாயிரம்‌ ;முடிகளும்‌ ஆயிரம்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ பாடல்களுமாயிரம்‌ ;ஆதலால்‌ பெருஞ்‌ செல்வரை யடையப்‌ பெறாதவை யுமுண்டோ ?? எல்‌லாம்‌ அடையுமென்பதாம்‌, உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால்‌ ஸகஸ்ரநாமமென்னு நூலைக்‌ கூற வந்தவர் அதன்‌ தயிழ்‌ மொழியாகிய பேராயிரமென்றார்‌, புயமாயிரம்‌, முடியாயிரம்‌- இவற்றிலுள்ள ஆயிரங்கள்‌ மிகுதிப்‌ பொருளன-திண்‌ பெரும்‌ புயம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌. இதன்‌ முதலடி. வேற்றுப்‌ பொருள் வைப்பணி –

———–

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே
. 46–

பொருள் – அகப்! புறப்‌ பொருள்‌. ்‌
திணை-நெய்தல்‌.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக்‌ கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .

முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்‌,
சினையும்‌ – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்‌,
மயங்க – வேறுபாடு தோன்றாமல்‌ கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும்‌ – கோடுகளுடைய சங்கும்‌,
அன்னமும்‌: அன்னப்‌ பறயையும்‌,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம்‌ பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச்‌ சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின்‌ நடுவிலே சென்று,
அறுக்கும்‌- அந்த வழக்கைத்‌ தீர்த்து விடுகிற,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த,
எம்‌ பூர்வலன் -எம்‌ இறைவன்‌,
அரி- வண்டுகள்‌,
வளை- வளைந்து மொய்க்கப்‌ பெற்ற,
பொன்‌ -பொன்‌ போன்ற,
மகிழ்‌ – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக்‌ காலத்தில்‌ வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல்‌ – கொடுத்தருளுவானோ ?

குருகூரிலிருக்கும்‌ எம்‌ தலைவன்‌ ௮ந்திச்‌ காலத்தில்‌ வந்து எம்‌ தலைவிக்குத்‌ தன்‌ மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்‌.-முத்தும்‌ சினையும்‌ வேற்றுமை தெரியாமல்‌ ஒரு தன்மையா யிருக்கக்‌ கண்டு மாறுபாடாய்‌ ஒன்‌றனை ஒன்று எனது எனது என்று முத்தைப்‌ பெற்ற சங்கும் சினையைப்‌ பெற்ற அன்னமும்‌ வாது கூறலும்‌ இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும்‌ நாடெனவே இரண்டு அரசர்‌ தம்முள்‌ மாறுபட்டுப்‌ போர்‌ தொடங்க எத்தனித்த பொழுது இடையில்‌ இத் தலைவன்‌ இருவரையும்‌ சமாதானப் படுத்த வேண்டித்‌ தூதிற்குக்‌ சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற்‌ கூறியது காண்க, ”ஓதலுர்‌ தூதும் உயர்ந்தோர்‌ மேன *என்‌றமையால்‌ அரசர்க்குத்‌ தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற்‌ குரியதனால்‌ தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்‌; ஆகவே இங்குக்‌ காமக் கிழத்தியே மாலை வேண்டற்‌ குரியவளாவாள்‌,கிளவித் தலைவன்‌ மாலையைச்‌ சுட்டிக்‌ கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால்‌ திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள்‌ – சேரிப் பரத்தையின்‌ மசளாகித்‌ தலைவனைத்‌ தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும்‌ விரும்பா நிலையி லிருப்பவளென்க

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

———–

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே.
47–

பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்‌.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன்‌ நீடலில் , காம மிக்க கழிபடர்‌ கிளவி ,

எம்‌- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின்‌ தலைவரான நம்‌மாழ்வார்க் குரிய,
துறை நீர்‌ பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்‌,
கரை துடைக்கும்‌ – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும்‌ துடைத்து – தாம் சொல்‌லும்‌ வார்த்தைகளில்‌ பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்‌- அயலார்‌ கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும்‌ இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்‌,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல்‌ – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர்‌ – எம்‌ தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்‌ற வழியை, துடையேல்‌ – அழித்து விடாதே கொள்‌;

கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின்‌ சுவட்டைத் துடைக்‌காதே என்பதாம்‌–கைக்கிளையில்‌ தலைவனை நோக்கியவுடன்‌ தனக்குண்‌டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால்‌ புரை துடைத்தென்றாள்‌-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன்‌ என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள்‌ பொய்யுந் துடைத்தென்றாள்‌-பிரிந்தால்‌ தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப்‌ பிறர் கண்‌டால்‌ பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப்‌ பிறர் புகலமுரை துடைத்தென்றாள்‌. ஊசல்‌ -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல்‌ இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின்‌ தலைவன்‌ யாதேனும்‌ ஒரு காரியத்தின்‌ மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்‌-அங்கனம் பிரிந்த தலைவன்‌ குறித்த நாளில்‌ வாராமல்‌ தாமதித்ததனால்‌ தலைவி கடலை நோக்கிப்‌ புலம்புவது துறையின்‌ கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர்‌ நேமி நெடும் திண்டேர்‌,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்‌ ‘என்றார் பிறரும்‌-கை கோள்‌ – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம்‌ -எதிர் காலம்‌, மெய்ப்‌பாடு- அழுகை. பயன்‌ – -கடலொடு புலம்பி யாற்றுதல்‌.

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-

———-

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே
. 48–

பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்‌
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்

நங்காய்‌- பெண்ணே !
படர்‌ – துன்பத்தைச் செய்கின்‌ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம்‌ – ஆகாயமெங்கும்‌,
இருள்கின்‌றதே – இருள் மூடுகின்‌றதே ; இரண்டு கவடு இற – தலையில்‌
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும்‌ ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர்‌ – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல்‌ ஓடிப்‌ போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம்‌ – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர்‌ -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள்‌ நிமித்‌தமாக, ஒன்றும்‌- வருமோ?

நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்‌கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம்‌. பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால்‌ ஆசையை யானையாக உருவகப் படுத்கினார்‌, இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும்‌ அழிபட எனவுமாம்‌, சுற்றத்தை நீங்காமல்‌ பிணித் தலால்‌ அன்பைத் தளை யென்றார்‌. சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல்‌ யானைக்கியல் பாதலால்‌ ஆழ்வார்‌ பாடல்‌ – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார்‌. அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால்‌ ஆழ்வாரைக்‌ கொலை யானையாகக் கூறினார்‌ -எனவே இத் துறை முழுதும்‌ உருவகமாகச்‌ கூறினமையால்‌ முற்றுருவகமாயிற்று,-இரங்கலால்‌ திணை நெய்தலாயிற்று,இருவரையும்‌ மணஞ்செய்விக்க எண்‌ணிய தோழி அவ் விருவரையும்‌ குறியிடத்துச் சேர்ப்பியாமல்‌ தந்திரஞ் செய்தலால்‌ தலைவன் புலந்து அப்பால்‌ போதலும்‌ மற்றையோர் கூற்று நிகழ்‌தலின்‌ ஒரு சார் பகற் குறியாயிற்று.

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

————-

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே
. 49–

இரவி அது தான்‌ – குரியனானது.
பொருள்‌ ஆய்‌ பரந்த -காணும்‌ பொருளாகி,
பொது நிற்றலின்‌ – பொதுவாய்‌ நிற்றலினால்‌,
இருள்‌ ஆய்‌ பரந்த – இருள்‌ மிகுத்துப்‌ பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்‌,
விளக்கும்‌ – அவ விருளைப்‌ போக்கி விளங்கச்‌ செய்யும்‌ ;
அது போல்‌ – ௮தனைப் போல,
மருளாய்‌ – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்‌- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம்‌ நீங்கப் பெற்ற
கோன்‌ மாறன்‌ – எங்கள்‌ தலைவரும்‌ மாறனென்னும்‌ பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால்‌ – கருணையினால்‌,
சமயம்‌ எல்லாம்‌- எல்லாச் சமயமும்‌,
பரன்‌ உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.

சூரியன்‌ தான்‌ பொதுவாய்‌ நின்று உலகத்தின்‌ இருளைப் போக்கிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌; அதே போல நம்மாழ்வார்‌ கருணை யானது எல்லாச்‌ சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப்‌ பொருளைத் தெரிவித்தலால்‌ எல்லாரும்‌ நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம்‌. எல்விதத்தாலும்‌ நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப்‌ பரந்த மயக்கென்றார்‌. பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால்‌ துயக்கற்ற மாறனென்றார்‌. விளக்கும்‌-மிகவும்‌- விரித்தல்‌ விகாரம்‌. அது – பகுதிப்‌ பொருள்‌ விகுதி, தான்‌-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்‌- தொகுதி யொருமை யாதலின்‌ ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

———-

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே
. 50–

மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம்‌ புரிவோரை,
செறிவேன்‌ என – யான்‌ அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்‌,
செய்தாரை இல்லா-ஒருவராலும்‌ செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம்‌ – வேதத்தில்‌,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன்‌ – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர்‌ நிலத்தை – திருக்குருகூரென்னும்‌ திவ்விய தேசத்‌தை,
பிறிவேன்‌ எனவும்‌ – நான்‌ பிரிந்து போவேனென்றும்‌,
எண்ணாது-நினையாமல்‌,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப்‌ பெறச்‌ செய்தனை யாதலால்‌,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன்‌ – வணங்குகின்றேன்‌ ;

ஆகம வாதியரை நான்‌ சேர்வேனென்று நினையாமலும்‌ ஆழ்வார்‌ குருகூரைப்‌ பிரிவேனென்‌று எண்ணாமலும்‌ எனக்கு மோஷம் அடையச்‌ செய்தனை யாதலால்‌ ௮றிவே ! உனைத்‌ தொழுதே னென்பதாம்‌, மற்றை யாகம மென்றதனால்‌ அங்கம் , பூர்வம்‌, பகுசுருதி’ என்கின்‌ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம்‌ அனாதி யாதவால்‌ செய்தாரையில்லா மறை யென்றார்‌, நின்ற நிலை- நாராயணனுக்‌கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன்‌, பிறி- பகுதி,

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

———

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே
. 51–

குறும்பு ஆக்கிய -பெரியோரால்‌ இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம்‌ வெகுளி மயக்கம்‌’ என்னும்‌ மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன்‌ -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்‌,
பிறர் பால்‌ – அன்னியரிடத்‌தில்‌,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்‌,
வினை – வினையானது.
கொடு போய்‌ – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும்‌ – தேவர்களுக்‌கும்‌,
ஏற விட்டான்‌ -மேலாகச் செய்தருளிவிட்டார்‌ ; (ஆதாலால்‌), பெறும்‌ பாக்கியம்‌ உள்ள போதும்‌ -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்‌,
பிழைப்பும்‌ – அதற்கு ஒரு கெடுதியும்‌, உண்டே-உண்டாமோ? [இல்லை.].

குருகூர்‌ நம்மாழ்வார்‌ மெலிகின்றேனும்‌ தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால்‌ ஒருவர்‌ பெறக் கூடிய செல்‌வமுள்ள காலத்‌தில்‌ அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம்‌. பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும்‌ மறுமைக்குப்‌ பயன் படாமையால் வெறும் பா என்றார்‌. எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார்‌. தீ வினையில்‌ தனக்கு ஒத்தவரில்லை யென்பார்‌.
தமியேனென்றார்‌. அமரர்‌ – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால்‌ அமரெனப் பட்டார்‌. காமம்‌ -வேறொரு பொருளின் மேல் செல்லும்‌ பற்றுள்ளம்‌, வெகுளி-கோபம்‌, மயக்கம்‌- ஒன்றனை வேறொன்றாகக்‌ க௫துதல்‌.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்‌றார்‌. போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப்‌ பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்‌-அமரர்க்கும்‌ – ஜந்தனுருபு மயக்கம்‌; எல்லைப் பொருளது, மன்‌ -எழுவாய்‌,”விட்டான்‌ – பயனிலை, இதன்‌ முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

——–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே.
52–

எம்மை- எங்களை,
உள்ளும்‌ சுற்றும்‌ – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர்‌ – மிக்க.
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய விரண்டும்‌,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்‌- அவைகளழியும் படியாகப்‌.
பார்கின்‌ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்‌- -திருக் குருகூரென்னும் பதியில்‌,
எம் பிரான்‌ – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்‌வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்‌,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில்‌ — ஒரே விட்டினுள், உறைவார்க்கும்‌ – வசிக்கின்‌ எங்களுக்கும்‌,
உண்டு- உண்டாகும்‌) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர்‌ அருகூர்‌- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்‌பார்கும்‌,
அருகுஇல்‌ – அவர் விட்டின்‌ சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்‌க்கும்‌,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;

எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்‌ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர்‌ அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்‌கும்‌ அரியதொரு காரியமில்லை என்பதாம்‌. உண்டே, ஏ-தேற்றம்‌. உள்‌ளும்‌, உம்‌- இறந்த தழுவிய வெச்சம்‌, இறப்பு ஆர்க்கும்‌ என்று பிரித்‌து
இரத்தலைச் செய்யும்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌, அவ் வூர்‌ – அடியாரிருக்கும்‌ ஊரென்பதே பொருந்திய வுரை,

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-

——————–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே
. 53–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால்‌ வந்த வருத்த முரைத்தல்‌.

அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும்‌ – அன்றிப் பறவைகளையும்‌,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன்‌ – தாயோடு, பின்றாத வண்ணம்‌ எல்லாம்‌ -மாறுபடாத வகை யெல்‌லாம்‌,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம்‌ – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம்‌ இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்‌?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்‌- நீக்கினவராகிய,
குருகைப் பிரான்‌ -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்‌றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்‌,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;

தலைவனைப்‌ பிரிந்த தலைவிக்கு அன்‌றில் கத்தற வோசை செவியிற்‌ பட்டால்‌ விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப்‌ படுத்தி என்றார்‌. தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம்‌ தலைவனிடத்தே செல்லுமாதலால்‌ அப்பொழுது அருகிலிருந்த தாய்‌ கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன்‌ விரோதப் படுத்தி என்றார்‌. பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால்‌ அதனையும்‌ விரோதித்து என்றார்‌. ௮ன்றுதல்‌ – விரோதித்தல்‌; ௮ன்றுவித்‌து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர்‌, மகிழே, ஏ-தேற்றம்‌,-அன்றி. எதிர்மறை வினை யெசசம்‌. வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்‌.

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே
. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்‌ற வித்‌துவான்களுள்‌ சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத்‌ துறந்த முனிவர்களுக்கெல்லாம்‌,
இன்‌ – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்‌-௮லை வீசுகின்‌ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர்‌ – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர்‌ -திருக் குருகூரிலுள்ள,
மறையோர்‌ – அந்தணர்கள்‌,
பெற்ற- ௮டையப்‌ பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்‌றவரே !
‘இவன்‌-இந்தக் கம்பன்‌,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்‌புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்‌று
உள்ளம் தேறேன்‌ -நான் மனத்தில் தெளிய மாட்டேன்‌.’
எனல்‌ – என்‌று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்‌- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்

ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்‌றும்‌ இவனைத் தெளிய மாட்டேனென்றும்‌ சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம்‌. எல்லாரிலும்‌ சிறந்தமை பற்றி ஏறென்றார்‌; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார்‌ ; பிறர்‌ கவியின்‌ ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள்‌ செய்தமையால்‌ வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார்‌. இம் மூன்றும்‌ உவமை யாகு பெயர்‌, எனல்‌ – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும்‌ – இது தொழிற் பெயராய்த் தேற்றப்‌ பொருள் பட்டு நிற்கும் சொல்-

——

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே
. 55–

பெரும்‌ – பெரிய,
தண்‌ – நீர் வளமிக்க ,
குருகூர்‌ – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென்‌ – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும்‌ – தமிழ் மொழிக்கும்‌,
இயற்கும்‌ – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்‌,
இசைக்கும்‌ – இசைத் தமிழ்க்கும்‌,
சிகா மணியே -சிரோ ரத்தினம்‌ போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்‌
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்‌-உயர்ரந்த,
நாற் காவியும்‌-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்‌,
பின்னை-கடைசித்தரத்தில்‌,
உரைக்கப் பெறுவது அல்லால்‌ – சொல்லத் தக்கதே யல்லாமல்‌,
உன்னை உரைத்து – முதலில்‌ உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர்‌ – வேறொருவர்‌,
உளரோ -இருக்கிறார்களோ ?

குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால்‌ பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால்‌ உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும்‌ அப்படி யார் இருக்கிறார்கள்‌ ? ஒருவருமில்லையே யென்பதாம்‌. நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம்‌, புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம்‌ ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல்‌ சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில்‌ கொண்டிருத்தலால்‌ ஐயுரை யென்றார்‌, ஆழ்வார்‌ பிரபந்தத்தில்‌ இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும்‌ அப் பிரபந்தம்‌ பண்‌ணோடு’ பாட அமைந்திருத்தலாலும்‌ அவ் விடயங்களைச் கொண்டு இயற்‌கும்‌ இசைக்கும்‌ சிகாமணி யென்றார்‌,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-

———

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே.
56–

மறம்‌ – பல்வரிக் கூத்தில்‌ ஒன்று ; ௮து தான்‌ மறவரின்‌ மகளை விரும்‌பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ்‌ நூல்களிற்‌ காண்க,-பல்‌ வரிக்‌ கூத்திற்‌ சில வுறுப்புச்கள்‌ கலம்பக முதலியவற்றிற்‌ காணலாம்‌.

சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால்‌ – தமிழ்ப்‌ பாடல்களால்‌,
பணித்தான்‌ – பாடி யருளினவரும்‌,
எம்‌ – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான்‌ – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரின்‌,
பணி அன்றெனில்‌ – கட்டளை யில்லை யென்றால்‌, (எம்‌ பெண்ணை விரும்பிய), மணித்தார்‌ – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன்‌ தன்‌-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன்‌ – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய்‌ வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்‌,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன்‌ தலையை,
சிதைமின்‌ – வெட்டி யெறியுங்கள்‌ ;
எம் பாவையை – எமது பாவை போல்‌வாளாகிய பெண்ணை,
கொள்ளும்‌ கொள்ளும்‌- நன்றாகச்‌ கொள்வானே போலும்‌

வாயைத் திறந்திருந்தால்‌ – பேரிரைச்சலிடு வானாதலின்‌ முதலில்‌ வாயை அடையுங்களென்றதாம்‌. ஆழ்வாருக்கு அடிமை யென்‌றறிந் திருந்தும்‌ பெண் கேட்க வந்தது குற்றமாதலின்‌ ஆசென்றதாம்‌; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும்‌ வந்த, தூதரைசக் கொன்றுளார்கள்‌ யாவரே தொல்லை நல்லோய்‌” என்‌றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின்‌ அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால்‌ வதைக்க அமையுமென்க . கொள்ளும்‌ கொள்ளும்‌ – வெகுளி பற்‌றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர்‌ : இது கொல்லி மலையில்‌ தேவரும்‌ முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்‌திய ௮சுரரை மயக்க வேண்டித்‌ தேவ தச்சனால்‌ யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம்‌ ; இது அவ் வசுரரைக் கண்டால்‌ சிரித்‌து மயக்கிக் கொல்லுவது –

————

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே.
57–

திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ்‌ சுவை யுள்ள கனி போன்றதும்‌, பசுங்கற்பகத்தின்‌ – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்‌,
பொருகடல்‌ – மோதுன்ற கடலில்‌ நின்றும்‌,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்‌,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள்‌ – நால் வகைப்பொருளையும்‌,
சுரக்கும்‌ – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம்‌ கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம்‌ சுண்டு -முன்னமே பாடாத குற்‌றத்தை யறிந்து,
மற்றை நா வலர்‌ –இனி வேறுள்ள புலவர்கள்‌,
என்‌ -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும்‌ – பிடங்கினாலும்‌,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]

திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர்‌ எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும்‌ அது நல்லதே யாகுமென்பதாம்‌, எங்கும்‌ பரவி நிற்பதென்னும்‌ பொருளும் தோன்றப் பா வென்றார்‌, சுவை யறிவார்க்குச்‌ சுவை மிக்கிருத்தலினால்‌ பழமென்றார்‌. கேட்கக் குளிர்ந்திருத்‌தலின்‌ கற்பக மலரைக் கூறினார்‌. கடலில் தோன்றிய அமுதம்‌ எடுக்கக்‌ குறைந்தும்‌ உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால்‌ போதாரவமுதென்றார்‌. நால் வகைப் பொருள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு-நாவினால்‌ வருணித்துச்‌ சொல்லுஞ்‌ சொல்லில்‌ வல்லவராதலின்‌ நாவலர் எனப்பட்‌டார்‌, நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல்‌ நேர்‌. அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல்‌ ஓன்றனைக் கொண்டது.-

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

——-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே
. 58–

நாவல்‌ ௮ம்‌ தீவில்‌ – அழகிய ஜம்புத்தீவில்‌,
கவிகள்‌ எல்‌லாம்‌ – பிறர் பாடிய பாடல்களெல்லாம்‌,
சில நாள்‌ கழிய – சில நாட்கள்‌ சென்ற பின்‌, பூ- மலர்‌,
வலம்‌ – மணம் முதலிய வன்மைகள்‌,
தீவது போல்வ அல்லால்‌ – கெட்டழித்தல்‌ போல்வன வாகிக்‌ கெடுமே யல்லாமல்‌,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ அவதரித்த,
புலவன்‌ – புலவரும்‌,
தீங்கு -உயிர்களின்‌ குற்றங்களை,
கேவலம்‌ – முழுவதும்‌,
அறுப்பான்‌ – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல்‌ – திருவாய்மொழிப்‌ பாடல்களைப் போல,
எங்கும் போய்‌ – எவ்விடத்‌தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்‌;
கூவல்‌ – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும்‌ – அழகிய இனிய நீரானதும்‌,
வெள்ளம்‌ – பெரு வெள்ளத்தை ,
கோள்‌ இழைத்துக் கொள்‌ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]

உலகத்தில்‌ பிறர் பாடல்கள்‌ சிலகாலத்தில்‌ கெட்டழிந்து போகுமே யல்லாமல்‌ நம்மாழ்வார்‌ பாடல்கள் போல எங்கும்‌ போய்ப் பரவாவாம்‌ ;கிணற்று நீர்‌ பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்‌த இயையுமோ -இயைதாதென்பதாம்‌, பூ.-மலர்ந்த வுடன்‌ மணம்‌ வீசிப் பின்‌ பூ இல்லாமற்‌ போவது போலப்‌ பிறர் கவிகள்‌ பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத்‌ தோன்றி பின்பு பயன்படாதெனக்‌ கொள்க,. நாவலம்‌, அம் -சாரியையுமாம்‌, தீவது -தொழிற் பெயர்‌, அறுப்பான்‌ -வினைப் பெயர்‌,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில்‌ வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி

கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே
. 59–

இழைத்தார்‌ – செய்தவர்‌,
ஒருவரும்‌ இல்‌லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின்‌ பொருள்களை,
இன் தமிழால்‌ – இனிய தமிழ்‌ மொழியினாலே,
குழைத்தார்‌ – செய்தருளியவரும்‌,
குமரித் துறைவர்‌ – கன்னியா குமரி யென்னும்‌ தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில்‌ – குருகூரில்‌,
கூட்டம்‌ கொண்டார்‌ – அடியார்‌ கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌,
வானின்‌ – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்‌-பெரிய, கைகளால்‌—-,
என்‌னை அழைத்தார்‌-என்னை வா வென்றழைத்தார்‌ ; (அங்கனம்‌ அழைத்தன்றி),
அறிவும்‌ தந்தார்‌ – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும்‌ கொடுத்தார்‌ ; (ஆதலால்‌ யான்‌),
அங்கும்‌ போய்‌ – அவ்விடத்துஞ்‌ சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட்‌ செய்வன்‌-அடிமைத்‌ தொழில்‌ செய்வேன்‌ ;

வேதப்‌ பொருளைத்‌ தமிழில்‌ விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர்‌ நம்மாழ்வார்‌ பரமபதத்தில் இருந்து தடக் கைகளால்‌ என்னை வா வென்று அழைத்தாராதலால்‌ நான்‌ அங்கும்‌ போய்‌ அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்‌.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம்‌ கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம்‌. அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின்‌ இன்‌ தமிழென்றார்‌. கைமாறு கருதா அருள்‌ செய்‌யுங்‌ கைகளாதலால்‌ மேகத்தின்‌ தன்மை வென்றார்‌, அங்கும்‌, உம்‌.இங்குத் துதித்த தன்றியும்‌ என இறந்தது தழுவிய வெச்சப்‌ பொருளது,

——–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே.
60–

தண்‌ – குளிர்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள்‌ பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன்‌ என்பேன்‌ – நம்மாழ்வாரென்‌று கூறினேன்‌ ;
ஆள்‌ – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல்‌ ஆவது எல்லாம்‌ – என்னாற்‌ செய்யக் கடவதெல்லாம்‌ செய்து.
அடி அடைந்தேன்‌ – அவர்‌ திருவடிகளை யடைந்தேன்‌ ;
அது அன்றி- அதுவல்லாமல்‌,
செய்‌ய தாமரை தாள்‌ – செந்தாமரை போன்ற அவர்‌ திருவடிகளை,
என்தலை ஏற்றனன்‌ – என்‌ தலையில்‌ சூடிக் கொண்டேன்‌ ;
இனி – இனிமேல்‌,
நாள்‌ குறித்து – என்‌ வாழ் நாளை உத்தேசித்து,
என்‌ தன்‌ ஆர்‌ உயிர்‌ – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்‌,
கோள்‌ செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];

யான்‌ குருகூரில்‌ நம்மாழ்வாரைத்‌ தியானித்து அடிமைத்‌ தொழில்‌ செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச்‌ சிரத்திலணிந்து கொண்‌டேன்‌ ; இனி யமன்‌ என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம்‌. தாளாகிய தாமரை யென்று நேரினும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால்‌ ஆட்‌ செய்யலாலவது
எல்லாஞ்‌ செய்தேன் என்றார்‌. அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம்‌, உண்டே,-ஏ- எதிர்மறைப்‌ பொருள்‌ தோன்றி நின்றது,

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-

———-

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே.
61–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்

கூறப்படா- ஒருவராலுஞ்‌ சொல்லப்படாத,
மறையின்‌ பொருள்‌ – வேதத்தின்‌ பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால்‌ வெளிப் படுத்தி, குவலையத்தோர்‌ – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்‌படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன்‌ – நம்‌மாழ்வருடைய,
மகிழ்‌ அலங்கல்‌ – மகிழ மலர்‌ மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்‌ற காலத்தில்‌,
அன்றில்‌ நஞ்சம்‌௮து -௮ன்‌றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்‌- அமுதாக விருக்கும்‌;
மன்றல்‌ நாறும்‌ – மணம்‌ வீசுகின்ற,
தண்‌ தென்றலை – குளிர்ந்த தென்றல்‌ காற்றினையும்‌,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்‌டேன்‌ – இனி யான்‌ வாழ மாட்டேன்‌ ;

கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில்‌ ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால்‌ ஓசையை நஞ்‌சென்றார்‌-தீண்டப்‌ பெற்ற வுடன்‌ தலைக்கேறும்‌ விடம் போல அன்றிலோசை கேட்டவுடன்‌ விரகம் தலைக்கேறுதலால்‌ நஞ்சமென்றலுமாகும்‌.
கெட்டேன்‌ -இனி யான்‌ உண்ணா லும்‌ உண்ணேன் வாழலும்‌ வாழேன்‌ ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்‌” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும்‌ அமையுமேல் கொள்க-

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

——-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே
. 62–

தென்‌ தலை தோன்றும்‌ – இவ் வுலகத்தின்‌ தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப்‌ பொருளாயும்‌,
என்‌ தீ வினையை – என்‌ தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்‌- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்‌,
நிறை – எல்லா வளங்களும்‌ நிறைந் துள்ள, குருகூர்‌ – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன்‌ தலை- நம்மாழ்கார்‌ வாக்கில்‌,
தோன்றும்‌ – உண்டாகுகின்ற,
மதுரம்‌ கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்‌மொழிப் பாடல்களை,
மனத்துள்‌ – தங்கள்‌ மனத்திலே,
வைப்பார்‌- வைத்‌துக் கொண்டிருப்பவர்களே,
என்‌ தலை- என்னுடைய சிரத்தின்‌ மேலே,
தோன்றும்‌ – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள்‌ – எமது தலைவ ராவார்கள்‌;( அவர்களே),என்‌ நாவுக்கு-என்னுடைய நாவினால்‌ துதிப்பதற்கு, உரியவர்‌ – தக்கவராவார்‌ )

திருக் குருகூர்‌ நம்மாழ்கார்‌ பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள்‌ வைப்பவரே என்னால்‌ வணங்குவதற்கும்‌ துதிப்பதற்‌கும்‌ உரியவராவார்‌ என்பதாம்‌, தத்‌துவப்‌ பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின்‌ உபநிடச மென்றார்‌. தருக்க நியாயத்தால்‌ பரத்துவ நிர்‌ணயஞ்‌ செய்தலால்‌ நியாய நெறி யென்றார்‌.-வேதம் போலாகாது எல்‌லாச் சாதியாரும்‌ படித்த்துச் சுவை காணும் தன்மையினால்‌ மதுரகவி என்‌றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல்‌ விகாரம்‌ பெற்றது. பிரான்‌ – என்னும்‌ னகர ஈறே யுடைமையின்‌ (கள்‌’ என்ற விகுதி பெற்றது.

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே
. 63–

பிறர்‌ – அயலாருடைய,
புல்‌ கவி- புன்மையாகிய பாடல்‌கள்‌,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப்‌ பகுக்கப் படுகின்‌ற ,
கோடலின்‌ -வெண் காந்தள்‌ மலரினின்றும்‌,
உந்து – வீசுகின்ற,
கந்தம்‌ என – மணத்தைப் போல,
ஒன்றும்‌ இன்றி- சொல்‌ பொருள்‌ அணி முதலிய யாதொன்றுமில்லாமல்‌,
விரிக்குந் தொறும்‌ – பதங்களைப்‌ பிரித்தப்‌ பார்க்‌கும்‌ போதெல்லாம்‌,
வெறும்‌ பாழாய் விடும்‌- வீணே பயனற்றதாய்ப்‌ போய் விடும்‌;
மெய்‌ – கடவளின்‌ உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச்‌ சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்‌கள்‌,
புவியில்‌ – பூமியில்‌,
தோண்ட – பறிக்கப்‌ பறிக்க,
சுரத்தலின்‌ -தண்ணீரூறுதலால்‌,
நுண் மணல்‌ – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்‌கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்‌கும்‌- ஒத்திருக்கும்‌;

பிறர்கள்‌ பாடும்‌ பாடல்களெல்லாம்‌ மணமில்லாத கார்த்திகைப்‌ பூவை ஒத்திருக்கும்‌; நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ ஆராயும் தோறுஞ்‌ சுவை ஊருதலால்‌ தோண்டுந் தோறுஞ்‌ சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம்‌. காந்தள்‌ – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில்‌ மலர்தலால்‌ இப் பெயர்‌ பெற்றதென்பர்‌ ; கார்த்திகை மலர்‌ பார்‌வைக்கு அழகாயிருத்தல்‌ போலப்‌ பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும்‌ ௮க்‌ கார்த்திகை மலர்‌ நறுமண மில்லாதது போல அப்‌ பிறர்‌ கவியும்‌ சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால்‌ பயன ற்றதாய்‌ விடுமென்றார்‌, கந்தம் மென, மகரம்‌ – விரித்தல்‌ விகாரம்‌ பெற்றது. தொறும்‌ இங்குத்‌ தொழிற்‌ பயில்வுப்‌ பொருளைத்‌ தந்தது. பாழாய் விடும்‌, விடு-துணிவுப் பொருள்‌ விகுதி, சுரத்தலின்‌ – மூன்றாம்‌ வேற்றுமை ஏதுப் பொருள்‌,

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-

——–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே.
64–

திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும்‌ தாளில்‌ – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம்‌ தேன்‌ – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்‌களிலிருக்கின்ற,) கயல்‌ குதிப்ப- கெண்டை மீன்கள்‌ துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும்‌ – தேன்‌ பரவுகின்ற
பழன வயல்‌ – மிக்க வயல்கள்‌ சூழ்ந்த,
குருகூர்‌ – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌,
வளம்‌ – மகிமைகளை,
பாடுமின்‌ -பாடுங்கள்‌ ;(அப்படிப்‌ பாடினீர்களாயின்‌),
திருவும்‌ சுரக்கும்‌ -செல்வமும்‌ பெருகும்‌ ;
வறுமையும்‌ தீரும்‌ – தரித்திரமும்‌ நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்‌,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்‌- மறைந்து போகும்‌;
மேன்மையும்‌ காணும்‌ – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்‌,

ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌ மகிமையைப்‌ பாடுங்கள்‌ ; செல்வமுண்டாகும்‌ -வறுமை நீங்கும்‌; இருவினைப் பற்றொழியும்‌; மேன்மை யுண்டாகு மென்பதாம்‌. திரக்குதல்‌ – தெறித்து விழுதல்‌. கயல்‌ குதித்தலால்‌ தேன்‌ உடைந்து வயல்களிற்‌ பாவுதல்‌ போலக் குருகூர்‌ மகிமையைக் கூறுதலால்‌ நம்மாழ்வாரின்‌ கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப்‌ பரவும்‌ என்பது தொகை மொழியின்‌ கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள்‌ எண்ணுப்‌ பொருளன,. குதிப்ப- காரணப்‌ பொருளில்‌ வந்த செயவெனெச்‌ச வாய்பாடு, பழன வயல்‌ – இருபெயரொட்டு,

———-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே
. 65–

பாடும்‌ – எப் பக்கங்களிலும்‌,
கறங்கும்‌ சிறை – சுழலுகின்‌ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்‌,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்‌,
பை தாள்‌ – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும்‌ -நெய்‌தல்‌ மலரின்‌ இதழ்களும் (அவ் வண்டுகள்‌ வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்‌ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான்‌ – மிக்க உபகாரமுடையவராய்‌,
இ -இந்த –
சுழல்‌ பிறவியோடும்‌ – சுழன்று வருகிற பிறப்பினுடன்‌,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும்‌ – பரம பதத்தையும்‌,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும்‌ – எந்த நாளும் ,
விடகிலம்‌- யாம்‌ கை விட மாட்‌டோம்‌);

குருகூரிலவதரித்த மக்களின்‌ நிலை யற்ற வாழ்வைப்‌ போக்கி மோட்ச பதத்தினைத்‌ திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம்‌ எந் நாளும்‌ விட மாட்டோம்‌ என்பதாம்‌. வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர்‌ சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல்‌ போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்‌போடு யாவர்‌ பாடுகிறார்களோ ௮வர்களைப்‌ பரம பதமானது தட்டாமல்‌ ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின்‌ கருத் தென்க-சிலர்‌ இதனையே உள்ளுறை யுவமை என்பர்‌, குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்‌,-தந்தான்‌ – வினைப் பெயர்‌, விடகிலம்‌, ௮, கு – சாரியைகள்‌, இல்‌ – எதிர் மறை இடை நிலை-

———–

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.
66–

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர்‌ கண்ணி மாலை யம்‌ பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்‌.

வெம்‌ – கொடிய,
விடம்‌ -நஞ்சு போன்ற ,
அந்தகாரம்‌ பாலில்‌- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம்‌ தலைவிக்கு,
இடர்‌ வந்ததென்று- காமத்‌ துன்பஞ்‌ செய்கின்ற சந்திரன்‌ உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்‌-நம்மாழ்வார்‌,
புணர்ந்திலர்‌-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்‌], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்‌து நீங்குதலும்‌,
௮ந்த காரம்‌ பெரும்‌ புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ்‌ சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன்‌ உயிரை-எம்‌ தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன்‌ கொலோ -யமன்‌ தானோ ? அறியேன் -யானறிந்திலேன்‌ ;

கொடிய இருள்‌ பரவிய இரவில்‌ என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப்‌ பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப்‌ பொழுதில்‌ இருள்‌ பரவா நின்றது தான்‌ உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம்‌. விடம்‌ -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர்‌ -சந்திரனுக்கு ஆகு பெயர்‌, ஆல்‌ – அசை, காலன்‌ கொல்‌ – ‘இடைச் சொற்றொடர்‌ ) கொல்‌ – அசை நிலை யிடைச்சொல்‌.-ஓ – ஐயப் பொருளில்‌ வந்த இடைச் சொல்‌, மாலைப்‌ பொழுதின்‌ பின்‌ இருளைப்‌ பார்த்தலும்‌ தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள்‌, வெம்மையை இடர்‌ என்பதனோடு கூட்டுக ., இன்னும்‌ தலைவர்‌ வந்திலாமையில்‌ இருள்‌ பரவுவதைக்‌ காலனோ வென்றாள்‌, பாரங்குசர்‌ – அயல்‌ மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம்‌ போவ்பவர்‌, இங்கும்‌ துன்பஞ்‌ செய்யுங்‌ காமனை யடக்குபவர் என்று எண்ணிப்‌ பராங்குசர் என்றாள்‌. காமன்‌ கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின்‌ துன்பத்தைக் கண்டு பொறாளாய்‌ வெளிப் படையாகப்‌ புணர்ந்‌திலர் என்று கூறினாள்‌. கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறினமையால்‌ அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால்‌ நான்கு மணம்‌ பெற்ற பெருந் திணை யாகாமல்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர்‌ – தீர்க்க சந்தி, மெல்லியல்‌ – பண்புத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த ௮ன்மொழி,

——–

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே.
67–

பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்‌.
துறை–(தலைவிக்குத் தலைவன்‌) தன்பதி யணுமை சாற்றல்‌,

சுரவாத – அறிவுடையோர்க் கன்‌றிப்‌ பிறருக்குப்‌ பொருள்‌’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள்‌ அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்‌து – எல்லாருக்கும்‌ பொருள்‌ தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்‌,
சொரியும்‌ -கொடுக்கின்ற,
பொருள் பால்‌ – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்‌காமல்‌,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய்‌ – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்‌,
இப் புறம்‌ – இந்தப் பாலை நிலத்தின்‌ எல்லை யானது,
ஓர்‌ சரம் வாதம்‌- ஓர்‌ அம்பு வீழ்ச்சி யளவு தான்‌ ;
அப்புறம்‌-இதற்கு அப்பால்‌,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின்‌ எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்‌;
காண்‌ – நீபார்‌;
ஆதலால்‌, பரவாது – உன்‌ மனத்தை அலைய விடாமல்‌,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்‌,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;

தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன்‌ தன்‌ ஊர்‌ அருகில் இருப்பதனைக்‌ காட்டித்‌ தெரிவித்தனனென்‌க -, இணை – பாலை, கைகோள்‌ – களவு, கூற்று – தலைவன்‌கூற்று, கேட்‌போர்‌ – தலைவி இடம்‌ – முன்னிலை, காலம்‌ – ௭திர் காலம் , எச்சம்‌ -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன்‌ – தலைவியைத் தேற்றல்‌. வேதத்தைப்‌ பசுவாகவும்‌ அதன் பொருளைப்‌ பாலாகவும்‌ அதனைச்‌ சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின்‌ இதுஉருவக வணி. பெண்களிற்‌ சிறந்தமையின்‌ – எல்லாக் கவிகளுள்‌ளும் சிறந்த மாறன்‌ கவியோடு உவமித்தான்‌. இன்னம்‌ எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின்‌ பரவாது கேட்டு என்றான்‌. நெறி முழுதும்‌ இவ் வண்ணமேயாமெனக்‌ கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால்‌ தடம் பணை யுள்ளதனால்‌ பைய நட வென்றான்‌, இடையிலெதிர்த்த சிங்கம்‌ முதலியவற்றை ௮வன்‌ அம்பாலெய்‌ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின்‌ ௮வள்‌ அறிந்த அம்பின்‌ வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான்‌, ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண்‌ என்றான்‌. அப்பால்‌ ஊர் போய்ச்‌ சேரும்‌ வரையில்‌ அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்‌.தடம்பணை -உரிச் சொற்றொடர்‌,

புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

———–

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே.
68–

பொருள் –அகப் புறப்பொருள்‌,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்‌

பனி – விடாமல்‌ மழை பெய்வதை ,
தோய்ந்திடும்‌ – மேற்‌ கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற்‌ செல்கின்ற மேகங்களே!
தண்‌ பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர்‌ – திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம்‌ வடம்‌- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில்‌ – என்‌ கொங்கைகளில்‌, வைக்‌கின்‌றிலர்‌ –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்‌
லாம்‌ – பிற மாலைகளெல்லாவற்றையும்‌,
உடம்பு அணைக்குந் தொறும்‌ –
என்‌ உடம்பில்‌ சேர்த்து ஒற்றிக் கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால்‌ வெந்து போய்‌,
உகும்‌ – உதிர்ந்து விடும்‌ ;
(௮ந்தக் காமத்தீயும்‌.) ஐந்து வெம்‌ பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள்‌, (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில்‌ ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில்‌ கக்கின,
விடம்‌ – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்‌;

மேகங்களே ! குருகூராழ்வார்‌ தம்‌ வகுள மாலையை என்‌ கொங்கைகளில்‌ வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர்‌ கொண்டு வந்து சூட்டு கின்‌ற பிற மாலைகள்‌ காமாக்கினியால்‌ கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக்‌ காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்‌.-அகன்ற நீர் பாய் வயல்களும்‌ குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால்‌ அவர்‌ மாலையும்‌ குளிர்ச்சியைச்‌ செய்யு மென்றாள்‌, உயிர்க்கு நன்மை செய்தலால்‌ தகை வகுளமென்றாள்‌,-பனி – குளிர்ச்சியுமாம்‌. நீங்கள்‌ மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால்‌ பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால்‌ என்பாற்‌ கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர்‌ என்பதனை யடக்கிப்‌ பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள்‌. நீங்கள்‌ இங்கே
பொழிவதனால்‌ பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத்‌ தொடங்கினால்‌ அவர்‌ நம்மைக் கண்டவடன்‌ விரக மேலீட்‌டினால்‌ தாமே என்னிடம்‌ வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம்‌. ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்‌,

பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

———

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே
. 69–

பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப்‌ பொருள் வயிற்‌ பிரிதல்‌,
துறை–தலைவன்‌, மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன்‌ சொல்லல்‌,

மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன்‌ என்‌று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்‌காமல்‌, (நீங்கள்‌),
குருகூர்‌ மெய்யன்‌ -குருகூரிலுள்ள சத்‌துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும்‌ – ஒத்திருக்கின்‌ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என்‌ தலைவியை,
கண்‌ நீரின்‌ துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக்‌ கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம்‌ – என்னை நீங்கள்‌ வருகிற வழியிற் பார்த்ததான வார்‌த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்‌குக-ஆரம்பிப்பீர்களாக ;

மேலோரை முன்னிலை மொழியாற்‌ கூறுதலினும்‌ படர்க்கை மொழியாற்‌ கூறுதல்‌ சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்‌துக் கூறாமல்‌ படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம்‌ வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப்‌ பார்த்து விட்டமையால்‌ இதனை நும்‌ வீட்டில் வந்து கேட்டுக்‌ கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன்‌ என்று எண்ணாது என்று உபசாரம்‌ கூறினான்‌-ஏனைய மாதர்கள் போல்வாளல்‌லள்‌ என்பது தோன்றத்‌ திருவாய் மொழியோடு உவமித்ரான்‌, உங்களுக்கு ௮வள்‌ மறு மொழி கூறத் தொடங்கினால்‌ அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால்‌ சொல்லாளென்றான்‌. அவளைக் கண்டவுடன்‌ என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால்‌ உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும்‌ ஏத முண்டாகுமோ வென்‌றஞ்சி முதலில்‌ மோகத்தை யாற்றிச்‌ சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான்‌, சொல்லிய வுடன்‌ சென்று விட்டால்‌ சோகமடைவளாதலால்‌ மீட்டும்‌ ௮வள்‌ மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்‌டென்றான்‌, பெரு மழை பெய்யத் தொடங்‌கினால்‌ குளிரில்‌ வருந்துவளாதலின்‌ சிறிது துளிகளைத் தூவுக வென்றான்‌. யான்‌ விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான்‌, திணை-முல்லை, கை கோள்‌-
களவு, கூற்று – தலைவன்‌ கூற்‌று. கேட்போர்‌ மேகத்தோடு கூறுவானாய்க்‌ கூறியது , இடம்‌ -முன்னிலை. காலம்‌ – எதிர் காலம்‌. எச்சம்‌- யான்‌ விரைவில்‌ வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம்‌. பயன்‌-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல்‌, பொருள் கோள்‌-யாற்றுகீர்‌. மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம்‌, பாகம்‌ -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர்‌. கண்ணீரின்‌ துளி-பிரிவாற்றாமை யென்னும்‌ மெய்ப்பாடு தோன்ற நின்றது,

மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

———

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே
. 70–

இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன்‌ சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும்‌ முற்கூறிய பல்வரிக்‌ கூத்திலொன்று,

சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்‌றேன்‌ -இப்‌பொழுது உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகின்றேன்‌ அதனைக் கேளுங்கள்‌,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்‌-கூத்தாட எத்தனிக்கின்றாள்‌ ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள்‌ – திரையினுள்‌ளேயே திரும்பிப் போகின்‌றாள்‌ ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள்‌ இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்‌-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்‌,
பிழைப்‌பார்‌ ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள்‌ ?
இந்தப் படங்கு விண்‌டால்‌ – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம்‌ பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்‌- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள்‌ :

சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகேன்‌ கேளுங்கள்‌, பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக்‌ கூத்தாடத் தொடங்குகிறாள்‌, இவளழகு கண்டால்‌ எல்லாரும்‌ மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால்‌ இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம்‌. பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்‌பதன்‌ மரூஉ.

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-

———–

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே
. 71–

பொதியம்‌ – பொதிய மலையானது ,
தரும்‌ – கொடுக்கின்ற
அமுதம்‌ – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார்‌, பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம்‌ என்ன – தமிழில்‌ பதிகங்களென்‌னும் படியாகவும்‌,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்‌,
இ பார்‌ – இந்த உலகத்தை
புரக்கும் – தன்‌ குளிர்ச்சியால்‌ காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில்‌ – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள்‌ என்ன – மாலைகளென்‌னும் படியாகவும்‌,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின்‌ -தமிழ் மொழியில்‌,
௮தியம்‌ தரும்‌ – மிகுதியான பெருமையைத்‌ தருகின்ற,
ஆயிரம்‌’ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்‌– கொடுத்தருளினார்‌ ;

குருகூராழ்வார்‌ பிராமணர்களுக்குத் தமிழெனவும்‌, நான் மறை யென்னவும்‌ மாலை ளென்னவும்‌ ஆயிரம் பாடல்கள் பாடிச்‌ கொடுத்தருளினாரென்பதாம்‌.-பொதிய மலையில்‌ அகத்தியரிடத்தில்‌ பிறந்த தமிழிலக்கணம்‌ உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித்‌ தென்னாட்டை வாழ்விக்கும்‌ சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்‌.-பூசுரர்‌ – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நான்‌கும்‌ நான்கு வேதங்‌கள்‌ போல்‌ கூறப்படுதலால்‌ நான்மறை என்றார்‌. பதிகம்‌ – பத்துப் பாடல்களை யுடைமையின்‌ பதிகமெனப் பட்டது, நினைக்கவும்‌, கூறவும்‌ குளிர்ச்சியைத் தருதலின்‌ மதியை யுவமித்தார்‌. ஒன்றோடொன்று தொடர்புடைமையின்‌ மாலைகளென்றார்‌. பதிகம்‌, அதிசம்‌ என்பன எதுகை நோக்கி, பதியம்‌, .அதியம்‌ என்றாயின. வேதப்‌ பொருளைக்‌ கண்டு மகிழ்பவர் அந்தணராதலால்‌ அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார்‌ என்க,

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-

—————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே
. 72–

பரவும்‌ – எல்லாராலும்‌ துதிக்கப் படுகின்‌ற , குருகூர்‌ -திருக் குருகூரில்‌,
வந்த – அவதரித்த,
கற்பகம்‌ – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்‌,
பொய்ச் சமயப்‌ புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம்‌ பெளத்தமென்னும்‌) புறச் சமயங்களிலுள்ள வித்வான்‌களுக்‌கும்‌,
பூட்சி கண்டீர்‌ -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்‌கள்‌;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள்‌ மாறு பாட்டைப்‌ போக்குவதாகிய,
வல்வாய்‌ – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர்‌ – வாள்‌ போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள்‌ :
மன்‌ – நிலை பெற்ற,
உயிர்‌கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌,
ஆட்சி கண்டீர்‌ – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌ ;
தொண்டர்க்கு – திருமாலின்‌ அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர்‌ – பேரின்பக்‌ கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்‌டீர்‌ – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்‌,

குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர்‌ பொய்‌யான சமயத்தருமேற்‌ கொள்ளத் தகுவார்‌ ;அருகர்க்கு வாள் போன்றவராவார்‌ ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர்‌ : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார்‌ ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்‌.-பிரத்தியஷப் பிரமாணம்‌ ஒன்றே யுடைய லோகாயிதரும்‌ காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும்‌ ஆழ்வார்‌ திருவாய் மொழியின்‌ கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின்‌ அவராற்‌
பூணப்படுவாரென்றார்‌. வஞ்சனை யுடைய ஜைனர்‌ முற்கூறிய இரண்டினோடு ஆகமம்‌, அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும்‌ ஆழ்லார்‌ நூல்‌ அதன்‌ மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின்‌ இதனை வெல்ல முடியாமையால்‌ அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார்‌. தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின்‌ மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத்‌ தரலிற்‌ கற்பகமென்றும்‌ அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத்‌ தொண்டர்க்கே கொடுப்பரென்றும்‌ இங்கனம் இருந்தும்‌ மனத்தால்‌ நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம்‌ -உவமை யாகு பெயர்‌-

————-

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே.
73–

எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்‌கு விற்கவும்‌,
விலை கொள்ளவும்‌ – அந்த விலைப் பொருளைத் தாம்‌ பெற்றுக் கொள்ளவும்‌, உரியான்‌ உரியவரகிய,
மாறன்‌ – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
கவி வெள்‌ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம்‌ – நாம்‌,
நிதம்‌ – தினந்தோறும் ,
கற்றும்‌ – மூலத்தைக் கற்கக் கடவோம்‌; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும்‌ – அதன் பொருளைக் காதில் நன்றாகக்‌ கேட்கக் கடவோம்‌ ; பருகி – குடித்து, களித்தும்‌ – மகிழ்வோம்‌ ; முற்றும்‌ – அந்தப்‌ பிரபந்த முழுவதும்‌, உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும்‌ – ஊற்றிக் கொள்வோம்‌ ; மூழ்கி – அந்த வெள்ளத்தில்‌ அழுங்க,-குடைதும்‌ – ஸ்நாநஞ் செய்வோம்‌ ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்‌துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும்‌ – நிற்போம்‌;
நீந்துதம்‌ – நிலை கொள்ளாத இடங்களில்‌ நீந்திச் செல்வோம்‌;

ஆழ்வார்‌ பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம்‌ ;பிறர் பாற்‌ கேட்போம்‌ ; உண்டு மகிழ்வோம்‌ ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம்‌ ; அதில்‌ ஸ்நாநஞ் செய்வோம்‌ ; நிலை கொண்ட இடத்தில்‌ நிற்போம்‌; நிலை கொள்ளாத விடத்தில்‌ நீந்துவோம்‌ என்பதாம்‌, பருகும் போதெல்லாம்‌ தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார்‌. முழுதுங்‌ கொள்ளுதற்கு எம்‌ அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும்‌ வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார்‌. ஓயாமற்‌ பருக வேண்டியதனால்‌ முகந்துகொடு நிற்றுமென்றார்‌, யாம்‌ அவர்க்கு அடிமையாய் விட்டபடியால்‌ அவர்‌ என்னை விற்கவும்‌ பொருளைப் பெறவுமுரியரென்றார்‌. விற்றல்‌-அடியார்க்கு அடியனாகச் செய்தல்‌.விலை கொள்ளுதல்‌ – அவ்வடியாரையும்‌ தம்மடியாராக்குதல்‌, மாறன்‌ – ஆழ்வார்‌ திருப் பெயர்களுளொன்று.-கற்றும்‌ முதலியவை – தன்மைப்‌ பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும்‌ உருவகஞ்‌ செய்தமையால்‌ இது முற்று உருவக அணி’.

———–

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.
74–

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்‌துரைத்தல்‌.

கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள்‌ பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள்‌ – தெளிந்த,
அம்‌ – நீர்‌,
பரந்த – பரவிய,
வயல்‌ – கயல்கள் சூழ்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின்‌ – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்‌,
எம்‌ உள்ளம்‌ – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப்‌ பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்‌,
வெள்ளம்‌ – பிரவாகமான கடல்கள்‌ தாம்‌,
பரந்தனவோ – பரவி யிருக்கின்‌றனவோ ? அன்றி- அல்லாமல்‌,
வெள்மதி மேல்‌ – வெண்மையாகிய சந்திரன்‌ மேலே யுள்ள,
முயல்‌ நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்‌ளம்‌ – களவாகிய தொழிலொன்று தான்‌, பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும்‌ ஒர்கிலோம்‌- ஒன்றாகத்‌ துணிந்து சொல்ல யாம்‌ ௮றிந்தோமில்லை.

ஆழ்வார்‌ குருகூரில்‌ எம்‌ தலைவியின்‌ முகத்திலுள்ளன கமலத்தில்‌ வெள்ளம்‌ பரந்தனவோ ? சந்தின் மேற்‌ களவுத் தொழில் தான்‌ பரந்னவோ? அல்லது என்‌ மனந்தான்‌ ௮ங்கனம்‌ பரந்தனவோ ? கண்கள்‌ தாமோ? ஒன்றும்‌ அறிந்தோமில்லை யென்பதாம்‌,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள்‌ போலத்‌ தலைவனுக்குத்‌ தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன்‌ மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக்‌ கூறியது பண்பு பற்றி யென்க , இவன்‌ நெஞ்சம் அவள் விழியால்‌ தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்‌.,அங்கனம்‌ கொண்ட மயலுச்கு எல்லை காணாமல்‌ ஆழ்ந்ததனால்‌ கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்‌; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும்‌, கொம்பு -உவமை யாகு பெயர்‌. வெள்ளம்‌, கள்ளம்‌, உள்‌ளம்‌ – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால்‌ பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும்‌ ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால்‌ உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்‌று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன்‌ மற்றை நாள்‌ முன்‌ கொடுத்த தெய்வம்‌ இன்னுங்‌ கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல்‌. கை கோள்‌ – களவு, கூற்று -தலைவன்‌ கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம்‌ ; உவகையுமாம்‌. பயன்‌ -கண் சிறப்புரைத்தல்‌ ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்‌.

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே
. 75–

ஓரும் – ஆராய்‌ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்‌மைக்கு,
உரியாரும்‌ – தகுந்தவர்களும்‌;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும்‌ -ஞானமுடையவர்களும்‌,
சாரும்‌ – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன்‌ – சடகோபனென்‌னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்‌- வரக் கடவீர்கள்‌ ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப்‌ பாட்டை,
சொன்னேன்‌ – இப்பொழுது சொல்லுகிறேன்‌; (அப்படி. வருவீரேல்‌,)
நும்‌- உங்களுடைய,
மயக்கம்‌ எல்லாம்‌ -விபரீதமுழுவதும்‌,
தீரும்‌: -நீங்கி விடும்‌ ;
திருக்கு அறும்‌ – மாறுபாடுகள் நீங்கி விடும்‌
தீங்கு -தீவினைகள் எல்லாம்‌,
அறும்‌ – நீங்கும்‌;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்

நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள்‌ ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன்‌ ; உங்கள்‌ மயக்கம்‌ நீங்கும்‌ ; திருக்கு நீங்கும்‌; மனம்‌ ஒழுங்குபடும்‌ ; தீங்கறுமென் பதாம்‌. ஒர்தல்‌ – கடவுளியல்பை யறிதல்‌, ஓங்கிய ஞானம்‌ – கடவுளை அறியும் அறிவு – மயக்கம்‌ – ஒன்றை மற்றொன்றாகக்‌ கருதும் விபரிதம்‌: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்‌பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல்‌, திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும்‌ அவர் போல்வாரும்‌ நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல்‌, இவைகள் ஓழியவே மனம்‌ ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல்‌ கூடிமென்பதாம்‌,-இவை யனைத்தும்‌ திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால்‌ இது அப் பதியின்‌ சிறப்புக் கூறப்பட்டது, வாரும்‌ என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்‌-தெளிவினால்‌ வந்த கால வழு வமைதி,

———

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.
76–

பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்‌.

அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்‌-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும்‌ உறுவகையால்‌-தன் மாத்திரைகளும்‌ கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்‌டம்‌எல்லாம்‌ – நீண்ட பொருள் விரிவு முழுவதும்‌,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான்‌ -தலைவரும்‌,
குருகூர்‌ பிறந்த – குருகூரிலே அவதரித்‌தருளிய,
சிறு வகையார்‌ – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம்‌ – யாம்‌ வணங்கினோம்(ஆதலால்‌) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;

சமய நூல்களில்‌ கூறிய மாறுபாடுகளை யெல்லாம்‌ போக்கி நல்வழி இதுவே யெனப்‌ பிரபந்த ரூபமாகக்‌ காட்டி யருளிய திருக் குருகூர்‌ நம்‌மாழ்வாரை யாம்‌ தொழுதோமாதலால்‌ மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம்‌, பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம்‌ எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம்‌ – அவ்வச்‌ சமய நால்களில்‌ கூறிய தத்துவ சாத்திரங்களாம்‌ ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின்‌ பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும்‌ நிலையிட்டருளியபடி என்பதாம்‌, ஆய சமயம்‌ – இடைச்‌ சொற்றொடர்‌. ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம்‌ வேற்றுமைத் தொகை.
தலைவன்‌ பரத்தையிற்‌ பிரிவில்‌ தலைவியின்‌ மைந்தன்‌ தெருவில்‌ விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான்‌ தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன்‌ பரத்தையிற் பிரிதலும்‌ தலைவிக்கு ஊடல் தோன்றுதலின்‌ உரிப் பொருளால்‌ மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம்‌. பயன்‌-காமக் கிழத்தி மகிழ்தல்‌. கை கோள்‌ – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,

சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே
. 77–

அணி நீர்‌ -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ்‌ -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய்‌ – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில்‌ -அவ்விடத்‌தில்‌,
வீனையேன்‌ -தீ வினை யுடையவனாகிய நான்‌,
இவ் வெறும்‌ பிறவி – இப் பயனற்ற பிறப்பில்‌,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்‌பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார்‌ திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப்‌ பெற்றிலேன்‌ – பிரார்த்தித்து அடையப்‌ பெற்றேன் இல்லை ;

நான்‌ பிறந்த பொழுதே நம்மாழ்வாருக்‌ கன்புடையோனாய்‌ அவர்‌ திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்றுக்‌ கொண்டேனில்லை என்பதாம்‌. மற்றை நாட்டைக் காட்டிலும்‌ சிறப்புடைமை தோன்றம்‌ தமிழ்த் திருநாடு என்றார்‌.-பாவகன்‌ – அக்னி. அவனைப்‌ போலப் பரிசுத்த முடைமையால்‌ ஆழ்வாரை அவ்வாறு கூறினார்‌. இம்மைப்‌ பயனைத் தேடி உழலுதலால்‌ வெறும் பிறவி என்றார்‌. சிந்தித்தது – வீட்‌டின்பம்‌, பாவகன்‌- உவமை யாகு பெயர்‌, வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர்‌, சிந்தித்தது – வினைப்பெயர்‌,

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே
. 78–

பாவகத்தால்‌ – அம்சத்தினால்‌,
தன்‌ – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம்‌ – சிறந்த அவதாரங்கள்‌, பதினொன்று என்‌று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார்‌ – இந்த வுலகத்திலுள்ளவர்‌கள்‌,
அறியாத வண்ணம்‌ -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்‌-தந் நாவினிடமாக,
ஆயிரம்‌ கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப்‌ போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்‌.
புறத்தார்‌-அன்னியர்களுக்கு,
செய்‌ – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்

நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய்‌ ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்‌-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல்‌ பிறருக்குச் செய்‌யும்‌ ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்‌,-ஆழ்வார் திருமாலின்‌ அம்சமென்று கூறப்படுதலால்‌ அந்த மாயோனவதாரம்‌ பத்தன்றிப் பதினொன்றென்‌றார்‌. அக் காரணத்தால்‌ இவர்‌ மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்‌- மாயோன்‌ வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்‌-. பூ ௮கம்‌ -பூமியாகிய இடம்‌; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான்‌ – மேலாகிய இடத்தை யுடையவன்‌, புறத்தார்ச் செய்‌- வேற்றுமைத் தொகை –

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-

தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

———

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே
79–

குருகைப்‌ பிரான்‌ – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம்‌ பிரான்‌ தன்‌ – எங்கள்‌ நம்மாழ்வாருடைய,
இயல்‌ இசைக்கு – இலக்கணமும்‌ பண்ணும்‌ அமைந்த திவ்யப்‌ பிரபந்தங்களாலே. (யான்‌) குற்றேவலும்‌ செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின்‌ தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன்‌ – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என்‌ போல்‌- என்னைப் போல,
எவர்‌ – யாவர் தாம்‌,
பேறு பெற்றார்‌ – பயனடைந்து இருக்கிறார்கள்‌ ? (ஒருவருமில்லை என்றதாம்‌),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில்‌ நிலை நிற்கின்ற ,
பொய்‌ அன்பர்‌ தாங்களும்‌ – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்‌,
மெய்‌ – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார்‌ – அறிந்து கொண்‌டார்கள்‌ ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது

யான்‌ ஆழ்வார்‌ பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல்‌ முதலியவற்றைச்‌ செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்‌னைப் போல் பெற்றவர் யார்‌? ஆழ்வார்க்குப்‌ பிற் பட்ட பலர்களும்‌ இந்தப்‌ பிரபந்தத்தினால் தத்துவ ஞானம்‌ பெற்றார்கள்‌, ஈதென்ன வியப்பு ?என்பதாம்‌. இயல்‌, இசை – சினை யாகு பெயர்‌.-ஏவலும்‌, உம்‌. இறந்தது தழுவிய எச்சம்‌. எற்றே , எல்‌ – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும்‌ அமையும்‌. கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச்‌ சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,

———

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–
80–

பொருள் –அகப் புறப் பொருள்‌,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,

இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்‌ல் புகுத்தி,
இன்‌ இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான்‌ – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்‌),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப்‌ பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்‌டதே கொல்‌ – கதவு தாழ் போடப் பட்டதோ ?

இலக்கண அமைதியும்‌ இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில்‌ சந்திரனிடத்தில்‌ களங்கம் போக்கி விட்‌டும்‌ முத்தும்‌ மீனும்‌ அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்‌டதோ வென்றான்‌ என்பதாம்‌.-எல்லா இலக்கணங்களுக்கும்‌ இலக்கியமாகக் கொள்ளுதலால்‌ இயலைத் தொடுத்தென்றார்‌ – இசையோடு கூறப்படுவதனால் இசையைப்‌ புணர்த்தென்றார்‌. படித்தலால்‌ பிறப்பின்‌
மயக்கம்‌ நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார்‌. களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும்‌, முத்துக்கள்‌. – பற்களுக்கும்‌; கயல்கள்‌ – கண்களுக்கும்‌ உவமை யாதலால்‌ இவை யனைத்தும்‌ உவமை யாகு பெயர்கள்‌. கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்‌னும்‌ ஐய இடைச் சொல்‌ பிரித்துக் கூட்டிப் பொருள்‌ கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்‌;ஒப்பாரு மிக்காரு மில்லாத்‌ தலைவன்‌ வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக்‌ கைக்கிளை யன்றி அடியோர்‌
பாங்கினும்‌?? என்ற விதிப்படி யமைந்த அடியவன்‌ தலை மகனாய்த்‌ தெருவில் செல்பவன்‌ சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன்‌ கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன்‌ – வியப்பினாலுள்ள மகிழ்தல்-

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே.
81–

கேணியிலும்‌ – கிணறுகளிலும்‌,
பட்டத்திலும்‌ – பட்டக்‌ கால்களிலும்‌,
பைந்தடத்திலும்‌ – பசிய குளங்களிலும்‌,
ஓடை – நீரோடைகள்‌ சூழ்ந்த,
பழனத்திலும்‌ – பள்ளமாகிய வயல்களிலும்‌,
குட்டத்திலும்‌ – ஆழமான குட்டைகளிலும்‌,
கயல்பாய்‌ – கயல் மீன்‌ பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர்‌ – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம்‌ அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின்‌ கிட்டத்திலும்‌ வலியாரும்‌-இரும்புகளுருக்குகின்‌ற உருக்குக் கிட்டானைக்‌ காட்டிலும்‌ வலிய நெஞ்சுடையவரும்‌,
இட்டத்திலும்‌ _ கருத்துக்களைச்‌ சொல்லுமிடத்திலும்‌,
தம்தம்‌ உள்ளத்திலும்‌ – தங்கள்‌ தங்கள்‌ மனத்திலும்‌,
எண்ணிலும்‌ – நினைப்பினும்‌,
உருகுவர்‌ – கரைவார்கள்‌ ;

குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும்‌ மனமுருகு வாரென்பதாம்‌, பட்டம்‌ – தண்‌ணீர்ப் பெருக்கும் காலத்‌தில் மட்டும்‌ ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்‌. நீர் வளத்‌தால்‌ மேடும்‌ பள்ளமான வயல்களிலும்‌ கிணறு குள முதலியவற்றிலும்‌ ஏற்றத் தாழ்வின்றி மீன்கள்‌ பாய்தல் போல ஆழ்வாரின்‌ குண விசேஷத்‌தால்‌ அறிந்தோர்‌ அறியாதோர் கொடிய நெஞ்சர்‌ முதலிய யாவரும்‌ உருகுவாரென்று தொகை மொழியாற்‌ கொள்க , இரும்பு – வன்றொடராயிற்‌
று. ஓடையாகிய பழனம்‌ என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்‌’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம்‌ – பண்பாகு பெயர்‌.

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

————————–

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெரும்‌- பெரிய,
தண்‌ – குளிர்ந்த,
வகுளம்‌ மணம்‌ – மகிழ மலரின்‌ மணமானது ,
வேண்டும்‌ – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல்‌ – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான்‌ – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள்‌ – பாடல்களாகிய,
மா மணியின்‌ – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம்‌ -,கூட்டத்தை ,
வேண்டும்‌ என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால்‌ – தரிசித்தால்‌,
குணம்‌வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள்‌ வேண்டுமோ? (வேண்டாம்‌)
நல்‌ குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்‌)
௮ குலத்து ஒழுக்காம்‌ – அந்தக் குலத்‌துக்குரிய நடையாகிய, –
பிணம்‌-பயனற்ற பிணம் போல்‌வதும்‌. வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்‌
டாம்‌)
செல்வம்‌ பேய்‌ – பொருளாகிய பிசாசும்‌, வேண்டுமே – வேண்‌டுமோ ? வேண்டாம்‌
ஆதலால்‌, சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும்‌ – கை கூப்பி வணங்குங்கள்‌

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை அன்‌போடு படிப்பவரைக் கண்டால்‌ ௮வருடைய குணம்‌ குலம்‌ நடை பொருள்‌ யாவும்‌ பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள்‌ -என்பதாம்‌. குணம்‌ – அன்பு. பொருள்‌, அடக்கம்‌ முதலியன. குலம்‌ – ௮ந்தணர்‌ முதலிய உயர்குலம்‌, நடை – அவர்கள்‌ தர்கள்‌ மதத்துக் ஏற்பக் கட்டியதானால்‌ பிணமென்றிகழ்ந்தார்‌. பேய்‌ – தான்‌ பிடித்தவரைத்‌ தன்‌ வசமாக்குதல்‌ போலப்‌ பொருளும்‌ விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார்‌. மணிக்கு மேற் சிறந்த பொருள்‌ தோற்றத்தி லில்லை யாதலால்‌ மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள்‌ எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய்‌ – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌:

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–
83-

தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின்‌ சுழலிருந்து
எழும்‌ – வெளியில்‌ வரும்படியாகிய, பாக்கியம்‌ – செல்வம்‌,
உடைத்து ஆக்கவும்‌ – எனக்கு உடையதாக்கவும்‌,
தென்‌ – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும்‌ – விளங்‌கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்‌,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின்‌ குண விசேடங்களை,
நாளும்‌ கிளத்தி- தினந்தோறும்‌ சொல்‌லிச் சொல்லி,
என்‌ நா – எனது நாக்கில்‌,
தழும்பு ஆக்கவும்‌ – தழும்பு ஏறச் செய்யவும்‌, வல்ல கோ – வலியரான இறைவர்‌,
தயா பரன்‌ – கருணை யுடையவரான, சடகோபன்‌ – நம்மாழ்வாரேயாம்‌ ;

பிறவிப் பெருங் கடற்‌ சுழியில் அமுங்கிப்‌ போகாமல் எழுந்து மீண்டு வருந்‌ திறமை யுடையதாக்கவும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களில் உள்ள கடவுளின்‌ மகிமையைத் தினந்தோறும்‌ கூறி எனது நாக்கில் தழும்பேறச்‌ செய்யவும் தகுதி யுள்ளவர்‌ நம்மாழ்வாரே யென்பதாம்‌. தீ வினை தான் செல்லும்‌ வழியே என்னை இழுத்தலால்‌ தோழும்பாக்கிய வினை யென்‌றார்‌. மாறாமல்‌ தொடர்ந்து வருதலால்‌ தொல்லைப் பிறவி யென்றார்‌.
இது பற்றியே தொல்லை நம்‌ பிறவி யெண்ணிற்‌றொடு கடல்‌ மணலுமாற்றா” என்றார்‌ திருத் தக்க தேவரும்‌, அதில்‌ நின்று மீண்ட வரருமையாதலால்‌ சுழி யென்றார்‌. ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம்‌ அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர்‌, உடைத்து –
குறிப்பு முற்றெச்சம்‌. வல்ல – குறிப்புப் பெயர் எச்சம்‌, கோ ௭ன்னும்‌ எழுவாய்‌ ஆம்‌ என்னும்‌ ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –

தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

——–

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே
.–84-

பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்‌,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

நங்காய்‌ – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும்‌ – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர்‌ என்‌னில்‌ – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்‌,
உன்‌ மகள்‌ – உன்‌ புதல்வி,
கண் பனி மல்கும்‌ – கண்களில்‌ நீர்‌ பெருக்குவாள்‌ ;
கரம்‌ – கைகளை,
தலை கொள்ளும்‌ – தலையிற்‌ குவித்துக் கொள்ளுவாள்‌ :
கருத்து உள்‌ளும்‌ – மனத்தில்‌ தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம்‌ உருகுகின்றாள்
கவியால்‌ – பாடல்களால்‌,
உலகை – இந்தத்‌ தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும்‌ வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான்‌ – நீக்கிய நம்மாழ்வார்‌.
புனை – ௮ணிந்து கொள்‌ளுகின்ற,
மகிழ்‌ பூவும்‌ ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்‌,
மரம்‌ தலைக் கொள்ளவும்‌ – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்‌,
போதும்‌ – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள்‌ கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்‌.

நங்காய்‌ உன்‌ மகள்‌ குருகூர் என்றவுடன்‌ கண்ணீர்‌ வடிக்கிறாள்‌ -கை கூப்புவாள்‌ ; கருத்தில்‌ நினைக்கிறாள்‌ மனம் கரைகிறாள்‌ ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும்‌ செல்கிறாள்‌ என்பதாம்‌. நங்கை – எல்லாக்‌
குணங்களும்‌ நிறைந்தவள்‌. இதன்‌ ஆண்பால்‌ – நம்பி. கிளவித் தலைவன்‌ பெயர் கூறலின்‌ அகப்புறமாயிறறு, புறமெனவே அதன்‌ பகுதியாகிய பெருந் திணையாம்‌. தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச்‌ சிறப்புச்‌ செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித்‌ தோழியிடத்‌துத்‌ தன்‌ காம நிலையைக் கூறத்‌ தோழியாலறிந்த செவிலி யானவள்‌ பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல்‌ கிளவியின்‌ துறையாகும்‌-கண் பனி மல்குமெனவே அன்பும்‌ தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும்‌ உள்ளுமெனவே கூடற்குறிப்பும்‌ உருகுமெனவே இன்பத்தின்‌ மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

———–

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே
. 85–

பொருள்‌–அகப் பொருள்‌
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .

(ஐயனே !) கருத்தில்‌ – உமது மனத்திலே,
கருணை வைத்‌து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும்‌ – செல்லக் கடவீர்‌ ;
இதுவும்‌ – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்‌,
கலை மறையோர்‌ – கல்வியில் சிறந்த அந்தணர்கள்‌,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம்‌ – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம்‌ ;
தினம்‌ மயல் தீரும்‌ – இதனால்‌ காள்தோறும்‌ உங்களுக்குண்டாகிய காம மயக்கமும்‌ நீங்கும்‌;
நீரில்‌ – தண்ணீரருகில்‌,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின்‌ – வெண்மையான அடிக்‌ குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின்‌ – கரும்புகளைடைய,
குருத்தில்‌ – குருத்துக்‌களில்‌,
முயல்‌ – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம்‌ வைக்கும்‌ -தேனடைகள்‌ வைக்கின்‌ற,
குருகூர்‌ – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்‌,
கூடுமின்‌ – அடையுங்கள்‌ ;

ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும்‌ ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்‌; ஆதலால்‌ நீங்கள்‌ திருக் குருகரைப் போயடையுங்கள்‌ என்பதாம்‌, நீரில்‌ முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில்‌ தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்‌தில்‌ இருக்கிற தன்‌
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர்‌ என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள்‌ நீர் தலைவியின்‌ குடியாகவும்‌ தோழி நெட்டிச்‌கோரை யாகவும்‌ தலைவி கரும்பாகவும்‌ தலைவனது அன்பு தேனடையாகவும்‌ உவமித்தமை காண்க. இவை முழுவதும்‌ முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்‌,-எண் வகை மணமான :– பிரமம்‌, பிராசாபத்தியம்‌,ஆரிடம்‌. தெய்வம்‌, காந்தருவம்‌, அசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌ என்‌பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல்‌ பண்டை வழக்கு, : அவனுந் தான்‌, ஏனலிதணச்‌ தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர்‌ மதியம்‌ வரை சேரினவ்வரைத்‌, தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன்‌ மகன்‌ ‘என்பதினாலுமறிக , தலைவன்‌ தலைவி சுரத்தில்‌ செல்லுதலால்‌ திணை -பாலை யாயிற்று , தலைவனுடன்‌ தலைவி செல்லுதலால்‌ உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும்‌ வரைவும்‌ மனைவிக்கட்‌
டோன்றும்‌ ” (தொல்‌ – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத்‌ தோழி கூற்றாற் கூறியது : ஒன்‌றித் தோன்றும்‌ தோழி மேன ”(தொல்‌ – பொரு – 19..) என்பதனாற்‌ கொள்க,

கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –

————-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே
. 86–

கூட்டங்கள்‌ தோறும்‌- தாம்தாம்‌ கூடுமிடங்களிலெல்‌லாம்‌,
குருகை பிரான்‌ – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம்‌ -சிறந்த குணங்களை,
கூறும்‌ – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர்‌ ஈட்‌டங்கள்‌ தோறும்‌ – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்‌,
இருக்கப்‌ பெற்றோம்‌ – கூடி யிருக்கலாயினேம்‌;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள்‌ தோறும்‌ -இரண்டு கண்களிலும்‌,
புனல்‌ வந்து- கண்ணீர் பெருகி,
நாலப்‌ பெற்றோம்‌- வடியப் பெற்றோம்‌ ;
(ஆதலால்‌) இனி மேல்‌, வீட்டு- பரமபதத்தில்‌,
எங்கள்‌ தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்‌) தங்கள் நண்பர்‌களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்‌,
பெரும்‌ போகம்‌- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்‌) உண்டா யிருக்கிறது –

கூடும் போதெல்லாம்‌ குருகூர்‌ நம்மாழ்வார்‌ குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற்‌ சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால்‌ கண்ணீர் பெருகப் பெற்றோம்‌ ; இனி மேல்‌ பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென்‌ றறிந்து அங்குள்ளார்‌ அமைத்தலால்‌ அங்கே எமக்குப்‌ பெரும்‌ போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம்‌. குணம்‌-பிறரை வாழ்‌விக்கக் கருதிய குணம்‌. கண்ணீர் வடிதல்‌ – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத்‌ துதித்தலால்‌ பிறவிப் பிணி நீங்குதலும்‌ பரம பதத்திலுள்ளார்‌ தங்கள்‌ நண்‌பரென்று அமைத்தலும்‌ பேரின்பம்‌ பெறுதலும்‌ இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்‌பம் தருதலால்‌ பெரும் போகமென்றார்‌. தோறும்‌- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்‌,

————-

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே
. 87–

பொருள்‌. அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்‌.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்

கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென்‌ – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான்‌ -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில்‌ -குருகூரில்‌,
கார்‌ புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்‌னுடைய தீ வினையே, தினையின்‌ -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்‌றது – முற்றிப் போகின்‌றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல்‌ கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும்‌ உண்டே – ஏதேனும்‌ மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]

ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான்‌ உங்களிடத்தில்‌ தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற்‌ சொல்லிக் காணா யென்பதாம்‌. திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால்‌ யமனுக்குத் தப்பலாமென்பார்‌ தென் பாலை வழி தடுத்தென்றார்‌-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால்‌ தலைவியின் தமர்‌ அத் தினையைக்‌ கொய்து கொண்டு தங்களையும்‌ வீட்டிற்கு அழைதுப் போவார்‌ ; முற்றா திருப்பின்‌ தாங்கள்‌ அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள்‌, இங்ஙனம்‌ பிரியச் செய்வது தீ வினையே யாதலால்‌ ௮துவே தினை வடிவமாகியும்‌ வந்து வருத்திற்று என்றாள்‌. கை கோள்‌ – களவு, கேட்போர்‌ – தலை மகன்‌ சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்‌ச் சொல்லியது, இடம்‌ -முன்னிலை, காலம்‌- இறந்த காலம்‌. மெய்ப்பாடு – அழுகை. பயன்‌ – பகற்‌ குறி விலக்கல்‌. ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம்‌, ஆல்‌ – அசை, இளையாம்‌. ஆம்‌ -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால்‌ திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால்‌ புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்‌-அப்படித் தெரிந்ததனால்‌ தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும்‌ அஞ்சிப்‌ பல வழியாலும்‌ களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்‌யும்படி. முயற்சிப்பதால்‌ கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம்‌. இங்கனம்‌ நாளும் தனியிடத்தில்‌ தலைவியைச் சேருதற்குச்‌ தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும்‌ கொய்யப் பட்டால்‌ தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால்‌ நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால்‌ துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,

நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

———-

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே
. 88–

பொருளும்‌, திணையம்‌ அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்‌.

வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்‌- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான்‌ – தலைவரும்‌,
இன்னா – துன்பத்தைச் செய்கின்‌ற
கலியின்‌ சினம்‌ – கலியின்‌ கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன்‌ -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்‌,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம்‌ பாழ்‌ படுத்து – கதிர்‌ கொய்தலால்‌ கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால்‌ -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்‌,
புகுந்து – என்‌னிடத்துச் சார்ந்து ,
என் மனம்‌ – எனது மனத்தையும்‌, பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்‌.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும்‌ ௮மையும்‌-

நம்மாழ்வார் மலையிற்‌ சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்‌
பாழாக்கிப்‌ புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என்‌ மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்‌-முற்றுதலால்‌ குறவர்‌ கொய்து கொண்டு போனது நிமித்தமாகப்‌ புனம் பாழ்படுத்து என்றான்‌, ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால்‌ பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம்‌. தானும்‌ தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால்‌ பெற்ற பயன்‌ இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான்‌. மெய்ப்பாடு -அழுகை , பயன்‌ – ஆற்றாமை நீங்குதல்‌. பகலில்‌ தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம்‌ பாழாய்ப் போய்த்‌ தலைவியைச் சேர வழி யில்லாமையால்‌ கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின்‌ தலைவன்‌ அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய்‌ அங்குத் தலைவியைக் காணாமையால்‌ ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல்‌ துறையின்‌ கருத்து,

தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-

————

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே.
89–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக்‌ கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்

தினை ஓன்‌றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்‌- பிழையும்‌,
அற்று – இல்லாமல்‌,
உணர்ந்தோர்‌ – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்‌வாரது,
மகிழின்‌ திறத்தின்‌ – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில்‌ வருந்தி யிருக்கிற,
கொடியாள்‌ – கொடி போன்‌ற இடையை யுடைய எங்கள்‌ தலைவி,
துயின்றாலும்‌ -தான் புலம்புவதின்‌று சிறிது நித்திரை செய்தாலும்‌, (தூங்க வொட்டாமல்‌),
தன்‌—-. வாய் அடங்கா – வாய்‌ ஓயாமல்‌,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்‌றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும்‌ – பனை மரமல்லாமலும்‌,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?

நம்மாழ்வார்‌ மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல்‌ கத்துகிற அன்‌றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும்‌ எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம்‌. எந்‌தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின்‌ அவரினும் சிறந்தவரென்பது தோன்‌றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்‌.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல்‌ வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள்‌. ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும்‌ ) அங்‌கனம்‌ அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம்‌ அதிகரிக்குமென்‌பது பற்றி இங்கனம் கூறுதல்‌ வழக்கம்‌, இது கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறுதலால்‌. அகப் புறமும்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல்‌ -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே
. 90–

பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக்‌ கலங்கல்‌.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்‌

பகையாய்‌ வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும்‌ – காமம்‌ வெகுளி மயக்க மென்னும்‌ முக் குற்றங்களையும்‌,
வேரினொடும்‌ – வேரோடும்‌,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய்‌ – அதன்‌ பகுதியாய்‌,
வருவன – வருகின்ற,
யாவையும்‌ – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்‌,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம்‌ உய்ய – உலகத்தினுயிர்கள்‌ பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத்‌ தொகுக்கப்பட்ட,
ஆயிரங்‌ கவி – ஆயிரம்‌ பாடல்களை,
சொன்‌னோன்‌ – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர்‌ சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ்‌ பனியின்‌ புகை – புகை போலப்‌ பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம்‌ இரு ள்‌ – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள்‌ – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?

நம்மாழ்வாரைத்‌ தியானிக்க வேண்டிப்‌ புகை போலப்‌ பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப்‌ போகின்றதென்பதாம்‌.-காமம்‌ -பிற பொருளிச்‌ செல்லுகிற பற்றுள்ளம்‌. வெகுளி – சினம்‌. மயக்கம்‌ -நல்லது தீயதென்றறியா மயக்கம்‌. இவை நீ ங்கவே மனம்‌ தூய்மையாகு மென்பர்‌,-இவற்றின்‌ வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம்‌ – இனி வரப் போகும்‌ வினை,சஞ்சிதம்‌ -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம்‌ – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப்‌ புணர்ச்சிப்‌ பின் பிரிந்த தலை மகன்‌ இரவு மீட்டிப்பத்‌ துயிலப்‌ பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல்‌ இத் துறையாகும்‌ இருளைக் கூறினமையால்‌, திணை – குறிஞ்சி, கைகோள்‌ – களவு.-கூற்று-தலைவன்‌ கூற்று, கேட்போர்‌ – இல்லை. இடம்‌ – தன்மை. காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – இளிவரல்‌. பயன்‌ -தன்‌ ஆற்றாமை நீங்குதல்‌. மூன்று- தொகைக் குறிப்பு. வையம்‌- இடவாகுபெயர்‌. பின்‌னை – இடைச்சொல் திரிபு

இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

————-

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே.
91–

பொருள்‌–௮கப் பொருள்‌,
திணை –உரிப் பொருளால் நெய்தல்‌.
கிளவி -வரைவு கடாதல்‌
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்

இருள்‌ புகுகின்‌றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்‌கின்றது
வண்ணம்‌ – இவளுடைய நல்ல நிறமும்‌,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண்‌ – கண்ணிலிருந்து,
நீர்‌ உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக்‌ கருதி,
உயிர்‌ – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்‌றது ;
உலகு ஏழும்‌ – ஏழுலகங்களும்‌,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப்‌ பத்துப்‌ பாடல்களாகச்‌ சேர்க்கப்‌ படுகின்ற,
ஆயிரம்‌ -ஆயிரம்‌ பாடல்களும்‌,
சொன்னோன்‌ – அருளிச்‌ செய்தவாரகிய நம்மாழ்‌வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால்‌ – கீர்த்தியால்‌,
விளங்கத் தகுகின்றனர்‌ – விளங்கத்‌ தக்க வராகிய,
மேல்‌ மேலும்‌ – மேலும்‌ மேலும்‌ ௮திகமாக, காதல்‌ தரும்‌ அவர்‌ – ஆசையைத் தருகின்ற தலைவர்‌,
அல்லர்‌ – தகுதி யுடையார் அல்லர்‌ ;

இருள்‌ வருகின்றது ; தலைவியின்‌ மாமை நிறம்‌ மாறுகின்றது ;இவள்‌ கண்ணீர்‌ வடிகின்றது ; இவற்றைப்‌ பார்த்து என்னுயிர்‌ சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம்‌ காதலைக்‌ கொடுக்கின்றவர்‌ நம்‌மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால்‌ விளங்கத் தக்கவரல்‌லர்‌ என்பதாம்‌. முந்திய நாள்‌ வரையிலும்‌ இரவில்‌ துன்புற்றவளாதலின்‌ இன்றைத் தினமும்‌ இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள்‌ என்றாள்‌. மாமை – மாந் தளிரின்‌ தன்மை, சிறிது சிறிதாக உயிரின்‌ வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற்‌ கூறினள்‌. மெய்ப்பாடு -அழுகை, பயன்‌ – வரைவு கடாதல்‌. இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன்‌ ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள்‌ போலத் தலைவியின்‌ துன்பத்தைச்‌ சொல்லுதலின்‌ தலைவன்‌ கேட்டு வரைவானாதலின்‌ கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்‌-

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-

———–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே
. 92–

இருமையும்‌ தீர்ந்த பிரான்‌ – யான்‌ எனது என்னும்‌ செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாரது,
இன்‌௮ருள்‌ – இனிய கருணை யானது,
தருமமும்‌ – அறமும்‌,
காமமும்‌ – இன்பமும்‌,
தாவில்‌ அரும்‌ பொருளும்‌ – கெடாத அரிய செல்வமும்‌,
தணவாக் கருமம்‌ ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும்‌ – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின்‌ – பயனற்ற காரணங்களின்‌,
பெருமையும்‌ – பெருமைகளும்‌,
மாயப்‌ பிணக்கும்‌ – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்‌,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம்‌ செய்‌யும்‌ – மிக்க வேறு பாட்டைச் செய்யும்‌; உம்‌ – பிரித்துக் கூட்‌டப்பட்டது.,

நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும்‌ நான்கும் தந்து பயனற்ற காரணங்களின்‌ பெருமையும்‌ பிணக்‌கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச்‌ செய்யுமென்பதாம்‌. செய்யுளாதலால்‌ காமம்‌ பொருள்‌ என முன் பின்‌ மாற்றி வைத்தார்‌. தருமமும்‌,காமமும்‌ பொருளால் செய்யப்படுதலின்‌ அரும் பொருளென்றார்‌.
அறத்தால்‌ சேர்ப்பதே பொருளாமாதலால்‌ வருத்தமில்லாத என்றார்‌. பயனற்ற தொழிலின்‌ மூலங்களின்‌ பெருமையும்‌ பிணக்கும்‌ நீங்க எனவே நல்ல நெறியில்‌ சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌, குயர்ந்த வுலகம்‌ புகும்‌” என்பதற்கு ஆழ்‌வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –

இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-

———-

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே.
93–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்‌.

இயலோடு – இலக்கணத்துடன்‌,
இசையின் பொருளில்‌ -இராகப்‌ பொருளிலும்‌,
சிறந்த —-அலங்கார வல்லியில்‌ – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்‌,
போக்கு இல்‌ – நீங்காத,
உள்‌ளம்‌ – மனத்தால்‌,
தெருளில்‌ – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும்‌ – கரும்‌பை ஓத்த,
ஆயிரம்‌ பர – ஆயிரம்‌ பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்‌,
செய்தவர்‌ – செய்தருளிய நம்மாழ்வார்‌,
௮௫ளில்‌ – கருணையால்‌,
சில மகிழ்‌ – சிலவாகிய மகிழ மலர்‌ மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர்‌ கொல்‌ – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில்‌ – மாலையில்‌ வந்த இருளைக் காட்டிலும்‌,
பிறிது துயரும்‌ உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ

முன்னம்‌ திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார்‌ தமது மகிழ மலர்‌ மாலையை நம்‌ தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்‌ட துன்பத்திற்‌ கெல்லை யில்லை யாதலால்‌ அவ் விருளைக் காட்டிலும்‌ துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம்‌. தொடர்ச்சி பெறப்‌ பாடினமையால்‌ அலங்காரம்‌ அமைந்த கொடி யென்றார்‌. மனத்தால்‌
ஆராயும் தோறும்‌ சுவை மிகுதலால்‌ கரும்பொக்குமென்றார்‌. ஆயிழை – வினைத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித் தொகை, துயரைச்‌ செய்கின்ற இருளைத்‌ துயர் என்றது குறிப்பு மொழி.

———–

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.
94–

(உலகத்தின்‌ உயிர்கள்‌ தம் பிறப்புக்களை), படர்‌ – ஓடுகின்‌ற,
நீரின்‌ இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்‌-புதிய,
ரேகை – எழுத்‌தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்‌தாது ௮ல்லால்‌ – செய்ததே யல்லாமல்‌,
பவம்‌ – பிறப்பாகிய,
ரேகையில்‌ – வழியில்‌,
தம்‌ பணி-தங்கள்‌ தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்‌),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல்‌ – நம்மாழ்வாரைப்‌ போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம்‌ – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர்‌ – பாட வல்லவர்‌,
எவரே -யாவரிருக்கிறார்கள்‌ ?(ஒருவருமில்லை அதனால்‌,)
அயற்கும்‌ – பிரம தேவருக்கும்‌,
அரற்கும்‌ – சிவ பிரானுக்கும்‌,
அல்லா அமரர்க்கும்‌ – மற்றுமுள்ள தேவர்க்கும்‌,
எல்லாம்‌ – முழுவதும்‌,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்‌;

உலகத்திலுயிர்கள்‌ இத் திருவாய் மொழியைப் படித்‌துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்‌றிப் பிறப்பிடத்தில்‌ நாடினவில்‌லை -ஆதலால்‌ மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர்‌ யாவருளர்‌? அதனால்‌ அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம்‌. நம்பி -எல்லாக் குணங்களும்‌ நிறைந்தவன்‌. மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்‌.

————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே.
95–

மெய்யன்‌ – உண்மை ஞான மறிந்தவரும்‌,
குருகைப்‌ பிரான்‌ -திருக் குருகூரிலவதரித்தவரும்‌,
எம்மை – எங்களை,
இன்னம்‌-மறுபடியும்‌,
ஒரு பவம்‌ செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன்‌ – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்‌வாரது,
வள்‌ – வளம் பொருந்திய,
தமிழ்ப்‌ பாவும்‌ உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம்‌ செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள்‌ உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும்‌ உண்டு – அவற்றின்‌ பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்‌),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்‌
கொண்டு,
தவம்‌ செய்வதும்‌ – தவங்களைச் செய்வதும்‌,
தழல்‌ – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும்‌ -யாகங்களைச் செய்வதும்‌,
எவன்‌ செய்‌யும்‌ – என்ன பிரயோஜனத்தைத் தரும்‌

நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும்‌ அவற்றை ஆசிரியர் முகமாகக்‌கேட்க நமக்குச்‌ செவிகளும்‌, படிப்பதற்கு நாவும்‌, பயனறிவதற்குப் புத்‌தியும்‌ உள்ளனவாயிருக்க அந்தப்‌ பிரபந்தங்களை ஆராய்ந்தடையும்‌ பயனைக் காட்டிலும்‌ தம்மை வருத்‌தித் தவங்களும்‌ யாகங்களும்‌ செய்வதனால்‌ என்ன பயன்‌ என்பதாம்‌,-உண்மையாகப் பயன்படும்‌ நூலைச்‌ செய்ததனால்‌ மெய்யனென்றார்‌. அவரைத் தியானித்ததனால்‌ தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்‌.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால்‌ வண்டமிழென்‌றார்‌. எவன்‌ – குறிப்பு வினா வினை. மெய்யன்‌ – குறிப்பு முற்றுப் பெயரெச்சம்‌, உண்டு, என்பன – குறிப்பு முற்று,

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-

———

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே
. 96–

பொருள்‌–அகப் பொருள்‌,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .

உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள்‌ மூன்‌றனையும்‌,
இயலும்‌ -செய்தருளிய,
திருமால்‌ – திருமகள்‌ கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல்‌ – நம்மாழ்வாரது,
குருகூர்‌ துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல்‌ துறை யிடத்து
நண்டு ஆட்‌டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால்‌ – குறிப்புக்களால்‌,
இந்த நாட்டை யெல்லாம்‌ – இந்தஉலக முழுவதையும்‌,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல்‌ -கண்களைப் போல,
கயல்‌- கயல்‌ மீன்கள்‌,
தீங்கு செய்யுமோ – தீமைகள்‌ செய்யுமோ ? [செய்யாவாம்‌.]

திருமாலின்‌ ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய்‌ தலைவியின்‌ குறிப்புக்களால்‌ இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக்‌ கயல்‌ மீன்கள்‌ தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்‌.-திருக் கூத்துக்கள்‌ மூன்றாவன :– அல்லியம்‌, மல்‌, குடம்‌; அல்லியம்‌ – குவலையாபீடத்தின்‌ தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம்‌ அல்லாதது-வாத்தியமில்லாமல்‌ யாடியது அல்வியமாம்‌. மல்லாடல்‌ – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம்‌ – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால்‌ அவனது சோணித புரத்தின் தெருவில்‌ கையில்‌ குடமேந்தி ஆடியது, இவற்றின்‌ விரிவைச்‌ சுத்தானந்தப்‌ பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின்‌ பகுதி களாம்‌. கைகோள்‌ – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால்‌ திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன்‌ புணர்ச்சிக்குப்‌ பின்னும்‌ தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின்‌ மிகுதியால்‌ புகழ்ந்தானென்பது துறையின்‌ கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்‌-புகழ்‌தல்‌,

ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்

———–

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே
. 97–

பொருள்‌ -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல்‌ கைம் மிக்குக்‌ கையற வுரைத்தல்

இந்த, நுண் பிறவி – அற்பப்‌ பிறப்பாகிய,
மாயைக்‌ கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில்‌ சேர்த்துக் கொள்ள,
வல்லவர்‌- வல்‌லவராகிய நம்மாழ்வார்‌,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக்‌ கிழித்தெடுத்து,
ஒரு திங்கள்‌ கொழுந்தென – ஒரு இளஞ்‌ சந்திரனாக,
செய்ததல்லால்‌ – செய்ததமன்றி,
அன்றில்‌ பனை… அன்றில்‌ பட்சிகள்‌
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்‌,
பிளவார்‌ – இரு பிளவாகச்‌ செய்தாரில்லை ; உளவாம்‌ நோயை – அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்‌-போக்கும் படியாகிய,
வகுளம்‌ – மகிழ மாலையை,
நல்கார்‌ – கொடுத்தாரில்லை

இந்தப்‌ பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்‌வார்‌ நெருப்பைத்‌ திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன்‌ றிலிருக்கும்‌ பனையைப் பிளக்காமலும்‌, அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப்‌ போக்கத் தக்க மகிழ மாலையுங்‌ கொடுத்தாரில்லை என்பதாம்‌-காமநோய்‌ கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால்‌ திங்களைத்‌ தீ யென்றார்‌. ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும்‌ ஓசை காமமுடையார்க்குத்‌
துன்பத்தைச்‌ செய்தலால்‌ அவ் வன்‌றிவிருக்கும்‌ பனை மரங்களை பிளந்திலர்‌ என்றாள்‌. பேய்க்குப்‌ பனையை யுவமித்தல்‌–கரு நெடும் பனங்காடு முழுமையும்‌ காலும்‌ கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்‌துப் பரணிச்‌ செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்

——–

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.
98–

பொருளும்‌, திணையும்‌, துறையும்‌ அவை.

அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம்‌ வாயில்‌ – முகத்தின்‌ வாயிலுள்ள,
கரும்பின்‌ – கரும்பு போன்ற திவ்வியப்‌ பிரபந்தங்களால்‌,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல்‌ – சொல்ல வல்ல,
அம்‌ புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்‌,
ஓர்‌ வகுளம்‌ கொடார்‌ – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்‌,
தாய்‌ என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர்‌ இல்லம்‌ புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும்‌ கோகு தட்டி – வளைந்த தோள்‌களைத் தட்டிக் கொண்டு,
சல்லம்‌ புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்‌து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்‌),
மீள – மறுபடியும்‌,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்‌- அசை நிலை

தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால்‌ ஐநங்களின்‌ மறு பிறப்பைப்‌ போக்குபவராகிய நம்மாழ்வார்‌ தாம்‌ இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய்‌ வீட்டிலுள்ள புவி போலப்‌ பாய்ந்து என்னை வருத்துகின்றாள்‌ ; இது போதாமல்‌ சந்த்ரனும்‌ உதயமாய் விட்டது – இனி மேல்‌ நான்‌ உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள்‌ என்பதாம்‌.-கரும்பு- உவமை யாகு பெயர்‌,-இரணடாமடியில்‌ புலி-உவமை யாகு பெயர்‌, மூன்றாமடியில்‌ புல்லி என்பது தொக்கு, தாயின்‌ கொடுஞ்சொல்‌ முட் போல தைத்தலால்‌ ௮வளை முட் பன்றியின்‌ தன்‌மையைக்‌ கொண்டென்றாள்‌. புலி போலக்‌ கறுவு கொண்டு பாய்தலால்‌ புலியை உவமித்தார்‌, இது உவமைக்கு உவமையின்‌ பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால்‌ தாயாகிய புலியானது முட் பன்றியின்‌ தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும்‌ பயனும்‌ அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால்‌ சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப்‌ புலி யென்றதற்கேற்பப்‌ பாய்கின்‌ற தென்‌றதனால்‌ உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால்‌ தாய் புலி போலப்‌ பாய்கின்றாள் எனவும்‌, ௮வள்‌ வார்த்தை முள்ளம் பன்றியின்‌ முட்போலத் தைக்கின்ற தெனவும்‌, சந்திரனது நிலவைக் கண்டு விரகம்‌ ௮திகரித்தலால்‌ ௮துவும் தோன்‌றிற்று எனவும்‌ வருந்திக் கூறினாளாயிற்று-

சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே
. 99–

புகழ் மெய்ப்‌ புலவோர்‌ – புகழுடைய உண்மையான கல்‌விமான்கள்‌,
தொழுது இயல்‌ – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன்‌ -தலைவரும்‌,
ஒதும்‌ – சொல்லப் பெற்ற,
கனல்‌ தறை – யாச நெறிகள்‌ மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல்‌ நாடன்‌ – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய்‌ மொழி எம்‌. மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்‌).
எழுதிய நாளும் – பிரமன்‌ எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்‌,
வினையும்‌-பழ வினைத் தொடர்ச்சியும்‌, தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப்‌ பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில்‌ நாற்று இட்டு – புழுதிக் காவில்‌ மாற்று விதைத்துப்‌ பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்‌.

புலவோரால்‌ வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால்‌ பிரம தேவர்‌ எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப்‌ பழ வினைகளும் சேர்த்துப்‌ புழுதியில்‌ நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச்‌ செய்ய முடியாது என்பதாம்‌. இம்மையி லனுபவிப்ப தெல்லாம்‌. பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன்‌ கொள்ளுதல் போல இப் பிறப்பால்‌ இன்னும்‌ வினையைச்‌ சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும்‌ பெயராதலால்‌ பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார்‌. வைப்ப – அகரம் தொக்கது -ஆல்‌ அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்‌
கூட்டி நீர்த் துறை யென்றும்‌ கொள்ளலாம்‌.

ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்
. 100–

மனையும்‌ – மனைவியும்‌, பெருஞ்செல்வமும்‌ – மிக்க பொருளும்‌,
மக்களும்‌ – புத்திராதிகளும்‌,
மற்றை வாழ்வும்‌ – மற்றுமுள்ள வாழ்வுகளும்‌,
தம்மை நினையும்‌ பதம்‌ என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான்‌ – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர்‌ நிமலன்‌ – திருக் குருகூரில்‌ அவதரித் தருளிய குற்றமற்ற நம்‌மாழ்வார்‌,
புனையும்‌ – பாடி யருளிய,
தமிழ்க் கவியால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌, இருள்‌ நீங்கு – அஞ்ஞான இருள்‌ நீங்கிப் போய்‌,
பொருள்‌ விளங்‌கி – மெய்ப் பொருளான ஞானம்‌ தோன்றப் பெற்று,
வினையும்‌ – இரு வினைகளும்‌,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள்‌ குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம்‌ நீங்கலாயின.

தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும்‌ மற்றுமுள்ள வாழ்வுகளும்‌: தம்மைத்‌ தியானிக்கும்‌ பதமாக நின்ற நம்மாழ்வார்‌ தமிழ்ப் பாடல்களால்‌, அஞ்ஞானம் நீங்கி நன்‌ ஞானம்‌ பெற்று வினைகளும்‌ அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம்‌. தம்மை நினைத்‌தவர்கள்‌ எஷணாதிகளாலும்‌ பிற வாழ்‌வினாலும் அடையும்‌ மகிழ்ச்சியிலும்‌ மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால்‌ தம்மை நினையும்‌ பதமென நின்ற வென்றார்‌. மற்றை வாழ்வு – சுற்றத்தார்‌ சேர்க்கை , எண்‌ வகைப் போகம்‌ தசாங்க முதலியனவுமாம்‌,

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

————

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

முன் – முன்னாளில்‌,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள்‌ – மதுர கவி யாழ்வார்‌,
சென்று – அடைந்த ,
தென்‌ தமிழ்‌ தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்‌,
பதிகம்‌ ஒன்றே உரைத்து .
கண்ணி நுண்‌ சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன்‌ – அந்த மாயோனுடைய
பொன்‌ ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான்‌ என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்‌றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்‌-உலகம் எல்லாம்‌ புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல்‌ – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்‌,
பதிகம்‌ – ஒரு பதிகம் போல,
பதிகம்‌ ௮து ஆக – பத்‌துப் பதிகமாக,
இசைத்தனன்‌ – பாடி யருளினார்‌ ;

முன்னாளில்‌ நம்மாழ்வாரை மதுர கவிப்‌ பெருமாள்‌ அடைந்து ஒரு பதிகம் பாடிப்‌ பரமபத முற்றாரென்று இந் நாளில்‌ கம்ப நாடர்‌ ௮வ்வொரு பதிகம் போலப்‌ பத்துப் பதிகம்‌ பாடி யருளினார் என்பசாம்‌. மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர்‌ காவேரி தங்குமூர்‌, கும்ப முனி சாபங்‌ குலைந்த வூர்‌ ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்‌.” என்‌றதனால்‌ கம்பர்‌ திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ்‌ நாடு என்னாளும் உய்ய இராமாயணம்‌ பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால்‌ வள்ளலென்றார்‌, மதுர கவியார்‌ – நம்மாழ்வாரைத்‌ துதித்து முத்தி பெற்றவர்‌. பதிகம்‌ – பத்‌துப் பாடல்கள்‌ சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்‌.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள்‌. ஒன்ற, ஏ- எண்‌, என்றே-ஏ தேற்றம்‌. பதிகமது, ௮து – பகுதிப் பொருள்‌ விகுதி,

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

சோழ நாட்டில்‌ மூவலூர்‌ ஆதித்தன் புதல்வரும்‌ திருவழுந்தூரிற்‌ பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர்‌ கதிரா மங்கலத்தின்‌ கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால்‌ ஆதரிக்கப் பெற்று இதின்‌ வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத்‌ தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில்‌ இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர்‌ முதலாயினோர்‌ வட மொழி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ மொழி பெயர்க்கும்‌ படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப்‌ பால காண்ட முதல்‌ யுத்தகாண்டம்‌ வரையிலுள்ள ஆறு காண்டங்களையும்‌ தமிழில்‌ செய்யுள் நடை யாகப் பாடி்‌ அரங்கேத்தத் தொடங்குகையில்‌ பலரும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ ௮ரங்க நாதன்‌ சன்னிதியில்‌ அரங்கேற்றுதல்‌ தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள்‌ இவரது கனவில்‌ அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார்‌. உடனே அஞ்சி நம்மாழ்வார்‌ மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில்‌ இதனை முதலில்‌ அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர்‌ காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின்‌ இராமாயணம்‌ பாடும் பொழுது காளிதேவியாரைப்‌ பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர்‌ காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன்‌ மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில்‌ மாணாக்கர்‌
பிந்தாமற்‌ பந்தம்‌ பிடி,

இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில்‌ மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக்‌ கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால்‌ தெரிகிறதனால்‌ இவரும்‌ அப் பகுதியாரென்‌று ஊூ்கிக்கப் படுகிறார்‌, இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின்‌ பெருமையை யறிந்த அரசாங்கத்தார்‌’அந்நாட்டினை இவர் பெயரால்‌ மாற்றி விட்டதனால்‌ கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில்‌ நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப்‌ பின்பு அருண் மொழித் தேவர்‌ வள நாடென்று பெயரிட்டமையும்‌ ௮றிக,
இன்னும்‌ இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப்‌ படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள்‌ ஓட்டக் கூத்தர்‌, நேமிநாதர்‌, பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம்

November 25, 2024

இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி – உடைய நங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர்திருவண் பரிசாரம். (இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர். சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.பெருமாள் முன்பு, “கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்” என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும் படி, சேனை முதலியாரை நம்மாழ்வாராக…….. நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல்) இருந்தது. இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் ஆதிசேஷன் புளிய மரமாக உள்ளதிருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்

இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?”, இது வரை பேசாத ஆழ்வார் இவரின் வினாவிற்கு விடை யளிக்கும் வண்ணம் ” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று இசைந்தார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார். ஆழ்வார் கூறிய பதில் சிறியதாக இருந்தாலும் அது அனைத்தயும் அடக்கிய தத்துவார்த்தமாக அமைந்திருந்தது. 

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.) மகான் மதுரகவி, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி நம்மாழ்வாரை வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார்.
அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டி தங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”. ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.
எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய் மொழிதிராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.
மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார். நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.

ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார்.

எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.

திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார்.

புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார். இவர் ஸ்ரீ விஸ்வக்ஷேனாவின் அவதாரமவார்.

இவரின் ஆயுள் 32 ஆண்டுகள் என்றாலும், நான்கு வேதங்களை பற்றி எடுத்துரைக்கும் வண்ணம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு படைப்புகளை உருவாக்கினார். இதனால் இவரை ஜகத்குரு ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜர் “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் பட்டம் சூட்டியுள்ளார். மேலும் நம்மாழ்வார் இயற்றிய ஸ்ரீ பகவத் விஷயம், சாம வேதத்தினை விளக்குவதாக உள்ளது. 

இவர் பெருமானின் மீது கொண்டிருந்த பக்தி, இவரை இவ்வாறு பாடவைத்ததோ?…

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்றும்.. 

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றும்… 

”கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”என பரவசத்துடன் பாடி இறைவனடிக்கு சேவை புரிந்த இவர் ஸ்ரீ நாதமுனிக்கு நாலாயிரம் பாசுரமும் கிடைக்க வழி வகுத்தார்.

இயற்பெயர் : –

நக்ஷத்திரம் : விசாகம் 

மாதம் : வைகாசி 

சேக்ஷதிரம் : திருகுருஹூர் (ஆழ்வார் திருநகரி), 

திருநெல்வேலி – தமிழ்நாடு

பிரபந்தம் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி (பிற்காலத்தில் இவை அனைத்தும் சேர்த்து ஸ்ரீ பகவத் விஷயம் எனப்போற்றபட்டது)

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது. ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு. பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது

நம்மாழ்வாரின் பெருமை:

சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள். 

1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல் நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச்சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள்அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார். நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “ நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.

2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “ சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1, 12, 18, 40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78, 79 ஆகியவை உயிர்நிலையையும், 2, 2, 331, 81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47, 48, 49, 40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19, 23, 80, 93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “ குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்
.-என்று ஏத்தினார்.
5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி. பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமானவியாக்கியானங்கள் (விரிவுரைகள்) தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர். திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘ திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘ திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘ திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.

இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .

திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர் .

6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக ( உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – ( நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை, பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்

என்பதாக அமைவர்.

7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.

8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.

9. ” வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு. அருணாசலம்.

10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.

11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.

12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘ நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்
“-என்று போற்றுகின்றார்.

உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘ மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘ காரிமாறன்’ எனவும், கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘ சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’ மகிழ்மாறன்’,’ வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘ பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘ பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.

13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர், அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

14. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.

15. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘ திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’ அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’ களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘ களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘ நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

17. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

அரையர் சேவையும் திருவாய்மொழியும்

ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.
திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.

அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “ திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘ அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.

நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.

மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.

திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’ இராப்பத்து’ எனப்படுகிறது.

இதுவே ’ அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘ திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “ இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘ கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?-
என்று போற்றி மகிழ்ந்தனர்.

————–

நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16

1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)

2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி

3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி

4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி

5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)

6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)

7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)

8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)

9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)

10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)

11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)

12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)

13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)

14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)

15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)

16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

——————–

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் பொன்னடி மேவுவோம் மெய்மையே-ஸ்ரீ வகுள மாலை–1937-May-June-

September 12, 2024

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே

ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்

ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம்
-என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –

விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –

தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்

ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்

வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே

மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே

———

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

மகிழம் பூ

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

  • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.

இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

August 30, 2024

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

(அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
5-அந்ய உபதேச பேச்சும்
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
7-தூத ப்ரேஷணமும்
8-அநுகாரம்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

———–

நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
இதுவும் தாய் பாசுரம்

——-

இதே போல் தூத ப்ரேஷணமும்
அஞ்சிறைய மடநாராய்
வைகல் பூங்கழிவாய்
பொன்னுலகு ஆளீரோ
எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

——

சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

———-

2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

——–

நாராயண மந்திரத்தின் சிறப்பை
எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
பெரிய திருமொழியில்
வாடினேன் வாடி -1-1-என்றும்
கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
இரண்டு பதிகங்களில்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

————-

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

—————-

நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

———–

இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

மேலும் அடுத்த பாசுரத்திலேயே
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

———–

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

—————–

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

(ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
(ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
அதாவது
தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
அதாவது
தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

——

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
(தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
வெறி விலக்கி-
அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

(தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

ஆசை அறுத்து –
அதாவது
திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
துவளில் மா மணியும் —

அறத்தொடு நின்ற
அதாவது
தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
அதாவது

1-வாடி –
ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

2-மெலிந்து
பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
(என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

3-பித்தேறி –
மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

4-ஏறப்பேசி
கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
(திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

5-கட்டு அழிந்து
மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
(துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

6-அகன்று –
உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
(மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

7-சார்வதே வலித்தமை
கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
(வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
அதாவது –

1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1–
பொன் உலகு ஆளீர்-6-8–
எம் கானல்-9-7–
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

5-ஆற்றாமை சொல்லி –
வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

6-கவராதவை விட்டு –
ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
(ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

7-இரைக்க மடல் எடுத்து –
மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
(ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

8-கண் புதைக்கப் போக்கற்று-
ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

9-உரு நெஞ்சு உள் எழ
எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

10-கூடு நாள் தேடி
மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

11-தாழ்த்ததுக்கு ஊடி
மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
(தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

12-உசாத் துணை அற்று
வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

13-சூழவும் பகைமுகம் செய்ய
ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

14-தடை நில்லாதே –
நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

15-புயக்கற்று
இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
1-திவளும் வெண் மதி போல்
2-கள்வன் கொல் நான் அறியேன்
3-கவள யானை கொம்பு ஒசித்த
4-வெருவாதாள் வாய் வெறுவி
5-சிலையிலங்கு பொன்னாழி
6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
7-மூவரில் முன் முதல்வன்
8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

தலை மகள் பதிகங்கள் -18
1- திரிபுரம் மூன்று எரித்தானும்
2-தூ விரிய மலர் உழக்கி
3-தந்தை காலில் பெரு விலங்கு
4-கரையெடுத்த சுரி சங்கம்
5-விண்ணவர் தங்கள் பெருமான்
6- தந்தை காலில் விலங்கற
7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
8-தன்னை நைவிக்கிலென்
9-காவார் மடற் பெண்ணை
10-தவள விளம்பிறை துள்ளு
11-காதில் கடிப்பிட்டு
12-திருத்தாய் செம்போத்தே
13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
14-குன்றம் எடுத்து மழை தடுத்து
15-மன்னிலங்கு பாரதத்து
16-சிறிய திருமடல்
17-பெரிய திருமடல்
18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

——-

சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

—-

மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

பட்டுடுக்கும் பாசுரத்தில்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

————–

மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
கருணா வர்ஷுகர்–அருள் மாரி
4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

————————————————————————

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
(சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–

June 21, 2024

இவ்வாழ்வார்  ஆழ்வார் திருநகரி  எனப்படும் திருக்குருகூரில் கலி முதல் வருஷமான ப்ரமாதி ௵ வைகாசி ௴ பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ ஸேநேசருடைய அம்சமாய்க் காரி என்பவருக்குத் திருக்குமார்ராகத் திருவவதரித்து அருளினார். இவர் வேளாளர் குலத்தில் திருவவதரித்தருளியவர்.

திருவாய்மொழியின் முதலடியிலேயே ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்றாரம்பித்து ஸமஸ்த கல்யாண குணகண பரிபூர்ணனான பகவான்தான் பர தத்துவம் என்றும், அவனுடைய ‘துயரறு சுடரடி தொழுகை’யே உபாயம் என்றும், அப்படி ‘எழுகையே’ புருஷார்த்தம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இஸ் ஸம்ஸாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பகவானை அடைவதற்கு மார்க்கங்களான பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி, ப்ரபத்தி என்கிற நான்கு படிகளும் முறையே நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறலாம்.

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன் திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்ய வேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத் திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறு விதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித் தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ….. மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை “ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்” என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குரு வரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் “ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது” என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வ மதத்தை “மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்டதுவே” என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார்.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண் மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ் வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை “வெஃகாவுது” என்றும், “அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது” என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண் காவைக் காட்டி, அது “எப்பாலைக்கும் சேமத்ததே” என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்ய தேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் “எப்பாலைக்கும் சேமத்ததே” என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.

ப்ரஜ்ஞாக்யேமந்தஶைலேப்ரதிதகுணருசிம்நேத்ரயந்ஸம்ப்ரதாயம்

தத்தல்லப்திப்ரஸக்தைரநுபதிவிபுதைரர்த்திதோவே‍‍ங்கடேஶ: |

தல்பம்கல்பாந்தயூநஶடஜிதுபநிஷத்துக்ஸிந்தும்விமத்நந்

க்ரத்நாதிஸ்வாதுகாதாலஹரிதஶஶதீநிர்கதிம்ரத்நஜாதம் ||

தத்தல்லப்திப்ரஸக்தைஅனுபதிவிபுதைஅர்த்தித:

அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான

ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழிஎன்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப் போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ -என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.

இங்கு உத்தர க்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதேநி சமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி’ என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப் புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக் கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடை கயிறாகவும் கொண்டு, தான் கூர்ம ரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும் பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானே யாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம்.

வேங்கடேச:

வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீர ஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கட மா மலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்து நின்று, அதாவது தன்னை அடைந்த‌வர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.

கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்

ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் ப‌ள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக் கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழ வல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய‌ ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டா நிற்கும்.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்

தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குண விசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடை கயிறாகவும் கொண்டு

இதன் கருத்து:–

இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர், கவிதார்க்கிகஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ர பர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.

தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தர மலையிலே அதாவது:– ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ் மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,.

எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழியாய் அவிச்சின்னமாய்த் தமக்குக் கிடைத்த இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்குக் கூடஸ்தர் என்றும், குலபதி என்றும், கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தவர் என்றும், த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்றும், போற்றப்பட்ட நம்மாழ்வாரால் ஓரவஸரத்திலே யோக தசையில் இந்த ஸம்ப்ரதாயத்தை உபதேசிக்கப் பெற்றவரும், தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளலுமான ஸ்ரீமந் நாதமுனிகளால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்ட சிறப்பை யுடையதாய்; ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களை அனுஸந்தானம் செய்ததினால் பெற்ற அனுபவத்தின் பரீவாஹமாக ஸ்தோத்திர ரத்தினம் முதலிய நூல்களை அருளிச் செய்த ஸ்ரீமத் யாமுன முனியினால் பாலூட்டி வளர்க்கப் பட்டதாய், இதத் தாய் எனப்பட்ட பகவத் ராமானுஜ முனியினால் நன்றாக ஸம் ரக்ஷிக்கப்பட்டதாய், அவரால் உபய வேதாந்த ப்ரவர்த்தத்தினாலே முடிசூட்டப்பட்ட திருக் குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஆசார்யர்களினால் அவரவர்கள் சக்திக்கு அனுகுணமாகப் போஷிக்கப்பட்டு வந்ததாய்த் தமக்குக் கிடைத்த ஸம்ப்ரதாயத்தை அஸுர ப்ரக்ருதிகள் வாயில் அகப்படாமல் காத்து, அதாவது இந்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகரான ஆழ்வாருடைய அவதார ப்ரபாவத்தையும், அவருக்கு அர்ச்சா ப்ரதிஷ்டாதிகள் செய்வது சாஸ்த்ரீயம் என்பதையும், அவருடைய ப்ரபந்தம் தமிழ் பாஷையிலிருந்தாலும் கான ப்ரதானமாயிருந்தாலும் பாஷையும் ப்ரசஸ்தமானது, பகவத் விஷயமான கானமும் ப்ரசஸ்தமானது என்கிற காரணத்தால் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது என்பதையும், அவன் முன்னால் கானம் செய்யத்தக்கது என்பதையும், ஆழ்வாருடைய அனுக்ரஹமின்றி எம்பெருமானின் திருத் தாள்களில் தலை வைக்க முடியாது என்பதையும் நிரூபித்து, ‘அகில தம: கர்சனம் தர்சனம் ந:’ என்றும், ‘ஆபாத சூடமநபாயிநி தர்சநேஸ்மிந் ஆசாஸநீயம் பரம் ந விபக்ஷஹேதோ:’ என்றும் தாமே உத்கோஷிக்கும்படியான ஏற்றத்தை உண்டாக்கி, அது இனித் தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகச் செய்திருந்த ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகச் சுற்றி,

இத்தால் இந்த க்ரந்தத்தின் விச்வஸநீய தமத்வம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

விமத்நந்-கடைந்தருளி என்றபடி.-அந்த க்ஷீராப்தியைக் கடைவதற்கு தேவர்களும் அஸுரர்களும் இருபக்கங்களிலும் நின்று இழுத்தார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஒருவராகவே கடைந்தமை காட்டப்பட்டதாகிறது.

ஸ்வாது காதால ஹரி தசசதீ நிர்கதம் ரத்ந ஜாதம்

முரமதன குண ஸ்தோம கர்ப்பங்களாய், செவிக்கினிய செஞ்சொற்களாய், தொண்டர்க்கதுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளாய், நாநா கல்லோல நாதானுபவ ரஸ பரீவாஹங்களாய் இருக்குமவைகளான திருவாய்மொழி ஆயிரம் பாட்டுக்களாகிற அலைகளிலிருந்து பகவத் குணங்களாகிற அநர்க்கங்களான ஆயிரத்தி நூற்றுப் பதினொரு ரத்தினங்கள் வெளிப்பட அவற்றில் முக்கியமான 111 குணங்களை (ரத்தினங்களை)-த்ரமிடோபநிஷத் என்னப்படும் திருவாய்மொழி 1102 பாட்டுக்கள் அடங்கியது. பத்துப் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கும் பத்துப் பாட்டுக்களும் பலச்ருதியாக ஒரு பாட்டுமாகப் பதினோரு பாட்டுக்கள் கொண்ட பாகத்தை ஒரு திருவாய்மொழி என்றும், இப்படிப் பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட 110 பாட்டுக்கள் அடங்கிய பாகத்தை ஒரு பத்து என்றும், இப்படிப் பத்துப் பத்துக்கள் சேர்ந்த 1102 (கேசவன் தமரில் மட்டும் 12 குணங்கள்) பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி என்றும் சொல்லுவர்கள். முதல் திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிதமான நிஸ்ஸீமோத்யத் குணத்வம் முதலிய பத்துக் குணங்களால் பரத்வம் என்கிற ஒரு பெரிய குணம் கூறப்படுகிறது. இப்படியே முதல் பத்து திருவாய்மொழிகளினால் சொல்லப்படுகிற பத்து ப்ரதான குணங்களினால் ஸேவ்யத்வமாகிற ஒரு முக்ய குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இப்படிப் பத்துப் பத்துக்களினால் ஏற்பட்ட பத்துக் குணங்களும் சேர்ந்து ஸார தமமான ஓர் அர்த்தத்தைக் குறிக்கிறது. இதுதான்

ச்ரிய:பதியானஎம்பெருமான்தன்னை அடைவதற்குத் தானே காரணம் என்பது.

இப்படிக் குணப்ரதானமான ஆயிரம் ரத்தினங்களையும் பகவத் நாம ஸஹஸ்ரமாய் வைத்துக்கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம் என்று தோன்றுகிறது.

க்ஷீராப்தியோ பக்குவம் செய்யப்படாத பாலாகையினால் அதிலிருந்து உண்டான அம்ருதத்திற்கு மொச்சை வாஸனை இருந்திருக்கலாம். ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்தியோ ‘தேனும் பாலும் அமுதம் ஒத்தே’ என்கிறபடியே ஸ்வாதுதமங்களான வஸ்துக்கள் கலந்தாற் போல் இருக்கிறபடியால் இதிலிருந்து உண்டானவை மிகவும் போக்யமாயிருக்கும் என்பது கைமுதிக ந்யாய ஸித்தம்.

ஆக இப்படித் திருவாய்மொழியிலிருந்து 113 குணங்களாகிற ரத்தினங்களை எடுத்து, அவற்றில் நூறு திருவாய்மொழிகளினால் ப்ரதிபாதிக்கப்பட்டவைகளான நூறு பெரிய ரத்தினங்களையும் ஒவ்வொரு பத்தினால் ஏற்பட்ட முக்ய குணங்களான பத்து ரத்தினங்களையும், ப்ரபந்தம் முழுவதினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸாரதமமாய் நடுநாயகம் போன்ற ஒரு ரத்தினத்தையும் கொண்டு,-க்ரத்நாதி-ஒரு மாலையாகத் தொடுத்தருள்கிறார்.

ஆழ்வார் ‘கோமின் துழாய் முடி ஆதியஞ்சோதி குணங்களே’ என்று நியமித்தருளியதை இப்படி ஆழ்வார் திருவாய்மொழியில் பாட்டுக்கள் தோறும் அனுபவித்த குணங்களையே ரத்தினங்களாக்கி அவற்றை மாலையாக்கி அந்வர்த்தமாக்கிய பாக்யம் ஸ்வாமி தேசிகனுக்கே கிட்டிற்று. இந்த ஹாரத்தை எப்பொழுதும் பாகவதோத்தமர்கள் எவ்வித பயமும் உண்டாகாமல் இருப்பதற்காகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று மேலே பத்தாம் சுலோகத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கனுஸந்திக்கவும்.

இப்பிரபந்தத்தில் காமுகர்களின் நூநப்ரேக்ஷண விரஹ க்லேசாதிகள் அனுஸந்திக்கப் பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? என்கிற ஸாமாந்ய ஜனங்களுடைய ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்து கொண்டு இப்பிரபந்தத்தின் ஏற்றத்தை நிரூபித்தருளுகிறார்.

பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா

பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |

ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா

யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||

பாஞ்சாலியின் அவ‌ய‌த்தின் அழ‌கைக் க‌ண்டு, அத்தால் அப‌ஹ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌த்தை யுடைய‌ ஸ்திரீக‌ள் அந்த‌ அழ‌கைத் தாங்க‌ள் புருஷ‌ர்க‌ளாயிருந்து அனுப‌விக்க‌ வேண்டும் என்கிற‌ ஆசையின் மிகுதியினால் த‌ங்க‌ளைப் புருஷ‌ர்க‌ளாக‌வே பாவித்துக் கொண்டாற் போலே ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் இட‌த்தில் ஸ்திரீக‌ளைப் போல‌வே பார‌த‌ந்த்ர்ய‌த்தை வ‌ஹித்த‌ ஆழ்வாருக்கு உண்டான‌ ப‌க்தியான‌து ச்ருங்கார‌மாக‌ப் ப‌ரிண‌மியா நின்ற‌து. இப்ப‌டி உண்டான‌ ஆசை பாஹ்ய‌ ஸ‌ம்ச்லேஷ‌ம் கிடைக்க‌ வேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விர‌ஹ‌த‌சை உண்டாயிற்று. இத்த‌சையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வ‌த‌ற்கு ஆசார்ய‌ர்க‌ள் தூத‌ர்க‌ளாய் ப்ரார்த்திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். இதுதான் திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும் தூத‌ப்ரேஷ‌ணாதிக‌ளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஆகிலும் வேத‌ங்க‌ள் போலே ஸ‌ம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்ப‌டாதோ? கான‌ ப்ர‌தான‌மாயிருப்ப‌தினால் நிஷேதிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்றே? வேத‌ங்க‌ளைப் போல‌த் தத்வார்த்த‌ங்க‌ளைத் தெரிவிக்கும் ஏற்ற‌ம் இத‌ற்கு உண்டோ? என்கிற‌ ச‌ங்கைக‌ளைப் ப‌ரிஹ‌ரித்த‌ருளுகிறார்.

பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||

பாஷா கீதி: ப்ரசஸ்தா-பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பாஷா ப்ரசஸ்தா-ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.

கீதி: ப்ரசஸ்த:-ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொண்டு போகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத் கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.

பாஷாகீதி: ப்ரசஸ்தா-த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பகவதி வசநாத்பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.

ராஜவச்சோபசாராத்-இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.

ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது-தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,

ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக் கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.

இஹ‌ ப‌ரிஜ‌க்ருஹே பூமிகாபேத‌யோக்யா-இந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் கொண்டு ந‌ம் பூர்வ‌ர்க‌ள் இந்த‌ ப்ர‌ப‌ன்ன‌ வேஷ‌த்திற்கு இவைக‌ள் மிக‌வும் உசித‌ம் என்று இவ‌ற்றை அங்கீக‌ரித்திருக்கிறார்க‌ள் என்று ஆசார்ய‌ர்க‌ளின் அப்யுப‌க‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து.

ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம் இத்யாதி-உத்த‌ரார்த்தத்தில் முனிக‌ண‌ங்க‌ளினால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ளுட‌ன் சேர்ந்த‌ வேத‌ங்க‌ள் எந்தெந்த‌ கார்ய‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்காக‌ ஏற்ப‌ட்ட‌வைக‌ளோ, அவ‌ற்றை எல்லாம் ஆழ்வாருடைய‌ ஸார்வ‌பௌமியான‌ ச்ருதியாகிற‌ உப‌நிஷ‌த்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ர‌ப‌ந்தத்தின் வைல‌க்ஷ‌ண்ய‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று. அங்கு ச்ருதிக‌ளின் க‌ருத்தை அறிய‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளான‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ள் தேவையாயிருந்த‌ன‌. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்ப‌டிப்ப‌ட்ட‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளை எதிர்பாராம‌லே அவ்வ‌ர்த்த‌ங்க‌ளை ச‌ந்தேக‌ம‌ற‌ நிரூபிக்கின்ற‌ன‌ என்கிற‌ விசேஷ‌மும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

இங்கு ச்ருதிக‌ளும் சேர்த்துக் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், “ஸார்வ‌பௌமீ ஸ‌ம்ஹிதா” என்று ஆழ்வாருடைய‌ ப்ர‌ப‌ந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்ப‌தினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹ‌ண‌ம‌ன்று, வேத‌ங்க‌ளைப் போல‌வே துல்ய‌மான‌ ப்ர‌மாண‌ம் என்ற‌தாயிற்று.

இந்த‌ ஏற்ற‌த்தையே வேதாந்தாசார்ய‌ரான‌ ஸ்வாமியும், “மாசில் ம‌ன‌ம் தெளி முனிவ‌ர் வ‌குத்ததெல்லாம் ந‌ம் மாலுக‌ந்த‌ ஆசிரிய‌ர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.

ஆகிலும் வேத‌ங்க‌ள் ருக், ய‌ஜுஸ், ஸாம‌, அத‌ர்வ‌ என்று நாலு பாக‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அவ‌ற்றின் அர்த்த‌ங்க‌ள் ப்ர‌ஹ்ம‌ ஸூத்திர‌ங்க‌ளில் 4 அத்யாய‌ம் 16 பாத‌ங்க‌ளில் விஸ்தார‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அந்த‌ ஏற்ற‌ம் இப்பிர‌ப‌ந்தத்திற்கு எங்ங‌னே உண்டாகும் ? என்கிற‌ ஆக்ஷேப‌த்திற்கு ஸ‌மாதான‌ம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோக‌த்தில் “ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம்” இத்யாதியாக‌ அருளிச் செய்ததை, அதாவ‌து இதிஹாஸ‌ புராணாதிக‌ளுட‌ன் கூடிய‌ ச்ருதிக‌ள் எந்த‌க் கார்ய‌த்தைச் செய்கின்ற‌ன‌வோ – எந்தெந்த‌ அர்த்த‌ங்க‌ளை ப்ர‌திபாதிக்கின்ற‌ன‌வோ – அவைக‌ளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் உபபாதித்த‌ருளுகிறார் – “ஆதௌ சாரீர‌கார்த்த‌ க்ர‌மம்” என்றார‌ம்பித்து.

ஆதௌ₃ ஶாரீரகார்த₂க்ரமமிஹ விஶத₃ம் விம்ஶதிர்வக்தி ஸாக்₃ரா
        ஸங்க்ஷேபோsஸௌ விபா₄க₃ம் ப்ரதயதி ச ரு̆சாம் சாருபாடோ₂பபந்நம் |
ஸம்யக்₃கீ₃தாநுப₃த்₃த₄ம் ஸகலமநுக₃தம் ஸாமஶாகா₂ஸஹஸ்ரம்
        ஸம்லக்ஷ்யம் ஸாமிதே₄யை: யஜுரபி த₃ஶகை: பா₄த்யத₂ர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.

ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா-தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 545 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.

இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி – 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,

ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய் நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ‘ பத்துடையடியவர்’  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி’க்கு முன் (–1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.

இங்கு ’சாரீரகஸூத்ரார்த்த க்ரமம்’ என்று நிரூபிக்காமல் ’சாரீரகார்த்த க்ரமம் ‘ என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. ‘விசதம்’ என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

        முதல் ஸூத்திரத்தில் ஸித்த பரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  ‘யவன் அவன் ’ என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனே’ என்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரணத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது ’உயர்வற உயர் நலமுடையவன்’ என்னப்பட்டது. ’உயர்வற உயர்நலம் உடையவன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. “மயர்வற மதிநலம் அருளினன்”  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.

ஸ்ரஷ்டா – பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதை யில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு ’பொறி உணர்வு அவையிலன்’என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்’ என்னப்பட்டது.

இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது “தேஹீ” என்னப் பட்டது. இது ’இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

’ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், ’நிரவதிமஹிமா’  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை ’அந்நலனுடை ஒருவனை’ என்கிற பாட்டில் காணலாம்.

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள் வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்த விசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது” என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது” என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு’ என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன் எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.

நிர்தோஷத்வாதிரம்ய:’ என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை ‘இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம்’ என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரண த்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் “பற்றிலன்” என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன் கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண் புகழ் நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி” யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி” தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் “இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ……. நிகமிக்கிறார் ” என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ‘ ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ……… .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.

பஹுபஜநபதம்”“ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தி யோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”“அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது “உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

“அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச் செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது ‘ விசதம்’ என்பதுடன் சேராது. ‘விசதம்’ என்பதற்கு விரோதமில்லாமல் “ஸங்க்ஷேபா “ என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத் விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக் குருகைப்பிரான் பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் ‘யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்’ எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்த ச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபயவேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ – இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: –

கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.

வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.

ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் —

அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி “ என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: — உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக். திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,

ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் —ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களை யுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப் படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.

சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.–ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி —-ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு’ என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல் குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும் காலையும் – 8- 6, மாலை நண்ணி -9-10, கண்ணன் கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக் காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.

அதர்வா ரஸைச்ச பாதி-ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.

ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.

மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை.

1 விஷயாதி நிரூபணம்.-இந்த ப்ரபந்தத்திற்கு விஷயம் ஸ்வபாவத்திலேயே வேறு ஒருவருக்கும் இல்லாதவையாய் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே யிருப்பவைகளான எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடைய பகவானே என்பது ‘உயர்வற உயர் நலமுடையவன் ’ என்னப்பட்டது. அப்படிப்பட்ட பகவானுக்கு நிருபாதிக தாஸ பூதர்களான ஜீவாத்மாக்கள் மீட்சியில்லாத வாட்சியைப் பெறுதலே ப்ரயோஜனம் என்பது ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு’ என்று கூறப்பட்டது, அவனை அடைவது உண்மையான ஜ்ஞானத்தினாலே யாகையாலே அந்த ஜ்ஞானத்தை அடைவதும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே என்பது ‘மயர்வற மதி நலம் அருளினன் ‘ என்னப்பட்டது, இப்படி ஸர்வஜ்ஞனான பகவானால் அஜ்ஞான கந்தமில்லாதபடி அருளப் பெற்றவர் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்ட ப்ரபந்தமாகையினாலே இப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்பதும் விச்வஸநீயம் என்பதும் விவக்ஷிதம். இப்படிப் பகவான் அனுக்ரஹிப்பதற்குக் காரணம் அவனுக்கும் தமக்குமுள்ள ஸ்வாமித்வ தாஸத்வமாகையால் ஸம்பந்தம் அர்த்தாத் நிரூபிக்கப் பட்டதாயிற்று. ஆக மதி, நலம், தொழுது என்கிற பதங்களினால் விவக்ஷிதமான பக்தி ப்ரபத்தி களாகிற உபாயங்களும், துயரறு என்பதினால் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியும், எழு என்பதினால் பகவத் கைங்கர்யமாகிற அவாந்தர பலன்களும் என் மனனே என்று தம்முடைய மனது போலே அந்தரங்கர்களான சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை குறிப்பிடப்பட்டு அவர்கள் அதிகாரிகள் என்பதும், விஷயமாகிய பகவானுடன் விஷய விஷயிபாவமும், உத்பாத்ய உத்பாதக பாவமும் ப்ரதி பாதிக்கப்பட்டபடியினால் விஷய ப்ரயோஜன அதிகாரி ஸம்பந்தங்கள் என்னப்படும் அனுபத்தி சதுஷ்டயமும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.

2.மங்களாசரணம்-இந்த ப்ரபந்தத்திற்கு ப்ரதான தாத்பர்யமாய் மற்ற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்ததான பரமாத்மாவை முதலடியிலேயே நிரூபித்திருப்பதினால் வஸ்து நிர்த்தேச மங்களமும், ‘எழு’ என்பதினால் ஆசீர்வாதரூப மங்களமும், ‘நலம் தொழுது’ என்கிற பதங்களினால் நமஸ்காராதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பக்தியாகிற உபாயமும் நமச்சப்தார்த்தமான ப்ரபத்தியாகிற உபாயமும் கூறப்பட்டபடியினால் நமஸ்கார ரூபமான மங்களமும் செய்யப்பட்டதாகிறது. இந்த ப்ரபந்தத்தை லக்ஷ்மீவாசகமென்று ச்ருதி ப்ரஸித்தமான உகாரத்தினால் ஆரம்பித்திருப்பதினால் ‘தேவதா விசேஷம் எதுவென்று தெரிந்து கொள்ளுவதற்கும், அவளுடைய பர்த்தாவாகிய பகவான் நம்மால் அடையப்படுவதற்கும் விசேஷமான மங்களங்களை அடைவதற்கும் இவ்விடத்தில் லக்ஷ்மீ முதலில் சொல்லப் பட்டாள் ” என்று ஸ்ரீ கீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் அருளிச் செய்திருக்கும் விசேஷாம்சங்களும் இங்கு விவக்ஷிதங்கள்.

3 சாஸ்த்ரார்த்தானுக்ரமம்-இந்த ப்ரபத்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் மேலே 6 – ம் 8 – ம் சுலோகத்தின் விவரணத்தில் கண்டு கொள்வது.

4 ப்ரஹ்ம சப்தார்த்தநிரூபணம்-எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்கிற முதலாவது அடியில் ‘உயர்வற’ என்பதினால் இப்படிப்பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது, ஒரு வித தபஸ்ஸு முதலியது செய்ததனுடைய பலனாகப் பெற்றதன்று என்று தெரிவிக்கிறபடியினாலே பகவானுடைய ஸ்வரூபம் ஹேயப்ரத் யகமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்றதாயிற்று,

ப்ரஹ்ம என்னும் பதத்திற்கு மேன்மையையுடைய வஸ்து என்றர்த்தம், அயலாரையும் அப்படியே மேன்மையுடையவர்களாகச் செய்வதும் அதன் உட்பிரிவு ஆகையினால் எந்த வஸ்து மற்ற எல்லா வஸ்துக்களையும் விட உயர்ந்ததோ அது ‘ப்ரஹ்ம’ என்னும் பதத்தினால் சொல்லப்படும். இப்படியே யாஸ்கரும் நிருக்தி செய்திருக்கிறார் என்பது ப்ரஸித்தம். ஆகையினால் விசேஷமான தபஸ்ஸு முதலியவைகளைச் செய்து தங்கள் தங்கள் பதங்களைப் பெற்ற ப்ரஹ்மாதிகளைப் போலன்றிக்கே ஒரு விதமான ச்ரமமின்றியும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட உயர்வு இருக்கிற தென்று சொல்ல முடியாதபடியும் நிற்கும் எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்பதை முதல் பாதத்தில் ‘உயர்வற உயர் நலமுடையவன்’ என்று நிரூபித்திருப்பதனாலும், இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அப்படிப் பட்ட மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுப்பவன் என்று அருளிச் செய்திருப்பதினாலும் திருமாமகள் கேள்வனாகிய தேவனே ப்ரஹ்ம சப்தத்திற்கு முக்யார்த்தம் என்று உபபாதிக்கப்பட்டதாயிற்று.

5– ஸேவ்ய ஸம்சோதனம்-த்யேயமாகிய பரமாத்ம ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டும் அதாவது எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கும் என்கிற முதல் பாதத்தில் “உயர்வற” என்பதினால் இப்படிப் பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது என்று காட்டப்பட்ட தாயிற்று. அன்றிக்கே கீதாசார்யன் “எந்தக் காரணத்தினால் நான் ப்ரக்ருதியையும்,  அத்துடன் சேர்ந்த பத்த ஜீவர்களைக் காட்டிலும் வேறுபட்டவனோ,  பரிசுத்த ஜீவாத்மாக்களையும் விட வேறுபட்டவனோ,  அதே காரணத்தினால் ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று ப்ரஸித்தி பெற்றவனாகிறேன்” என்று உத்கோஷித்த அம்சம் சொல்லப்பட்டதாகவுமாம். ‘மயர்வற’ இத்யாதியால் ஜ்ஞானத்தைக் கொடுத்தருளியவன் என்பதினாலும் ‘அயர்வறும்’ இத்யாதியால் நித்ய முக்தர்களுக்கு அதிபதி என்றதனாலும் இந்த ஏற்றம் காட்டப்பட்டதாகிறது.

6- அர்த்த பஞ்சக நிரூபணம்–இதிஹாஸ புராணங்களுடன் கூடிய வேதங்கள் எல்லாம் பரமாத்ம ஸ்வரூபத்தையும், ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், பகவானை அடைவதற்கு உபாயத்தையும், தடங்கலாய் நிற்கும் ப்ராப்திவிரோதிகளையும், பலனையும் கூறுகின்றன என்பது ப்ரஸித்தம். ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று பரமாத்ம ஸ்வரூபமும், ‘என்’ என்பதினாலே ஜீவாத்ம ஸ்வரூபமும், துயர்’ என்று ப்ராப்தி விரோதியும், ‘நலம், தொழுது’ என்று உபாயத்தின் ஸ்வரூபமும், ‘எழு’ என்று பலனும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன.

7. ப்ர‌ண‌வார்த்த‌ நிரூப‌ண‌ம்–எப்ப‌டி ப்ர‌ண‌வ‌மான‌து எல்லாவேத‌ங்க‌ளிலும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் அர்த்த‌ விசேஷ‌ங்க‌ளையும் உபபாதிக்கிற‌தோ, அதைப்போல‌வே அந்த‌ ப்ர‌ண‌வ‌த்தின் ந‌டு அக்ஷ‌ர‌மாகிய‌ உகார‌த்தின் பொருளாகிய‌ ப‌க‌வானுக்கே சேஷ‌பூத‌ம் என்கிற‌ அந்யயோக‌ வ்ய‌வ‌ச்சேத‌ம், அதாவ‌து ம‌ற்வ‌ர்க‌ளுக்குச் சேஷ‌பூத‌ர்க‌ள‌ல்ல‌ என்ப‌து த‌ன்னைவிட‌ வேறுப‌ட்ட‌ ம‌ற்ற‌ எல்லோர்க்கும் ஸ்வாமி என்று கூறுகிற‌ முத‌ல‌டியினாலும், ம‌கார‌த்தின் பொருளான‌ ஜ்ஞான‌த்தைக் குண‌மாக‌ உடைய‌வ‌ன் ஜீவாத்மா என்ப‌து, “ம‌தி, ந‌ல‌ம்” என்ப‌தினாலும், வேற்றுமையுட‌ன் கூடிய‌ அகார‌த்தின் அர்த்த‌மான‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌னான‌ ப‌ர‌மாத்மாவிற்கே இந்த‌ ஜீவாத்மா சேஷ‌பூத‌ன் என்ப‌து “அய‌ர்வ‌றும்” இத்யாதியாலும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. “அருளினன், துய‌ர‌று” இத்யாதியால் ப‌க‌வான் த‌ன்னுடைய‌ ப‌க்த‌ர்க‌ளுக்கு இஷ்ட‌ ப்ராப்தியையும் அநிஷ்ட‌ நிவ்ருத்தியையும் உண்டாக்குகிறான் என்ப‌து ஏற்ப‌டுகிற‌ப‌டியினால் அகாரார்த்த‌மாகிய‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌த்வ‌ம் ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்ட‌தாகிற‌து.

8. ப‌ர‌ப‌க்ஷ‌ ப்ர‌திக்ஷேப‌ம்- “உய‌ர்வு” என்றார‌ம்பிக்கும் முத‌ல‌டியினால் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளை உடைய‌வ‌ன் என‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், கார‌ண‌ம் ஒன்றும் கூற‌ப்ப‌டாமையினால் இவ‌ற்றை ஸ்வ‌பாவ‌த்திலேயே உடைய‌வ‌ன் என்று ஏற்ப‌டுகிற‌ப‌டியினாலும் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ஒருவ‌ன் ப‌ர‌தேவ‌தை, மும்மூர்த்திக‌ளும் ஸ‌மம், மும்மூர்த்திக‌ளையும் விட‌ வேறுப‌ட்ட‌வ‌ன் ப‌ர‌தேவ‌தை என்றிவை முத‌லிய‌வ‌ற்றைக் கூறுப‌வ‌ர்க‌ளும், ப்ர‌ஹ்ம‌த்தின் ஈச்வ‌ர‌த்வ‌ம் ப்ர‌திபிம்ப‌ம் போன்ற‌து என்று கூறும‌வ‌ர்க‌ளும் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “எவ‌ன்” என்கிற‌ ப‌த‌ம் ப்ர‌மாண‌ங்க‌ளினால் ஏற்ப‌ட்ட‌ ப்ர‌ஸித்தியைத் தெரிவிப்ப‌தினால் ப‌ர‌மாத்மா இல்லை என்னும‌வ‌ர்க‌ள் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌க் குண‌ங்க‌ளினால் ஆன‌ந்த‌வ‌ல்லி ஜ்ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, அத்தால் ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தின் ந‌டுவே இருக்கும் புருஷ‌ன் சொல்ல‌ப்ப‌டுகிற‌ப‌டியினால் நாராய‌ண‌னே ப‌ர‌தேவ‌தை என‌ ள‌ற்ப‌டுகிற‌து. ஆகையினால் ப‌ர‌தேவ‌தை வேறு என்று நிரூபிக்கும் ப‌க்ஷ‌ங்க‌ளெல்லாம் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்ட‌ன‌வாயிற்று.

நலம்மதி, தொழுது” என்கிற பதங்களினால்  ஒர் உபாயத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஏற்படுகிறபடியினாலே கேவலம் வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷ‌ம் பெறலாம் என்கிற பக்ஷ‌மும் – “அருளினன்” என்பதினாலே கொடுப்பவன் வேறு வாங்குமவன் வேறு என்பதும், கொடுத்தது மதியும் நலமும் என்பது ஸித்திக்கிறபடியினாலே ஜஞானம் மாத்திரம் ஆத்மா என்கிற பகடிமும் — அயர்வறும் அமரர்கள் எனப்பன்மையாகக் கூறியிருப்பதினாலே ஆத்மா ஒன்று என்கிற பக்ஷம் மோக்ஷ‌த்தில் பரமாத்மாவுடனே  ஐக்யமடைகிறது என்னும் பக்ஷ‌மும், ஆத்மா ஸ்வதந்த்ரன் எனும் பக்ஷமும் — அடி என்பதினால் திவ்ய மங்கள விக்ரஹம் ஸித்திக்கிற படியினாலே பகவானுக்கு ரூபமில்லை எனும் பக்ஷமும் — லக்ஷ்மீ வாசகமான உகாரத்தினால் இந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதினால் ல‌க்ஷ்மீ விசிஷ்டத்வம் ஸித்திக்கிறபடியினால் அதை அங்கீகரியாத பக்ஷங்களும் நிராகரிக்கப்பட்டனவாயிற்று.

9 பராரம்ப நிவாரணம்-பர ப்ரஹ்மம் நிர்க்குணமென்று சொல்லுமவர்கள் அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன் என உபபாதிக்கும் இக்ரந்தத்தை ஆரம்பிக்கமுடியாதல்லவா என்று கருத்து. எவன் என ப்ரஸித்தியைக் காட்டுகிற இந்த க்ரந்தத்தை ப்ரஹ்மம் ஒன்றினாலும் அறியமுடியாத தென்ற‌வர்களும், ப்ரஹ்மமே இல்லையென்ப‌வ‌ர்க‌ளும் ஆரம்பிக்கமுடியாதல்லவா ? …

10 ஸ்வாரம்ப‌ ஸ‌மர்த்தன‌ம்-பகவான் எல்லாக் கல்யாண‌ குணங்களையும் உடையவனாகையினால் அவனைப் பற்றிய ஜ்ஞானம் ஸார்வபெளமனான பிதாவைப் பற்றிய ஜ்ஞானத்தைப் போல மிகவும் விரும்பத்தக்கதாகும். அப்படிப்பட்ட ஜ்ஞானத்தினால் பகவானிடத்தில் ப்ரீதியுண்டாகி, அவனை அடைய வேண்டுமென்கிற ஆசைபை உண்டாக்கி, அதற்கு உபாயமான பக்தியையோ ப்ரபத்தியையோ அனுஷ்டித்து, மோக்ஷ‌த்தை அடையலாம் என்றும், பகவானுக்குத் திவ்ய ரூபாதிகள் உண்டென்றும் நிரூபிக்கும் இக்ரந்தம் ஆரம்பணீய‌ம் என்றதாயிற்று,

ஆக இப்படி எல்லா வேதங்களும் சேர்ந்து செய்யும் பகவானுடைய ஸ்வபாவம் ஸ்வரூபம் முதலியவைகளின் ப்ரகாசத்தை இத் திருவாய்மொழி விசதமாக நிரூபிக்கிறது என்கிற அம்சம் ஒருவாறு உபபாதிக்கப்பட்டது.

         இப்படி ஸ‌கல வேத‌ங்க‌ளினுடைய‌ க்ருத்ய‌ங்க‌ளையும் செய்கிறது என்று நிரூபித்த‌ருளி, மேல்  ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்டிருக்கும் அர்‌்த்த‌ங்க‌ளை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ அருளிச் செய்கிறார் – “ப்ராச்யே” என்றார‌ம்பித்து

ப்ராச்யே ஸேவாநுகு₃ண்யாத் ப்ரபு₄மிஹ ஶதகேsமம்ஸ்த முக்தேருபார்யம்

முக்தப்ராப்யம் த்₃விதீயே முநிரநுபு₃பு₃தே₄ போ₄க்₃யதா விஸ்தரேண |

ப்ராப்யத்வோபாயபா₄வௌ ஶுப₄ஸுப₄க₃தநோரித்யவாதீ₃த் த்ரு̆தீயே

அநந்யப்ராப்யஶ்சதுர்தே₂ ஸமப₄வதி₃தரைரப்யநந்யாத்₃யுபாய: ||

ஆழ்வார் இத்திருவாய்மொழியில் முத‌ல் ப‌த்தில் ப‌க‌வானை அடியார்க‌ள் வ‌ந்த‌டைய‌த் த‌குதியுள்ள‌மையால் மோக்ஷ‌த்திற்கு உபாய‌மென‌த் திருவுள்ள‌ம் ப‌ற்றினார். இர‌ண்டாம் ப‌த்தில் அவ‌னுடைய‌ போக்ய‌த்வ‌த்தின் மிகுதியாலே முக்த‌ர்க‌ளினாலே அடைய‌ப்ப‌டும‌வ‌னாக‌ நிர்ண‌யித்த‌ருளினார். மூன்றாம் ப‌த்தில் ப‌ல‌னாயும் அத‌ற்கு உபாய‌மாயும் இருக்கும் த‌ன்மைக‌ள் சுபாச்ர‌ய‌மான‌ திருமேனியுடைய‌ எம்பெருமானுக்கே என்று அருளிச் செய்தார். நான்காம் ப‌த்தில் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ப‌ல‌னைக் கொள்ளாத‌வ‌ராக‌வும், ம‌ற்ற‌ ஆறு ப‌த்துக்க‌ளினால் ப‌க‌வானைய‌ன்றி வேறொன்றை உபாய‌மாகக் கொள்ளாத‌வ‌ராக‌வும் ஆனார்.

திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் முக்ய‌மான‌ அர்த்தத்தை வெளியிடுகிறார் — “தேவ‌:” என்றார‌ம்பித்து.

தே₃வ: ஶ்ரீமாந் ஸ்வஸித்₃தே₄: கரணமிதி₂ வத₃ந்நேகமர்த்த₂ம் ஸஹஸ்ரே

ஸேவ்யத்வாதீ₃ந் த₃ஶார்த்தா₂ந் ப்ரு̆த₂கி₃ஹ ஶதகை: வக்தி தத்ஸ்தா₂பநார்த்தா₂ந் |

ஐகைகஶ்யாத் பரத்வாதி₃ஷு த₃ஶககு₃ணேஷ்வாயதந்தே ததா₂ தே

தத்தத்₃ராதா₂கு₃ணாநாமவித₃த₄தி தத்பங்க்தய: பங்க்திஸங்க்₂யா: ||

ஆயிர‌ம் பாட்டுக்க‌ளையுடைய‌ இத்திருவாய்மொழியில் பெரிய‌ பிராட்டியை ஒரு க்ஷ‌ண‌ கால‌ம் கூட‌ப் பிரியாத‌ எம்பெருமான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌மாவான் என்னும் ஒரே அர்த்தத்தை அருளிச் செய்கிற‌வ‌ராய், அதை ஸாதிக்கக்கூடிய‌ ஸேவ்ய‌ன் (அடைய‌த் த‌குந்த‌வ‌ன்) முத‌லிய‌ ப‌த்து அர்த்த‌ங்க‌ளைப் ப‌த்துப் ப‌த்துக்க‌ளிலும் த‌னித்த‌னியாக‌ அருளிச் செய்கிறார். அந்த‌ப் ப‌த்து அர்த்த‌ங்க‌ளும் எல்லோரிலும் எல்லாவ‌ற்றிலும் மேற்ப‌ட்டிருக்கும் த‌ன்மை முத‌லிய‌ நூறு குண‌ங்க‌ளில் ஒவ்வொன்றாக‌ விரிவ‌டைகின்ற‌ன‌. அவ்வாறே ப‌த்து எண்க‌ளை உடைய‌ ப‌த்தாகிய‌ நூறு ப‌திக‌ங்க‌ளால் வெளியிட‌ப்ப‌டும் நூறு குண‌ங்க‌ளும் ஆயிர‌ம் எண்ணுள்ள‌ அந்த‌ந்த‌ப் பாசுர‌ங்க‌ளின் குண‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

தேவ‌:ஸ்ரீமாந் –பெரிய‌பிராட்டியாருட‌ன் கூடின‌வ‌னாகையால் தேவ‌னான‌வ‌ன் என்ற‌ப‌டி. “திருமாம‌க‌ள் கேள்வா தேவா” என்ற‌ப‌டியினால் திருமாம‌க‌ளுக்குக் கேள்வ‌னாகையாலே இவ‌னுக்கு தேவ‌த்வ‌ம் ஸித்தித்தது என்று திருவுள்ள‌ம். இவ‌ள் ஸ‌ம்ப‌ந்த‌ம் பெறாமையால் ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளைப் ப‌ர‌தேவ‌தை என்று கூற‌ ப்ர‌மாண‌ங்க‌ள் முன்வ‌ர‌வில்லை. இவ‌ளுடைய‌ ச‌ம்ப‌ந்தத்தைப் ப‌ல‌ இட‌ங்க‌ளில் திருவாய்மொழியில் கூறியிருந்த‌போதிலும் ப‌ர‌தத்துவ‌ ப்ர‌திபாத‌க‌மான‌ “ஒண்டொடியாள் திரும‌க‌ளும் நீயுமே நிலா நிற்ப‌, கோல‌த்திருமாம‌க‌ளோடு உன்னை, நின் திருவ‌ருளும் ப‌ங்க‌ய‌த்தாள் திருவ‌ருளும்”, “உன் தாம‌ரைம‌ங்கையும் நீயும்”, “அக‌ல‌கில்லேன் இறையும் என்ற‌ல‌ர்மேல் ம‌ங்கை உறைமார்பா” என்றிவை முத‌லிய‌வை இங்க‌னுஸ‌ந்தேய‌ங்க‌ள். இந்த‌ ஒரு அர்த்தத்தைத்தான் ஸ்வாமி தேசிக‌ன் த‌ம‌க்கும் த‌ம் சிஷ்ய‌ர்க‌ளுக்கும் த‌ஞ்ச‌மாகக் க‌ருதினார் என்ப‌தை அவ‌ருடைய‌ அனேக‌ ப்ர‌ப‌ந்த‌ங்க‌ளில் காண‌லாம். தேவ‌:ஸ்ரீமாந் என்ப‌த‌ன் க‌ருத்து இப்ப‌த‌ங்க‌ளினாலோ இவ‌ற்றுக்கு ஸ‌த்ருச‌மான‌ ப‌த‌ங்க‌ளினாலோ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. ஸ்ரீஹ‌ம்ஸஸ‌ந்தேச‌த்தில் “தேவ‌:ஸ்ரீமாந்என்ற‌ ப‌த‌ங்க‌ளையே உப‌யோகித்த‌ருளினார். “ச்ரிய‌:ப‌தி புருஷோத்த‌ம‌ன்” என்று ஸாரார்த்த‌மாக‌ அருளிச் செய்ய‌ப் ப‌ட்டிருக்கிற‌து. “தேவ‌:ஸ‌ஹைவ‌ச்ரியா” என்று த‌சாவ‌தார‌ ஸ்தோத்திர‌த்திலும், “ஸ்ரீம‌த்நாராய‌ண‌:” என்று ஸ்ரீந்யாய‌ ஸித்தாஞ்ஜ‌ன‌த்திலும் ,”த‌ம்ப‌தீ ஜ‌க‌தாம்ப‌தீ”, “போத‌ம‌ரும் திருமாதுட‌ன் நின்ற‌ புராண‌னையே”, “ஸ‌ந்த‌:ஸ்ரீச‌ம் ஸ்வ‌த‌ந்த்ர‌ ப்ர‌ப‌த‌ன‌ விதிநாமுக்த‌யே நிர்விச‌ங்கா:” என்று ஸார‌ சாஸ்திர‌த்திலும், ஸ்ரீத‌யாச‌த‌க‌த்திலும், ஸ்ரீஸ‌ங்க‌ல்ப‌ ஸூர்யோத‌ய‌த் திலும் இந்த‌ ஆகார‌ம் ப‌ர‌க்க‌ப் பேச‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஸ்வ‌ ஸித்தே:க‌ர‌ண‌ம் இதி வ‌த‌ந் ஏக‌ம‌ர்த்த‌ம் – த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்கிற‌ ஒரே அர்த்தத்தை நிரூபியா நிற்கும்.

ப்ர‌ப‌ந்தத்தின் ந‌டுவில் ப்ர‌ப‌ந்த‌ ஸாரார்த்தத்தை நிரூபிப்ப‌து என்ப‌து ஓர் வ‌ழ‌க்கு. ஸ்ரீகீதையில் ஒன்ப‌தாம் அத்யாய‌த்தின் இறுதி ச்லோக‌த்தில் உபாய‌மான‌ ப‌க்தி யோக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து.

திருப்பாவையில் 15ம் பாட்டில் பாகவதர்களின் பெருமை பேசப்பட்டது. ஒரு காரணமுமின்றியே சில பாகவதர்கள் நம் விஷயத்தில் அந்யதாவாகத் திருவுள்ளம் பற்றினாலும் நாம் அதற்காக அபசாரக்ஷாமணம் செய்துகொள்ளவேண்டும் என்று.இப்பாட்டில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதைப்போல் திருவாய்மொழியிலும் ஐந்தாம் பத்தின் இறுதியில் ஆழ்வார் தாம் தஞ்சமாக நினைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்.

‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறும் ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்’ என்பது ஆழ்வாரின் அனுஸந்தானம். இதன் திருவாறாயிரப்படியில் ‘எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குச் சரணம் என்று நாள் தோறும் இதொரு மனோரதமே உடைய ஆழ்வார் ………. இப்பத்தும் கற்றார் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் எம்பெருமானை நித்யானுபவம் பண்ணப் பெறுவர்’ என்று வ்யாக்யாநம். ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதே உத்தமமான உபாயம் என்றும், அதை த்வயத்தினால் அனுஷ்டிக்கவேண்டும் என்றும் நம் பூர்வாசார்யர்கள் நிஷ்கர்ஷித்திருக்கிறார்கள். உபாயம் அனுஷ்டிப்பதற்கு முன் பெரியபிராட்டியாரிடம் புருஷகாரமாயிருக்கும்படி ப்ரார்த்திக்கவேண்டும். இது முதல்படி. அவளுடன் கூடிய பகவானுடைய திருவடிகளில் சரணாகதியைச் செய்வது இரண்டாவது படி. ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அர்ச்சிராதி கதியினால் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திவ்ய தம்பதிகளான அவர்களுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்வது மூன்றாவது படி. புருஷகாரமாயிருக்கும் ஆகாரம் பெரிய பிராட்டியாருக்கு மட்டும் அஸாதாரணம். உபய தசையிலும் உபேய தசையிலும் அவர்கள் இருவருடைய சேர்த்தியே நமக்குத் தஞ்சம் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளமென அறிந்து ஆசார்யன் தம்முடைய பரம க்ருபையினாலே இங்கு இப்படி ஸங்க்ரஹித்தருளிச்செய்தாராயிற்று.

உபாய ப்ரதிபந்தகங்களான பாபங்களைப் பகவானைப் போலவே பிராட்டியும்போக்குகிறாள் என்பது ‘வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ (4 – 5 – 11) என்று அருளிச் செய்யப்பட்டது. ‘இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸ்மஸ்த துக்கங்களையும் பகவதாச்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணைகபோயான பெரியபிராட்டியார் போக்கும்’ எனத் திருவாறாயிரப்படியிலே வ்யாக்யாநம்.

ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்பாட்டில் ஆழ்வார் ஸ்வானுஷ்டான முகமாக சரணாகதி செய்யும் ப்ரகாரத்தை நிரூபித்தி ருக்கிறார். அது த்வய விவரணமென்பது ஸம்ப்ரதாயம்.

உலகமுண்ட பெருவாயா ( 8 – 10 ) திருவாறாயிரத்தின் அவதாரிகையில் ‘இப்படி திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே, இனி அவனைக்காண்கைக்கு உபாயம் இவன் திருவடிகளைச் சரணம் புகுகை போக்கி மற்றென்று மில்லை என்று பார்த்து, இவனுடைய காருண்ய வாத்ஸல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டு பிராட்டி புருஷகாரமாக ஸர்வலோக சரண்யனான திருவேங்கடமுடையான் திருவடிகளைச் சரணம் புகுகிறார்’ என்றும், அகலகில்லேன் பாட்டு அவதாரிகையில் ” உன் திருவடிகளை அநந்ய சரணனான அடியேன் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாகச் சரணம்புகுந்தேன். இப்போதே நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகனாய் உன் திருவடிகளிலே ஸர்வ காலமும் ஸர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெறவேணும் ” என்றும், இதனுடைய வ்யாக்யானமான 24000 படியில் ‘இங்கு பிராட்டிக்குப் புருஷகாரத்வம் சொன்னது இவளுடைய ஸித்தோபாய விசேஷண பாவத்திற்கும் உபலக்ஷணம் அல்லது அவ் விசேஷண பாவத்தை வ்யவச்சேதித்தபடியன்று. த்வயத்திலும் த்வய விவரணமான கத்யத்திலும் இப்பாட்டிலும் இவளுக்கு ஸித்தோபாய விசேஷணத்வம் சப்தஸ்வாரஸ்யத: ப்ராப்த மாயிருக்கையாலே அத்தை இங்கே வ்யவச்சேதிக்கக்கூடாதிறே. ஆகையால் இவ்விசேஷண பாவத்தை எடாதே புருஷகாரபாவத்தை எடுத்தது எம்பெருமானிற் காட்டில் இவளுக்குள்ள ஏற்றம் சொல்லுகைக்காகவத்தனை’ என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது,

இப்படிக் கொள்ளாவிட்டால் ‘பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ‘ஸமஸ்த துக்க’ என்றதுடன் விரோதிக்கும். ப்ரஹ்மசர்ய வேஷத்தைப் பூண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திற்குச் சென்ற காலத்திலும் அவனுடைய திருமார்வத்தை விட்டு அகலாதவள் இப்பொழுது தன்னுடைய தாஸபூதன் சரணாகதி செய்யும் ஸமயத்தில் எங்கு சென்றாள், ஏன்சென்றாள் என்றால் ஸமாதானம் சொல்லமுடியாதன்றோ?

இத்திருவாய்மொழியின் நாலாம் பாட்டிலும் ‘திருமாமகள் கேள்வா! தேவா’ என்று இவளுடைய ஸம்பந்தத்தால் அவன் ஏற்றம் பெற்றமை கூறப்பட்டிருக்கிறது,

இந்தத் திருவாய்மொழியின் நிகமனப்பாட்டிலும் ‘அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை’ என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே ‘தேவ: ஸ்ரீமாந்………ஏகமர்த்தம்’ என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது.

இந்த ஒரு அர்த்தத்தை ஸ்தாபிப்பதற்காகப் பத்துப் பத்துக்களிலும் அவன் ஸேவ்யன்அதிபோக்யன் என்றிவை முதலாகப் பத்து அர்த்தங்களையும், அப்படியே அவன் ஸேவ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பரம்நிர்வைஷம்யம் என்னும் பத்துக்குணங்களையும், அந்தப் பரத்வத்தை ஸ்தாபிப்பதற்காக நிஸ்ஸீமோத்யத்குண‌த்வம், அமிதரஸத்வம் முதலிய பத்துக் குணங்களையும் அனுஸந்தித்தருளினார் என்றபடி. அதாவது திருவாய்மொழியில் பல ச்ருதியான நூறு பாட்டுக்களை விட்டு விட்டால் 1002 பாட்டுக்கள் உள. இவை ஒவ்வொன்றிலும் ஒரு குணமாக 1002 குண‌ங்களும், இவைகளில் பத்துப் பத்துக் குணங்களினால் 100 திருவாய்மொழிகளில் 100 குணங்களும், இந்த 100 குணங்களில் பத்துப் பத்துக் குணங்களாகப் பத்துப் பத்துக்களில் 10 குணங்களுமாக 1112 குணங்கள் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி எல்லா வேதங்களும் பகவானுடைய ப்ராப்ய‌த்வ‌த்தையே கூறுகின்றனவோ, அப்படியே ஸர்வீய சாகையான‌ ஸ்ரீத்ரமிடோபநிஷத்தில் அவன் ப்ராப்ய‌ன் மாத்திரமல்லன்,ப்ராபகனும் அவனே என்றும், அப்படி ப்ராப்யனுமாய் ப்ராபகனுமாய் இருக்கும் ஆகாரம் திருமாமகளுடன் சேர்ந்து நிற்பவனுக்கே என்றும் ஆழ்வார் இத்திருவாய் மொழியில் உபபாதித்தருளினார் என்று ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய தமிழ்மறைகள் தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிந்தவரான சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு நிஷ்கர்ஷித்தருளினாராயிற்று.

இந்த ச்லோகத்திற்கு இப்படி அர்த்தம் என்று நிர்வஹித்தருளிய அஸ்மத் ஸ்வாமி, ஓருருவில் உபய வேதாந்தங்களைப் போலே ப்ரமாண‌ தம‌மாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகீதோபநிஷத்திலும் இவ்வர்த்தமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பது ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்தில் பரப்ரஹ்மமே ப்ராப்யமாகையால் அந்தப் பரப்ரஹ்ம‌ம் நாராயணனே என “நாராயண: பரம்ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே ஸமீரித” என்று அருளிச்செய்தார். இதின் மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய ஸ்ரீகீதார்த்த ஸ‌ங்க்ரஹப் பாட்டில் இந்த ச்லோகத்தின் கருத்தை “அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரம‌ம் திருமகளோடு வரும் திருமால் என்று தானுரைத்தான் தருமமுகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே ” என்று அருளிச் செய்திருப்ப‌தைப் பராமர்சித்தால் இவ்வர்த்தம், அதாவது ச்ரிய:பதியான பகவானே பரப்ரஹ்மம் என்னுமர்த்தம் தாம் கூறுவதொன்றன்று, இது ஸ்ரீகீதாசார்யனாலே சொல்லப்பட்டது என்றேற் படுகிறது. தத்துவார்த்தம் இப்படியிருக்க இந்த லோகத்தில் இப்பொழுது இதற்கு மாறாகப் பலர் பலபடிகளில் கூறிப் பரம பலத்தைத் தாங்களும் பெறாமல் போவதுடன் தங்களை ந‌ம்பியிருப்பவர் களுக்கும் அது கிட்டாமலிருக்ககும்ப‌டி செய்கிறார்க‌ளே, ஐயோ! க‌லியின் கொடுமை! “ என்று க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றும்ப‌டியாய் இருந்தது.

இப்ப‌டிக் கீழ் சுலோக‌த்தில் இந்த‌ ப்ர‌ப‌ந்தத்தில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் ப்ர‌தான‌த‌மமான‌ அர்த்த‌விசேஷ‌ம் ச்ரிய‌:ப‌தியான‌ எம்பெருமான் த‌ன் திருவ‌டிக‌ளை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்று அருளிச்செய்து, அது திருவாய்மொழியில் ப‌த்து த‌ச‌க‌ங்க‌ள், நூறு திருவாய்மொழிக‌ள், ஆயிர‌ம் பாட்டுக்க‌ள், இவைக‌ளால் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. மேல் சுலோக‌த்தில் இந்த‌ அர்த்தத்தையே அனுவ‌தித்துக்கொண்டு, ப‌த்துப் ப‌த்துக்க‌ளினாலும் இவ்வ‌ர்த்த‌ம் உபபாதிக்க‌ப்ப‌டுகிற‌ப‌டியை அனுஸ‌ந்தித்த‌ருளுகிறார் – “ஸேவ்ய‌த்வாத்” என்றார‌ம்பித்து.

ஸேவ்யந்வாத் போ₄க்₃யபா₄வாத் ஶுப₄தநுவிப₄வாத் ஸர்வபோ₄க்₃யாதி₄கத்வாத்

ஶ்ரேயஸ்தத்₃தே₄நுதா₃நாத் ஶ்ரிதவிவஶதயா கா₂ஶ்ரிதாநிஷ்டஹ்ரு̆த்தவாத் ।

ப₄க்தச்ச₂ந்தா₃நுவ்ரு̆த்தே: நிருபதி₄கஸுஹ்ரு̆த்₃பா₄வத: ஸத்பத₃வ்யாம்

ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்₃தே₄: ஸ்வயமிஹ கரணம் ஶ்ரீத₄ர: ப்ரத்யபாதி₃ ।|

ஸேவ்யத்வாத் – பகவானே ஸேவிக்கப்படத் தகுந்தவனாயிருப்பதாலும்,போக்யபாவாத் — – அவ‌னே அனுபவிப்பதற்கு ஏற்றவனாகையாலும், சுபதனுவிபவாத் – மங்களமான திருமேனியின் பெருமையினாலும், ஸர்வபோக்யாதிகத்வாத் – போக்யங்களான எல்லாவற்றிற்கும் மேற்பட்ட போக்யனாயிருப்பதினாலும், ச்ரேய: தத்ஹேதுதாநாத் – புருஷார்த்தத்திற்கும், அதன் உபாயத்துக்கும் காரணமாய் நிற்பதாலும், ச்ரிதவிவசதயா – – ஆச்ரிதர்களுக்குப் பரதந்த்ரனாய் இருப்பதினாலும், ஸ்வாச்ரிதாநிஷ்ட ஹ்ருத்த்வாத் – தன் அடியார்களின் அதிஷ்டங்களைப் போக்குமவ னாகையாலும்,பக்தச்சந்தானுவ்ருத்தே: -அடியார்களின் கருத்தைத்தான் தழுவி நடப்பதினாலும், நிருபதிக ஸுஹ்ருத்பாவத: – காரணம் இது என்று நம்மால் அறுதியிட முடியாதபடி தோழனாய் நிற்பதினாலும், ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச – சிறந்த (அர்ச்சிராதி) மார்க்கத்தில் துணை நிற்பதினாலும், இஹ — திருவாய்மொழியாகிற இந்தப்ரபந்தத்தில், ஸ்ரீதர: – ச்ரிய:ப‌தியான ஸர்வேசுவரன், ஸ்வஸித்தே: – தன்னைப் பெறுவதாகிற பலனுக்கு, ஸ்வயம் – தானே, கரண‌ம் – ஸாதனம் என்று, ப்ரத்யபாதி – விளக்கப் பட்டுள்ளான்.

இந்தப் பத்துக் காரணங்களையும் (அர்த்தங்களையும்) முதல் பாட்டிலேயே ஸ‌ங்க்ரஹமாக நிரூபித்துள்ளார். எங்ஙனே என்னில் :

ஸேவ்யத்வாத்-அயர்வறும் அமரர்கள் அதிபதி,–அருளினன், அடிதொழுது

போக்யபாவாத்-உயர்வற உயர்நலம் உடையவன்

சுபதநுவிபவாத்-சுடர் அடி – திருவடி திவ்யமங்கள விக்ரஹத்திற்கு உப‌லக்ஷணம்

ஸ்வரபோக்யாதிகத்வாத்–அயர்வறும் அமரர்கள் அதிபதிஎன்பதினால் பகவான் நித்யஸூரிகளும் முக்தர்களும் எப்பொழுதும் அனுப‌வித்துக் கொண்டிருப்பது ஏற்படுகிற‌ப‌டியினால் அவனுடைய அதிபோக்யத்வம் கூறப்பட்டதாகிறது:

ச்ரேய:தத்ஹேதுதாநாத்-மதிநலம் அருளினன்

ச்ரிதவிவசதயா  -அடிதொழுது எழும்படி அவன் அவதார தசைகளில் ஸேவை ஸாதிக்கிருன் என்றபடி

ஸ்வாச்ரிதா நிஷ்டஹ்ருத்த்வாத்-துயர் அறு

பக்தச்சந்தாதுவ்ருத்தே-அயர்வறும் அமரர்கள் அதிபதி – ஸூரிக‌ளுடைய‌ அதிபதியாயிருந்த போதிலும், பக்தன் இஷ்ட ப்ரகாரம் தான் நடந்து கொள்ளுகிறான் என்றபடி

நிருபதிகஸுஹ்ருத்பாவ -ம‌திநலம் அருளினன்

ஸ‌த்ப‌த‌வ்யாம் ஸாஹாய்யாச்ச-அயர்வறும் அமரர்கள் அதிபதி ப‌க‌வ‌ான் நித்யஸூரிகளுக்கு நாத‌னாகையாலே அவனுடைய ஆஜ்ஞையை சிரஸா வஹித்து அர்ச்சிஸ் முதலிய ஸூரிகள் முக்தாத்மாவை அர்ச்சிராதி மார்க்கத்தில் எழுந்தருள‌ப் பண்ணுகிருர்களே யாகிலும் ப‌க‌வ‌ான் அக்காலத்தில் அவர்க‌ளுக்கு அந்தர்யாமியாக இருந்து கூட‌ வழி நடத்துகிறான் என்பதும்: வைகுண்ட லோகத்தை அடைந்ததும் ஸூரிகளுடைய பலவித ஸ‌த்கார‌ங்களான பிறகு, பெரிய பிராட்டியார் மூலமாகவும், அதுவும் போதாது என்றுகொண்டு “வந்து அவர் எதிர் கொள்ள” என்கிறபடியே பகவான்தானே வந்து எதிர்கொள்ளுகிறான் என்பதும் இங்கு விவக்ஷிதம்.

இப்ப‌டி ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்னும் அர்த்தத்தைஇர‌ண்டு சுலோக‌ங்க‌ளினால் உபபாதித்த‌ருளி, அந்த‌ ஸேவ்ய‌த்வ‌ம் முத‌லிய‌ ப‌த்துக் குண‌ங்க‌ளையும் ப்ர‌திபாதிக்கும் க்ர‌ம‌த்தை நிரூபிக்கக்கோலி, அதை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ ஒரு ச்லோக‌த்தில் அருளிச் செய்கிறார் —- “ப்ரூதே” என்றார‌ம்பித்து.

ப்₃ரூதே கா₃தா₂ ஸஹஸ்ரம் முரமத₂நகு₃ணஸ்தோமக₃ர்ப₄ம் முநீந்த்₃ர:

ப்ரத்யேகம் சாத்ர கா₃தா₂: ப்ரதி₂தவிபு₄கு₃ணா: ஸ்பஷ்டமத்₄யக்ஷயாம: |

தத்ராஸங்கீர்ணதத்தத் த‌3ஶககு₃ணஶதஸ்தா₂பநௌசித்யயுக்தாந்

ஐத₃ம்பர்யாவருத்₃தா₄நக₃ணிதகு₃ணிதாந் தத்₃கு₃ணாந் உத்₃க்₃ரு̆ணீம: ||

முநீந்த்ர: – முனிவர்களுள் தலை சிறந்து நிற்கும் ந‌ம்மாழ்வார், காதாஸஹஸ்ரம் – ஆயிரம் பாசுரங்களையும், முரமதனகுண‌ ஸ்தோம கர்ப்பம் – எம்பெருமானுடைய திருக்கல்யாண‌ குண‌ங்களின் கூட்டங்களைத் தம்முள் பொதிந்து கொண்டிருக்குமாறு, ப்ரூதே – அருளிச் செய்கிறர். அத்ரச – இத்திருவாய்மொழியில், காதா-பாசுரங்களை, ப்ரத்யேகம் – ஒவ்வொன்றும், ப்ரதிதவிபுகுணா:- எம்பெருமானுடைய குணங்களை வெளிப்படுத்துவனவாக, ஸ்பஷ்டம் – தெளிவாக, அத்ய க்ஷ‌யாம– கண்கூடாகக் காண்கிறோம், தத்ர – அதில், அஸ‌ங்கீர்ண தத்தத் தசககுணசத ஸ்தாபந ஔசித்ய யுக்தாத் – கூறியது கூறாத அந்தந்தப் பதிகங்களின் நூறு குணங்களை ஸ்தாபிப்பதில் பொருத்தமுடையனவாய், ஐதம்பர்யாவ்ருத்தாத் – அக் கருத்தையே வற்புறுத்துதலில் நோக்கமுடையனவாய், அகணித குணிதாத் – மறுமுறை கூறப்பட்டன வாயினும், (ப்ரயோஜனமுடையதாகையினாலே குற்றமற்றனவான), தத் குணாந் – அந்தந்தப் பாசுரங்களில் விளக்கப்படும் குணங்களை, உ.த்க்ருணீம – எடுத்துக் கொள்ளுகிறோம்..

இந்த ப்ரதிஜ்ஞை மேல் பதினோராம் சுலோக்ம் முதல் ப்ரதிப்ாதிக்கப்பட்டிருக்கும் ப்ரகாரம் மேலே திருவாய்மொழிதோறும் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சிற்சில குணங்கள் மறுபடியும் கூறப் பட்டிருந்தபோதிலும் அந்தத் திருவாய்மொழி ப்ரகரணத்திற்கு ப்ரயோஜனமாயிருப்பதினால் அவைகள் ஸங்க்ரஹிக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்து. கீழ் இரண்டாம் சுலோகத்தில் உபபாதிக்கப் புட்டிருக்கிற‌படியே திருவாய்மொழியாகிற திருப்பாற்கடலை ஆசார்ய ஸார்வபெளமன் தம்முடைய அநிதரஸாதாரணமானதும் அத்யுத்க்ருஷ்டமென்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஜ்ஞானத்தை ம‌த்தாக நாட்டி, யதிவரனார் மடைப்பள்ளி வந்த மண‌மாகிற யதிராஜமஹாநஸ ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாக் கொண்டு கடைந் தருளின பொழுது உண்டான குண விசேஷம் ஒவ்வொன்றையும் ஒரு ரத்னமாகக்கொண்டு அவற்றை எடுத்து ஒரு மாலையாகச் சேர்க்கும்பொழுது அந்தந்த ப்ரதான குணங்களை ப்ரதிபாதிப்பதில் உபயோகமிருப்பதினால் புனருக்தமேயாகிலும் மறுபடியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுலோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும்பொழுது அஸ்மத் ஸ்வாமி “ஸ‌ர்வந்த்தர ஸ்வதந்த்ரராகையாலே தட்டானாயிருந்து ரத்னஹாரம் செய்தருளினபடி இது, எப்படி ஒரு தட்டான், ஒரு உத்தமமான ஹாரத்தைச் செய்யும்பொழுது, பல வகைகளான ரத்னங்களைச் சேகரித்து, அவற்றைப் பிரித்து, தன் முன் பல ரகங்களாக வைத்துக் கொண்டு, ஹாரத்திற்குப் பொருத்தமான பச்சை சிவப்பு வெள்ளை மஞ்சள் முதலிய கற்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டுவனோ, அதைப்போலவே திருவாய்மொழிப் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்ட குணங்கள் ஸ்வாமி தேசிகனுக்குத் முன்பே மானஸமாகத் தோன்ற, அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, ஒருமாலையாகக் கோக்கிருர் என்பது இங்கு விவக்ஷிதமாகும்” என்று நிர்வஹித்தருளும்படி இருந்தது.

இப்படித் திருவாய்மொழியினுடைய தாத்பர்யத்தை வெளியிடுகிற‌ இந்த ஸ்ரீத்ரமிடோப நிஷத் தாத்பர்யர‌த்னாவளியானது ஸந்த்வஸ்தர்கள் எல்லோராலும் தரிக்கப்பட வேண்டியது என்று அருளிச் செய்து உபோத்காதத்தை உபஸம்ஹாரம் செய்தருளுகிறார்.

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: —தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 68-ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் — இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையை யுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ —தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ —காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 – ம் அத்யாயம், 68-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் ‘கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித” என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா ” என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

தத்தாத்ருக்” என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப் போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும் பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ‘ என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

தத்தாத்ருக்ஸர்வீயசாகா என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்” ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை ‘தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா’ என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதம ப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

‘காதா’ என்றது ‘ச்ருணுகாதாம்புராகீதாம்’ என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்” என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

அகில பயோத்தாரீணி என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாண தமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் – இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத –எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத — எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியை யுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் – வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே — இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ – ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதி வேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்க முடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லை யில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத – சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: – ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக் கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா “ இத்யாதி – ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்த ஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச் செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக் கொண்டே நிரூபிக்கப்படும் குண விசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித் துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான – வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான‘திருவழுதிநாடு’ என்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார், ‘முந்துற்ற நெஞ்சே என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக் கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திரு ப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவருடைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ” என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः

तत् सत्यं मधुमथन विज्ञापनमिदम्

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं

என்றும், “யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்” என்றதை

‘विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः’ என்றும், ‘நன்றெழில் நாரணன் ‘ என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्’ என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

‘துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் — “நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்” என்று. “இன்புறும் இவ்விளையாட்டுடையான்” என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले-என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில் உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம்.

இறுதி ஸூத்திரம் ‘இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை — அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்’ என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே — எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் “ந ச ” என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், “என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே” என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்” — என்பது. இங்கு “ஒருபடியாலும் அழிவில்லை” என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் “என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி” என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் — இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்” இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்-कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் “திருமால் தாளில் தலைவைத்தோம்” என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை “ஸந்த:” என்று தொடக்கம் செய்து “ஸந்த:” என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை “அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன” என்றும் நிரூபித்திருக்கிறார்.

ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன‘, ‘குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி’ என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது, “न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव” இவர் ‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்’ என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் ‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்றனுஸந்தித்ததையே-कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं’என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் ‘தாமரைக்காடுகள்’ என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி-पुण्डरीकवन्लुण्ठाकलोचन-என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் ‘முன்னுரைத்த’ என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்ய கோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே ‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்‘ என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :–ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்-निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्எ-ன்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில் भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं என்று கூறப்பட்டது. ‘பக்தாம்ருதம்‘ என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. ‘விச்வஜனானுமோதனம்’ என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. ‘ஸர்வார்த்ததம்’என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத் தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். ‘பாலேய் தமிழர்’ என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,’சந்தமிகு தமிழ் மறையோன்‘ என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. ‘இசைகாரர்’ என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. ‘பத்தர்‘ என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி

ம்

து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே–
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழுது -இவரே மேட்டு அழகிய சிங்கராகப் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானுக்குத் தீர்த்த பரிவட்டம் பிரசாத்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து –நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!–அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவன் ஒருவனே
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

இது முதலில் வெண்ணையூர் நாடாக இருந்தது பின்பு கம்பர் பெயரால் கம்ப நாடு ஆயிற்று என்பர்

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு -மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

நம் சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ண
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே 

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே  அடியிலே காட்டி அருளினார் அன்றோ

மெய்யுணர்ந்தோர் -தவத்தால் பெற்ற அறிவுடையரான வ்யாஸ அம்பரீஷ ஸூக ஸுகனாதி –
முதலோர் இந்த்ராதிகள்

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விளக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கும் நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

குருகூர்ப் பூ –திருக்குருகூர்ப்பதியிலே ஆழ்வாரது திரு வாய் மலரிலே
பா ஒடுக்கும் -செய்யுள் இலக்கணங்களை எல்லாம் அடக்கி இருக்கும்
நா -புறச்சமயிகளின் நாவை

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு காரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்

கனமாம்-பெரும் சிறப்பாகும்
தனம் -இம்மைப் பயனுக்கும்
தவம் =மறுமைப் பயனுக்கும்
திருவாயமொழி இரண்டுக்கும் என்றபடி

ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

வாட்டமில் வனமாலை மார்வனை –

பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக் கடலிலே ஆடுவதே யாகும்

மொழி -பதம் என்று கொண்டு -கடப்படாதி சர்வ ஸப்த வாஸ்யன் ஒருவனே என்றுமாம்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

தோன்றல் உற்றார்–மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் போல்வார்

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப் பா அமுதம் -பாடலாகிய பரவிய –
பாடல் சோறு -இசை கறி அமுது -சேர்த்து குவிப்பான் -சமைத்துக் குவிப்பவரும்
குமரி கொண்கன்-குமரி நாட்டுத் தலைவருமான
புவிப் பாவல-பூமியில் உள்ள வித்வான்களுக்கு
செவிப் பால்–காதுகளின் வழியே

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் -இனிமையான
மூலத் தெளி யமுதே -காரணமான தெளிந்த அமுதேயாகும்-சாவா மருந்தான அமிர்தமும் இதுக்கு ஒப்பு அல்ல என்று எதிர்மறை ஏவகாரம் -உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் அது பக்திக்கும் பனுவலுக்கும் முக்திக்ம்கு மூலமாகாதே
யுண்டு தெய்வ மென்பார்–தெய்வம் உண்டு என்பார் -ஆஸ்திகர்
பத்திக்கு மூலம் -பக்திக்கும் இதுவே காரணம்
பனுவற்கு மூலம் -வரலாற்று முறையில் பாடும் நூல்களுக்கும் மூலமாகும்
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம்—பிறவியைப் போக்கத் துணிந்தவர்கள் மோக்ஷம் அடைவதற்கும்
முளரிக்கை –தாமரை போன்ற கைகளும்
வாணகை –வாள் நகை -ஒளி பொருந்தின பற்களும் கொண்ட
மொய் குழலார்-நெருங்கிய கூந்தலையுடைய மாதர்கள் இடத்து ஆசையை
அத்திக்கு மூலம் -போக்குகைக்கும் மூலம்

அத்தி -கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

மறைக்கும் அலங்காரம்-சாமவேதத்துக்கு பூஷணம்
மறைந்து கிடந்த பொருள்களை அனைவரும் அறியும்படி செய்து அருளியதால் பூஷணமாகும்
பனுவல் -ஆகமம் –பனுவலின் வகைகள் -அற நூல் பொருள் நூல் காம நூல் வீட்டு நாள் போல்வன
இவை நான்குமே திருவாயமொழியில் பரக்கத் காண்பதால் தாய் என்கிறார்

கவி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ

இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -இரு நான்கு எட்டுத் திக்குகளுக்கும் தீபம் -எண் திசையும் அறியும்படி இயம்பிப் பரப்பினார் அன்றோ மதுரகவியாழ்வார்

ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-படிச் சந்தம்-ஒப்புக் காண்பதற்கு உரியனவாம்

இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டிலும் ஸ்ரேஷ்டர்

இரு மா மரபும் செவ்வியான்-தாய் தந்தையர் இரண்டு வழியும் தொண்டர் குலமாகிய செவ்வி என்றுமாம்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவிக் குருகை–வயல்களில் அருவி நீர் ஓடிப் பாய்கின்ற குருகூர்

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

கைத் தலத்து அமலகம் எனக் கண்டு கொள் -என்று
கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித் தந்தார் அன்றோ

ஆழ்வாரை முக்கரணங்களால் ஸ்துதிப்பவர் உள்ளத்திலே அவரது கருணா ப்ரவாஹம் பரவும் அன்றோ
மாயோனைக் கையில் கையில் கனி என்னும் படிக் காட்டித் தந்து பக்திப் பயிரை விளைவிக்கும்-

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழு மாக் கமலம்
சேற்றில் பொதி யவிழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப் பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்விழு -யாவராலும் விரும்பத்தக்க –மா -பெரிய –கமலம் -தாமரை ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்-

பொருள் -அகப்பொருள் –
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –பாங்கற் கூட்டம்
துறை -இயல் தென்றல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

பல வேதமும்
தமிழ்ச் செஞ் சொற்களால்
மொழிந்தான்
குரு கூர்–குருகூர் பதியிலே
நண்பனே
பதுமத்து-தாமரை மலரிலே
இதழ் -சில இதழ்கள்
இலவே –நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்
உள் -அந்த இதழ்களுக்கு உள்ளே
முல்லை உளவே -முல்லை அரும்புகளும் சில உள்ளன
யுள் ளியம்பும் மொழியும் சிலவே-அவைகளில் இருந்து சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் சில வுண்டாம்
அவை செழுந் தேனொக்குமே
இன்னும் அத் தாமரை மலரிலே
இரண்டு சல வேல்களும்–அந்தப் பெண் எனது உயிர் ஆவாள்
காண்-நீ சென்று அதனைப் பார்
தன்னை வசப்படுத்திய அவள் முகம் தாமரை –
அவள் விழிகள் சல வேல்கள்

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத் துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

சந்தோடு அயிர் உருக்கும் பொருநல்–சந்தன மரங்களுடன் நுண் மணலையும் கொணர்ந்து கரை ஓரங்களில் ஒதுக்கித்த தள்ளும் தாமிரபரணி

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

அந்தம் இலா மறை–அநந்தாவோ வேதா -பரத்வாஜோ அத்திரி –மூன்று மலைகளைக் காட்டிக் கைப்பிடி என்ற விருத்தாந்தம்

நிலத்தேவர் –பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவுள் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

கடலை வேதமாகவும் -அமுதத்தைத் தேனாகவும் -அமரர் அடியாராகவும்- சங்கினான் நாயகனாகவும்- உவமித்த படி
இது எடுத்துக் காட்டு உவமை அணி யாகும்

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –-பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –சமயத் திருக்கை–புற மதங்களின் மாறுபாடுகளை
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
முதிர் ஞானக் கனி-ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -கற்போடு புணர்ந்த கௌவை
துறை -கலந்து உடன் வருவோர் புலம்பல் தேற்றல்

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து-அடைந்தவர் பெரும் பேற்றை -அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலி–உகந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து இருந்து புறப்பட்ட பின்பு இவர்கள் கண்டதால் இந்தப் பத பிரயோகம்
வில்லியும்-கோதண்ட பாணியான தலைவனும் -எதிரே வந்த சிம்ஹத்தைக் கொன்று அவள் அச்சம் போகும்படி வில்லில் நாண் ஏற்றிச் சென்றபடி
இது கண்டவர் கூற்று
கேட்பவள் -செவிலித்தாயார்
இடம் -முன்னிலை
காலம் -நிகழ் காலம்
மெய்ப்பாடு -பெருமிதம்
பயன் -செவிலியை மீள உரைத்தல் -ஆதலால் நீ மீள்வாயாக-என்பது எஞ்சி நின்றது –

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித் தாய் தாயாருக்குச் சொல்வது

————

பொருள் -அகப்பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -வரைவு கடாதல்
துறை -நெறி அருமை கூறி வரவு விலக்கல்

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை

மூரல் குறிஞ்சி நகை–குறிஞ்சி அரும்பு போன்ற பற்களை யுடைய தலையினது -மூரல் எறும்புக்கு ஆகு பெயர்
முடுகும் -விரைந்து வருகிற
சூரல் குறிஞ்சி நெறி-பிரப்பங்காடுகள் நெருங்கிய மலை வழியை
வாரல்–நீ வாராது நீங்குவாய்

கூற்று -தோழி கூற்று
கேட்போன் -தலைவன்
இடம் -முன்னிலை
காலம் -எதிர்காலம்
மெய்ப்பாடு -அச்சம் சார்ந்த பெருமிதம்
பயன் -வரைவு கடாதல்

இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —

மலையில் சந்தன மரமும் -கடலில் முத்துக்களும் -நிலத்தில் சிறந்த இரத்தனங்களும் -மூவகை ஹாரங்கள் பொருந்திய பாண்டிய நாடு
விலை யாரமும்-என்று இந்திரன் கொடுத்த மாலையையும் உடைய பாண்டிய நாடு
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன் பொன்னாரம் தென்னவர் கோன் மரபினமே -சிலப்பதிகாரம்
வேலை சுட்ட சிலையார்–சமுத்திர ராஜனை சாபமானம் கொண்டு அச்ச மூட்டிய சக்ரவர்த்தி திருமகன்
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்-நாம் -தெளிவு அடைந்த மகிழ்ச்சியால் தன்மைப் பன்மை
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாடித் திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

பகவர்க்குமே–பிரிநிலை ஏவகாரம் —பகவர் -வீரம் கீர்த்தி வைராக்யம் இவற்றில் சிறந்தவர்

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பனுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பனுவற் கெல்லாம்–சேர்க்கப் பட்டுள்ளவன வாகிய சாஸ்திரங்களில் எல்லாம்
தொட்டால்–உற்று நோக்கினால்
பகை யுளவாம்-பரஸ்பர விரோதம் உள்ளனவாம்
வாது உளவாம் -விரோதங்களும் உள்ளனவாகும்
விழுத் தமிழ்க்கே–சிறந்த தமிழ் பாடல்களில்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம்–பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம் மேம்பாடுகளே உள்ளவை யாகின்றன –

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே –26-

மெய் உற வந்து அழுப்பாது ஒழிமின்–மெய்யாகவே எங்களை வந்து கிட்டி அப்பால் நீங்கி விடுங்கள்
ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகிற கொழுவானது –கொழு -கலப்பைப் படை வாள் நுனியில் தைக்கும் இரும்பு
வயிற்றில் குத்தித் தள்ளுவது போல்
அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்று அழிக்கும் என்பது தொகை மொழியின் கருத்து
இள நாகு –மீமிசைச்சொல்
கொழுந்து –உவமை ஆகு பெயர் –ஆயர் குலக் கொழுந்து அன்றோ

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம்  இல்லை –இனி எமக்கு ஏது பிறவித் துயர்

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்தித் தலை மகள் ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

முகையு மெல்லாம்–அரும்புகளும் மற்றுள்ள மலர்க் காய்களும்
கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்–மிகக் கொய்யும்படியாக மகிழ மரத்தின் கீழ் சென்று
குருகூர் அறையில்–குருகூர் என்று யாரேனும் சொன்னால்
கருத் துண்டு–நினைவு யுண்டாய் இருக்கிறது
இளங் கொடிக்கே–காமத்துக்கு ஆற்றாதவள்
கெட்டேன்–தோழி செய்யும் உபசாரங்கள் எதுவுமே இவள் ஆற்றாமையைக் குறைக்க பயன் பெறவில்லையே

தோழி செய்யும் உபசாரமாவது —
மலர் அணையிலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுக்கச் செய்தலும்
கொங்கைகளிலே தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதலும்
பன்னீர் தூவுதல் போன்றவை

இதில் கிளைவித் தலைவனது இயல் பெயரைக் கூறினமையால் அகப் பொருள் ஆகாமல் அகப் புறப் பொருள் ஆகிறது
கையற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை யாயிற்று

தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னால் மாலையை வர விடுக்க வில்லையே என்று வருந்திய
தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பதே துறையின் கருத்து –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

முடி எடுத்துக் கொண்ட –பக்தி மேலிட்டு தலையிலே அஞ்சலி செய்து கொண்ட-
அந்தணர்–அழகிய தண்மை யுடைய எல்லா உயிர்களிடமும் அன்பு பொருந்திய மேலோர்களுடைய
ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட மாறன்–நான்கு வேதங்களையும் நான்கு திவ்ய ப்ரபந்தங்களாக தமிழ் செய்த மாறன் என்றபடி

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ்நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்

வில்லன் -கோதண்ட பாணியான சக்ரவர்த்தி திருமகன்
அவன் தாள் இணைக் கீழ்–தன் முடியால்–அவனது திருவடித் தாமரைகளைத் தலையாலே வணங்கி

எப் பொருளும்-முதல் கடவுளாகிய மாயோன் நிலையும் -அவனை அடையும் நெறியும் -அடைவதற்கு உரிய உயிர்களின் நிலையும்
அடைவதற்கு உண்டாகும் விரோதிகள் நிலையும் -அடைவதால் வரும் பேறும்

திருச் சங்கணித்துறைக்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. –30–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர்-நெற் போரில் நாரை முதலிய பறவைகள் உறங்கும்
தாம் கவலை அற்று அந்தமில் பேர் இன்பம் பெற்று நித்ய வாஸம் செய்யப் போவதற்கு இந்த உவமை
வழுதி நாட்டில்–பாண்டிய நாட்டில் -கொடை யுடையவனுக்கும் பெயர் -தவறால் மோக்ஷ இன்பம் அளிப்பவர் என்பதால் இப் பெயரால் குறிக்கிறார்
ஆளும் புகுதற்கும் -உம்மைத் தொகைகள் -இறந்து தழுவிய எச்சப் பொருள்கள்

பாரதந்தர்ய ஞான சித்தியை –காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய்யும் ஐயன்  தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. -31-

புலமை செய்யும் ஐயன்–தன்னை அடைந்தவர்களுக்கு உபதேஸித்து அருளும் தலைவர்-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஐயன் -எல்லாரிலும் மேலானவன் என்றபடி –
மெய்யும் மெய்யாது –தத்வத் பொருள்கள் எல்லாம் உண்மையாக விளங்கிற்று
பொய்யும் பொய்யாது –தார புத்ர தனாதி ஏஷணாத் த்ரவ்யங்களான -பொய்ப் பொருள்களும் பொய்யாகவே யாதாத்ம்யமாகவே விளங்கிற்று
வேறு படுத்து–இங்கனம் வேறுபடுத்தி பகுத்துக் காட்டி
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது–பிழைப்பதற்கு உரிய –பரம பதத்தை நாடும் வெளியாகிய -உண்மையான தந்திரமும் வந்து பொருந்திற்று
கொய்தற்கு ஏற்ப வினையைப் பகை என்னாமையால் இது ஏக தேச உருவக அணி

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிரசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் -உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக் குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

பல் அலங்காரப் பொருளும்-பலவகைப்பட்ட அணி இலக்கணப் பகுதிகளும் –உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணம் என்றுமாம்
தேவரையே–பூ ஸூரர்களாலும் வணங்கப்படுபவர் அன்றோ
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்-பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே
திவ்ய தேசத்தை மட்டுமே சிந்திக்க முக்தியே ஸித்திக்குமே
ஆட் செய்யக் கிட்டா விடுனும் ஆழ்வாரது அடியார்களைத் தரிசித்த மாத்திரத்தாலேயே முக்தி ஸித்துக்குமே

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை பாங்கி செவிலி யர்க்கு அறத்தொடு நிற்றல்

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
ஏ வரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

ஏ வரை ஏறி மொழிகின்ற போது –பெருமை மிக்க நம் குறிச்சியில் வந்து சொல்லுகிற காலத்தில்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் –விஸ்லேஷத்தால் அணிகள் அணியாமல் மலர்கள் மட்டும் சூடப் பெற்ற கூந்தலை யுடைய தலைவியது மனத்தில் -இத்தால்
தெய்வத்தால் தீண்டப் பெற்றவள் அல்லள் -தெய்வம் தீண்டினால் பூவைச் சூடும் அறிவு பெறாள் அன்றோ

தலைவியின் அபிப்ராயம் அறிந்த தோழி தாய்மாற்கு அறிவித்தல் துரையின் கருத்து

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

புறச் சமயத்தார் நூல்கள் மலட்டுப் பசு போல் பயன் கூடாதது மட்டும் அன்றி படித்தவர்களுக்கு நரகத்தையும் கொடுக்கும் –
இப் பாடல் உருவக அணி

————-

பொருள் -புறப் பொருள்
திணை -பெரும் திணை
கிளவி -இரு பாலில் பெண்பால் கூற்று
துறை -தலைவி மடலூரத் தோழி சாற்றுதல்

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

குருகூர் என்னும் ஆறு அறியாப் பைதலைக் –குருகூர் என்று சொல்வதற்கும் தெரியாத என் தலை மகளை
கோகு உகட்டிட்டு –தன் தோள்களைத் தட்டிக் கொண்டு
ஏட்டில் -பனை மடலாகிய குதிரையில்
ஏற்றிய பண்பனையே–ஏறும்படி செய்த இயல்புடைய தலைவனை -நம்மாழ்வாரை
பைதல் –ஆண்பால் சிறுவனுக்கும் துன்பத்துக்கு பெயர் -தலைவி பால் அன்பு மிகுதியால் பெண் பாலை ஆண்பாலாக பைதல் என்கிறாள்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தன
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

இத்தால் பண்ணும் இன்றியமையாதது என்றும் காட்டப்படுகிறது

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று

மூர்த்தத்தினை–உயிர் நிலையினையும்
பாரதத்தைப் பணித்தானும்–கீதை அடங்கிய மஹா பாரதத்தை வெளியிட்டு அருளிய -வ்யாஸ பகவானும்
உயிர் நிலை உலக நிலை ப்ரஹ்ம நிலை ஆகிய தத்வ த்ரயங்களையும் ப்ரஹ்ம ஸூத்ர முகேந வெளியிட்டு அருளிய வியாஸ பகவானும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற திருவாய் மொழியை யுடைய
வேதம் மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அனைத்தும் வெளியிட்ட பொருள்களை வியக்தமாக வெளியிட்டு அருளிய ஆழ்வார்
மஹா உபகாரகராய் உலகுக்கு நன்மை செய்து அருளியவர் என்றதாயிற்று –

நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பரி சுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -பொருள் வயிற் பிரிவு
துறை -நெஞ்சோடு மறுத்தல்

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

நெஞ்சமே
குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள்–தலைவியின்
கண்ணின் கடை திறந்து–கடைக் கண்ணைத் திறந்து கொண்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
வெளி பரந்து -வெளியில் பரவி
குருளைச் சுமந்து –காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு
ஓட் டரும் –ஓடி வருகின்ற -ஓட்டம் தரும் என்பதின் விகாரம் –
கொள்ளை வெள்ளம்–மிகுதியான கண்ணீர் வெள்ளமானது
உருளைச் –சக்கரங்களை யுடைய
சுடர் மணித் தேரை -இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற என்னுடைய தேரை
வந்து உதைக்கின்றதே–வந்து தடுக்கின்றதே
அந்தோ –ஐயோ
பொருளைச் சுவை யென்று –பொருளை சிறப்புடையது என்று கொண்டு
போவ தெங்கே –எப்படி நான் போகலாகும்

ஆழ்வார் அருளை சுமந்தவளாது கண்ணீர் வெள்ளம் தடுக்க
அதற்குத் தப்பி நாம் எவ்வாறு பொருளை சன்பாதிக்கப் போவோம் என்று
நெஞ்சோடு கூறி செல்வது தவிர்த்தான்

பிரிவாதலால் பாலை யாயிற்று
மெய்ப்பாடு -அசைவு பற்றி பெருமிதம்
பயன் -நெஞ்சோடு கூறி ஆற்றுதல்

———

பொருள் -அகப்பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -இருவருமுள வழி யவள் வரவு ஊர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-இம்மாதின்

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் –தோன்றி மார்பில் அடி பரந்து பெருத்தன
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் –செவ்விய மின்னல் போன்ற இடைக்கு நிலை நிற்கக்கூடிய
சிக்கனவு உண்டோ -அக் கொங்கைகளைத் தாங்கும் வலிமை யுண்டோ -இல்லை என்றவாறு
என்றால்-கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி என்றால்

கொந்து அடிக் கொண்ட குழலும் -பூம் கொத்துக்கள் சூடப்பெற்ற தலை மயிரும்
கலையும் -இடையில் கட்டிய சேலையும்
குலைந்தலைய–நிலை குலைந்து சொர
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது -இவள் பந்து அடிக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கின்றது

மெய்ப்பாடு -உவகை
பயன் -தலை மகளைச் சார்தல்

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை-சடவாயுவைக் கோபித்தவர் அன்றோ

கன வாயினவும்கனவு ஸ்வப்ன தசையையும் ஆயினவும் -என்று முன்பும் பின்பும் உள்ள அவஸ்தைகளையும்
ஆயவையும் -துர்யாதீதி அவஸ்தைகளையும் -இவற்றின் உட்பகுதிகள் பலவாதலால் பன்மைப் பத பிரயோகம்
வீசிய -கடந்த
வினவா துணர்ந்த விரகன் -மயர்வற மதிநலம் அருள பெற்றவர் அன்றோ

துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -தூதில் பிரிவு
துறை –காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழலி பாங்கி தளர்தல்

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் –வளைந்த சங்கு பெற்ற முத்தும்
சினையும் –அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க -வேறுபாடு தோன்றாமல் கலந்து இருக்க
அவற்றை ஈன்ற
வரி வளையும் –கோடுகளையுடைய சங்கும்
அன்னமும் -அன்னப் பறவையும்
முறை செறுத்து –முறையே கோபித்து
தம்மிலே –தங்களுக்குள்ளே
வழக்காட –விவகாரம் பேச
அப்பொழுது
வலம் புரிவளை –வலம் புரிச் சங்கானது
யூடறுக்கும் -அவ்விரண்டின் நடுவிலே சென்று அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற
குருகூர் எம் புரவலனே-எமது இறைவனான ஆழ்வார்
அரிவளை -வண்டுகள் வளைத்து மொய்க்கப் பெற்ற
பொன் மகிழ் -பொன் போன்ற தமது மகிழம்பூ மாலையை
ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து–மாலைக் காலத்தில் வந்து ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய தலைவிக்குக் கொடுத்து அருளுவாரோ

இரங்குதலால் திணை நெய்தல் ஆயிற்று

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம் புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –

இச் சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –

ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –

சிப்பி உலகோர் –அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

பொருள் -அகப்பொருள்
திணை -நெய்தல்
கிளவி –ஒரு வழித் தணத்தல்
துறை -சென்றோன் நீடலிக் காமம் மிக்க கழி படர் கிளவி

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

எம் முறு பிறவித் துரை –எம்முடைய மிக்க விரைந்து போற்றுகிற பிறவிகளை
துடைத்து ஆட் கொண்ட தொண்டர் பிரான்–போக்கி அடிமை கொண்டு அருளிய அடியார் ஜன கூடஸ்தரான ஆழ்வாருக்கு உரிய
துறை நீர்ப் பொருநை கரை துடைக்கும் கடலே –கரையை மோதுகின்ற ஸமுத்ரமே
புரை துடைத்துப் –எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப் போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் –தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாதபடி போக்கி
பிறர் புகலும்-அயலார் கூறுகின்ற
உரை துடைத்து -பழிச் சொற்களுக்கும் இடம் இல்லாதபடி போக்கி
அங்குள்ள –புன்னை மரச் சோலையாகிய அவ்விடத்திலே யாம் கட்டியுள்ள
வூசல் –அறுந்து போன கொடி ஊஞ்சலை
துடைத்த-மீண்டும் கட்டி அதில் உள்ள வருத்தத்தைப் போக்கினை
துடையேல் அன்பர் கால் சுவடே.-தேர்க்கால் சென்ற வழியை அளித்து விடாதே கொள்

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக் கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

இரங்குதலால் -நெய்தல் திணை யாயிற்று
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் –

—————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற்ப குறி
துறை –பாங்கி புலம்பல்

செவிலித் தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்
படர் அந்தி வானம் இருள்கின்றதே
இரண்டு கவடிறக் –தலையில் கதையாய் யுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஓடியும்படியாக
உட்பகை புறப்பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழி பட என்னவுமாம் –
கட்டிய பாசத் தளைக்–கட்டி இருக்கும் அன்பாகிய சங்கிலிகளை
கண் பரிந்து–அறுத்து எறிந்து
தொடர் ஆசைக் களிற்றைத் -தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை
சுவடிறக்கத்–அடிச்சுவடு தெரியாமல் ஓடிப்போம் படி
தொடர்ந்து -பின் தொடர்ந்து வெருட்டி
சங்கக் குவடிறக் –தமிழ்ச் சங்கமாகிய மலையானது சிதறும்படி
குத்திய –குத்திப் பெயர்த்த
மாறப் பெயர்க் –மாறன் என்னும் பெயருடைய
கொலை யானை –கொலை செய்ய வல்ல யானையானது -பொய்ச்சமயங்களை அழித்ததனால் கொலை யானை
இங்கு முற்று உருவகம்
இன்று
இவடிறத்து ஒன்றும் -இவள் நிமித்தமாக வருமோ

இரங்குதலால் -திணை -நெய்தலாகும்

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
வரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப் புலவர்களை வென்று ஆட் கொண்டாரே

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து ––நான்முகன் -81-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளைப் போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பிறர் பால் வெறும் பாக் கிளத்தி மெலிகின்ற என்னை -அந்நியர் இடத்தில் பயன் அற்ற பாடல்களை பாடி தளர்கின்றேனும்
இம்மைப்பயன் பெறவே இவை ஆகவே வெறும் பா அன்றோ இவை
அமரர்க்கும் ஏற விட்டான்–தேவர்களுக்கும் மேலாகச் செய்து அருளி விட்டார்
ஆகையால்
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே–ஒருவர் பெறக்கூடிய செல்வம் உள்ள காலத்தில் -அதற்கு ஒரு கெடுதியும் உண்டாகுமோ
ஆகாது என்றபடி
இந்த முதல் அடி வேற்றுப் பொருள் வைப்பு அணி

காமம் வெகுளி மயக்கம் –முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

யுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து-உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கிற மிகுந்த புண்ய பாப ரூபமாகிய இரண்டையும் போக்கி
இறப் பார்க்கும் இயற்கை–அவைகள் அழியும்படி யாகப் பார்க்கின்ற இயற்கையானது

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலையால் வந்த வருத்தம் உரைத்தல்

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து–பகைமை கொள்ளாத அன்றில் பிறையையும் பகைமை ஆக்கி

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

நித்ய விபூதியைக் கொடுக்கும் என்பதால்-இன்னமுதே
ஏறே-இன்னமுதே-ஆணிப் பொன்னே -இம் மூன்றும் உவமை ஆகு பெயர்
தகும்–இது தொழில் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை(ஐ) யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

தென்னை(ஐ) யுரைக்கும் –தென் திசைக்கண்ண தாகிய அழகிய தமிழ் மொழிக்கும் –
ஐ உரை -சிறந்த பொருள் இலக்கணத்தைத் தன்னிடத்தில் கொண்டு இருத்தலால் -ஐ உரை -என்கிறார்
இயற்கும் –அதன் பக்தியாகிய இலக்கணத்துக்கும்
இசைக்கும் –இசைத் தமிழுக்கும்
சிகாமணியே -ஸிரோ ரத்னம் போன்றவரே

இதில் முதல் அடி எடுத்துக்காட்டு உவமை அணி

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மறம் -பல் வரிக்கூத்தில் ஓன்று
மறவரின் மகளை விரும்பி விட்ட அரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவர் இயல்பு தோன்றக் கூறுவது

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

ஆசு -ஆழ்வாருக்கு அடிமை என்று அறிந்தும் பெண் கேட்க வந்த குற்றத்தை ஆசு என்கிறார்
கொள்ளும் கொள்ளும் -வெகுளி பற்றி வந்த அடுக்கு
பாவை -உவமை ஆகு பெயர்
இது கொல்லி மலையில் தேவரும் முனிவரும் சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்தும் அசுரரை மயக்க
வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்து இருந்த ஒரு பெண் வடிவம்
இது அசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லும்

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பாவைத்-எங்கும் பரவி நிற்கும் பொருள் தோன்ற –பா –என்கிறார்
போதா அமுதை-கடலில் இருந்து வந்த உப்புச் சாற்றில் வியாவ்ருத்தி -கொள்ளக் கொள்ளக் கோதிலா இன்னமுதம் அன்றோ

கோவைப் பணித்த எம் கோவை–காம தேனுவை ஒத்த எங்கள் ஸ்வாமியாக ஆழ்வார்

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

இதன் கடையடி எடுத்துக்காட்டு உவமை அணி

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குகப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே--இங்கு ஸ்துதித்தது அன்றியும் என்று இறந்தது தழுவிய எச்சப் பொருளது

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்துவது உரைத்தல்

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் என்பதை யடக்கி பசியட நிற்றல் என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -நம்மாழ்வார் வாக்கில் வந்த உபநிஷத்துக்களின் ஆழ்ந்த பொருள்கள்

நியாயம் நெறியை–தர்க்க நிர்ணயத்தாலும் பரத்வ நிர்ணயம் செய்து அருளியவர் அன்றோ
மதுரகவியை-இனிமையான திவ்ய பிரபந்தங்கள் -வேதம் போல் இல்லாமல் சர்வாதிகாரம்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம்பிரான்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

கோடல்–வெண் காந்தள் -கார்த்திகை மாதத்தில் பூக்கும் மணம் இல்லாத பூ
இதே போல் பிறர் கவிகளும் சொல் சுவை பொருள் சுவை இல்லாமல் பயன் அற்றதாய் விடும்

தெய்வக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட –வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

கெண்டை மீன்கள் துள்ளி தேன் கூட்டு உடைந்து வயல்களில் தேன் பெருகுவது போல்
குருகூர் மஹிமையைக் கூறுவதால் நம்மாழ்வார் கருணையாகிய தேன் வெள்ளப் ப்ரவாஹம்
உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்து

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

கறங்கன்ன வாழ்க்கையை-காற்றாடி போன்ற பிறவிச் சூழலை

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
1-ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
2-பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
3-ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
4-வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார வெம் பாலிற் –கொடிய நஞ்சு போன்ற இருட்டையுடைய இராக்காலமாகிய பகுதியிலே
வெம்மையை மெல்லியலுக்கு இடர் என்பதுடன் கூட்டிப்பொருள்
மெல்லியல் -காமன் கொடுமைக்கு ஆற்றாதாள்
பராங்குசர் -துன்பம் செய்யும் காமனை அடக்க வல்லார் என்றவாறு

—————

பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

இது உருவக அணி

இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை –பா கொத்த சொல்லி பைந்தொடை பெறாள் -மேகத்தைத் தூது போக விடுத்தல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

பனி தோய்ந்திடு மேகங்களே–விடாமல் மழை பெய்வதை மேற்கொண்டுள்ள ஆகாசத்தில் செல்லும் மேகங்களே
பனி -குளிர்ச்சியுமாம்
எனது ஆற்றாமையை ஆழ்வாருக்கு அறிவிப்பீர்
நீங்கள் இங்கே பொழிவதனால் பயனில்லை
அவருடைய மலையில் ஏறி மழை பெய்யத் தொடங்கினால் அவர் நும்மைக் கண்ட வுடன் விரஹ மேலீட்டால் தாமே என்னிடம் வந்து அணைவார்

விரஹ தாபத்தால் மேகக் கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக் களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் –அகப் பொருள்
திணை –முல்லை
கிளவி -வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
துறை -தலைவன் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லல்

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –வழியிலே கண்டு வார்த்தை சொன்னேன் என்று நினைக்காமல்
நீங்கள்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை –திருவாய் மொழியை-பாகம் -சுவையை யுடைய திருவாய் மொழிக்குப் பண்பு ஆகு பெயர்
ஆற்றும் சொல்லாளைக் -ஒத்து இருக்கும் சொல்லை யுடைய எனது தலைவியை-அவள் சொற்களைக் கேட்டாலே உங்களுக்கு பெரும் பேறு கிட்டுமே
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை -கண்ணில் நின்று உண்டாக்கிய நீர்த்துளி மிக்குள்ள என் பால் எழுந்த காம விரஹத்தை
ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே -அவள் மனதில் உண்டாக்கிய சோர்வை சாந்தப் படுத்திக் கொண்டு பிற்பாடு
துளித் தூவத் தொடங்குகவே–மழை பெய்ய ஆரம்பிப்பீர்களாக -பெரியதாக மழை பெய்வீர்களாகில் அவளுக்கு குளிரத் தொடங்கும் –

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி– ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்

பொதியம் தருநதி–பொதிகை மலையில் அகஸ்தியர் இடம் இருந்து பிறந்த தமிழ் இலக்கணம் உலகை வாழ்விப்பது போல்
தாமிரபரணி நதியும் பொதிகை மலையில் இருந்து பிறந்து வாழ்விக்கிறது
பூ ஸுரர் -வேதப்பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணர் ஆதலால் அவரே தனது பெருமையை அறிய வல்லவர் என்றவாறு

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

ஓயாமல் பருக வேண்டியதனால் முகந்து கொடு நிற்றும் என்கிறார்
விற்றல் -அடியாருக்கு அடியாராக்கி அருளுதல்
விலை கொள்ளுதல் -அவ்வடியாரையும் தம் அடியார் ஆக்குதல்
திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கு ஏற்ப முழுவதும் உருவகம் செய்தலால் முற்று உருவக அணி

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம்

————–

பொருள் –அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத்தலைப்பாடு
துறை -கண் நயந்து உரைத்தல்

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

தலையின் அவயவங்கள் மலர் போல் தோன்றுவதால் -மலர் நிறைந்த கொம்பு என்கிறான்
கடலினும் பெரிய கண்கள் -கம்ப ராமாயணத்தில் உண்டே
இத்துறை முழுவதும் ஐய உவமை
மெய்ப்பாடு -பெருமிதம் -உவகையுமாம்
பயன் -கண் சிறப்பு உரைத்தல் ஹேதுவாக தலைவியைச் சார்தல்

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

திருக்கு அறும் –மாறுபாடுகள் நீங்கி விடும்
வாரும் என்பதற்கு நீங்கள் என்பதைத் தோன்றா எழுவாயாக்கிக் கொள்ள வேண்டும்
சொன்னேன் -தெளிவினால் வந்த கால வழு வமைதி

————–

பொருள் –அகப் பொருள்
திணை –மருதம்
கிளவி –பரத்தையில் பிரிவு
துறை –காமக்கிழத்தி மைந்தனை எடுத்தல்

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

கூற்று -காமக் கிழத்தி கூற்று
பயன் -காமக் கிழத்தி மகிழ்தல்

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்துபாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால்–அம்சத்தினால்
கோவகத்தாற் கன்றி—-மேலான இடத்தை யுடையவர் -நித்ய ஸூரியான ஆழ்வாருக்கு அல்லாமல்

ஆழ்வார் 11 அவதாரம் –தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

இயலிசைக்கே–இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்ய ப்ரபந்தங்களாலே —இயல் இசை -சினை ஆகுபெயர் –
மெய் கண்டு–ஆசிரியருக்கு கைங்கர்யங்கள் செய்து அவர் மூலம் திவ்ய ப்ரபந்தங்களில் தத்வ அர்த்தங்களையும் யதாவாகத் தெரிந்து கொண்டு

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –கைக்கிளை
துறை -காட்சி ஆண்பால் கூற்று

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

தனுவைப் பதித்து –இரண்டு விற்களை அமைத்து
முத்தங்குயிற்றி–முத்துக்களை பதித்து
கயலைக் கிடத்தி–இரண்டு கயல் மீன்களை வைத்து

களங்கம் துடைத்த மதி– முகத்துக்கும்
தனு -புருவத்துக்கும்
முத்துக்கள் -பற்களுக்கும்
கயல்கள் -கண்களுக்கும்
உவமை யாதலால் இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள்

பயன் -வியப்பினால் உள்ள மகிழ்ச்சி

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்–இரும்புகள் உருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சு உடையவரும்
ஓடைப் பழனத்திலும்–ஓடையாகிய பழனம் என்று கொண்டு இரு பெயர் ஒட்டு -நீண்ட வயல் என்ற பொருள் என்றுமாம்
இட்டத்திலும்–கருத்துக்களைச் சொல்லும் இடத்திலும்
பட்டத்திலும்-பட்டக் கால்களிலும் -தண்ணீர் பெருகும் காலத்தில் மட்டுமே ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மீன்கள் பாய்தல் போல் ஆழ்வார் குண விசேஷத்தால் அறிந்தவரும் அறியாதவரும் கொடிய நெஞ்சுடையவரும் உருகுவார்கள் அன்றோ

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வலிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –பெரிய குளிர்ந்த மகிழ மலரின் மணம் விரும்பி உறைகின்ற
தண் தெரியல் பெருமான் –குளிர்ந்த மாலையுடைய ஆழ்வாரது
செய்யுள் மா மணியின் கணம் –பாடல்களாகிய இரத்தினைக் கூட்டத்தை
வேண்டும் என்றறிவாரைக் –கற்க வேண்டும் என்று அன்புடன் படித்து அறிந்தவரை
கண்டால் –தர்சித்தால்
குணம் வேண்டுமே –அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ -வேண்டாமே
நற் குலம் வேண்டுமே -நல்ல குலமாக இருக்க வேண்டுமோ -வேண்டாமே
யக்குலத் தொழுக் காம்-அக் குலத்துக்கு உரிய நடையாகிய
பிணம் வேண்டுமே –பயன் அற்ற பிணம் போல்வதும் வேண்டுமோ -வேண்டாமே
செல்வப் பேய் வேண்டுமே -பொருளாகிய பிசாசுசம் வேண்டுமோ வேண்டாமே
ஆதலால்
சென்று கைத் தொழுமே–உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கள்
திருவாய் மொழியை அன்புடன் படிப்பவர்களைக் கண்டால் அவர்கள் குளம் இத்யாதிகளை பார்க்காமல் உடனே சென்று வணங்குங்கல்

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

கோ என்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை –செவிலி நல் தாயத்து அறத்தொடு நிற்றல்

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

இப்படி அன்றி -உன் மக்கள் கருத்து இது -என்று வருவித்து முடிக்கவுமாம்

————-

பொருள் -அகப் பொருள்
திணை -உரிப்பொருளாற் பாலை
கிளவி –உடன் போக்கு
துறை -பாங்கி தலைவனை உடன் படுத்தல்

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற் கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

ஒரு மணம்–பிரமம் -பிராசாபத்தியம் -ஆரிடம் -தெய்வம் –
காந்தர்வம் -அசுரம் இராக்கதம் பைசாசம் போன்ற
எட்டு வகை திருமணங்களில் இது காந்தர்வ மணம் ஆகும்-இவளைக் கைக் கொண்டு செல்வீராக

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த –கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பொருள் -அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி –வரைவு முடுக்கம்
துறை –தினையொடு வெறுத்து வரைவு கடாதல்

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப் புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் கார்ப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி-கார்ப் புனமே–பெரிய தினைக் கொல்லையே
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனம் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு புனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மையுறு கண்ணி கையற வெய்தக் கண்ட தோழி யுட்க்கொண்டு புலம்புதல்

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய –பனை -மிகப் பெரிய-கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்
துறை -கண் படை பெறாது கங்குல் நோதல்

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

மூன்றையும் வேரினோடும் பறித்து–காமம் வெகுளி மயக்கம் -முக்குறும்பையும் ச வாசனமாகப் போக்கி அருளி
வகையாய் வருவன யாவையும் மாற்றி--ஆகாமிய சஞ்சித பிராரப்த கர்மங்கள் எல்லாவற்றையும் போக்கி அருளி

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத் த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் –பிள்ளை அந்தாதி –

————

பொருள் -அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் நெய்தல்
கிளவி –வரைவு கடாதல்
துறை –தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செப்புதல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் பொல்லாத தலைவியின் விஸ்லேஷ விரஹ தாபத்தைத்
தோழி சொல்லுவதால் தலைவன் கேட்டு விரைந்து வருவான் ஆதலால் வரைவு கடாதல் கிளவியும் துறையும் ஆயிற்று

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

இருமையும் தீர்ந்த பிரான்--யானே என் தனதே என்று இருந்த அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளிய ஆழ்வார்
தாவில் அரும் பொருள் –கெடாத அரிய செல்வமான பரம புருஷார்த்தம்
யான் எனது என்னும் செருக்கு அறுந்தாலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவோமே

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -இரவு உறு துயர இகுளைக் கூறல்

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு ஒக்கும்–கரும்பு போல் இனியது என்னாமல்-ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

ஆயிழை –வினைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

மோக்க மாலை–மோக்ஷ மாலை -திருவாய் மொழிக்கு திருநாமம் சாத்தி அருளுகிறார்

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காதாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –நெய்தல்
கிளவி –இடந்தலைப்பாடு
துறை -புகழ்தல்

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும்–மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றினையும் செய்து அருளிய
அல்லியம் –மல் –குடம் -என்னும் மூன்று திருக் கூத்துக்கள்
அல்லியம் -குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்த பொழுது ஆடிய கூத்து
மல் ஆடல் -மல்லர்களை முடித்து ஆடியது
குடம் -வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் தெருவில் குடக் கூத்து ஆடியது
இவை மூன்றும் புறக் கூத்துக்கள் –

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் சேனராக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாது வருந்திய தலைவி காதல் கைம்மிக்கு கையற யுரைத்தல்

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

காம நோய் கொண்டாருக்கு நிலவு வெயில் போல் சுடுமாதலால் தீ என்கிறார்
பேய்க்கு பனை மரத்தை உவமித்தார்
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் யுடையன போல்வன -கலிங்கத்துப் பரணி
மெய்ப்பாடு -அழுகை
பயன் -ஆற்றாமை நீங்குதல்

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது-பொருளும் திணையும் துறையும் கீழ் பாசுரம் போலவே –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு தட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

கொடுங்கோகு தட்டி -வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு
சல்லம் புலி யிட்டு -முள்ளம்பன்றி போல் ஒத்து

தாயைப் புலி என்று அதற்கு ஏற்பப் பாய்கின்றது என்றதனால் உருவக அணி
விரஹம் கொண்டு கலங்கி விழுதலால் தாய் புலி போல் பாய்கின்றாள் எனவும்
அவள் வார்த்தை முள்ளம்பன்றி யுடைய முள் போல் தைக்கின்றது எனவும்
சந்திரனது நிலவைக் கண்டு அதுவும் விரஹத்தை அதிகரித்தலால் அதுவும் தோன்றிற்று என்று வருந்திக் கூறுகிறாள் –

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

நாற்று இட்டு நெல் பயன் கொள்ளுவது போல்
திருவாய் மொழி எனது மனத்தில் இருப்பதால் இப் பிறப்பால் இன்னும் வினைகளைச் சேர்க்க முடியாதே

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே-மற்றை வாழ்வு -சுற்றத்தார் சேர்க்கை -எண் வகைப் போகம் தசாங்கம் போல்வன
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் –முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப் பிரபந்தம் என்றபடி

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்ப முனி சாபம் குலைந்தவூர் -செம் பதுமத்து
தாதகத்து நான் முகனும் தந்தையும் காணா நான் மறையை
ஓதுவித்து வாழும் அழுந்தூர்

இவர் காளி தேவிக்கு அடிமை செய்தவர் ஆதலால் அவளையே பந்தம் பிடிக்கச் சொல்லி கம்ப ராமாயணம் இயற்றினார்
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே
நந்தன எழுதுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி —

September 4, 2022

ஸ்ரீமத் பாகவதம்–

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்

எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள்,

எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார்.

அப்பொழுது ஸாதிக்கிறார்:

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

“அரசே! ஸத்ய யுகம் மற்றும் பிற யுகங்களின் வாசிகள் இந்தக் கலியுகத்தில் பிறவியெடுக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
ஏனெனில் இந்த யுகத்தில் நாராயணின் பக்தர்கள் பலர் இருப்பார்கள்.
இவர்கள் பல்வேறு இடங்களில் தோன்றி ஹரியிடம் அளவில்லா பக்தி கொண்டிருப்பார்கள்.
வேந்தே! இவர்கள் பலவிடங்களில் தோன்றினாலும் குறிப்பாக வளங்கள் நிறைந்த த்ராவிட தேசத்தில் பாய்ந்தோடும் புண்ய நதிகளான
தாம்ரபர்ணி,
க்ருதமாலா,
பயஸ்வினி,
மிகவும் புண்யம் வாய்ந்த காவேரி,–கங்கையின் புனிதமாய காவிரி 

பிரதீசி,
மஹாநதி ஆகிய நதிகளின் கரைகளிலும்
மற்றும் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் கரைகளிலும் அநேகமான பேர்கள் தோன்றுவார்கள்.
அப்புண்ய நதிகளின் தீர்த்தத்தைப் பருகுபவர்கள்
வாசுதேவனின் பரம பக்தர்களாக இருப்பார்கள்” என்று தலைக் கட்டுகிறார்.

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

———-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை-காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி–காப்பு –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -காப்பு –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –காப்பு பாசுரமும் பாசுரம்–1

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –1-

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –காப்பு –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்

ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள்

ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள்


ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய் நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி
மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற
தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும்
இவர் திருவடிகளிலே விழுகிறார் –

எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெருகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அஸூத்திகளையும் மதியாதே
பால்ய தசையிலே ஆதரித்து
பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து
அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் –
மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –

பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி
உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்

யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும்
யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை

தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய்
பக்வ தசையில் ரஷகனாய்
ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –
புத்ரனைப் போல் இருக்கை –

விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே
இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –

சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –

யதேவ –
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

நியமேன
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய
ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –

மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா –என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –
உபய சந்தான ஜாதருக்கும்

ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –

ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –

வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்

இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –

ஸ்ரீ மத
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண
அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத
லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்

ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும்
என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்
ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை

அதவா
நிருபாதி சேஷி அவன்
தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –

தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான
ஜ்ஞான பக்த்யாதிகள்
பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-

முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்

நாலாம் ஸ்லோகத்தாலே -இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –

ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று
அந்வயம் –

(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் -விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி -ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –
நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும்
ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று -வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)

—————

ஸ்ரீ கூரத்தாழ்வான்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே
அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான்-

வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத  –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யா நவயம் உபகதா தேசிகாம் உக்திமாபு
சோயம் ராமானுஜ முநி ரபி ச்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாதம நுத கதம் வர்ண்யதே கூர நாத

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெறமாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் ––ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே

இங்கு –த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள் அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்

அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –

நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்

மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்

மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்

ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்

குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்

ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்

கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –

அக்ர்யம் யதீந்திர சிஷ்யாணாம் ஆதயம் வேதாந்த வேதி நாம் -என்று ஆழ்வான் அக்ர கண்யர் ஆகையாலே –அஸ்மத் குரோர் என்றார் –
அப்படிப் பட்ட பாரதந்த்ர்யத்தை -இவ் வாத்ம வஸ்து அவர்க்கு சேஷம் ஆகில் அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
ஏவம் வித ஸ்வரூபர் ஆகையால் உடையவரும் -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார்
இப்படி ஸ்வாச்சார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யத்தாலும்
நான் பெற்ற யோகம் நாலூரானும் பெற வேணும் -என்று பிரார்திக்கையாலும்
சிஷ்யாச்சார்யா க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் ஆழ்வான் -என்றார்கள்
ஆச்சார்யா வர்வ விபவச்ய ச சிஷ்யஸ் வ்ருத்தேஸ் சீமேதி தேசிகவரை பரிதுஷ்யமாணம்-என்னக் கடவது இறே –
அத்தைப் பற்ற உடையவரும் –யத் சம்பந்தாத் –என்று பிரார்த்தித்து அருளினார்
நூற்றந்தாதியிலும் மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அடியாக விரும்பி அருளினார்
மற்றையரான இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது அவர்களாலே இறே
அவர்கள் தான் –யோ நித்யம் -த்ரைவித்யாதிகள் அடியாக அடியுடையராய் இருப்பார்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
ராமானுஜ அங்க்ரி சரணஸ்மி இத்யாதி
மதுரகவிகள் அடிப்பாட்டில் நடக்கிற க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர்கள் ஆழ்வார் அடியாய் இருப்பார்கள்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதி -இத்யாதி
ஆரியர்காள் கூறும் -என்கிற எழுபத்து நான்கு முதலிகளும் உடையவர் அடியான ஆசார்யத்வம்
அதில் முக்கியம் ஆழ்வார் சம்பந்தம் –
பட்டர் அடியாக இறே அஷ்ட ஸ்லோகீ முகேன ரஹச்ய த்ரய அர்த்த சம்பந்தம் –
திருவாய்மொழியும் அடியாய் இருக்கும்
ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்தில் பர்யவசித்தது
பெரிய பட்டர் உடைய பிரசிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலே இறே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் ஆஸ்ரயித்தது
அவரும் ராமானுஜ நாமா விறே
அஷ்டாஷர தீபிகை அவர் அடியாக இருக்கும்
நம்பிள்ளை குமாரரும் ராமானுஜன் இறே
அவரும் சார சங்க்ரஹம் அருளிச் செய்து அருளினார்
தத் வம்ச்யரும் கோயில் யுடையவருக்கு சிறிது கைங்கர்யங்களும் செய்தார்கள்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை குமாரரான பிள்ளை லோகாச்சார்யரும்
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷ்ணாதி ரகஸ்ய பிரபந்த கர்த்தாவாய்
தம்முடைய பிரதான சிஷ்யரான – கூர குலோத்தம தாசர் -என்று திரு நாமம் சாத்தினார்
என்னாரியனுக்காக எம்பெருமானாருக்காக -என்று இறே அக் கோஷ்டியில் பரிமாற்றம் இருப்பது –

—————

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெற மாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுள மாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே
இங்கு –த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்–மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே

யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 2-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருண ரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சார தமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சார தமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-6-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பெருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான-திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை  சாஷாத்கரித்தாரோ,ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

இத்தால் ஸ்ரீ பட்டருக்கு
ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும்
ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

ஆழ்வார் திறத்திலே பட்டருடைய ஈடுபாடு அபரிமிதம். அவருடைய
ஸ்ரீஸூக்திகளெல்லாம் ஒப்புயர்வற்று விளங்குவதன் காரணம் அவை அருளிச்
செயல் மணம் கமழ நிற்பதேயாம். நம்மாழ்வார்க்குத் துதியாக பட்டர் அருளிச்
செய்திருக்கும் ச்லோகமொன்று அத்விதீயமாய் விளங்கும்.அதாவது “ருஷிம் ஜீஷா
மஹே க்ருஷ்ண ருஷ்ணா தத்வமிவோதிதம், ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷித்
த்ராவிடம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்” என்பது. “எம்பெருமான் விஷயமான ஆசைப்பெருக்கே ஆழ்வாராக வடிவெடுத்துவந்ததோ’ என்னலாம்படி பகவத்விஷயத்தில்அளவிறந்த காதல் கொண்டவரும் “த்ரமிடோபநிஷத்” என்னப்பட்ட திருவாய்மொழியை இந்த வுலகிலிருள் நீங்க வெளியிட்டருளினவருமான நம்மாழ்வாரைப் பணிவோம்” என்பது இதன் கருத்தாம். இதில் (சடகோபர் முதலியதிருநாமங்களையிடாமல் “ருஷிம் ” என்றே அருளிச்செய்தார். இதை யடியொற்றியே“நால்வேதம் கண்ட புராணரிஷி மந்த்ரதர்சிகளைப்போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும் “ என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி அவதரித்தது. வடமொழியினாலாகிய உபநிஷத்துக்களில் அநேக சாகாபேதங்கள் இருப்பதுபோல் த்ரமிடோபநிஷத்திலும் அநேக சாகாபேதங்களுண்டென்று காட்டவேண்டி “ஸஹஸ்ர
சாகாம்” என்றார். (ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு சாகை என்று) அத்ரா த்’ என்றதனால் எம்பெருமான் சிலபல ரிஷிகளைக் கொண்டு சிலபல வேதச கைகளைப் ப்ரவர்த்திப்பித்தது போல ஸ்ரீசடகோப முனிவரைக் கொண்டு திருவாய்மொழியைப்ரவர்த்திப்பித் தானென்பது விளங்கும். இந்தச்லோகத்தில் ஆழ்வாரை எம்பெரு மான் திறத்துக் காதலின் உண்மை போன்றவர் (க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோ திதம்) என்று அருளியிருப்பதை யடியொற்றி “க்ருஷ்ண க்ருஷ்ணத்வைபாயநோத் பத்திகள் போலன்றே கருஷ்ண திருஷ்ணா தத்வ ஐந்மம்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி அவதரித்திருப்பது அறிந்தின்புறத் தக்கது.

யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||--ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4-

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அக விருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப் பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

——————

மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி–5-

மால் தன் பராங்கதி -விஷ்ணு லோகம் ஆகிய ஸ்ரீ வைகுண்டம்
பிறவி மாறு அன்பர் -முக்தர்

———–

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம்

திரு நா வென் மந்தரத்தால் -பாட பேதம்-

அளத்தற்கு அரிய பரப்புடைமை -இன் சுவை யுடைமை -எம்பெருமான் உறைவிடம் ஆதலால் மறையை பாற் கடலாக உருவகம் செய்து அருளுகிறார்
திரு -வேறு ஒன்றுக்கு இல்லாத மேன்மை -திரு நா வீறுடைய பிரான் போலே
கறை-நஞ்சினை யுடைய – -புள்ளி என்றுமாம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –

அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கு யன்று யமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாளை நாட்டிக்
கம்ப நாடுடைய வள்ளல் கவிச் சக்ரவர்த்தி பார் மேல்
அன்பு பா மாலையாலே நரர்க்கு இன்னமுதம் ஈந்தான்

————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை-காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

நாராயணா
வடியேனாடும் -அடியேன் நாடும்
தமிழ் வேதப் பாராயணா சடகோபா
அடியேன் நாடும் -தமிழ் வேத பராயணத்துக்கும் சடகோபருக்கும் அடை மொழியாகக் கொள்ளலாம்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் –
பராயணம் = முழுவதும் -நாதனுக்கு நாலாயிரமும் அருளினவர் அன்றோ
திண்பார் புகழும் திருவேங்கட மாலை –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -உலக்குக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மழைத் திரு வேங்கடம் –
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய் -வெண்பாவால் நூறும் விளம்புவதற்கு கிருபை செய்து அருளுவாய்-

———-

அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்
தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்
சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி–காப்பு –

அங்கத் தமிழ் மறை-ஆறு அங்கங்கள் கொண்ட திராவிட வேதங்கள் ஆயிரம் பாடி
அளித்து -மதுர கவிகள் -நாத முனி போன்றோர்களுக்கு உபதேச முகமாக அளித்து
உலகோர் தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை-
புருஷ ச்ரேஷ்டர் -மகிழம் பூ மாலை தரித்த -நம்மாழ்வார் உடைய உபய பாதத்தை -வகுளாபரணர்
மாலிருஞ்சோலை மலைச் சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –
தண் தமிழ் சங்கத் தனி இறைவனே -என்று தமிழ்ச் சங்கத் தலைவரான திருமால் இருஞ்சோலை அழகர் விஷயமான
அந்தாதி விக்னம் இல்லாமல் முடித்து தந்து அருளுமாறு தளை மேல் கொண்டு வணங்குவேன்
சங்கத்து அழகர் -திருப் பாஞ்ச ஜன்யம் தரித்த அழகர் என்றுமாம்
கிளர் ஒளி இளமை திருவாய் மொழியும் நம்மாழ்வார் திருவாய்மொழி விக்னம் இல்லாமல் நடாத்தி அருள
திருமால் இருஞ்சோலை விஷயமாக அருளிச் செய்தார் –

————-

பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –காப்பு –

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

———

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

—————

முருகூரும் மகிழ் மாலை அணியும் மார்பன் முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்
திருகூரு மனத்திருள் நீக்குதய பானு சி பராங்குச யோகி திரு நா வீறன்
அருகூருந் தண் பொருணை வழுதி நாடன் அக்கமலம் பாடினான் அன்ன மேறி
குருகூரன் சடகோபன் காரி மாறன் கோகனக மலரடியின் குணங்கள் போற்றி –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –காப்பு –

—————

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

——–

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே–யதிராஜ சப்ததி 

திரு மேனி மட்டும் இல்லை ஸ்ரீ ஸூக்திகளும் மகிழம் பூ மணக்கும் படி வெள்ளம் இட்டு வர வேதங்கள் ஒய்வு எடுத்து கொண்டபடி ஆயின –
அப்படிப் பட்ட நம் ஆழ்வாரை நாம் உபாசிப்போம்-

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தனம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

ஸம்ஸ்க்ருத வேதங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிய வெளியிடவேணுமென்று மிகவும் சிரமப்பட்டன .-ஆனால் சிரமத்திற்குத் தகுதியான பலன் கிடைக்கவில்லை. ‘அந்தோ! நமக்கு சரமமே மிக்கதே’ என்று அந்த வேதங்கள் விடாய்த்தனவாம். அந்த நிலைமையில்
மகிழ்மாலை மார்பினர் திருவவதரித்து ஈரச்சொற்களாலே வேதங்களுக்கு விவக்ஷிதமான பொருள்களைத் தெளிய வெளியிட்டமையாலே வேதங்களுக்கு உண்டா யிருந்த விடாய் தொலைந்ததாம். ‘வேதங்களே! பகவத் ஸ்ரூபரூபகுணவிபூதிகளை ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் நீங்கள் ஏதுக்கு வீணாகச்ர மப்படுகின்றீர்கள்? அந்தத் தொழிலை நான் வஹிக்கக்கடவேனாகையால் நீங்கள் இளைப்பாறலாம்’ என்று சொல்லி ஆழ்வார் திவ்யப்ரபந்தங்களை யருளிச் செய்வாராயினர் என்பதும் மேலெடுத்த யதிராஜ சப்ததி ஸூக்திக்குக் கருத்தாகும்.

———–


வர்ணஸ்தோமை: வகுள ஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந் நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:–-ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்–3-

வர்ணாஸ் தோமைர் -எழுத்துக்கு கூட்டங்கள்
வகுள ஸூமநோ வாசநா முத்வ ஹந்தீம் -மகிழம் பூ வாசனையை -தாங்கிக் கொண்டு உள்ளது -திருவாய் மொழியிலும் இருக்குமே
ஆம் நாயா நாம் ப்ரக்ருதிம் அ பராம் -வேதங்களின் மற்ற ஒரு வடிவமே திருவாய் மொழி
ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -கண்டு பிடித்துக் கொடுத்து அருளியவர் -த்ருஷ்ட்டி பார்த்து –
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளைப் போல் இவரையும் ரிஷி முனி கவி என்னும் –ஆச்சார்ய ஹ்ருதயம் -47-
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்க பர்த்து -ஸ்ரீ ரெங்க நாதனின் திருவடிகளில் நித்யம் வைக்கப்பட்ட
புத்தி உடைய நம்மாழ்வார்-நேரே கூப்பிட்டு அருளிச் செய்கிறார் –
த்வன் நாமா நம் முநி மிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம-உம்முடைய பெயரே -சடாரி -சடகோபன் -முனிவர் –
தமிழ் வேதம் வழங்கி மனன சீலர் -16 வருஷம் இடைவிடாமல் தியானித்து
இஹ- இப்பொழுது -நான் ஸ்துதி தொடங்கும் முன் உம்மை வணங்கி தொடங்குகிறேன் –

வேதம் தமிழ் செய்த மாறன் -ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்து
எக்காலமும் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளையே நினைத்து கொண்டு இருந்தவர் ஆகிறார்
ஸ்ரீ பாதுகை – ஸ்ரீ சடாரி- நம்மாழ்வார் என்று அருளிச் செய்கிறார் –

திருவாய்மொழி என்பது தமிழ் வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக் கொண்டிருந்த
நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டு பிடித்தார்.
ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை
இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

——————————

த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்‌
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்‌ |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥ –ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று
திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார்.
இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை.
அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து
அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று,
அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று
ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று
அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

க்ருதிந கமலா வாஸா காருண்ய ஏகாந்திந பஜே
தத் தே யத் ஸூக்தி ரூபேண த்ரிவேதீ சர்வ யோக்யதாம்—ஸ்ரீ தயா சதகம்–3-

தயா தேவியே நித்ய ஸூரிகளை ஆழ்வார்களாக அவதரிப்பித்து
அருளிச் செயல்களை அருளச் செய்வித்து
வேதாந்த பொருளை சர்வாதிகாரமாக அறியும் படி பண்ணி அருளினாள் –

மூன்று வேதங்களும் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் மூலமே அனைவரும் கற்கும் விதமாக அமைந்தன.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே தங்கள் புகலிடம் என்று புகுந்த ஆழ்வார்களின் பிரபந்தங்களையே,
அந்தப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்களையே நான் விடாமல் தொழுகிறேன்.

நித்ய ஸூரிகளின் அவதாரமாகவே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்து,
அவர்கள் மூலமாகவே வேதங்களைத் தமிழ்ப் படுத்தினாள்.
ஆழ்வார்கள் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதே வடிவெடுத்தது போன்றவர்கள் ஆவர்.

———-

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது–-ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத்–4–

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –

வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்

—————————————————

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–அம்ருதாஸ்வாதினி – 28

“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து,
ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான்.
மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற
ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும்
அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்.
இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான்.
அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.

—————-

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

—————

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||--ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

—————–

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

—————

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

————

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

——————–

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே||–2-

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

———————————————

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

—————

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—திருவாய் மொழி நூற்றந்தாதி -1-

வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து——2-

மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-

நாடறிய ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

திறமாகப் பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-

அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து –11-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் —-12-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்—16-

மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை—17-

மிக மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—-18-

வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி—-20-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்—-21-

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன் இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-எனக்கு என்று தன்மையீ பாவத்தில் மா முனிகள் இத்தை அருளிச் செய்கிறார் –

வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——27-

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—28-

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —32-

கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன் பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான் சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

நன்றாக மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை—40-

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —–41-

உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு—42-

ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

திடமாக வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

சாற்றுகின்றேன் இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் —48-

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற—49-

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் —51-

உன்னுடனே கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

ஆராத காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-

மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என குன்றி விடுமே பவக் கங்குல்—61-

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

ஊழிலவை தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல் பன்னுவரே நல்லது கற்பார்——64-

உற்று உணர்ந்து மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல் பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

தூ மனத்தால் நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

நன்று கவி பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன் பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

துன்பமறக் கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

எங்கும் பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

பாரும் எனத் தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல் மானிடவரைச் சார்ந்து மாய்—74-

தூய புகழ் உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் அற்ற பொழுதானது எல்லியாம்–75-

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

பொருந்தக் கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-

நிறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-

அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

நீ செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

பேர் உறவைக் காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

பின்னை யவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-

மருவுகின்ற இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

அறப் பதறிப் செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88-

ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

மண்ணவர்க்குத் தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-

இரு விசும்பில் இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

வாஞ்சை தனில் விஞ்சுதலைக் கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட திண் திறல் மாறன் நம் திரு—97-

நீ இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

———

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

————————————————————————————–———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்–

June 13, 2022

உண்டோ வைகாசி விகாசத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் –

இன்று முதல் ஸ்ரீநம்மாழ்வார்
திரு அவதார உத்சவம்🙏

இன்று முதல்
ஸ்ரீ பார்த்தசாரதி வசந்த உத்சவம்

ஏழு நாள்கள் உத்சவம்
கடைசி நாளில் வாஸூ தேவ புரம் எழுந்து அருளுகிறார் 🙏

———-

ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்

திரு முளைச் சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து
மாலை விருச்சிக லக்கினத்தில் 4.30-மணிக்கு மேல் 5-30-மணிக்குள் தேங்காய் சாற்றுதல்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் தங்க தோளுக்கு இனியான் –

முதல் உத்சவம் –
காலை 7.00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் துவஜாரோஹணம்
ஸ்ரீ அஹோபில மடத்தில் விடாயாற்று மண்டகப்படியும்
ஸ்ரீ திருக்குறுங்குடி மடத்தில் மண்டகப்படி -திரு மஞ்சனம் கோஷ்ட்டி

மாலை 6-00 மணிக்கு இந்திர விமானம்
உபாயம் -ஸ்ரீ அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

இரண்டாம் உத்சவம் –
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
மாலை 6.00 மணிக்கு புஷ்ப்ப பல்லாக்கு
அலங்கார உபாயம் -ஸ்ரீ மத் ஆத்தான் வடக்கு திருமாளிகை ஆதீன சிஷ்யர்
திரு விழா உபயம் -திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

மூன்றாம் உத்சவம்
காலை 6-30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ வான மா மலை மடத்தில் விடாயாற்று
கிளி குறட்டில் திரு மஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணி புன்னை மர வாஹனம்

நான்காம் உத்சவம்
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
கிளி குறட்டில் திரு மஞ்சனம்
மாலை 6.00 மணிக்கு -தங்கத் திருப்புளி வாஹனம்
உபயம் -ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

ஐந்தாம் திரு நாள்
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் மங்களா ஸாஸனம் -பூப்பந்தல் மண்டபம்
ஸ்ரீ நவ திருப்பதி எம்பெருமான்கள்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ உத்திராதி மண்டபத்தில் விடாயாற்று பந்தல் மண்டபக் குறட்டில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
இரவு ஒன்பது கருட ஸேவை
ஸ்ரீ கள்ளபிரான்
ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
ஸ்ரீ அரவிந்த லோசனன்-ஸ்ரீ தேவர் பிரான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
ஸ்ரீ எம் இடர் கடிவான்
ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம்

ஆறாம் நாள்
மாலை தண்டியலில் திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ பராங்குச மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை 6.30 மணிக்கு திருவீதிப்புறப்பாடி
ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் எழுந்து அருளி
சேர்த்தி திருமஞ்சனம்
மாலை திரு வீதிப்புறப்பாடு -வெள்ளி சந்த்ர பிரபை
உபயம் -ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ ஆதி நாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா

எட்டாம் நாள்
காலை 7.00 மணிக்கு ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு எழுந்து அருளி
மாலை ஸ்ரீ தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்
இரவு கோயிலுக்கு எழுந்து அருளுதல்
8.00 மணிக்கு குதிரை வாஹனம்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

ஒன்பதாம் நாள்
ஸ்ரீ கோரதம் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருளி மங்களா சாசனம் கோஷ்ட்டி
உபயம்-ஸ்ரீ ஆத்தான் கீழத் திரு மாளிகை ஸ்வாமிகள்
மாலை 45.00 மணிக்கு உத்திராதி மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்

பத்தாம் நாள் -ஸ்ரீ திரு விசாகம் ஸ்ரீ திரு நக்ஷத்ர திரு நாள்
காலை மாட வீதிப்புறப்பாடு
ஸ்ரீ சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம்
ஸ்ரீ தாமிர பரணி நதியில் தீர்த்த வாரி
சந்நிதிக்கு எழுந்து அருளி அட்ச்சதை ஆசீர்வாதம்
பெரிய சந்நிதிக்கு எழுந்து அருளி கோஷ்ட்டி தீர்த்த விநியோகம்
மாலை 6.00 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் -வெள்ளி தோளுக்கு இனியான்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ உடையவர் கோஷ்ட்டியுடன்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

அடுத்து ஐந்து நாள்கள் விடாயாற்று உத்சவம்
அதில் முதல் நாள் ஸ்ரீ மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி கந்தப்பொடி உத்சவம் -திருமஞ்சனம் -கோஷ்ட்டி –
நான்காம் நாள் -ஸ்ரீ அஹோபில மேடம்
ஐந்தாம் நாள் -ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமம்

————-

நம்மாழ்வார் வைபவம்.
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ——பெரியமுதலியார்🙏

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||🙏

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு

அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது ..
(கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை.

இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி *என்றார் ஆழ்வாரும்.

இனி *
கோதிலவாம்…. என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. . .🙏🙏🙏🙏

———–

பெருமாள் திருமொழி…

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி Object
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே.. 🙏

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை புல் பூண்டு முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்அளித்தனர். .🙏🙏


நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபூதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.

இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🙏🙏🙏


இரண்டாம்-பத்து…..

கீழ்த்
திருவாய் மொழியில்..

நிஷ்கர்ஷிக்கப் பெற்ற பேற்றை பெறுவதற்கு திருமால் இரும் சோலையை ஆஸ்ரயிக்கிறார்
என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
அத்தை எம்பெருமானார் மேலும் இனிமை படுத்தி -அருளிச் செய்வர்
கீழ் ஒல்லை ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று பகவத் கைங்கர்யத்தில் தமக்கு உண்டான பதற்றத்தை வெளியிட்டு அருள
அத்தைக் கண்ட எம்பெருமான் இவள் இந்த சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய துடிக்கிறார் என்று எண்ணி
அதற்கு ஏகாந்தமான ஸ்தலம் இந்நிலத்தில் ஏது என்று கடாஷித்து வருகையில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை யைக் கண்டு
ஆழ்வீர் உமக்கு முகம் தருகைக்கு இங்கே வந்து நின்றோம்
நீர் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கலாம் –
என்று தென் திருமலையைக் காட்டிக் கொடுத்து அருள
ஆழ்வாரும் அதை அனுசந்தித்து
எம்பெருமான் உபேயன் ஆனால் அவன் எழுந்து அருளி இருக்கும் இடமும் உபேயம் தானே
ஆகவே திருமலையோடு
அதனோடு சேர்ந்த தொரு மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போவோம்என்கிற அத்யாவசாயத்தோடு*
வாசி அற நமக்குஎல்லாம் பிராப்யமே -என்று கொண்டு அனுபவித்து இனியர் ஆகிறார் …..
என்று காட்டி அருளினார்…

வாயும் திரையுகளும்….
க்ஷணம் காலம் விச்லேஷம் பொறுக்க முடியாதவன் …

திண்ணன் வீடு..
மனுஷ்ய சஜாதீயனாய் திருவவதரிக்கச் செய்தே பரத்வம் பொழிய நிற்பவன்…

ஊனில்வாழ்உயிர்
மதுர பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்தால் போல் போக்யன்….

ஆடி ஆடி அகங்குழைந்து…

ஆஸ்ரிதர்களின் துயர் தீர்க்கும் தன்மையன்…

அந்தாமத்தன்பு…
ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அத்தாலே ப்ரீதன் ஆனவன்….

வைகுந்தா…..
ஆஸ்ரிதர்கள் நம்மை விட்டால் ஏன் செய்வோம் அதி சங்கை தீர்த்தது…

கேசவன் தமர்….
ஆஸ்ரிதர் உடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் விஷயீ காரம் உண்டே…

அணைவது அரவணை மேல்…
மோஷம் அளிப்பவன்

எம்மா வீடு…
கைங்கர்ய பிரதிசம்பந்தி என்றது….
கிளரொளிஇளமை..
அழகிய திருப்பதியை உடையவன்….. …..
என்று அருளிச் செய்கிறார்….

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி) 🙏🙏🙏🙏


மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி –

முடிச்சோதியாய்….

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன் என்று
அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை என்றார் ….
கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற –படியைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி,
விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி *யாங்காண
வல்லமே யல்லமே*
மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

ஸ்வரூப அனுபந்தியாய் – -ஸம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
வடமாமலையுச்சியை*’ என்னுமாறு போன்று, திருமலையில்-
(ஏக தேசம் )– ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸௌந்தர்யத்தை – அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று –
ஜென்ம வ்ருத்தாதிகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –ஈடு..


ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கட்கும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, ஸ்ருதி ஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்….🙏

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்…

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள்,

ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை.

இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார்

இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார்.

அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம்.

அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை.

(கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு* எனப் படுகிறது.

புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் வைபவம்……. 🙏

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள் அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே,
மாற்றங்களாய்ந்து கொண்டு(6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் என்கிறார். அதாவதுதிருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள்

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்று * பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழர் இசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”

இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய்* இருக்கும்.

இதனை ஆழ்வார் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்….

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும் மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும் வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தெனா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே. (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி
🙏🙏🙏🙏
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-
ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
*அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண* லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த குழாங்களைக் கண்டு காப்பிட்டு.–நாயனார் –

————

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம்.

உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் ….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில்* அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா* என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கண்வளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
🙏🙏🙏🙏
வைகல் பூங்கழிவாய்………

.ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய்-வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ– பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
*மறப்பித்த
க்ஷமா தீக்ஷா ஸாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்*
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்–

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் உத்சவம்-7………………

.உண்ணிலாவிய ஐவரால்………….

ஸ்ரீ கீதாசார்யன்…….

தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்…..
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி……..– –
முனிவர்கள் கூடி யதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தித் துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்-என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே-யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்,
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே…
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே.
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்..
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்து நோவு படுவதைக் கண்டார்.
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-
[

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –


ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம் இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள்* தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் *எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்*
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)-என்று ஸங்க்ரஹித்தார்.

இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி….

இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள்.

* ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * ….

இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய்,

இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

*புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம்* வகுளதரதாமேத்ய ஸ புந: |
*உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||*

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார் …..

ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை
ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம்
விம்ஶதிர் வக்தி ஸாக்ரா ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள் அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது….


திருவாய்மொழி எட்டாம் பத்து…….
அடியேனுள்ளான் உடலுள்ளான்……

ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?

இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.

ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், அடியேனுள்ளான் உடனுள்ளான் என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்

ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் அடியேன் என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.

திரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்… 🙏🙏
[4:21 PM, 6/10/2022] +91 72995 10125: பாகவதசேஷத்வம்
அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார் ‘அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும்’ என்று!. பட்டர் ‘நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். மேலும், ”எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும்’ என்று பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.
ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!
ஆலம் விதையில் ஆலமரம் போலவும், ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும் பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின் (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன.🙏🙏
நெடுமாற்கடிமை…….. ……
பகவத் கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை நெடுமாற்க்கடிமை (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
தனிமாத் தெய்வமான எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள்
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)
அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)
கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.🙏🙏🙏🙏


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே P.B.A- ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–