திருப்பாவை -பாசுரங்கள் – 11-15-திவ்யார்த்த தீபிகை சாரம்–

11-கற்றுக் கறவை –
கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே
கன்று நாகாய் இருக்கை
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் வருஷம் கீழ் நோக்கி வயசு புகுமா போலே
இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரதவ அனுசந்தானாத்தாலே
இவை மனுஷ்யத்வே பரனான கிருஷ்ணன் உடைய கர ஸ்பர்சத்தாலே
செற்றார்
எம்பெருமான் மேன்மையை பொறாதார் எம்பெருமான் அடியார்க்கு பகைவர்
எம்பெருமானின் அடியாரின் மேன்மையை பொறாதார் எம்பெருமானுக்கு பகைவர்
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையான்
சாது சனத்தை நலியும் கஞ்சனை
இருவகை பகைமையும் உண்டே
புற்று அரவு அல்குல்
பெண்கள் அல்குலை வர்ணித்தது ஆண்மையை நெஞ்சில் பூண்டு
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –
பொற்கொடியே புனமயிலே -சமுதாய சோபை
புற்றரவல்குல் -என்பதால் அவயவ சோபை
புன மயிலே போதராய் -இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்

————————————————————————————————

12-கனைத்து இளம் கற்று எருமை
இளைய பெருமாளை போன்ற பாகவர் தங்கை
கை வழியுமாகவும் இன்றி கன்றின் வாய் வழியுமாகவும் இன்றி முலை வழியா பால் சொரியா நிற்கும்
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே காற்கடைக்
கொள்ளுவான் என் என்னில்
இளைய பெருமாளுக்கு அக்னி கார்யத்தில் அந்வயம் உண்டாம் அன்று இவனுக்கு இவற்றின் உடைய ரஷணத்தில் அந்வயம் உள்ளது
இளைய பெருமாளுக்கு பெருமாளை பிரிய மாட்டாமையாலே
இவன் கிருஷ்ணனைப் பிரிய மாட்டாமையாலே
இப்படி பகவத் விஷயத்திலே பிரேமத்தால் பிரிய அவசரம் இல்லாமே
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை -விடுகை யாவது
அல்லது ஆலச்யத்தாலே விடுமது விடுகை அன்று
தொழில் எனக்கு தொல்லை தன நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும்படியே
நற்செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்
மனத்துக்கு இனியானே
வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே-
இனித் தான் எழுந்திராய்
பகவத் விஷயம் ரஹச்யமாக அனுபவிக்கும் இத்தனை
புறம்பு இதுக்கு ஆளுண்டோ -என்று
கிடக்கிறாய் ஆகில் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய பிரசித்தமாயிற்று என்றுமாம்
எம்பெருமானார் திருவவதாரித்தால் போலே காணும் இப் பெண்பிள்ளை திரு வவதரித்த படியும்

ஸ்வா பதேசம்
பாகவாத அபிமானத்தில் ஊற்றம் உடையாரை உணர்த்துதல்-

————————————————————————————————

13-புள்ளின் வாய் கீண்டானை
போதரிக் கண்ணினாய் –
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை அசல் திரு மாளிகையிலே கேட்டுக் கிடப்பாள் ஒருத்தி
நம் அபராதம் தீர இவர்களுக்கு வார்த்தை சொல்லுவோம் என்று
பெண்காள் இங்கே ராம விருந்தாந்தம் சொன்னார் உண்டோ -என்ன
ராம விருத்தாந்தமும் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்
வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்
பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு
பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான கிருஷ்ணாவதாரமும்
தன்னைப் போலே பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான்
என்று ராமாவதாரமும்
வாய் கொண்டு சொல்ல முடியாதகுற்றமஎன்பதால் பொல்லா அரக்கன் –
பொல்லா அரக்கரை பாடம் -தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி
கீர்த்திமை பாடிப் போய் பாதேயம் -விரஹத்தாலே துர்பலைகளுக்கு
ஆறாம் பாட்டில்
புள்ளும் சிலம்பின என்றது -கூட்டில் நின்றும் சிலம்பின படி
இங்கு இரை தேடப் போன இடங்களில் எல்லாம் ஆஹாரார்த்தமாக சிதறினபடி
போதரிக் கண்ணினாய்
உலவுகின்ற மானினுடைய கண் போன்று
குவளைப் பூவையும் மான் கண்ணையும் ஒத்த
பூவில் படிந்த வண்டு -அரி-வண்டு
புஷ்பத்தின் அழகுக்கு சத்ருவான கண் அரி சத்ரு –
புஷ்பத்தின் அழகை ஹரிக்கிற கண் என்ன வேண்டுமானால் போதரி கண்ணினாய் பாடமாக வேணும்
குள்ளக் குளிர
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதற்கு முன்பே ஆழ முழுகினாலும் விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்களே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் திரு முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ ஆறி இருக்கிறது என்

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று
நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும் பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் -ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன்வேதமையன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை
மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பவைக்களம்–பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
பரிசுத்தமான சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை எடுத்து
புள்ளும் சிலம்பின வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர
தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

———————————————————————————————-

14-உங்கள் புழக்கடை
நங்கள் சொல்லாமல் உங்கள் -உறவு அறுத்து பேச
செங்கல் பொடிக் கூறை
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்
சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி
செங்கல் பொடிக் கூறை — வம்பற்ற அத்தவர் -பரகால ஜீயர்
சம்சாரத்தை விட்ட –
விதண்டா வாதம் ஞானப் பிரான் பிள்ளை பணிக்கும்
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நா வும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம்
நா வீறுடைமை-பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே
நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே

ஸ்வா பதேசம்
பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் –

———————————————————————————————————

15-எல்லே இளம் கிளியே
திருப்பாவை ஆகிறது இப்பாட்டு இ றே
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் -சிற்றம் சிறு காலையிலே -சொல்லுகிறது
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது –
நானே தான் ஆயிடுக
இளம் கிளி– கிளி போன்றவளே இல்லை முற்று உவமை
தாவி வையம் கொண்ட தாமரைகட்கே-போல
மன்னு பெரும் -பாட்டில் இளம் குயிலே வால்மீகி
இங்கு சுகர்
போதர்கின்றேன் சரியான பாடம் -நாவலிட்டு உழி தர்கின்றோம் போல்
போதருகின்றேன் வெண்டளை பிரளும்
நானே தான் ஆயிடுக
மத்பாவமே என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான் -பிறர் குற்றத்தையும் தன குற்றமாக இசைந்தான் இ றே
இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால்
இல்லை செய்யாதே இசைகை இ றே வைஷ்ணவ லஷணம்
உனக்கு என்ன வேறு உடையை -சரியான பாடம்
வேறு உடைமை தப்பான பாடம்
நீ என்ன வேறுடையை என்ன வேண்டாமோ என்னில்
தமிழ் பிரயோக முறைமைகள் அறியாதார் பேச்சு
திரு விருத்தம் -மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் –
உங்களுக்கு சித்திக்கும் படி நீங்கள் எவ்வாறு பெற்றீர்
பெரிய திருமொழி -துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
உனது அருள் அல்லது தாரகமாக எனக்கு துணிய மாட்டேன் –
இங்கும் உனக்கு என்ன வேறு உடையை
உனக்கு அசாதாரணமான வேறு என்ன அதிசயத்தை நீ உடைத்தாய் இரா நின்றாய் –
தனித் தனியே அனைவரையும் காண பெறுதல்
பேர் சொல்லப் பெறுதல்
விரல் தொட்டு எண்ணப் பெறுதல்
ஸ்பர்ச சுகம் அனுபவிக்கப் பெறுதல்
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் ஆகையாலே
எண்ணி முடிக்கும் அளவும் அவளை பிரியாதே காணப் பெறுதல்
முதலிய பல பேறுகளை பெறுதல்

மாணிக்க வாசகர் திருவாசகம் 4 பாசுரம் இதை ஒட்டி –
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுவோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உண்ணெக்கு நின்று உருக யா மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையிற்று யிலேலோரேம்பாவாய் –

————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading